Jump to content

ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive


Recommended Posts

ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive

 
 

டி.டி.வி.தினகரன், சசிகலா, விவேக்

“சொத்துகளை மீட்டெடுப்பதும், மீட்டெடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாப்பதும், இளவரசியின் மகன் விவேக்கின் கடமை! 

 

கட்சியைக் கைப்பற்றுவதும், கையில் இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதும், இரண்டையும் இணைத்து வலுவாக வளர்தெடுப்பதும் தினகரனின் கடமை! 

தினகரனுக்கும் விவேக்குக்கும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மன்னார்குடி குடும்பத்திலுள்ள மற்ற ரத்த உறவுகளின் கடமை!”

இந்த மூன்று கட்டளைகளைப் பிறப்பித்து, அதை மன்னார்குடி குடும்பத்துக்குச் சாசனமாக்கிச் சென்றுள்ளார் சசிகலா! சசிகலாவின் சாசனத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர இப்போதைக்கு அந்தக் குடும்பத்துக்கு வேறு வழியில்லை. அதனால், அதை அப்படியே ஒத்துக்கொண்டு, நிறைவேற்றித் தருவதாக சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றனர் மன்னார்குடி ரத்த உறவுகள். இதோடு வேறு இரண்டு கட்டளைகளைத் தினகரனுக்குத் தனியாகப் பிறப்பித்துள்ளார் சசிகலா. பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து 5 நாள்கள் பரோலில் வந்த சசிகலா சாதித்துவிட்டுப்போனது இதைத்தான். இந்த ஸ்கெட்ச்படி, தற்போது மன்னார்குடி குடும்பத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதோடு, மன்னார்குடி குடும்பத்திலிருந்து புதிய சக்தியாக விவேக் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். ‘அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது’ என்ற நிபந்தனைக்குட்பட்டு பரோலில் வந்த சசிகலா, மன்னார்குடி குடும்பத்தை ஒருங்கிணைத்து, அந்தக் குடும்பத்துக்கு இந்த ‘மாஸ்டர் பிளானை’ போட்டுக் கொடுத்துள்ளார். இதைச் சட்டப்படி அரசியல் நடவடிக்கை என்று சொல்ல முடியாது. ஆனால், எதிர்கால அரசியலில் மிகமுக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! ஆனால், மன்னார்குடி குடும்பத்தைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நடவடிக்கை! 

சிக்கலும் தீர்வும்!

விவேக், வெங்கடேஷ்,தினகரன், திவாகரன்

30 ஆண்டுகளில் மன்னார்குடி குடும்பம் சந்திக்காத சோதனைக் காலகட்டத்தை இப்போது சந்தித்துள்ளது. இதற்கு முன்பு, 1995-களின் இறுதியில் தொடங்கி 1997 வரை இதேபோன்ற சோதனைகளை அந்தக் குடும்பம் சந்தித்தது. அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்துக்கு அப்போது எல்லாம் நம்பிக்கையாக இருந்தவர் நடராசன். மன்னார்குடி குடும்பத்துக்கு கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை நடராசன்தான் ‘டீல்’ செய்வார். அதுபோல, குடும்பத்துக்குள் ஏற்படும் சர்ச்சைகளையும் நடராசன்தான் தீர்த்து வைப்பார். தினகரன், திவாகரனோடு மோதுவார்; பாஸ்கரன், தினகரனைத் திட்டுவார்; விநோதகன், ஜெயராமன் சொல்வதைக் கேட்கமாட்டார்; மஹாதேவன் யாருக்கும் கட்டுப்படமாட்டார். ஆனால், இவர்கள் அனைவரும் நடராசனுக்குக் கட்டுப்படுவார்கள். நடராசன் பேச்சைத்தட்டமாட்டார்கள். ஏனென்றால், நடராசனால்தான் ஜெயலலிதாவிடம் சசிகலா நெருங்கினார். அதனால்தான், தங்கள் குடும்பத்துக்கு இந்த வாழ்வு வந்தது என்பது மன்னார்குடி குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும். அதை யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு நடராசன் தனக்கான லாபியை உருவாக்கி வைத்திருந்தார். தமிழகத்திலோ... டெல்லியிலோ... தமிழர்கள் அதிகம் வாழும் உலக நாடுகளிலோ... அல்லது வேறு எங்கேயோபோய்... யாரையாவது பிடித்து நடராசன் மன்னார்குடி குடும்பத்தின் சிக்கல்களைத் தீர்த்துவிடுவார். ஜெயலலிதாவின் அரசியல் ஏற்றத்துக்கும் நடராசனின் இந்த ‘லாபி’ பலவகையில் உதவியது. ஒருகட்டத்தில், நடராசனின் இந்த ‘லாபி பவர்’ தான் அவர்மீது ஒருவித சந்தேகத்தையும் அச்சத்தையும் ஜெயலலிதாவுக்கே உருவாக்கியது. அதில்தான் இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றின. அதையடுத்துத்தான் நடராசன், போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேறினார். ஜெயலலிதாவால் மன்னார்குடி குடும்பத்துக்குச் சிக்கல் வந்தால், அதைச் சசிகலா சமாளித்துவிடுவார். வெளியில் வரும் பிரச்னைகளை நடராசன் தீர்த்துவைப்பார். ஜெயலலிதா, சசிகலா, நடராசன் என்ற மூன்று சக்திகள் இருந்ததால், அந்தக் குடும்பம் தமிழகத்தில், அ.தி.மு.க என்ற கட்சியில், அதன் தலைமையில் நடந்த ஆட்சியில் ஆதிக்க சக்தியாக வலம் வந்தது. ஆனால், ஜெயலலிதா இறந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அதன்பிறகு சசிகலா சிறைக்குப் போய்விட்டார். நடராசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துவிட்டார். ஆட்சியில் இருந்த அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டார். கட்சியைப் பன்னீர் செல்வம் கபளீகரம் செய்துவிட்டார். இந்தநிலையில் மன்னார்குடி குடும்பம் திகைத்துப்போய் இருந்தது. அதற்கு உடனடித் தீர்வாக, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது சசிகலாவின் சமீபத்திய பரோல் வருகை! அந்த வருகையில் அவர் கட்சியை தினகரனே கவனிக்கட்டும் என்று மன்னார்குடி குடும்பத்திடம் கறாராகச் சொல்லிவிட்டார். அதைவிட முக்கியமாக, நம் குடும்பத்தின் சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான நிர்வாகத்தை விவேக் கவனிக்கட்டும் என்றும் விவேக்கை முக்கியமான ஆளாக அடையாளம் காட்டிச் சென்றுள்ளார். தனது இந்த வார்த்தைகளுக்கு மன்னார்குடி குடும்பத்தைச் சம்மதிக்கவும் வைத்துள்ளார். தினகரனை எல்லோருக்கும் தெரியும். ஆனால், விவேக் யார்? என்பது பலருக்குத் தெரியாது.

விவேக் பராக்.. பராக்.. பராக்!

விவேக், சசிகலா

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் ஜெயராமன். அவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு கிருஷ்ணப் பிரியா, ஷகிலா, விவேக் என்று மூன்று பிள்ளைகள். 1991-96 காலகட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, ஜெயலலிதா தனது ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் ஆடம்பர பங்களா ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்தக் கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்தது சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்தான். அந்த நேரத்தில் பங்களாவுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து ஜெயராமன் இறந்துவிட்டார். இதையடுத்து, அவருடைய மனைவியும் மூன்று பிள்ளைகளையும் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டார். இப்போதும் அவர்களுடைய ஒரிஜினல் முகவரி போயஸ் தோட்டம் வீடுதான். அங்கிருந்து சென்னையில் படித்தவர்கள், அதன்பிறகு ஊட்டி கான்வென்ட்டில் சேர்ந்து படித்தனர். அதன்பிறகு இளவரசியின் மூன்றாவது பிள்ளை விவேக்கை ஜெயலலிதா பூனேவுக்கு அனுப்பி பி.பி.ஏ படிக்க வைத்தார். அதன்பிறகு எம்.பி.ஏ-வை ஆஸ்திரேலியாவில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த விவேக், பெங்களூரில் ஐ.டி.சி-யின் டீலராக வேலை பார்த்தார். தற்போது அவரிடம்தான் சசிகலா, தங்கள் குடும்பச் சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளார். இதன்மூலம் அந்தக் குடும்பத்தின் அடுத்த சக்தியாக விவேக் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அதற்குச் சில காரணங்கள் இருந்தன. 

கோட்டை விட்ட தினகரன்... சாதித்துக்காட்டிய விவேக்... 

சசிகலா, தினகரன், வெங்கடேஷ்

சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல், கிட்னி பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி சசிகலாவுக்குப் பரோல் கேட்கப்பட்டது. முதலில் இந்த விவகாரத்தை டீல் செய்தது டி.டி.வி.தினகரன்தான். ஆனால், தினகரன் தலையிட்டதாலோ என்னவோ... தமிழகக் காவல்துறையிலிருந்து ஏகப்பட்ட கண்டிஷன் சொல்லி பரோல் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் நடராசன் உடல்நிலை மிக மோசமடைந்தது. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் விவகாரத்தைக் கையில் எடுத்தவர் அவருடைய அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியினரின் மகன் விவேக். விவேக் சீனுக்கு வந்ததும் வேலைகள் வேகமாக நடந்தன. அவர் சார்பில், தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், “சசிகலாவின் பரோல் நாள்களில் எந்த அரசியல் நடவடிக்கைகளும் இருக்காது” என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகக் காவல்துறை முதலமைச்சர் எடப்பாடியோடு பேசிவிட்டு பச்சைக்கொடி காண்பித்தது. சசிகலாவுக்குப் பரோல் கிடைத்தது. வெளியில் வந்தவர் எங்கு தங்க வேண்டும், எத்தனை மணிக்கு நடராசனைப் பார்க்க மருத்துவமனைக்குப் போக வேண்டும், வீட்டில் யாரைச் சந்திக்கலாம்; யாரைச் சந்திக்கக் கூடாது என எல்லாவற்றையும் விவேக்தான் முடிவு செய்தார். மீண்டும் சசிகலாவைப் பத்திரமாக பரப்பன அக்ரஹாராவுக்குக் கொண்டுபோய் சேர்க்கும்வரை விவேக் கண்ணசைவில்தான் காரியங்கள் நடைபெற்றன. ஆனால், சசிகலா வந்த காரில் கூட விவேக் ஏறவில்லை. எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு அவர் கேமராக்களில் தலைகாட்டாமல் மறைந்து கொண்டார். விவேக்கின் இந்த நடவடிக்கைகள் சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. 

சந்திப்புகளும்... நிராகரிப்புகளும்... 

பரோலில் வந்த சசிகலாவால் போயஸ் கார்டனுக்குப் போக முடியவில்லை. அதனால், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கினார். போயஸ் கார்டனுக்குப் பிறகு, சசிகலாவுக்குப் பரிட்சயமான வீடு இதுதான். 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டிலிருந்து சசிகலாவை வெளியேற்றியபோதும் அவர் இந்த வீட்டில்தான் தங்கியிருந்தார். அங்கு சசிகலாவின் உறவினர்கள் தினகரன், தினகரன் மனைவி அனுராதா, திவாகரன், திவாகரனின் மகன் ஜெயானந்த், மகள் ராஜ மாதங்கி, நடராசனின் தம்பி பழனிவேல், ராமச்சந்திரன், அவர்களுடைய வாரிசுகள் உள்ளிட்டவர்கள் வந்து சந்தித்தனர். இவர்களைத்தவிர சசிகலாவை மிக முக்கியமான சிலர் சந்தித்தனர். அவர்கள் இப்போது மட்டுமில்லை; எப்போதும், சசிகலா மற்றும் ஜெயலலிதாவை எந்தவித அப்பாயின்ட்மென்ட்டும் இல்லாமல் சந்திக்கும் வழக்கம் உடையவர்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் அப்பாற்பட்ட ரத்த சொந்தங்களும் இல்லாத மனிதர்கள். போயஸ்கார்டன் மாளிகையை நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் அந்த ரகசியம் புரியும்; அந்த மனிதர்களையும் புரியும். அவர்களுக்கு ஜெயலலிதாவையோ... சசிகலாவையோ சந்திப்பதற்கு நாள், தேதி கிடையாது. திடீரென்று வருவார்கள். அதன்பிறகு மாதக்கணக்கில் மறைந்துபோய் விடுவார்கள். அப்படிப்பட்ட சில குறிப்பிட்ட மனிதர்களில் மிக முக்கியமானவர்கள், ராஜம்மாள், தாம்பரம் நாராயணன், தேவாதி, ஜமால் போன்றவர்கள். அவர்களும் விவேக்கின் அனுமதி பெற்றுத்தான் இந்தமுறை சசிகலாவைச் சந்திக்க முடிந்தது. அவர்களில், இந்தமுறை ராஜம்மாள் சசிகலாவைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். தாம்பரம் நாராயணனும் சசிகலாவைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சசிகலா, பழைய கதைகளை மனம்விட்டுப் பேசியுள்ளார். அப்போது அவர், “1998 தேர்தல் சமயத்திலயும் இப்போது இருப்பதுபோல இக்கட்டான நிலைதான். மத்தியில் சிதம்பரம் நிதி அமைச்சர். இங்கே, தி.மு.க ஆட்சி. இருவரும் சேர்ந்து என்னையும், அக்காவையும்(ஜெயலலிதா), எங்க குடும்பத்தையும் பாடாய்ப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல்(1998) வந்துச்சு, அப்போது 40 தொகுதிகளுக்கும் நேரடியாகப் போய், ஒவ்வொரு தொகுதிக்கும் 40 லட்ச ரூபாய் செலவுக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் போன இடமும் தெரியாது; திரும்பிய தடமும் தெரியாது. ஆனா, இப்போ ஒரே ஒரு தொகுதியில(ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல். இதுக்குப் பணம் கொடுத்தேன். அத எழுதி வெச்சேன்னு இவனுங்க மாட்டிக்கிட்டு, என்னையும் வருத்தப்பட வெச்சுட்டானுங்க. கட்சியையும் பறிகொடுத்துட்டு நிக்கிறாங்க” என்று புலம்பியது ஹை-லைட். இதுபோன்ற பழைய கதைகளைத்தான் பெரும்பாலான நேரங்களில், சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்காரர்கள் என யாரையும் சந்திக்கவில்லை. குறிப்பாக கடந்த 11-ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஏழுபேர் சசிகலாவைச் சந்திக்க வந்துள்ளனர். அவர்களிடம் பேசிய விவேக், “நான் எவ்வளவு சிரமப்பட்டு அத்தைக்கு இந்தப் பரோலை வாங்கியிருக்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால், நீங்களே நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் அத்தையைச் சந்திக்க வந்தால் எப்படி?” என்று கேட்டுள்ளார். அதைப்புரிந்து கொண்டு அவர்களும் அமைதியாகத் திரும்பிவிட்டனர். 

3 கட்டளைகள்!

விவேக், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், திவாகரன், சசிகலா

சசிகலா வந்த சமயத்தில் குடும்பத்தில் முக்கிமாகப் பேசித் தீர்க்கப்பட்ட  பஞ்சாயத்துதான் நாம் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தது. காரணம் அப்போது சசிகலாவிடம் தினகரன் சார்பில் புகார் வாசிக்கப்பட்டது. அவர், “நாம் வளர்த்துவிட்ட பன்னீரும் பழனிசாமியும் துரோகிகளாகிவிட்டனர். அவர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்ற நான் தனியாளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் குடும்பத்தில் இருப்பவர்களே எனக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறிப்பாக திவாகரன் தரப்பு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்போல, விவேக், திவாகரனின் மகன் ஜெயானந்த் என்று ஆளுக்கு ஆள் ஒப்பாரி வைத்துள்ளனர். அதைக் கேட்ட சசிகலா, “பணம் இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும். ஆனால், கட்சியின் பணத்தை 80 சதவிகிதம் நானும் அக்காவும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில்தான் விட்டிருந்தோம். அதை இப்போது திரும்ப மீட்டுவது எளிதான காரியம் அல்ல. அதுபோல, நம் குடும்பதை வைத்து இதுவரை கோடி கோடியாக சம்பாதித்த அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் இப்போது எடப்பாடி-பன்னீர் பக்கம்தான் இருக்கின்றனர். அதனால், அவர்களாலும் நமக்கு ஒரு ரூபாய்கூட உதவி கிடைக்காது. அதனால், நம்முடைய வெளிநாட்டு முதலீடுகள், இங்கிருக்கும் சொத்துகளைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அதைச் சரியாக நிர்வாகம் செய்தால்தான், எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற பணம் தேவைப்படும்போது நம்மால் செலவழிக்க முடியும். அதனால், அந்தப் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். அதனால், சொத்து விவகாரங்களில் விவேக் எடுக்கும் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுங்கள். அதுபோல, தினகரன் இப்போது கட்சியை வழிநடத்தும் வேலைகளையும், எடப்பாடி-பன்னீர் மற்றும் தி.மு.க-வைச் சமாளிக்கும்விதமும் சரியாக இருக்கிறது. எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும், தி.மு.கதான் ஆட்சியைப் பிடிக்கும். அதன்பிறகு எடப்பாடியும், பன்னீரும் காணாமல் போய்விடுவார்கள். அந்த நேரத்திலும் இப்போது தினகரன் சமாளித்து கட்சி நடத்துவதுபோல், நாம் கட்சியை நடத்த வேண்டும். அதற்கு தினகரன்தான் சரியான ஆள். அதனால், கட்சி விவகாரங்களில் தினகரன் எடுக்கும் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுங்கள். சொத்துகளை விவேக் பராமரிக்கட்டும். கட்சியை தினகரன் வழிநடத்தட்டும். மற்றவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டிருங்கள்” என்று விவேக்குக்கு முதல்முறையும், தினகரனுக்கு இரண்டாவது முறையும் பட்டம் கட்டியிருக்கிறார் சசிகலா! அதை மன்னார்குடி குடும்பமும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. 

கட்சியைப் புதிதாகக் கட்டு... ஆட்சியைக் கலைக்காதே!

சசிகலா, தினகரன்

சசிகலாவை இரண்டு நாள்கள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் வைத்துச் சந்தித்தார் தினகரன். அவரிடம் பேசிய சசிகலா, “ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசாதே. இது நாம் ஏற்படுத்திய ஆட்சி. அது இன்று துரோகிகளின் கைகளில் போனாலும், அந்த ஆட்சியில் இருக்கும் மற்றவர்கள் நமக்கு விசுவாசமானவர்கள்தாம். அவர்கள் எப்போதும் நம்மோடுதாம் இருப்பார்கள். நீ ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசுவதும், அதற்கு முயற்சி செய்வதும் அவர்களையும் வெறுப்படைய வைப்பதாக எனக்குத் தகவல்கள் வந்தன. அதனால், நீ உன் வசம் இருக்கும் கட்சியைப் பார்த்துக்கொள். இரட்டை இலைச் சின்னம் நமக்கும் கிடைக்காது; எடப்பாடி-பன்னீருக்கும் கிடைக்காது. அதனால், கட்சியை நாம் முதலிலிருந்து கட்ட வேண்டியதாகத்தான் இருக்கும். அதைத் தயார்படுத்தி வை. அப்போதுதான், நாளை அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு(எடப்பாடி மற்றும் பன்னீர்) ஆட்சி கலைந்தாலும், அல்லது தி.மு.க-வினால் ஆட்சி கலைந்தாலும், அங்கிருப்பவர்கள் நம்மைத் தேடி வரும் அளவில் கட்சியைத் தயார்படுத்தி வை. அப்போதுதான், நாம் தேர்தலைச் சந்திக்க முடியும்” என்று அறிவுரை செய்துள்ளார். அதனால்தான், கடந்த இரண்டு நாள்களாக தினகரனின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. சசிகலா வந்த அன்று, “அண்ணன் பழனிசாமி மற்றும் இந்தப் புலிகேசிகளின் ஆட்சியைக் கலைப்பேன்” என்று பேசியவர், இப்போது முதலமைச்சர் மற்றும் ஊழல் செய்த அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளார். 

புதிதாக எம்.எல்.ஏ-க்களை இழுக்க வேண்டாம்!

சசிகலா தினகரனுக்குக் கொடுத்த முக்கியமான மற்றொரு அட்வைஸ், “புதிதாக எந்த எம்.எல்.ஏ-க்களையும் இழுக்க வேண்டாம். இவ்வளவு சோதனையான காலத்தில் நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே நமக்கானவர்கள். மற்றவர்களை இழுக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும். இப்போது பணம் எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்துக்காக வருபவர்கள், நாளையே பணத்துக்காக வேறு இடத்துக்கும் தாவி விடுவார்கள். அதனால், இப்போது நம்முடன் இருப்பவர்களை மட்டும் வைத்து கட்சியை நடத்து” என்றார். 

சசிகலாவின் ஒரு நாள்!

காலையில் எழுந்து அந்த வீட்டுக்குள்ளே 10 நிமிடங்கள் வாக்கிங் போய் இருக்கிறார். அதன்பிறகு, தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் என ஒன்றுவிடாமல் அத்தனையும் படித்துள்ளார். அதில் 2 மணிநேரம் ஓடிப்போய்விடும். காலை உணவு இரண்டு இட்லியும், ஒரு சப்பாத்தியும் மட்டும்தான். அதை முடித்துவிட்டு கணவர் நடராசனைப் பார்க்க காலை 11 மணி  குளோபல் மருத்துவமனைக்குக் கிளம்பிவிடுவார். அங்கு நடராசனைப் பார்ப்பதற்கு டாக்டர்கள் நேரம் கொடுக்கும்வரை, சசிகலாவுக்காக புக் செய்யப்பட்டு 2005-ம் எண் அறையில் காத்திருப்பார். அங்கு அவருடன் இளவரசியின் வாரிசுகள் கிருஷ்ணப்பிரியா, விவேக், ஷகிலா ஆகியோர் மட்டும் உடனிருப்பார்கள். சில சமயம், தினகரனும், அவரது மனைவி அனுராதா, திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோரும் இருப்பார்கள்.  அவர்களைத் தவிர கட்சிக்காரர்கள் யாருக்கும் அனுமதியில்லை. நடராசனைப் பார்த்துவிட்டு, டாக்டர்களுடன் நடராசன் உடல்நிலை பற்றிப் பேசிவிட்டு திரும்புவதற்கு மதியம் 2 மணிக்கு மேல் ஆகிவிடும். முதல்நாள் மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவிடம், நடராசனின் மருத்துவ விவரங்களை தெரிவித்த டாக்டர் டீம், பதப்படுத்தி வைத்திருந்த நடராசனின் கல்லீரலைக் காண்பித்துள்ளது. அப்போது அதுபற்றி விளக்கிய டாக்டர் டீம், “இது ரோசப்பூ கலரில் இருக்க வேண்டும். ஆனால், சாருக்குக் கருகிவிட்டது” என்று சொல்லியிருக்கின்றனர். அதைக் கவனமுடன் கேட்ட சசிகலா, நடராசனின் உடல்நிலை பற்றிய மற்ற விவரங்களையும் கேட்டுள்ளார். இப்படி மருத்துவமனை விசிட் முடிய மதியம் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை ஆகிவிடும். அதன்பிறகு வீட்டுக்கு வந்தால் வெறும் தயிர் சாதம் மட்டும்தான் உணவு. பிறகு, உறவினர்களுடன் சந்திப்பு. அதன்பிறகு செய்திகளைப் பார்ப்பதும், மாலை நாளிதழ்களைப் படிப்பதும், மீண்டும் உறவினர்களைச் சந்திப்பதும்தான் வாடிக்கை. இரவு உணவு இரண்டு சப்பாத்திகள் மட்டும். 

பரப்பான தி.நகர்... காலியான கோட்டை...

சசிகலா

சசிகலா வந்த 5 நாள்களும் அவர் தங்கியிருந்த தி.நகர் ஹபிபுல்லா சாலை பரபரப்பானது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் முதல்நாளே ஆஜராகிவிட்டார். சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திக்கேயனும் ஆஜராகிவிட்டார். அதுபோல, பல அ.தி.மு.க-வினர், தினகரன் ஆதரவாளர்கள் என அந்தத் தெரு பரபரப்பானது. ஆனால், அதே நேரத்தில் ஆட்சி நடக்கும் தலைமைச் செயலகம் வெறிச்சோடியது. எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருந்தனர். முதல்வர் முதல் அமைச்சர்கள்வரை சென்னையைக் காலி செய்துவிட்டு, சொந்த ஊர்களுக்கு ஓடிப்போய்விட்டனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, டெங்கு விழிப்புஉணர்வு முகாம் என்று காரணம் சொல்லிவிட்டு தங்களின் ஜாகையை மாற்றிக்கொண்டனர். அதுபோல, அமைச்சர்கள் அனைவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்பிலிருந்து யாரும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக்கூட இல்லை. அதுபற்றி பேச்சு வந்தபோது, “நமக்கு விசுவாசமானவர்கள் யார் என்று நமக்குத் தெரியும். அவர்களிடம் நாம் இப்போது பேசி என்ன ஆகப்போகிறது. அதுபோல, நமக்குத் துரோகம் செய்பவர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்! அவர்களிடம் சின்னம்மா பேசுவதற்கு என்ன இருக்கிறது?” என விளக்கம் சொன்னார்கள். சென்னை தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டை உளவுத்துறை போலீஸ் நெருப்பு வளையம் போட்டுக் கண்காணித்தது. குளோபல் மருத்துவமனையும் உளவுத்துறையின் கண்காணிப்புக்குக் கொண்டு வரப்பட்டது. அதோடு இந்த இரண்டு இடங்களிலும் உளவுத்துறை ரகசிய கேமராக்களையும் பொருத்தியிருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தமாதிரி அல்லது எடப்பாடி பழனிசாமி சந்தேகப்பட்டதுமாதிரி யாரும் சசிகலாவைச் சந்திக்கவில்லை; தேவையற்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், போலீஸுக்கும் நிம்மதி. எந்தச் சர்ச்சையும் இல்லாமல், பரோல் நாள்களை அமைதியாகக் கழித்துவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றதில் நிம்மதியடைந்த போலீஸ், சசிகலா குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் மெசேஜ், ‘நன்றி!’ என்பது.

http://www.vikatan.com/news/coverstory/105155-vivek-and-dinakaran-sasikalas-five-commandments.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.