Jump to content

சு.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடு­மை­யான விரக்தி நிலையில்


Recommended Posts

சு.க.வின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடு­மை­யான விரக்தி நிலையில்

sdsa-d6aa359b78cc7c2d3dab0df64c8c9fb5607cdd2f.jpg

 

(ரொபட் அன்­டனி)

சுதந்­தி­ரக்­கட்­சியில் இருக்­கின்ற பல சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடும் அதி­ருப்­தி­யு­டனும் விரக்­தி­யு­ட­னுமே காணப்­ப­டு­கின்­றனர். கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் அமைப்­பாளர் பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­கின்­றமை என்­னைப்­போன்ற சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு விரக்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உப­த­லை­வரும் இரத்­தி­ன­புரி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.  

இவ்­வாறு நிலைமை நீடித்தால் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினால் 2020 ஆம் ஆண்டு ஆட்­சியைப் பிடிக்க முடி­யாது. நாம் கட்­சியை பலப்­ப­டுத்த வேண்­டு­மென்று எண்­ணு­கின்றோம். ஆனால் அது சாத்­தி­ய­மா­காது போன்று தெரி­கின்­றது. விரைவில் இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்­த­வுள்ளோம் என்றும் ஜோன் சென­வி­ரட்ன சுட்­டிக்­காட்­டினார்.

அண்­மையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சில அமைப்­பா­ளர்கள் நீக்­கப்­பட்­டமை தொடர்பில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன கடும் விரக்­தி­யுடன் இருப்­ப­தாக தக­வல்கள் வெளி­வந்­தி­ருந்த நிலையில் அது தொடர்பில் அவ­ரிடம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உப­த­லை­வரும் இரத்­தி­ன­புரி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாங்கள் பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை மிக வலு­வான ரீதியில் உரு­வாக்கி 2020 ஆம் ஆண்டு ஆட்­சியை தனித்து அமைக்­க­வேண்டும் என்­பதே எமது நோக்­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

அந்த நோக்­கத்­திற்­கா­கவே நாங்கள் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் 2020 ஆம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்­க­வேண்டும் என்ற எமது கனவு கன­வா­கவே இருந்து விடும்போல் தெரி­கின்­றது.

அதா­வது சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் அமைப்­பா­ளர்­களும் பத­வி­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இது கட்­சியை பாரிய அளவில் பல­வீ­னப்­ப­டுத்­துமே தவிர எந்­த­வித்­தத்­திலும் பலப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை.

அப்­ப­டிப்­பார்க்­கும்­போது 2020 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் எமது நோக்கம் நிறை­வே­றாமல் போய்­விடும். இதன்­கா­ர­ண­மாக நான் கடும் விரக்­தி­யிலும் கவ­லை­யிலும் இருக்­கின்­றேன.

கேள்வி: நீங்கள் மட்டும் விரக்­தியில் இருக்­கின்­றீர்­களா? அல்­லது ?

பதில்: நான் மட்­டு­மல்ல. இன்னும் பலர் விரக்­தி­யு­டனும் அதி­ருப்­தி­யு­டனும் இருக்­கின்­றனர். அதா­வது பல சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இந்த அமைப்­பா­ளர்கள் பதவி நீக்கம் குறித்து கவ­லை­யு­ட­னேயே இருக்­கின்­றனர்.

கேள்வி: அவ்­வாறு விரக்­தியில் இருக்கம் நீங்கள் அனை­வரும் இணைந்து சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தலாம் தானே?

பதில்: கடும் கவ­லையில் இருக்­கின்ற நான் உள்­ளிட்ட சில சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இந்த விவ­காரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றோம். கட்சியை பலப்படுத்துவதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்த இருக்கின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக சிரேஷ்ட அமைப்பாளர்களை கட்சியை விட்டு நீக்கினால் நாம் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணிக்க முடியாது என்பதை வலியுறுத்தவிருக்கின்றோம் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-17#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.