Jump to content

இராணுவம் மீதான யுத்த குற்­றச்­சாட்­டு­க்களை மன்­னிக்க தமிழ்க் கூட்­ட­மைப்பு தயாரா ?


Recommended Posts

இராணுவம் மீதான யுத்த குற்­றச்­சாட்­டு­க்களை மன்­னிக்க தமிழ்க் கூட்­ட­மைப்பு தயாரா ?

 

 

விடு­தலை புலி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி  விடு­தலை செய்­யக்­கோ­ருவோர் இரா­ணு­வத்தை  தண்­டிக்க கூறு­வது ஏற்­று­க்கொள்­ள­மு­டி­யாது. புலி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தென்றால் இரா­ணு­வத்தின் மீதான யுத்த குற்­றச்­சாட்­க்டு­க­ளையும்  மன்­னிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர்  இந்த விவ­கா­ரத்தில் ஒரு நிலைப்­பாட்­டினை கொள்ள வேண்டும் என பிவி­துரு ஹெல உறு­மய கட்­சியின் தலைவர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். 

gammanpila.jpg

மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்­திற்கு அமைய ஆளு­நரை நிய­மிக்கும் யோசனை ஒன்று புதிய அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­தா­னது ஈழத்­துக்­கான அடித்­தளம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பிவி­துரு ஹெல உறு­மய நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

ஜனா­தி­பதி வடக்­கிற்கு விஜயம் செய்த போது பார­ாளு­மன்ற உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்ட சிலர் ஜனா­தி­ப­தியின் வரு­கை­யினை எதிர்த்து போராட்டம் நடத்­து­கின்­றனர். இதன்­போது அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­ய­வேண்டும் எனக்­கூறி போராட்டம் நடத்­து­கின்­றனர். ஆனால் இலங்­கையில் அர­சியல் கைதிகள் என யாரும் இல்லை என்­பதை நான் மிகவும் பொறுப்­புடன் தெரி­விக்­கின்றேன். 

இலங்­கையில் ஒரு காலத்தில்  அர­சியல் கைதிகள் இருந்­தனர், 1983 ஆம் ஆண்டு இலங்­கையில் ஜே.வி.பி, கொம்­யூனிஸ்ட் கட்சி, சம சமாஜ கட்­சி­களை தடை செய்த போது அதன் தலை­வர்­களை கைது­செய்து சிறையில் அடைத்­தனர். அவர்­களை அர­சியல் கைதிகள் என கூறி­னார் 

கள். அவர்கள் உண்­மை­யி­லேயே அர­சியல் கைதி கள்தான். அவர்­களை அவ்­வாறு கூறு­வதை ஏற்­று­க்கொள்ள முடியும். 

ஆனால் ஆயுதம் ஏந்தி இந்த நாட்டில் பிரி­வி­னை­யினை தூண்­டிய விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வாத இயக்கம் இன்­று­வ­ரையில் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மா­கவே உள்­ளது. இறுதி யுத்­தத்தில் பிடி­பட்ட புலிகள் இன்றும் சிறையில் உள்­ளனர். அவர்­களை அர­சியல் கைதிகள் என கூற­மு­டி­யாது. ஆயு­தத்­துடன் சர­ண­டைந்த 12 ஆயிரம் விடு­த­லைப்­பு­லிகள் புனர்­வாழ்வு வழங்­கப்­பட்டு இன்று சுதந்­தி­ர­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். 

அவர்­களை எமது அர­சாங்கம் விடு­தலை செய்­தது. ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு  உள்­ளிட்ட தமிழர் தரப்­பினர் சிறையில் தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள  ஆயுதம் ஏந்­திய விடு­த­லைப்­பு­லி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி அவர்­களை விடு­தலை செய்­ய­கூறி போராட்டம் நடத்­து­கின்­றனர். தொடர்ச்­சி­யாக அவர்கள்  இதே நிலைப்­பாட்டில் இருந்து கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். மறு­புறம் இல்­லாத யுத்த குற்றம் ஒன்­றினை உரு­வாக்கி அதன் மூலம் இந்த நாட்­டினை காப்­பாற்­றிய எமது இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்க வேண்டும் என்ற அழுத்­தத்­தி­னையும் கொடுத்து வரு­கின்­றனர். 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முதலில் ஒரு நிலைப்­பாட்டில் கருத்து தெரி­விக்க வேண்டும். ஒன்று யுத்த குற்­றத்தில் இரா­ணு­வத்தை தண்­டிக்க வேண்டும் என்றால், மறு­புறம் வடக்கில் ஆயுதம் ஏந்தி கொழும்­பிலும் அனைய பகு­தி­க­ளிலும் தாக்­குதல் நடத்தி பொது­மக்­களை கொன்ற விடு­த­லைப்­பு­லி­க­ளையும் யுத்த குற்­றத்தில் தண்­டிக்க வேண்­டுமா? அல்­லது விடு­த­லைப்­பு­லி­களை அர­சியல் கைதி­க­ளாக கூறி பொது மன்­னிப்பு வழங்­கு­வதை போலவே இரா­ணு­வத்­தையும் பொது மன்­னிப்பில் விட­வேண்­டுமா என்ற ஒரு நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும். இரா­ணு­வத்தை மட்­டுமே தண்­டித்து விடு­தலை புலி­களை விடு­தலை செய்ய கோரும் கருத்து நியா­ய­மற்­ற­தாகும். 

மேலும் மாகாண முத­ல­மைச்­சரின் விருப்­பத்­திற்கு அமைய ஆளு­நரை நிய­மிக்கும் யோசனை ஒன்று புதிய அர­சியல் அமைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.  எனினும் ஆளுநர் என்­பவர் ஜனா­தி­ப­தியின் மாகாண பிர­தி­நி­தி­யாவார். அவரை நிய­மிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­தியின் கீழ் உள்­ளது. இது­வரை கால­மாக இந்த வழக்­கமே உள்­ளது.  எனினும் புதிய அர­சியல் அமைப்பில் இந்த அதி­காரம் முழு­மை­யாக முத­ல­மைச்­சரின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலமாக   வடக்கு பிரதேசம் ஈழநாடாக பிரிந்துசெல்ல பிரதமர் வழிசமைத்துள்ளார். மாகாணசபை அதிகாரங்களை வழங்குகின்றனர், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குகின்றனர், படிப்படியாக ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துக்கொண்டு மாகாண

சபை தன்னிச்சையாக செயற்படும் வகையில் அரசாங்கமே பாதையினை அமைத்துக் கொடுக்

கின்றது. இவற்றின் இறுதி ஈழமாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/25887

Link to comment
Share on other sites

புதிய அரசியலமைப்பால் வடமாகாண சபை தமிழீழமாக மாறுமாம்

புதிய அரசியலமைப்பால் வடமாகாண சபை தமிழீழமாக மாறுமாம்

புதிய அரசியலமைப்பினூடாக ஜனாதிபதியிடமிருக்கும் மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பறித்து வட மாகாண சபையை தமிழீழமாக மாற்றியமைக்கவே முயற்சிக்கப்படுவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே ஆளுனர் இருந்தார். மாகாண சபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு விடயத்தையும் ஆளுனரின் கையொப்பத்தினூடகவே சட்டமாக செயற்படுத்தப்பட்டது. ஆனால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் மாகாண அமைச்சரவையின் யோசனைப்படி ஆளுனரை தெரிவு செய்யும் நடவடிக்கையே இடம்பெறவுள்ளது. அன்று இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் ஜே.ஆர்.ஜயவர்தன மாகாண சபைகள் என்ற பட்டத்தை பறக்கவிட்டார். அதன் நூல் ஜனாதிபதியிடடே இருந்தது. ஆனால் தற்போது ஜே.ஆரின் மருமகனான தற்போதைய பிரதமரோ அந்த நூலை வெட்டிவிட்டு அந்த பட்டத்தை சுதந்திரமான பறக்க இடமளித்து தமிழீழமாக வடமாகாண சபையை மாற்றியமைக்க வழியேற்படுத்திக்கொடுப்பதையே செய்கிறார். -(3)

http://www.samakalam.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.