Jump to content

புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்


Recommended Posts

புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்

 

 

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

sampanthan-maithri-ranil.jpg

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  

அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லை. 

இது புனித பயணமாகும். இந்த பயணத்தில் அவர்கள் இருவரும் வெற்றிகாண வேண்டும். 

இவ்வருட திபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் நடைபெறும் என இவ்வடத்தில் நான் கூற விரும்புகின்றேன். 

பிளவுப்படாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமஉரிமையுடன் வாழும் வகையில் அந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறான அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலமாக நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக வாழ முடியும். அத்துடன் நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறி கொள்வதற்கு நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் அதனை விரும்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25837

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெட்டு 70 வருடமாச்சு. இன்னுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இவ்வருட திபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் நடைபெறும் என இவ்வடத்தில் நான் கூற விரும்புகின்றேன். 

இன்னுமா இந்தாளை சனம் நம்புது ....?
முடியலை தலீவா ஏற்கனவே 2016 புத்தாண்டை தீர்வுடன் மக்கள் கொண்டாடிவிட்டனர் .இப்போது புது கப்சாவுடன் தலீவர் வெளிக்கிட்டிருக்கிறார் 
அதுசரி காசா பணமா    ஒரு புளோவில அள்ளி விடவேண்டியதுதானே யாரும்   சண்டைக்குவந்தால் சொந்தக்கருத்து என்று பிளேட்டை மாத்தவேண்டியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan-maithri-ranil.jpg

இவ்வளவு நடந்தும்....இன்னும் கையெடுத்து கும்புட்டுக்கொண்டு திரியுது. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை  விறைச்சுப்போய் நிற்கிறார்கள் இந்தாள் விழுந்து கும்பிடுவதை பாத்தால் பிச்சை கேக்கிறமாதிரி இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை  விறைச்சுப்போய் நிற்கிறார்கள் இந்தாள் விழுந்து கும்பிடுவதை பாத்தால் பிச்சை கேக்கிறமாதிரி இருக்குது.

பாக்க எனக்கே பாவமாய்க் கிடக்குது...!:mellow:

Link to comment
Share on other sites

அடுத்த தீபாவளிப் பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும்

அடுத்த தீபாவளிப் பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும்
SHARES0
 

இந்­தத் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யை­விட அடுத்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டிகை மிக­வும் சிறப்­பான – மகிழ்ச்சி­யான சூழ­லில் நடை­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே, இன்­றைய தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் கலந்து கொள்­கின்­றேன்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தேசிய தீபா­வளி பண்­டிகை விழா அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இரவு நடை­பெற்­றது. கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கலந்­து­கொண்­டார்.

அவர் அங்கு உரை­யாற்­று­கை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நீண்­ட­கா­ல­மாக எமது நாடு இரு­ளில் இருந்­தது. 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பிறகு நாடு இரு­ளில் இருந்து வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தற்­போது புதிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது. எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக, சமத்­து­வ­மாக வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அந்­தப் பய­ண­மா­கும்.

அந்­தப் பய­ணத்தை வழி­ந­டத்­து­வ­தற்­காக சன­நா­யக அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் இங்கே அமர்ந்­துள்­ள­னர்.

அவர்­கள் வெளிவேறு கட்­சி­களைச் சார்ந்­த­வர்­கள். நீண்ட காலம் ஒற்­று­மைப்­ப­டா­மல் ஒரு­வரை ஒரு­வர் எதிர்த்து அர­சி­யல் செய்து வாழ்ந்­த­வர்­கள். ஆனால் இன்று ஒன்­றாக இணைந்து நாட்­டைப் புதிய பாதைக்கு இட்டு செல்­வ­தற்­காக ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­விக்­கின்­றேன். அவர்­கள் இரு­வ­ரும் இந்­தப் பய­ணத்­தில் வெற்­றி­ய­டையவேண்­டும்.

எமக்­காக மாத்­தி­ர­மல்ல, இந்த நாட்­டிற்­கா­க­வும் அனைத்து மக்­க­ளுக்­கா­க­வும் வெற்­றி­வாகை சூட­வேண்­டும். அந்­தப் பய­ணத்­தில் வெற்றி காணும் முக­மாக புதிய அர­ச­மைப்­பைத் தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அந்த முயற்­சி­யி­லும் நாம் வெற்­றி­காணவேண்­டும்.

ஒரு­மித்த நாட்­டுக்­குள், பிள­வுப்­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யாத நாட்­டுக்­குள் அனைத்து இனத்­த­வர்­க­ளும் சமத்­து­வ­மாக வாழும் வகை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­படவேண்­டும்.

அவ்­வா­றான அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் மூல­மாக நாங்­கள் எல்­லோ­ரும் ஒரு நாட்டு மக்­க­ளாக வாழ முடி­யும். நாம் இலங்­கை­யர் என்று பெரு­மை­யு­டன் கூறிக் கொள்­வ­தற்கு விரும்­பு­கின்­றோம். எமது மக்­க­ளும் அதனை விரும்­பு­கின்­ற­னர்.

அந்­தப் பய­ணத்தை நோக்­கியே நாம் நகர்ந்த வண்­ணம் உள்­ளோம். அந்­தப் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சுக்கு நூற்­றுக்கு நூறு வீதம் நாம் ஆத­ரவு வழங்­கு­வோம்.

அதில் எந்­த­வொரு சந்­தே­க­மும் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இது ஒரு புனி­த­மான பய­ண­மா­கும். அந்­தப் பய­ணத்தை வெற்­றிக்­கொள்ள வேண்­டும். அந்த வெற்­றி­யின் ஊடாக இந்த நாடு முன்­னேறவேண்­டும்.

நாட்­டில் வாழும் இந்­துக்­கள், இஸ்­லா­மி­யர்­கள், கிறிஸ்­த­வர்­கள் மற்­றும் பௌத்­தர்­கள் ஒற்­று­மை­யாக வாழ்ந்து சுபீட்­சம் அடைய வேண்­டும். இந்த நாட்­டின் இருள் நீங்கி வெளிச்­சம் ஏற்­படவேண்­டும் என்று பிராத்­திக்­கின்­றேன் – என்­றார்.

இதே­வேளை, 2016ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 28ஆம் திகதி அல­ரி­மா­ளி­கை­யில் நடை­பெற்ற தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் உரை­யாற்­றிய இரா.சம்­பந்­தன், நல்­லாட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்­கான வெளிச்­சம் தென்­ப­டத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது. அடுத்த ஆண்டு தீபா­வளி திரு­நா­ளுக்கு முன்­னர் இந்த வெளிச்­சம் நிரந்­த­ர­மாக அமை­யும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

http://newuthayan.com/story/37411.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

பாக்க எனக்கே பாவமாய்க் கிடக்குது...!:mellow:

அவர்கள் எப்பவும்   தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கிறார்கள்.  இந்தாள்தான் அப்பப்ப தன்ர எண்ணத்துக்கு ஒவ்வொரு கரடி விட்டு தன்னைத்தானே ஏமாற்றுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸாரி ..தலையங்கத்தில் தவறு

அது 
"புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்"  - 

அல்ல 

"புதிய பணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

நீண்­ட­கா­ல­மாக எமது நாடு இரு­ளில் இருந்­தது. 2015ஆம் ஆண்டு தை மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட பிறகு நாடு இரு­ளில் இருந்து வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தற்­போது புதிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளது. எல்­லோ­ரும் ஒற்­று­மை­யாக, சமத்­து­வ­மாக வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அந்­தப் பய­ண­மா­கும்.

அந்­தப் பய­ணத்தை வழி­ந­டத்­து­வ­தற்­காக சன­நா­யக அடிப்­ப­டை­யில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­க­வும் இங்கே அமர்ந்­துள்­ள­னர்.

அவர்­கள் வெளிவேறு கட்­சி­களைச் சார்ந்­த­வர்­கள். நீண்ட காலம் ஒற்­று­மைப்­ப­டா­மல் ஒரு­வரை ஒரு­வர் எதிர்த்து அர­சி­யல் செய்து வாழ்ந்­த­வர்­கள். ஆனால் இன்று ஒன்­றாக இணைந்து நாட்­டைப் புதிய பாதைக்கு இட்டு செல்­வ­தற்­காக ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­விக்­கின்­றேன். அவர்­கள் இரு­வ­ரும் இந்­தப் பய­ணத்­தில் வெற்­றி­ய­டையவேண்­டும்.

அவர்கள் எதற்காக ஒன்றிணைந்தார்கள் என்பது எனக்கு இன்றுதான் தெரியும். தகவலுக்கு நன்றி சம்பந்தன் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.