Jump to content

யாழ்ப்பாணத் தமிழ் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

JAFFNA TAMIL 
யாழ்ப்பாணத் தமிழ்.
.
யாழ்ப்பாணம் தன்னுடைய இயல்பான கவித்துவமுள்ள வட்டார வழக்கை மிசனறி வருகை மிசனறி கல்விகற்ற ஆறுமுக நாவலரின் வழிவந்த தமிழ் பண்டித ஆசிரியர்களின் எழுச்சி என்பவற்றால் இழந்துவிட்டது. இன்று சுத்த தமிழ் என போற்றபடும் யாழ்ப்பாணத் தமிழ் வரலாற்று ரீதியான பண்பாட்டு வளங்களை தொடற்சியை இழந்த தமிழ் கற்று தமிழ் வளர்த்த மிசனரிமாரையும் மிசனரி பள்ளியில் கல்வி கற்ற ஆறுமுகநாவலரையும் பின்பற்றி புத்தகத் தமிழை பேசுகிறோம். உண்மையில் சொல்லப்போனால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தமிழ் வாசிக்கிறோம். 
வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்கள் தங்கள் பிரதேசப் பண்பாட்டின் தொனியோடு தமிழைப் பேசுகிறார்கள். அவர்கள் தமிழ் நாட்டார் இலக்கியமாக இனிக்கிறது. வெள்ளைகாரரை மேலோர் என வரித்த யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகள் வெள்ளையரான 
மிசனரிகளும் ஆறுமுக நாவலரும் புகுத்திய 
எழுத்துவடிவ இலக்கணத் தமிழை இலக்கணச் சுத்தம் என்கிற பெயரில் காயடிக்கப்பட்ட புத்தக தமிழையே வரித்துக்கொண்டோம். யாழ்பானத்தின் ஒதுக்கபட்ட பகுதிகளிலும் வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் மக்கள் சந்திக்கிறபோது ஒருவரோடு ஒருவர் தமிழில் பேசுகிறார்கள். யாழ்பாணத்தவர்கள் ஒருவரோடு ஒருவர் செயற்க்கையான புத்தகத் தமிழை வாசிக்கிறோம். யாழ்பான வட்டார வளக்குகளை யாழ்பானத்தின் பிந்தங்கிய பகுதிகளிலும் ஒடுக்கபட்ட மக்களிடமும் எஞ்சியிருந்த நாட்டார் இலக்கிய சுவையுள்ள உண்மையான யாழ்பாண தமிழ்தான் சின்ன வயசில் என்னக்குள் கவிதையின் விதைகளாக முழைத்தது.
. 
வெள்ளைக்கார மிசனரிகள் இலக்கண சுத்தமான புத்தக தமிழ் கற்று புத்தகம் வாசிப்பதுபோல பேச ஆரம்பித்தனர் மிசனரிகளிடம் பயின்ற ஆறுமுக நாவலருமு (1822 - 1879) அவரது சீடர்களான தமிழ் ஆசிரியர்களும் (தமிழ் பண்டிதர் பட்டதாரிகள்) அதையே ஆதரித்தார். புத்தகம் வாசிக்கும் பேச்சுவளக்கே வெள்ளையரின் பேச்சுவழக்கு யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் பேச்சு வழக்கானது இப்படித்தான். இதில் யாழ்ப்பானத் தமிழே சுத்த தமிழ் என்கிற போலிப் பெருமைவேறு.
.
நான் சிறுவனாக இருந்தபோது தீவுப்பகுதிபோன்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் நகர் மயபடாத பின் தங்கிய பிரதேசமக்களும் சாதிவாரியாக ஒடுக்கபட்ட மக்களும் நாட்டார் இலக்கியம்போன்ற கவித்துவமும் இசையும் இனிக்கும் யாழ்பாண தமிழ் பேசப்படுவதைக் கேட்டிருக்கிறேன். நாம் அந்த இனிய தமிழை பேசிய போதேல்லாம் பிழையாக பேசுவதாகவும் பட்டிக்காட்டு தமிழ் பேசுவதாகவும் தாழ்த்தபட்டவர்களின் தமிழ் பேசுவதாகவும் கண்டிக்கபட்டோம். அது பட்டிக்காட்டு தமிழ் என்றும் தாழ்த்தபட்டவர்களின் தமிழ் என்றும் கிண்டல் செய்யபட்டது. இன்று வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் முஸ்லிம் பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகிறது.. யாழ்பாணத் தமிழர்கள் தமிழ் பேசுவதற்க்குப் பதிலாக தமிழ் வாசித்தார்கள்.

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.