Jump to content

தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ?


Recommended Posts

தடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்களா ?

image-01dde39fc8f0eca9dd0c786b9159e45eb6694560.jpg

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­களில் போட்­டி­யிடும் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யல்­களில் 25 வீத­மா­ன­வற்றை பெண்­க­ளுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் உள்­ளூ­ராட்சி திருத்தச் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் மலை­யகப் பெண்­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வ­ளவு நாட்­க­ளாக ஒதுக்­கப்­பட்ட நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்த மலை­யகப் பெண்­க­ளுக்கு இது ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும். தோட்­டத்தில் கொழுந்து பறிப்­ப­தற்கும், அதன்பின் வீட்டு வேலை­களை செய்­வ­தற்கும், தேர்­தல்­களில் வாக்­க­ளிப்­ப­தற்கும் மட்டும் மலை­யகப் பெண்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இந்த நிலை மாற்­றப்­பட்டு அவர்­களும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளி­னூ­டாக அர­சி­யலில் பிர­வே­சிக்க வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தொரு செயற்­பா­டாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளான மாந­கர சபைகள், நக­ர­ச­பைகள் மற்றும் பிர­தேச சபைகள் தொடர்­பான திருத்தச் சட்­ட­மூ­லங்கள் திருத்­தங்­க­ளுடன் கடந்த திங்கள் கிழ­மை­யன்று பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

அன்­றைய தினம் இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பான திருத்தச் சட்­ட­மூ­லங்கள் இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு சுமார் ஒரு மணி­நேரம் இடம்­பெற்ற விவா­தத்­துக்கு பின்னர் வாக்­கெ­டுப்­பின்றி திருத்­தங்­க­ளுடன் சபையில் நிறை­வே­றி­யது.

அங்கு உரை­யாற்­றிய விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் பைஸர் முஸ்­தபா மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்டம் தொடர்­பான அறி­வித்தல் ஒரு­வார காலத்­துக்குள் வெளி­யி­டப்­படும் என தெரி­வித்­துள்ளார். அத்­துடன் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடை­பெ­று­வது உறுதி எனவும் அமைச்சர் திட்­ட­வட்­ட­மாக சபையில் குறிப்­பிட்­டுள்ளார். இதன் மூலம் ஜன­வ­ரியில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை­பெ­று­வது உறு­தி­யென தெரி­ய­வ­ரு­கி­றது.

ஏற்­க­னவே அதா­வது 2012 ஆம் ஆண்டில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான திருத்­தச்­சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­போது அதற்கு பொறுப்­பாக இருந்த தினேஷ்­கு­ண­வர்­த­ன­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அந்த திருத்தச் சட்­ட­மூ­லத்தில் 70 வீதம் தொகு­தி­வாரி முறையும், 30 வீதம் விகி­தா­சார முறை­யையும் கொண்ட கலப்புத் தேர்தல் முறை­யொன்றே முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தன.

இந்த முன்­மொ­ழி­வினால் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் பாதிப்­புகள் ஏற்­ப­டு­மென்று சிறு­பான்மை மக்கள் தலை­வர்கள் மற்றும் கட்­சி­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது மட்­டு­மின்றி, அர­சாங்­கத்­துக்கும் இது தொடர்­பாக விளக்­கி­ய­துடன் இதில் மேலும் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்தி வந்­தன.

இது தொடர்பில் பல்­வேறு கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­ட­துடன், சிறு­பான்மை தலை­வர்­களால் திருத்­தங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து 60 வீதம் தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­து­வத்­தையும், 40 வீதம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வத்­தையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை­மை­யினை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டனர்.

இதற்­க­மைய தற்­போது மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை சட்­டத்தில் 5 ஆம் விதியில் உள்ள உறுப்­பு­ரை­யி­லேயே திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, நிர்­வாகம் தொடர்­பான தொழி­நுட்ப விட­யங்கள் ஆகி­ய­வற்­றி­லேயே சிறு மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் ஒவ்­வொரு கட்­சியும் தமது வேட்­பாளர் பட்­டி­யலில் 25 வீதத்தைப் பெண்­க­ளுக்­குக்­காக கட்­டா­ய­மாக ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த ஏற்­பாடு மலை­ய­கத்­துக்கு மிக­மிக அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். மலை­ய­கத்தில் காலங்­கா­ல­மா­கவே பெண்கள் ஒதுக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். பாரா­ளு­மன்றம், மாகா­ண­ ச­பைகள், உள்­ளூராட்சி மன்­றங்கள் அனைத்­தி­லுமே பெண்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். ஓரிரு மலை­யக கட்­சிகள் பெய­ருக்­காக ஓரிரு பெண்­களை வேட்­பாளர் பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­கின்­றன.

இது­வரை மலை­ய­கத்தை சேர்ந்த எந்­த­வொரு பெண்­ம­ணியும் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. மாகாண சபை பாரா­ளு­மன்றம் என்­ப­வற்­றுக்கு செல்ல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே அடிப்­படை ஆதாரம் என்ற நிலையில் எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்றத் தேர்­தல்­களின் மூலம் பெண்­களை உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டுமா?

அதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதா? என்ற கேள்விகளும் நுவ­ரெ­லியா மாவட்ட மக்­க­ளி­டையே மட்­டு­மன்றி, முழு மலை­யக மக்­க­ளி­டை­யேயும் எழுந்­துள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்டால், எதிர்­கா­லத்தில் மலை­யகத் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழும் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இத்­திட்டம் விஸ்­த­ரிக்­கப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­வதே இதற்குக் கார­ண­மாகும்.

ஆனால், கடந்த வாரம் இது தொடர்பில் தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­க­ணே­ச­னிடம் இது­பற்றி வின­வி­ய­போது; நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ள ஐந்து பிர­தேச சபை­களை 12 பிர­தேச சபை­க­ளாக மாற்றும் நட­வ­டிக்கை துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

அமைச்­சரின் இந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில், நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ, ஹங்­கு­ராங்­கெத்த, கொத்­மலை மற்றும் வலப்­பனை ஆகிய ஐந்து பிர­தேச சபை­களே இயங்­கி­வ­ரு­கின்­றன. ஐந்து பிர­தேச செய­ல­கங்­களே உள்­ளன. சுமார் ஏழு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வாழ்­கின்­றனர். நுவ­ரெ­லியா பிர­தேச செய­லாளர் பிரி­விலும், அம்­ப­க­முவ பிர­தேச செய­லாளர் பிரி­விலும் மட்டும் தலா இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் வாழ்­கின்­றனர்.

இவர்கள் தங்­க­ளது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தி­லுள்ள சிர­மங்­களை குறைக்கும் நோக்­கி­லேயே ஐந்து பிர­தேச சபை­களை குறைந்­த­பட்­ச­மாக 12 ஆக­வா­வது உயர்த்தித் தரு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

தமிழ் முற்­போக்­குக்­கூட்­டணித் தலை­வர்கள் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­த­லுக்கு முன்னர், நுவ­ரெ­லியா மாவட்டப் பிர­தேச சபை­களை 12 ஆக அதி­க­ரிக்க வேண்­டு­மென்றும், ஹட்டன் – டிக்­கோயா நக­ர­சபை மற்றும் தல­வாக்­கலை – லிந்­துலை நக­ர­ச­பை­களை மாந­க­ர­ச­பை­க­ளாக தரம் உயர்த்த வேண்­டு­மென்றும் கோரிக்­கை­களை முன்­வைத்து அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினர். அர­சாங்­கமும் இந்த கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவே தெரி­வித்து வந்­துள்­ளது.

இந்­நி­லையில், எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை நடத்தப்போவதாக மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
 

ஜனவரிக்கு இன்னும் இரண்டரை மாதங்களே எஞ்சியுள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படுமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இரண்டரை மாதகாலத்திற்குள் ஐந்து பிரதேச சபைகளை 12 ஆக பிரித்து அவை தனித்தனியாக செயற்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இது நியாயமானதொரு கேள்வி என்றே கூறவேண்டும்.

ஏனெனில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில், தற்போது வரை இதற்கான முதற்கட்ட பணிகள்கூட ஆரம்பிக்கப்படவில்லை என்றே அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டப் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2017-10-15#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.