Jump to content

தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ?


Recommended Posts

தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ?

image-01dde39fc8f0eca9dd0c786b9159e45eb6694560.jpg

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­களில் போட்­டி­யிடும் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யல்­களில் 25 வீத­மா­ன­வற்றை பெண்­க­ளுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் உள்­ளூ­ராட்சி திருத்தச் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் மலை­யகப் பெண்­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வ­ளவு நாட்­க­ளாக ஒதுக்­கப்­பட்ட நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்த மலை­யகப் பெண்­க­ளுக்கு இது ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும். தோட்­டத்தில் கொழுந்து பறிப்­ப­தற்கும், அதன்பின் வீட்டு வேலை­களை செய்­வ­தற்கும், தேர்­தல்­களில் வாக்­க­ளிப்­ப­தற்கும் மட்டும் மலை­யகப் பெண்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இந்த நிலை மாற்­றப்­பட்டு அவர்­களும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளி­னூ­டாக அர­சி­யலில் பிர­வே­சிக்க வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தொரு செயற்­பா­டாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளான மாந­கர சபைகள், நக­ர­ச­பைகள் மற்றும் பிர­தேச சபைகள் தொடர்­பான திருத்தச் சட்­ட­மூ­லங்கள் திருத்­தங்­க­ளுடன் கடந்த திங்கள் கிழ­மை­யன்று பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

அன்­றைய தினம் இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பான திருத்தச் சட்­ட­மூ­லங்கள் இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு சுமார் ஒரு மணி­நேரம் இடம்­பெற்ற விவா­தத்­துக்கு பின்னர் வாக்­கெ­டுப்­பின்றி திருத்­தங்­க­ளுடன் சபையில் நிறை­வே­றி­யது.

அங்கு உரை­யாற்­றிய விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் பைஸர் முஸ்­தபா மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்டம் தொடர்­பான அறி­வித்தல் ஒரு­வார காலத்­துக்குள் வெளி­யி­டப்­படும் என தெரி­வித்­துள்ளார். அத்­துடன் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடை­பெ­று­வது உறுதி எனவும் அமைச்சர் திட்­ட­வட்­ட­மாக சபையில் குறிப்­பிட்­டுள்ளார். இதன் மூலம் ஜன­வ­ரியில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை­பெ­று­வது உறு­தி­யென தெரி­ய­வ­ரு­கி­றது.

ஏற்­க­னவே அதா­வது 2012 ஆம் ஆண்டில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான திருத்­தச்­சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­போது அதற்கு பொறுப்­பாக இருந்த தினேஷ்­கு­ண­வர்­த­ன­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அந்த திருத்தச் சட்­ட­மூ­லத்தில் 70 வீதம் தொகு­தி­வாரி முறையும், 30 வீதம் விகி­தா­சார முறை­யையும் கொண்ட கலப்புத் தேர்தல் முறை­யொன்றே முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தன.

இந்த முன்­மொ­ழி­வினால் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் பாதிப்­புகள் ஏற்­ப­டு­மென்று சிறு­பான்மை மக்கள் தலை­வர்கள் மற்றும் கட்­சி­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது மட்­டு­மின்றி, அர­சாங்­கத்­துக்கும் இது தொடர்­பாக விளக்­கி­ய­துடன் இதில் மேலும் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்தி வந்­தன.

இது தொடர்பில் பல்­வேறு கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­ட­துடன், சிறு­பான்மை தலை­வர்­களால் திருத்­தங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து 60 வீதம் தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­து­வத்­தையும், 40 வீதம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வத்­தையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை­மை­யினை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டனர்.

இதற்­க­மைய தற்­போது மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை சட்­டத்தில் 5 ஆம் விதியில் உள்ள உறுப்­பு­ரை­யி­லேயே திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, நிர்­வாகம் தொடர்­பான தொழி­நுட்ப விட­யங்கள் ஆகி­ய­வற்­றி­லேயே சிறு மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் ஒவ்­வொரு கட்­சியும் தமது வேட்­பாளர் பட்­டி­யலில் 25 வீதத்தைப் பெண்­க­ளுக்­குக்­காக கட்­டா­ய­மாக ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த ஏற்­பாடு மலை­ய­கத்­துக்கு மிக­மிக அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். மலை­ய­கத்தில் காலங்­கா­ல­மா­கவே பெண்கள் ஒதுக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். பாரா­ளு­மன்றம், மாகா­ண­ ச­பைகள், உள்­ளூராட்சி மன்­றங்கள் அனைத்­தி­லுமே பெண்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். ஓரிரு மலை­யக கட்­சிகள் பெய­ருக்­காக ஓரிரு பெண்­களை வேட்­பாளர் பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­கின்­றன.

இது­வரை மலை­ய­கத்தை சேர்ந்த எந்­த­வொரு பெண்­ம­ணியும் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. மாகாண சபை பாரா­ளு­மன்றம் என்­ப­வற்­றுக்கு செல்ல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே அடிப்­படை ஆதாரம் என்ற நிலையில் எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்றத் தேர்­தல்­களின் மூலம் பெண்­களை உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டுமா?

அதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதா? என்ற கேள்விகளும் நுவ­ரெ­லியா மாவட்ட மக்­க­ளி­டையே மட்­டு­மன்றி, முழு மலை­யக மக்­க­ளி­டை­யேயும் எழுந்­துள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்டால், எதிர்­கா­லத்தில் மலை­யகத் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழும் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இத்­திட்டம் விஸ்­த­ரிக்­கப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­வதே இதற்குக் கார­ண­மாகும்.

ஆனால், கடந்த வாரம் இது தொடர்பில் தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­க­ணே­ச­னிடம் இது­பற்றி வின­வி­ய­போது; நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ள ஐந்து பிர­தேச சபை­களை 12 பிர­தேச சபை­க­ளாக மாற்றும் நட­வ­டிக்கை துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

அமைச்­சரின் இந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில், நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ, ஹங்­கு­ராங்­கெத்த, கொத்­மலை மற்றும் வலப்­பனை ஆகிய ஐந்து பிர­தேச சபை­களே இயங்­கி­வ­ரு­கின்­றன. ஐந்து பிர­தேச செய­ல­கங்­களே உள்­ளன. சுமார் ஏழு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வாழ்­கின்­றனர். நுவ­ரெ­லியா பிர­தேச செய­லாளர் பிரி­விலும், அம்­ப­க­முவ பிர­தேச செய­லாளர் பிரி­விலும் மட்டும் தலா இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வாழ்­கின்­றனர்.

இவர்கள் தங்­க­ளது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தி­லுள்ள சிர­மங்­களை குறைக்கும் நோக்­கி­லேயே ஐந்து பிர­தேச சபை­களை குறைந்­த­பட்­ச­மாக 12 ஆக­வா­வது உயர்த்தித் தரு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

தமிழ் முற்­போக்­குக்­கூட்­டணித் தலை­வர்கள் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லுக்கு முன்னர், நுவ­ரெ­லியா மாவட்டப் பிர­தேச சபை­களை 12 ஆக அதி­க­ரிக்க வேண்­டு­மென்றும், ஹட்டன் – டிக்­கோயா நக­ர­சபை மற்றும் தல­வாக்­கலை – லிந்­துலை நக­ர­ச­பை­களை மாந­க­ர­ச­பை­க­ளாக தரம் உயர்த்த வேண்­டு­மென்றும் கோரிக்­கை­களை முன்­வைத்து அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினர். அர­சாங்­கமும் இந்த கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவே தெரி­வித்து வந்­துள்­ளது.

இந்­நி­லையில், எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை நடத்தப்போவதாக மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
 

ஜனவரிக்கு இன்னும் இரண்டரை மாதங்களே எஞ்சியுள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படுமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இரண்டரை மாதகாலத்திற்குள் ஐந்து பிரதேச சபைகளை 12 ஆக பிரித்து அவை தனித்தனியாக செயற்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இது நியாயமானதொரு கேள்வி என்றே கூறவேண்டும்.

ஏனெனில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில், தற்போது வரை இதற்கான முதற்கட்ட பணிகள்கூட ஆரம்பிக்கப்படவில்லை என்றே அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டப் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2017-10-15#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.