Jump to content

மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்?


Recommended Posts

மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்?

 
 

போராட்டங்கள், கறுப்புக்கொடி காட்டல்கள் என்ற பதற்றத்துக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி யாழ்ப்பா ணத்திற்கு நேற்று வந்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. இந்தப் பதற்றமான, அரசியல் சூடான கள நிலவரத்தில் இந்தப் பயணத்தைக் கூடுமான வரையில் தவிர்ப்பதே நல்லது என்று அவரது பாதுகாவலர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப் பார்கள் என்பது நிச்சயம். திட்டமிட்டபடி தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறாமல் உள்ளரங்கத்திற்கு இறுதிநேரத்தில் மாற்றப்பட்டதில் இருந்தே அதனை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும்.

அந்தத் தடைகளை எல்லாம் மீறி தமிழ் மக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக மாட்டார்கள் என்று அவர் நம்பி வந்ததற்காக அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
என்னதான் வாக்குறுதிகளை அவர் தமிழ் மக்களுக்கு வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் விட்டாலும், தமிழ் மக்கள் மீது அவர் கொண்ட அந்த நம்பிக்கை இதுவரை இருந்த பௌத்த சிங்களத் தலைவர்களில் இருந்து அவரை வேறுபடுத்துகின்றது.

அந்த உரிமையுடன்தான் தமிழ் மக்கள் அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவற்றை அவர் நிறைவேற்றாதபோது கோபமும் விசனமும் கொள்கிறார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும்.
எப்படியிருந்தா லும் அவர் வைத்த நம்பிக்கையைத் தமிழர்களும் காப்பாற்றியே இருக்கிறார்கள்.

இத்தனை பதற்றம், ஆர்ப்பாட்டம், சூடான அரசியல் களச் சூழலிலும் அவர் மீது தூசு துரும்பு விழாத வகையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி மைத்திரி வைத்த நம்பிக்கையை தமிழர்களும் காப்­பாற்றி இருக்­கி­றார்­கள்.

இத்­த­கைய கண்­ணி­ய­மான அர­சி­யல் போக்கு இலங்­கை­யில் கடந்த பல தசாப்­தங்­க­ளா­கக் காணக்­கி­டைக்­கா­தது. தனக்­குக் கறுப்­புக் கொடி காட்­டிப் போராட்­டம் நடத்­தி­ய­வர்­களை நோக்­கிச் சென்று அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார் மைத்­திரி. “பேசித் தீர்க்­க­லாம் வாருங்­கள்“ என்ற அவ­ரு­டைய அழைப்பை நிரா­க­ரித்­த­போ­தும், பெருங் குரல் எடுத்து எதிர்ப்பு முழக்­க­மிட்­ட­போ­தும், அசம்­பா­வி­தங்­களோ வன்­மு­றை­களோ அங்கு இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

இதுவே இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யி­லான சிறந்த மாற்­றம்­தான். ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்து அரச தலை­வர் ஒரு­வர் இறங்கி போராட்­டக்­கா­ரர்­க­ளு­டன் பேசி­ய­தும், அவ­ரது கோரிக்கை தமக்கு ஏற்­பு­டை­யது இல்லை என்­ற­ போ­தும் அதற்­கான தமது எதிர்ப்பை நிதா­ன­மா­கத் தமி­ழர்­கள் வெளிப்­ப­டுத்­தி­ய­தும் நம்­பிக்­கைக்­கு­ரிய முன்­னேற்­றம் என்றே சொல்­ல­லாம்.

இந்­தக் கண்­ணி­யத்­து­டன் இரு தரப்­பி­ன­ரும் தொடர்ந்து நடந்­தால், பேசி­னால், விட­யங்­களை ஆராய்ந்­தால் பிரச்­சி­னைக்கு இல­கு­வா­கத் தீர்­வைக் கண்­டு­கொள்­வ­தும் சாத்­தி­ய­மா­கக்­கூ­டும்.

இந்த நம்­பிக்கை இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் வளர்த்­தெ­டுத்­துச் செல்­லப்­ப­டு­வதே இனப் பிரச்­சி­னை­யின் தீர்­வுக்­குச் சாத­க­மா­ன­தா­க­வும் இருக்­கும்.
அதே­வேளை, தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு விட­யத்தை ஆழ­மா­கக் குறிப்­பிட்­டார்.

மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­து­ப­வர்­கள் மனி­தா­பி­மா­னம் அற்­ற­வர்­கள் என்­றார் அவர். யாழ்ப்­பா­ணத்­தில் நின்­று­கொண்டு அவர் இத­னைத் தெரி­வித்­தார். உண்­மை­யில் அவர் இந்­தக் கருத்தை தெற்­கில் பௌத்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு சொல்­லி­யி­ருக்­க­வேண்­டும்.

இலங்கை என்­கிற நாாட்­டில் மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­தி­ய­வர்­கள் சிறு­பான்மை மக்­கள் அல்­லர். இன்­றும் மொழி­யா­லும் மதத்­தா­லும் மக்­களை வேறு­ப­டுத்­து­ப­வர்­கள் சிறு­பான்­மை­ யி­னர் அல்­லர்.

தனிச் சிங்­க­ளச் சட்­டத்தை 1956ஆம் ஆண்டு கொண்டு வந்­தது முதல் மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­தி­ய­வர்­கள் பௌத்த சிங்­க­ளத் தலை­வர்­க­ளே­யன்றி வேறு­யா­ரு­மல்­லர்.

அந்­தத் தவ­றுக்கு பரி­கா­ரம் தேடி­யி­ருக்­க­வேண்­டிய இன்­றைய தலை­வர்­கள் அதைச் செய்ய மறுத்து இன்­றும் பிரச்­சி­னை­ யைத் தொடர அனு­ம­திப்­ப­தன் மூலம் அதே தவ­றையே இழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால், மொழி­யால் மதத்­தால் மக்­களை வேறு­ப­டுத்­திக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் யார் என்­ப­தைச் சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை.

எனவே இந்­தத் தடவை தமிழ் மக்­கள் மீது நம்­பிக்கை வைத்து யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து போற்­றத்­தக்க ஜன­நா­யக வழி­மு­றை­யின் ஊடாக தமி­ழர்­க­ளின் எதிர்ப்­புப் போராட்­டங்­க­ளை­யும் கையாண்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தான் சுட்­டிக்­காட்­டி­ய­படி மொழி­யால் மக்­க­ளைப் பிரிக்­காத ஒரு தேசத்தை விரை­வில் கட்­டி­யெ­ழுப்ப உறு­தி­பூ­ண­வேண்­டும். அதற்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணிக்­க­வும்­வேண்­டும். அதா­வது அவ­ரா­வது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.

http://newuthayan.com/story/37207.html

Link to comment
Share on other sites

உண்மையில் இலங்கையை ஆட்சி செய்பவர்கள் புத்த தேரர்களே! இவர்களை மத ஆராதனை செய்து மக்களுக்கு இறைபக்தியை ஊட்டுவதற்கு மட்டும் அனுமதித்துக் கட்டுப்படுத்தாதுவிட்டால்....! இலங்கையில் இனப்பிரச்சனையானது இலங்கைத்தீவு அழியுமட்டும் தொடரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.