Jump to content

புதிய அரசியலமைப்பில் சமஷ்­டியை உள்ளடக்க பின்கதவால் கடும் முயற்சி


Recommended Posts

இடைக்கால அறிக்கைக்கு மஹிந்த எதிர்ப்பு
 

 

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கையின் பல்வேறான விடயங்களுக்கு, தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இடைக்கால அறிக்கை தொடர்பாக, அறிக்கையொன்றை நேற்று (16) வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு, தேர்தல் முறைமையை மாற்றவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் மாத்திரமே மக்களாணை கிடைத்தது எனவும், இருக்கின்ற அரசமைப்பை இல்லாது செய்து, புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு ஆணை கிடைத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் தன்மை தொடர்பில், ஒற்றையாட்சி என்பதை நீக்கி, “ஒருமித்த நாடு/ஏகிய இராஜ்ஜிய” என்ற என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அவர், சர்வதேச அளவில், ஒற்றையாட்சியைக் கைவிட்ட நாடாக, இலங்கை கருதப்படுமெனத் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசமைப்பில், இலங்கையின் ஆள்புலம் பற்றிய உறுப்புரையில், 25 மாவட்டங்கள் உள்ளடங்கிய நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இடைக்கால அறிக்கையில், எண்ணிக்கை குறிப்பிடப்படாத மாகாணங்களாக அவை மாற்றப்பட்டுள்ளமை, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான முயற்சி என, அவர் குற்றஞ்சாட்டினார். 

செனட் சபை போன்று, புதிய நாடாளுமன்றச் சபையொன்றை அமைத்து, அரசமைப்பை மாற்றுவதற்கு, அச்சபையின் மூன்றிலிரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்துள்ளார். 

அந்தச் சபையின் 55 உறுப்பினர்களில் 45 பேர், மாகாண சபைகளிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைத் தாண்டி, மாகாண சபை உறுப்பினர்களுக்கு வீற்றோ அதிகாரம் வழங்குவதே இதன் நோக்கமென, அவர் குற்றஞ்சாட்டினார். 

தவிர, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை, சிறுபான்மையினக் கட்சிகளுக்குச் சார்பானது என வர்ணித்த அவர், அம்முறை மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, போர் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்றோருக்காக, வட மாகாணத்துக்கு மேலதிக ஆசனங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன, மத அடிப்படையிலான அரசியலை ஊக்குவிப்பதற்கு, தேர்தல் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, பயன்தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை ஆளுநர்களுக்கான அதிகாரங்களைக் குறைத்தல்; மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள காணி அதிகாரங்களை, மாகாண சபைக்கு வழங்குதல்; அரசமைப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும், அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 

அவரது அறிக்கையின் முக்கியமான பகுதியாக, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான உறுப்புரையில் மாற்றம் ஏற்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள மாற்றத்தை, அரசாங்கம் கைவிடுமென, அவர் எதிர்வுகூறியுள்ளமை அமைகின்றது. இறுதி நேரத்தில், மகா சங்கத்தினரைச் சமாளிப்பதற்காக, இந்த ஏற்பாட்டைக் கைவிட்டுவிட்டு, மாற்றம் செய்ததாக அரசாங்கம் காட்டிக் கொள்ளுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழில் தேசிய கீதம் என்ற விடயமும், இதே நிலையையே எதிர்கொள்ளுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-மஹிந்த-எதிர்ப்பு/175-205683

Link to comment
Share on other sites

புதிய அரசியலமைப்பில் சமஷ்­டியை உள்ளடக்க பின்கதவால் கடும் முயற்சி

VD161017-PG01-R1-4198ed7d9384350e8b6329e62a06cc871f36f55c.jpg

 

அழி­வுக்கு இட்டுச் செல்லும் அறிக்­கையை கைவி­டுங்கள் என்­கிறார் மஹிந்த
(ஆர்.யசி)

இலங்­கையின் கட்­ட­மைப்பை ஒற்­றை­யாட்சி மற்றும் யுனிட்­டரி என்ற அடிப்­ப­டையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்­ப­டையை நோக்கி நகர்த்­து­வது மட்­டுமே நல்­லாட்­சி­யா­ளர்­களின் நோக்­க­மாக இருக்­கின்­றது என்­பதை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. இன­வாத ரீதியில் ஆட்சி அல­கு­களைப் பிரிப்­ப­தற்கும் அவற்­றுக்­கான விரி­வான அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கும் ஒரு­போதும்

 இட­ம­ளிக்க முடி­யாது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எனவே இந்த அழி­வுக்கு இட்டுச் செல்­லக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான யோச­னை­களை கைவிட்டு மக்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வாறு அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை மட்டும் செய்­வ­தற்­கான யோச­னை­களை முன்­வைக்­கு­மாறு நான் அர­சாங்­கத்தை கோரு­கின்றேன் எனவும் மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் இடைக்­கால அறிக்­கை­யொன்று பாரா­ளு­மன்­றத்­தினால் அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம்­தி­க­திக்கு முன்­ன­தாக தேர்தல் முறை­மையை மாற்றி ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தா­கவே நல்­லாட்சி அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­கு­றுத அளித்­தி­ருந்­தது. முழு அர­சி­ய­ல­மைப்­பையும் மாற்­று­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு ஆணை கிடைக்­க­வில்லை. இந்த இடைக்­கால அறிக்­கையில் காணப்­படும் கீழ் வரும் விட­யங்­க­ளுக்கு நாம் ஒரு­போதும் இணக்கம் தெரி­விக்க மாட்டோம் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

1. சிங்­கள மொழியில் ஏக்­கிய என்ற சொற்­பி­ர­யோ­கத்தை தொடர்ந்தும் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும், யுனிட்­டரி என்ற ஆங்­கில வார்த்­தையை நீக்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத­னூ­டாக பெரும்­பான்மை மக்கள் இலங்­கையை ஒற்­றை­யாட்சி நாடாக கரு­தி­னாலும் சர்­வ­தே­சத்தின் முன்­பாக இலங்கை ஒற்­றை­யாட்சி நாடாக இருக்க முடி­யாது. மக்­களை ஏமாற்­று­வ­தற்கு கொண்­டு­வந்­துள்ள தந்­தி­ர­மான யோச­னையை நாங்கள் கண்­டிக்­கின்றோம்.

2. இந்த இடைக்­கால அறிக்­கையின் நான்­கா­வது பக்­கத்தில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை ஒரு அல­காக ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் ஐந்­தா­வது பிரி­வின்­படி இலங்கை பூமியில் 25 மாவட்­டங்கள் உள்­ளன. அந்த முறை­மையை மாற்றி ஒரு குறிப்­பிட்ட உறு­தி­யான எந்­த­வி­ட­யத்­தையும் தெரி­விக்­காத மாகா­ணங்­களின் ஊடாக ஏதோ ஒன்று செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். இதன் மூலம் இவர்கள் எதற்கு முயற்­சிக்­கின்றர் என்­பதை நாங்கள் புரிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

3. இந்த இடைக்­கால அறிக்­கையில் மாகா­ணங்­க­ளினால் செய்­யக்­கூ­டி­ய­வற்றை மாகா­ணங்­க­ளுக்கே வழங்­க­வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான ஒரு எண்­ணக்­க­ருவின் ஊடா­கவே 1972 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கில் பிரி­வி­னை­வா­திகள் தனி­நாட்டைக் கோரி வரு­கின்­றனர் என்­பதை நாம் சிந்­தித்­துப்­பார்க்­க­வேண்டும்.

4. மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­படும் இந்த அதி­கா­ரங்கள் ஏனைய அனைத்து மாகா­ணங்­க­ளி­னதும் அனு­மதி இல்­லாமல் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மாற்ற முடி­யாத ஒரு விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி மாகா­ண­சபை பிர­தி­நி­தி­களும் உள்­ள­டக்­கத்­துடன் இருக்கும் இரண்­டா­வது சபையின் அனு­ம­தியும் இல்­லாமல் பாரா­ளு­மன்­றத்­தினால் தேசிய கொள்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத வகையில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­கு­வ­தற்கும் அந்த அதி­கா­ரங்­களை மாகா­ண­ச­பை­க­ளுக்கு கொடுப்­ப­தற்கும் சமஷ்டி நாட்­டுக்கு உரிய முறையில் மத்­திய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை குறைக்­கவும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

5. மாகாண ஆளு­நர்­க­ளுக்கு காணப்­படும் நிறை­வேற்ற அதி­கா­ரத்தை குறித்த மாகா­ணத்தின் அமைச்­ச­ர­வைக்கு வழங்­கவும் எந்த நேரமும் மாகாண அமைச்­ச­ர­வையின் ஆலோ­ச­னை­களின் படி செயற்­ப­டு­வ­தற்கும் முத­ல­மைச்­சரின் ஆலோ­ச­னை­யின்றி ஆளுநர் ஒருவர் ஒரு மாகா­ணத்தில் அவ­சர நிலைமை காணப்­ப­டு­வ­தாக மத்­திய அர­சாங்­கத்­திற்கு அறி­விக்க முடி­யா­த­வாறும் ஏற்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மன்றி மாகா­ண­ச­பை­யினால் நிறை­வேற்­றப்­படும் ஒரு பிரே­ர­ணைக்கு அனு­மதி அளிப்­பதோ அல்­லது அது­தொ­டர்­பான விட­யங்­களை ஆராய்­வ­தற்கு உயர் நீதி­மன்­றத்­திற்கு அனுப்­பு­வ­தற்கு ஆளு­ந­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் இருக்­கின்ற காலம் இரண்டு வராங்­க­ளினால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த இரண்டு வாரங்கள் கடந்­து­விட்டால் இயல்­பா­கவே அந்தப் பிரே­ர­ணைக்கு அனு­மதி கிடைத்­து­விட்­ட­தாக கரு­தப்­ப­டு­வ­தாக தெரி­விப்­பதன் மூலம் மாகா­ண­ச­பைகள் மீதான மத்­திய அர­சாங்­கத்தின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­வ­தற்கு யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இலங்­கையில் காணப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மை­யா­னது இந்­தி­யா­வி­லி­ருந்து பெற்­றப்­பட்­ட­தாகும். இந்­திய அர­சி­ய­ல­மைப்பில் 201 ஆவது பிரிவின் படி மாநில அர­சாங்­கங்கள் நிறை­வேற்றும் எந்­த­வொரு சட்­டமும் எந்­தக்­கா­ர­ணமும் இன்றி ஜனா­தி­ப­தி­யினால் நிரா­க­ரிக்­கப்­ப­டலாம். அதற்­கான அதி­காரம் அவ­ருக்கு இருக்­கி­றது. ஆனால் எமது நாட்டில் ஜனா­தி­ப­திக்கு அவ்­வா­றான அதி­காரம் இருந்­த­தில்லை. எனவே மாகா­ண­ச­பைகள் தொடர்­பாக நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்கு காணப்­படும் அதி­கா­ரங்­களை மேலும் குறைக்கும் இடைக்­கால அறிக்­கையின் யோச­னை­களை நாம் எதிர்க்­கின்றோம்.

6. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் ஏற்­பா­டுகள் மற்றும் அது தொடர்­பான உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­பு­களின் கீழ் ஜனா­தி­பதி அல்­லது மத்­திய அர­சாங்­கத்­திற்கு காணப்­ப­டு­கின்ற காணி தொடர்­பான அதி­காரம் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி ஒரு மாகா­ணத்தில் காணப்­ப­டு­கின்ற ஒரு காணியை மத்­திய அர­சாங்­கத்தின் தேவைக்­காக கோரினால் அதனை மாகா­ண­சபை நிரா­க­ரித்தால் அந்தப் பிரச்­சி­னையை முதலில் மத்­தி­ய­ச­பைக்கு அனுப்­பவும் பின்னர் நீதி­மன்­றத்தை நாடு­வதை தவிர வேறு எந்த மாற்று ஏற்­பா­டு­களும் இல்லை. இந்­தி­யாவில் மத்­திய அர­சாங்­கத்தின் தேவை­யான காணி­யொன்றை மாநிலம் ஒன்­றி­லி­ருந்து பெறு­வ­தற்கு அதி­காரம் இருக்­கி­றது. எனவே காணி தொடர்பில் தற்­போது காணப்­படும் ஏற்­பா­டு­களில் எந்­த­மாற்­றமும் செய்­யப்­ப­டக்­கூ­டாது.

7. 55 முதல் 45 பேரைக் கொண்­ட­தாக மாகா­ண­சபை பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கிய இரண்­டா­வது சபை­யொன்றை அமைப்­ப­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இரண்­டா­வது சபையின் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லாமல் எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தமும் நிறை­வேற்­றப்­பட முடி­யாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நோக்கம் பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை வரை­ய­றுப்­ப­தா­கவும் அது­தொ­டர்­பாக நிறை­வேற்று அதி­காரம் ஒன்றை . மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வ­தா­கவும் தெரி­கி­றது. இந்த விட­யத்தில் இந்­திய அர­சி­ய­ல­மைப்பின் 249ஆவது பிரி­வுக்கு சம­மான அதி­கா­ரங்கள் இல்­லா­விடின் இலங்­கைக்கு இரண்­டா­வது சபை­யொன்று அவ­சியம் இல்லை என்­பது எமது கருத்­தாகும்.

8. அனைத்து சிறு குழுக்­க­ளுக்கு அதி­க­மான பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டிய பிர­தேச நிதித்­து­வ­வாரி தேர்தல் முறை­மையின் கீழ் தெரிவு செய்­யப்­படும் பிர­தி­நி­தி­களின் வீத­மா­னது 40 வீத­மாக இருக்கும் போது இன­வா­தக்­கு­ழுக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக சிறு­பான்மை தொகு­திகள் மற்றும் கலப்பு தொகு­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கும் யுத்­தத்­தினால் வெளி­நா­டு­க­ளுக்கு சென்ற மற்றும் யுத்­தத்தின் பின்­னரும் இலங்­கைக்கு வரா­த­வர்­களை இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளாக கருதி வட­மா­கா­ணத்தின் மேல­திக பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை ஒதுக்­கு­வ­தற்கும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது போன்று இலங்கை அர­சி­ய­லுக்குள் இன­வா­தத்­திற்கு முன்­னு­ரிமை கொடுப்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பிர­தேச நிதித்­துவ முறை­மையின் படி தெரிவு செய்­யப்­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நிகழ்­கா­லத்தின் பிர­காரம் மாவட்ட மட்­டத்தில் அல்­லாமல் மாகா­ண­மட்­டத்தில் தெரிவு செய்­யப்­ப­டு­வதை நாம் ஏற்­க­வில்லை.

இதற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­சபை வெளி­யிட்ட ஆவ­ணங்­களில் பொலிஸ் அதி­கா­ரங்கள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் அந்தத் தலைப்­பா­னது இந்தப் புதிய யோச­னையில் உள்­ள­டக்­கப்­ப­டா­மைக்கு பொலிஸ் சேவையை ஒன்­ப­தாக பிரித்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க 13 திருத்­தத்தில் ஏற்­பா­டுகள் இருக்­கின்­றமை கார­ண­மாக இருக்­கலாம். தற்­போது தேசிய பொலிஸ் சேவை­யா­னது நாடு முழு­வதும் செயற்­படும் விதத்­தி­லேயே தொடர்ந்தும் இருக்­க­வேண்டும் என்­பது எமது கருத்­தாகும்.

எனவே தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் ஒன்­ப­தா­வது அத்­தி­யா­யத்தில் முத­லா­வது உப பிரிவில் காணப்­படும் ஏற்­பா­டா­னது யதார்த்­திற்கு ஏற்­பு­டை­யது என திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தின் அதி­கா­ரங்­களை நீக்கி புதி­தாக அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்­குதல், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி­யதன் பின்னர் பிர­த­ம­ருக்கு சில அதி­கா­ரங்­களை வழங்­குதல், தேர்­தலின் பின்னர் குறிப்­பிட்ட காலம் வரை பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யா­த­வாறு ஏற்­பா­டு­களை முன்­வைத்தல் உள்­ளிட்ட எம்மால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத பல்­வேறு யோச­னைகள் இந்த இடைக்­கால அறிக்­கையில் இருக்­கின்­ற­போ­திலும் அவை இந்த அறிக்­கையில் பிர­தான நோக்­கங்­க­ளுக்கு தொடர்­பு­ப­டா­மை­யினால் அவை தொடர்பில் நாம் தற்­போது எதுவும் பேச­வில்லை.

தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் புத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்கும் 9ஆவது பிரிவை அகற்­று­வ­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அது இவர்­களின் தற்­போ­தைய முதன்மை நோக்கம் அல்ல என்­பது தெளி­வா­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 9ஆவது பிரிவு தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மாற்­ற­மா­னது இறுதி நேரத்தில் நீக்­கிக்­கொள்­ளப்­பட்­ட­மை­யா­னது சங்க சபையை ஏமாற்றி நாட்டின் ஏக்­கிய அல்­லது யுனிட்­டரி தன்­மையை பேணு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­படும் போராட்­டத்தை முடக்­கு­வ­தற்­கான முயற்­சி­யாக இருக்­கலாம் என ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

இது­போன்று நல்­லாட்­சி­யா­ளர்­களின் சமஷ்டி நோக்­கத்­திற்கு எந்­த­வி­த­மான சேதத்­தையும் ஏற்­ப­டுத்­தாமல் பெரும்­பான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இறுதி நேரத்தில் நீக்கிக்கொள்ளக்கூடிய வாறான மற்றுமொரு யோசனையும் உள்ளது. அரசியலமைப்பின் 7ஆவது பிரிவின் படி தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் இணைக்கவேண்டும் என்ற யோசனையே அதுவாகும். இதுபோன்று இறுதி நேரத்தில் கைவிடுவது போன்று முன்வைப்பதற்காக பல்வேறு யோசனைகள் இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 நாம் அரசியல் மற்றும் தந்திரங்கள் தொடர்பான ஒரு குழுவினருடனேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை புதிதாக கூறவேண்டிய அவசியம் இல்லை. தற்போது நல்லாட்சியாளர்களின் இலக்கானது பௌத்தத்திற்கான முதலிடம் மற்றும் தேசிய கீதம் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மாற்றுவது அல்ல. மாறாக இலங்கையின் கட்டமைப்பை ஒற்றையாட்சி மற்றும் யுனிட்டரி என்ற அடிப்படையில் இருந்து சமஷ்டி என்ற அடிப்படையை நோக்கி நகர்த்துவது மட்டுமே நல்லாட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

அதனால் இனவாத ரீதியில் ஆட்சிப் அலகுகளைப் பிரிப்பதற்கும் அவற்றுக்கான விரிவான அதிகாரங்களை வழங்குவதற்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே இந்த அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை கைவிட்டு மக்களுக்கு வாக்களித்தவாறு அரசியலமைப்பு திருத்தத்தை மட்டும் செய்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நான் அரசாங்கத்தை கோருகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-17#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.