Jump to content

மைத்திரியுடன் ‘செல்பி’ எடுக்க மாணவர்கள் போட்டி


Recommended Posts

மைத்திரியுடன் ‘செல்பி’ எடுக்க மாணவர்கள் போட்டி

 
மைத்திரியுடன் ‘செல்பி’ எடுக்க மாணவர்கள் போட்டி
0
SHARES
 

தேசிய தமிழ் மொழித் தின நிகழ்­வுக்­காக யாழ்ப்­பா­ணம் வந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ். பாட­சாலை மாண­வர்­க­ளு­டன் நேற்று சலிக்­கா­மல் ‘செல்பி’ எடுத்­தார்.

மாண­வர்­கள் கூட்­ட­மாக நின்று அரச தலை­வ­ருக்­குக் கைலாகு கொடுத்து குழுப் படங்­க­ளும் எடுத்­துக்­கொண்­ட­னர்.

தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் நேற்று நடை­பெற்­றது. நிகழ்வு முடிந்து மண்­ட­பத்தை விட்டு அவர் வெளியே வந்­தார். பாட­சாலை மாண­வர்­கள் அவரை வழி­ய­னுப்ப இரு வரி­சை­யாக நின்­றி­ருந்­த­னர்.

அரச தலை­வ­ரைக் கண்­ட­தும், ‘சேர் சேர், செல்பி’ என்று கத்­தி­னர். அரச தலை­வ­ரும் மாண­வர்­க­ளு­டன் சென்று ‘செல்­பி’­­களை எடுத்­துக்­கொண்­டார்.

அரச தலை­வ­ரின் பாது­காப்பு பிரி­வின் கெடு­பி­டி­க­ளைத் தாண்­டி­யும் மாணவ, மாண­வி­கள் அரச தலை­வரை நெருங்கி தாரா­ள­மாக ‘செல்­பி’­­கள் எடுத்­த­னர்.

சில மாண­வர்­கள் கூட்­ட­மாக நின்று அரச தலை­வ­ரு­டன் ஒளிப்­ப­ட­மும் எடுத்­துக் கொண்­ட­னர். மாண­வர்­க­ளின் விருப்­பத்தை உதா­சீ­னப்­ப­டுத்­தா­மல் அவ­ரும் தாரா­ள­மாக நின்று ஒளிப்­ப­டம் எடுத்­துக்­கொண்­டார்.

http://newuthayan.com/story/37327.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.