Jump to content

விஷால் யார்?'


Recommended Posts

அபிராமி ராமநாதன்,கேள்வி, விஷால்,சினிமா, தயாரிப்பாளர்கள்

 

 

'தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட, விஷால் யார்?' என, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பி உள்ளார். 'விஷாலின் உத்தரவுகளை செயல்படுத்தப் போவதில்லை' எனக் கூறியுள்ள அவர், 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தியேட்டர்களில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படும்' என்றும் தெரிவித்து உள்ளார். இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் - நடிகர் சங்க மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

 

அபிராமி ராமநாதன்,கேள்வி, விஷால்,சினிமா, தயாரிப்பாளர்கள்

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு, நடிகர் விஷால் வந்த பின், திரைத் துறை சார்ந்த பிரச்னைகளில், தன்னிச்சையாக முடிவு எடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளார். 'பெப்சி' தொழிலாளர்கள் பிரச்னை, தயாரிப்பாளர் சங்க பிரச்னை மற்றும் தியேட்டர் கட்டண விவகாரங்களில், அவர் அடுத்தடுத்து வெளியிடும் அறிவிப்புகள், கடும் 
விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில், 'சினிமாவுக்கு கேளிக்கை 

வரியை ரத்து செய்ய வேண்டும்' என, திரை உலகைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள், அமைச்சர்களுடன் பேச்சு நடத்தின.முடிவில், கேளிக்கை வரியை, 10 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாகக் குறைத்து, அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக, நேற்று முன்தினம், நடிகர் விஷால், அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'தியேட்டர்களில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கக் கூடாது; தின்பண்டங்களுக்கு கூடுதல் விலை வாங்கக் கூடாது; 'ஆன் - லைன்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; 'அம்மா' குடிநீர் விற்க வேண்டும்' என, ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தார்.

அவரது அறிக்கைக்கு, தியேட்டர் உரிமையாளர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் நேற்று, தியேட்டர் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின், சங்கத் தலைவர், அபிராமி ராமநாதன் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவு போடுவது போல, விஷால், அனைத்து விஷயங்களிலும் தலையிடுகிறார். அவ்வாறு, அவர் பேசக் கூடாது. ஒவ்வொரு சங்கத்திற்கும், தனித்தனி விதிமுறைகள் உள்ளன. விஷால் அறிவித்தது, அவரது தன்னிச்சையான முடிவு;அந்த முடிவை ஏற்க மாட்டோம். இனி, எந்த முடிவை அறிவிப்ப தாக இருந்தாலும், சம்பந்தப் பட்டோரை கலந்தாலோசித்து, அறிவிக்க வேண்டும்.

தயாரிப்பாளர்கள் இல்லாமல், நாங்கள் இல்லை; 

 

நாங்கள் இன்றி, அவர்கள் இல்லை. வாகன நிறுத்த கட்டணம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்புக்கு ஏற்பவே, நாங்கள் செயல்படுவோம். தின்பண்டங்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள, எம்.ஆர்.பி., விலையை மட்டுமே பெற, நாங்கள் அறிவுறுத்துவோம். 

சில இடங்களுக்கு ஏற்ப, மக்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், விலையில் மாற்றம் இருக்கும். கேளிக்கை வரி தொடர்பான, அரசின் ஆணை, இன்னும் கைக்கு வரவில்லை. வந்த பின், டிக்கெட் மற்றும், 'கேன்டீன்' கட்டணம் குறித்து, முறையாக அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

அபிராமி ராமநாதன்


தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவராக உள்ளார். 'மல்டி பிளக்ஸ்' தியேட்டரை, சென்னையில் அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். திரைப்பட வினியோக முறை யில், மாற்றம் கொண்டு வந்தவர். தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர் சங்கம் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் என, பன்முகம் உடையவர்.
 

நடிகர் விஷால்


தெலுங்கு தயாரிப்பாளர், ஜி.கே.ரெட்டியின் மகன். கல்லுாரி படிப்பை முடித்ததும், சினிமா ஆர்வத்தால், நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். செல்லமே, சண்டக் கோழி, திமிரு போன்ற படங்களால் பிரபல மானார். இதுவரை, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சங்க நிலம் குறித்து பிரச்னையை கிளப்பி, நடிகர் சங்க தலைவரானார். திருட்டு விசிடி, இணைய தளத் தில் புதுப்படங்கள் ஒளிபரப்பு குறித்து பேசி, தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார். தற்போது, தியேட்டர் விதிமுறைகள் குறித்து பேச துவங்கி உள்ளார். ஆகஸ்டில், விஷாலின் பிறந்த நாளை, அவரது ரசிகர்கள், அடுத்த முதல்வர், 'ரேஞ்சுக்கு' கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. ச

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1875431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தெலுங்கு பயல் ஒழுங்கா ஒரு படம் நடிக்க வக்கில்லை ஆடுற ஆட்டம் ஓவர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.