Jump to content

கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்


Recommended Posts

கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்

 
கூட்டு அரசினை  வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின்  தலையாய எண்ணம்
 
 

 ‘‘எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் இனங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சகல பிரிப்­புக்­க­ளை­யும் நான் கடு­மை­யாக எதிர்க்­கி­றேன். எனது வாழ்­நாள் பூரா­வும் நான் அதற்கு எதி­ரா­கப் போரா­டி­னேன்.

தற்­போது மட்­டு­மன்றி எனது உயிர் பிரி­யும் வரை அதற்­கா­கப் போரா­டு­வேன்’’ என நெல்­சன் மண்­டேலா பல சந்­தர்ப்­பங்­க­ளில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்­டு­கள் கால­மாக ஐரோப்­பா­வின் குடி­யேற்ற நாடா­க­இ­ருந்த தென்­னா­பி­ரிக்க நாட்­டில் நில­விய அடி­மைத்­தன நிற­பே­தத்­துக்கு எதி­ரான சுதந்­தி­ரப் போராட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கிய நெல்­சன் மண்­டேலா, இன­பே­தத்தை ஒழிப்­ப­தற்­காக மட்­டு­மன்றி உலக மேம்­பாடு குறித்­தும் கன­வு­கண்ட பெருந்­த­லைத்­த­லை­வ­ரா­வார்.

‘‘ஆரம்­பத்­தில் எம்­மி­டம் இனத்­துக்­காக இருக்க வேண்­டிய அடிப்­படை அம்­சங்­க­ளான சொந்த மக்­கள் தொகை, இனத் துக்­கே ­யு­ரிய மொழி, தனித்­து­வ­மான பண்­பாடு என்­றவை எது­வும் இருந்­தி­ருக்­க­வில்லை.

நாம் தென்­சீனா, தென்­னிந்­தியா, பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ் (தனி­நா­டா­வ­தற்கு முன்­னர்) இலங்கை, மற்­றும் தீவுக் கூட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து குடி­யே­றி­யோ­ரா­ வோம்.

எம்மிடம் இருக்கும் முக்கிய என்­ன­வெ­னில் வெவ்­வே­று­பட்ட  இந்த இனத்­த­வர்­களை ஒன்­றி­ணைத்து வாழ இய­லுமா என்­பதே?’’ என முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் சிங்­கப்­பூரை உரு­வாக்­கிய அர­சி­யல் சிற்­பி­யான லீ குவான் யூ தெரி­வித்­தி­ருந்­தார்.

ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தன் மூல­மா­க­வன்றி பல்­வேறு பிரி­வு­க­ளா­கப் பிரிந்து இயங்­கு­ வ­தன் மூலம் ஒரு நாட்டை முன்­னேற்ற இய­லாது என்­பதை லீ குவான் யூ ஏற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

எல்­லோ­ருமே சிங்­கப் பூர் பிர­சை­கள் என்ற எண்­ணத்­தைச் சகல மக்­கள் மனங்­க­ளி­லும் உரு­வாக்கி, இனங்கள் மத்­தி­யில் ஐக்­கி­யத்தை  வளர்த்தெ­டுத்து உலக அரங்­க­ளில் சிங்­கப்­பூரை வெற்­றி­பெற்­ற­தொரு நாடாக ஆக்­கி­வைத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் சிற்பி  லீ குவான் யூ நாடு குறித்­துக் கண்­ட­க­னவு

1948ஆம் ஆண்­டில் ஆசி­யா­வில் வளர்ச்­சி­ய­டைந்த நாடாக ஜப்­பான் திகழ்ந்து வந்­தது. இரண்­டாம் இடத்தை இலங்கை வகித்து வந்­தது. சிங்­கப்­பூரை அபி­வி­ருத்தி கண்­ட­தொரு நாடாக ஆக்க பெரும் கஷ்­டங்­களை எதிர்­நோக்­கிய லீ குவான் யூ இலங்­கைக்கு பய­ணம் மேற்­கொண்­ட­வேளை ‘‘இலங்­கை­போன்று சிங்­கப்­பூ­ரை­யும் ஆக்­கி­விட வேண்­டு­மென்­பதே எனது கனவு’’ எனத் தெரிவித்திருந்­தார்.

அன்று அவ்­வி­தம் தெரி­வித்த அவர், பின்பொரு சம­யம்,  ‘‘எதிர்­கால எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் இருந்து வந்த இலங்கை, சுதந்­தி­ரத்­தின் பின்­னர் எவ்­வாறு பின்­ன­டை­வுக்கு உட்­பட்டு நலி­வு­கண்­டது என்­ப­தை­யும் நான் கண்­டேன்’’ எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.அது இன மத குல பேதங்­க­ளுக்கு ஆட்­பட்டு உடை­வ­டைந்து போன­தன் விளை­வே­யா­கும்.

1953ஆம் ஆண்­டில் நாட்­டின் வட­ப­கு­திக்­கு வந்த ஐ.தே. கட்­சி­யின் தலை­மை­யி­லான அர­சின் தலைமை அமைச்­சர் சேர்.ஜோன்.கொத்­த­லா­வல, இங்கு வைத்து சிங்­கள மற்­றும் தமிழ் மொழி­ கள் இரண்­டை­யும் இலங்­கை­யின் அரச கருமமொழி­யாக்­கு­வேன் என வாக்­கு­றுதி வழங்­கி­யமை நாட்­டின் தென்­ப­கு­திச் சிங்­கள மக்­க­ளைக் குழப்­பத்துக்கு உள்­ளாக்­கி­யது.

சேர்.ஜோன், சிங்­கள இனத்­தைக் காட்­டிக் கொடுத்­து­விட்­டார் என்று எதிர்க்­கட்­சி­யி­னர் குற்­றம் சாட்­டி­னர். பெளத்த பிக்­கு­மார் தலைமை அமைச்­சர் சேர்.ஜோனுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­ட­து­டன், அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக அவ்­வே­ளை­யில் எதிர்க்­கட்சியாகச் செயற்­பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க மற்­றும் பிலிப் குண­வர்த்­தன ஆகி­யோ­ரும் இணைந்­து­கொண்­டமை எரி­கிற நெருப்­பில் எண்­ணெய் ஊற்­றி­யமை போன்­றா­கி­யது. ஆயி­னும் எவர்­தான் எதிர்த்­த­போ­தி­லும் தாம் தமது நிலைப்­பாட்டை மாற்­றிக்கொள்­ளப் போவ­தில்­லை­யென சேர்.ஜோன் உறு­தி­ப­டத் தெரி­வித்­து ­விட்­டி­ருந்­தார்.

மொழி­வெ­றியை வளர்த்­து  பத­வி­யைக் கைப்­பற்­றினார்    பண்­டா­ர­நா­யக்க

1956ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் ‘‘சிங்­கள மொழியை அரச கரும மொழி ஆக்­கு­வோம்’’ என்ற உறு­தி­மொ­ழியை முன்­வைத்து பண்­டா­ர­நா­யக்க தேர்­தல் அறிவிப்பை வெளி­யிட்­டி­ருந்­தார். இத­னால் சிங்­கள மக்­க­ளது ஆத­ரவு அலை பண்­டா­ர­நா­யக்கவின் பக்­கம் திரும்­பி­யி­ருந்­தது.

ஐ.தே.கட்­சிக்கு எட்டு ஆச­னங்­க­ளி­லேயே வெற்­றி­வாய்ப்­புக் கிட்­டி­யது. சேர்.ஜோன் கொத்­த­லா­வ­ல­வின் இறுக்­க­மான பிடி­வா­த­மான போக்­குக் கார­ண­மா­கவே ஐ.தே.கட்­சிக்­குப் படு­தோல்வி ஏற்­பட்­ட­தாக ஐ.தே.கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் விமர்­சிக்­கத்    தலைப்­பட்­ட­னர்.

எத்­த­கைய விமர்­ச­னங்­க­ளை­ யும் பொருட்­ப­டுத்­தாத சேர்.ஜோன். பண்­டா­ர­நா­யக்­க­வி­டம் ஆட்­சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்­டுத் தமது சொந்த வள­வில் கொத்­த­லா­வல சென்று ஓய்வு எடுத்­துக் கொண்­டார்

.
காலப்­போக்­கில் பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான சுதந்­தி­ரக் கட்சி அர­சும் பின்­ன­டைவு காண ஆரம்­பித்­தது. பொதுத்­தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் சுதந் திரக் கட்சி அர­சும் பின்­ன­டைவு காண ஆரம்­பித்­தது.

பொதுத்­தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­ வ­தில் சுதந்­தி­ரக் கட்சி அரசு அக்­கறை காட்­டா­தி­ருந்­த­மையே பிரச்  சி­னை­க­ளைத் தோற்­று­விக்­கக் கார­ண­மா­கி­யது. சிங்­கள மொழியை அரச கரு­ம­மொ­ழி­யாக்க பண்­டா­ர­நா­யக்க  அரசு  தாம­தித்­த­தால்  பெளத்த குரு­மார் பண்­டா­ர­நா­யக்­கா­வுக்கு எதி­ராக அணி­தி­ரள ஆரம்­பித்­த­னர். எது எப்­ப­டியோ கடை­சி­யில் பெளத்த துற­வி­யொ­ரு­வ­ரது துப்­பாக்­கிச் சூட் டில் பண்­டா­ர­ நா­யக்க  கொல்­லப்­பட்­டார்.

பண்­டார  நாயக்க குறித்த கொத்­த­லா­வ­ல­வின் விமர்­சிப்பு

தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்­கவின் பூத­வு­ட­லுக்கு மரி­யாதை செலுத்­தச் சென்­றி­ருந்த சேர்.ஜோன்.கொத்­த­லா­வல, ‘‘இப்­ப­டி­யான அசம்­பா­வி­தம் நடக்­கக் கூடுமென நான் எதிர்­பார்த்­தேன்.

கடை­சி­யில் அவ்­வி­தம் ஆகி­விட்­டுள்­ளது. நான் கட்டி வைத்­தி­ருந்த நாய்­களை பண்­டா­ர­நா­யக்க கட்­டுக்­களை அவிழ்த்­த­விட்­டி­ருந்­தார். அவை கடை­சி­யில் அவ­ரையே கடித்து நாசம் விளைத்­துள் ளன’’ என கருத்து வெளி­யிட்­டி­ருந் தார்.

இன­வா­தி­க­ளைக் குறிப்­பிட்­டுக் கூறவே சேர்.ஜோன்.அத்­த­கைய உவ­மா­னத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார்.  இன­வாத குழப்­பங்­கள் கடை­சி­யில் நாசத்­தையே ஏற்­ப­டுத்­தும் என்பதை சேர்.ஜோன் நன்கு­ உணர்ந்­தி­ருந்­தார்.

அத­னா­லேயே அவர் இன­வா­தக் கருத்து நிலைப்­பாட்டை நிரா­க­ரித்­தி­ரந்­தார். அந்த வகை­யில் இன்று இன­வா­தக் கோட்­பாட்­டில் நம்­பிக்கை வைத்­துச் செயற்­ப­டும் அர­சி­யல்­வா­தி­கள்  சிலர், இன்­றைய கூட்­ட­ரசு இடை­நிலைக்  கொள்கை நிலை­ப்­பாட்­டில் செயற்­ப­டு­வ­தாக விமர்­சிக்­கின்­ற ­னர். இன­வாத இறுக்­கப் போக்­கைக் கடைக்­கொள்­ளத் தவ­று­வ­தா­கக் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். தென்­ப­கு­திக்­குச் சம­மா­கவே வட­ப­கு­தி­யை­யும் கரு­து கிறோம் என்று   ஏசு­கின்­ற­னர்.

அர­ச தலை­வர் என்ற வகை­யில் சிங்­கள மக்­க­ளு­டன் மைத்­தி­ரி­பால நெருக்­க­மா­கச் செயற்­ப­டும் போக்­கைக் கைக்­கொள்­வ­தில்லை என் பதும் அத்­த­கைய சார­ரது கருத்­தா­கும். ‘‘மகிந்த அப்­ப­டிப்­பட்ட போக்­கு­டை­ய­வ­ரல்ல.

விடு­த­லைப் புலி­கள் கெப்­பட்­டிக்­கொல்­லா­வ­வில் குண்­டுத் தாக்­கு­தல் மேற்­கொண்­ட­போது தமது உயி­ரை­யும் துச்­ச­மாக மதித்து மகிந்த அங்கு சென்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைச் சந்­தித்து உத­வி­கள் வழங்­கி­னா­ரல்­லவா? அது­வல்­லவா தலை­மைத்துவம்’’ என மகிந்­த­வைப் போற்­றிப் புக­ழ­வும் அந்­தத் தரப்­பி­னர் முன்னிற்கின்றனர்.

சேர்.ஜோனி­னது ஆட்­சிக் காலத்­தில் நாட்­டின் தேவை குறித்து எவ்­வித அக்­க­றை­யும் இல்­லாத மனி­த­ரென இத்­த­கை­ய­தொரு தரப்­பி­னர் சேர்.ஜோனை விமர்ச்­சித்­த­து­ முண்டு. ஆனால் தமது ஒன்­றரை ஆண்டு­கள் கால நிர்­வா­கத்­தில் சேர்.ஜோன் நாட்­டுக்­கா­கக் குறிப்­பிடத் தக்க சேவை ஆற்­றி­யி­ருந்­தார் என்ற விமர்­ச­ன­மும் அவர் குறித்து வெளி­வந்­த­தண்டு.

 ஜோன் கொத்­த­லா­வலவின்அளப்­ப­ரிய சேவை

1954ஆம் ஆண்­டில் சேர்.ஒலி­வர் குண­தி­ல­கவை இலங்­கை­யின் கவர்­ணர் ஜென­ர­லாக ஆக்­கி­வைத்து இலங்­கை­யர்­க­ளையே இந்த நாட்­டில் கவர்­ணர் ஜென­ரல் பத­விக்கு நிய­மிக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வர் சேர்.ஜோன்.கொத்­த­லா­வலவே.

சகல சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­க­ளி­லும் நாட்­டின் தேசி­யக் கொடி­யு­டன் பிரிட்­டன் அர­சின் தேசி­யக் கொடி­யை­யும் ஏற்­றி­வைக்­கும் நடை­ மு­றையை நிறுத்தி இலங்­கை­யின் தேசி­யக் கொடியை மட்­டுமே ஏற்றி வைக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வ­ரும் சேர்.ஜோனே. இலங்­கைக்கு ஐ.நா. சபை­யின் உறுப்­பு­ரி­மை­யைப் பெற்­றுக்­கொள் வ­துக்­குக் கார­ண­மாய் அமைந்­த­ வ­ரும் சேர்.ஜோன். கொத்­த­லா­ வ­லவே.

பிரிட்­டன் அரசி எலி­ச­பெத் மகா­ராணி தமது கண­வ­ரு­டன் இலங்­கைக்கு முதன் முத­லாக பய­ணம் மேற்­கொள்ள வழி­ச­மைத்­த­வ­ரும் சேர்.ஜோனே. அந்த வகை­யில் சேர்.ஜோன் கொத்­த­லா­வல அதி­ச­யிக்­கத்­தக்­க­தொரு அர­சி­யல் தலை­வ­ராக கரு­தப்­ப­டத்­தக்­க வரே.

அதே­போன்­று­தான் இன்­றைய மைத்­திரி– ரணில் கூட்­ட­ர­சை­யும், சிங்­கள இனம் குறித்து அக்­கறை காட்­டாத அர­சென ஒரு சில தரப் பினர் விமர்­சித்து வரு­கின்­ற­னர். தலதா மாளி­கை­யின் முன்­னால் இர­வுக் கார் ஓட்­டப் பந்­த­யம் நடத்­தும்­வரை பார்த்­தி­ருந்த மகிந்த தரப்­பி­னர் இன்­றைய கூட்­ட­ர­சைக் குறை குற்­றம் கூறு­வது நகைப்­புக்கு இட­மா­னது.

அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த முன்­னைய ஆட்­சித் தரப்­பைச் சேர்ந்­தோர் இன்று எதி­ர­ணி­யில் இருந்­து­கொண்டு இன்­றைய அரசை விமர்­சிப்­பது வேடிக்­கைக்கு உரி­யது., என்­றல்ல வோ நாட்டு மக்­கள் மகிந்த தரப்­பி­னரை குறை­கூ­று ­கின்­ற­னர்.

நாட்டு மக்­கள் மத்­தி­யில் தேசிய நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கும் நோக்­கில் அதற்­கான அலு­வ­ல­க­மொன்றை  நிறுவி நாட்­டின் இனப் பிரச்­சி­னைக்கு உரிய  தீர்­வொன்றை எட்­டு­வ­தற்­கான முயற்­சி­யில் இன்­றைய கூட்­ட­ரசு ஈடு­பட்டு வரு­கி­ற­தல்­லவா?
1954ஆம் ஆண்­டில் சேர்.ஜோன் கொத்­த­லா­வல ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ பய­ணத்­தின் பின்­னர், கடந்த 58 ஆண்­டு­க­ளாக எந்­த­வொரு இலங்­கை­யின் அரச தலை­வர்­களோ, தலைமை அமைச்­சர்­களோ ஆஸ்­தி­ரே­லிய நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளு­மாறு அழைக்­கப்­பட்­ட­தில்லை. இன்று உல­கின் பல­மிக்க சகல நாடு­க­ளும் இலங்­கை­யு­டன் நல்­லு­ற­வைப் பேணி வரு­கின்­ற­ன.

அன்­றைய கால­கட்­டத்­தில் சேர்.ஜோன்.கொத்­த­லா­வ­ல­வின் செயற்­பா­டு­க­ளின் பெறு­ம­தியை உண­ராத சிங்­க­ளத் தரப்­பி­னர்­கள் அவரை அர­சி­யல் ரீதி­யில் தோற்­க­டித்த அவ­ரது சொந்த இட­மான கந்­த­வளை வள­வுக்­குள் அவரை முடங்க வைத்­தி­ருந்­த­னர்.

அதற்­குப் பின்­னர் அரச அதி­கா­ரங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் எல்­லோ­ரும் வாயில்­போட்டு உமி­ழும் இனிப்­புக்­குள் மறைத்து வைத்த விசத்­தைப் போன்­ற­வர்­க­ளா­கவே அமைந்­த­னர்.

அந்த வகை­யில் இன்­றைய கூட்­ட­ர­சுக்கு எதி­ரா­கக் குழப்­பங்­களை உரு­வாக்­கும் கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர்­க­ளது நோக்­கம் அன்று  சேர்.ஜோன்.கொத்­த­லா­வ­லவை தலைமை அமைச்­சர் பத­வி­லி­ருந்து வெளி­யேற்­றி­யமை போன்று இன்­றைய அர­சை­யும் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­து­தானா? என்­பது குறித்து சந்­தே­கம் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

http://newuthayan.com/story/37420.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.