Jump to content

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளாது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்


Recommended Posts

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளாது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

 

 

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அலட்டிக்கொள்ளாது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

வடக்கு இழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு பிரிப்பு என்பதை காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாக யாரோ அதனைச்செய்ய சிலர் உரிமைகோருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையால் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா,முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்வரும் காலத்தில் வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.சில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும்.இதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.இம்முனை கோறளைப்பற்று மத்த pஉள்ளுராட்சி மன்றத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.
கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம்.அவற்றினையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியினைவெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லவேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.
காத்தான்குடியை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை வருடத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை எமது கட்சி செய்துள்ளது.45 கோடிக்கு மேல் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்திற்கு 100மில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர்.சிலர் அதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் என்பது என்ன என்பது தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வடகிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு,பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை,சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை.எங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.
ஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்யமுடியாது.பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணையமுடியாது.இது அரசியல் யாப்பில் உள்ள விடயம்.இவ்வாறு இருக்க அதனை வேறுவகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பேணிவருகின்றோம்.வடகிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும்.அதில் இருந்து நாங்கள் மாறவில்லை.இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கி;னறது.அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.
சர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வடகிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில்விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர்.தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று.அதனைவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.
வடகிழக்கு பிரிப்பு நடந்ததும் காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாகவே உள்ளது.அதனையும் நாங்கள்தான் செய்தோம் என சிலர் கூறித்திரிகின்றனர்.பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு பற்றாக்குறையாகவுள்ள சிலர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காகவே இவற்றினை கூறுகின்றனர்.
நான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் கேட்டு வெற்றிபெறுகின்றவன்.20ஆயிரத்திற்கும் குறையாத வாக்கினை சிங்கள மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.நான் வடக்கிழக்கினை பிரியென்றும் இணையென்றும் எங்கும் பேசியது கிடையாது.அதனை கதைத்திருந்தால் ஒரு பத்தாயிரம் வாக்கினை அதிகரித்திருக்கமுடியும்.அது எனக்கு தேவையில்லை.
நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்.எனக்கு பொறுப்புணர்ச்சியிருக்கின்றது.தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதினால் அர்த்தமில்லை.சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்கமுடியாது.
தமிழ் -முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது ஒரு நியாயபூர்வமான இணக்கப்பாட்டை அடையலாம் என்ற நம்பிக்கையில் கொஞ்சமாவது எஞ்சியிருக்கின்றது என்பது எமக்கு பிரயோசனமாக இருக்கும்.அவ்வளவுதான்.அதனைவிட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டியுள்ளது.
கர்பலா,சிகரம்,கீச்சாம்பள்ளம் ஆகிய பகுதிகளில் காணிகளைப்பெறுவதற்கு பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் பேசவேண்டும்.இவற்றுக்கு தீர்வுகாண குறைந்தபட்ச நல்லெண்ணத்தினை பெற்றுக்கொண்டுதான் இவற்றினை சாதிக்கமுடியும்.அதற்காக போலித்தனமான அரசியல்செய்யவேண்டிய அவசியமும் இல்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரம்பரிய இயக்கமாகும்.அதன் பாரம்பரியங்களை குழிதோண்டி புதைக்கமுடியாது.இது தனிமனித அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல.இந்திய அமைதிப்படை செல்லக்கூடாது என அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்கள் கூறியபோது அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள்.பிறகு அதனைப்புரிந்துகொண்டார்கள். பாதுகாப்பு வெற்றிடம் ஏற்படக்கூடாது என பயந்ததன் காரணமாகவே அதனை அவர் சொன்னார்.அதனை நாங்கள் அனுபவித்தோம்.
1990ஆம் ஆண்டு அழிவுகள் நடந்தபோது எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை.இலங்கை பாதுகாப்பு படைகளினாலும் பாதுகாக்கமுடியவில்லை.அதனால் பல அழிவுகளை சந்தித்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்துவதன் மூலமே நான்கில் ஒரு பங்காக காணப்படும் முஸ்லிம்களின் பாதுகாப்பும் சுபீட்சமும் இருக்கின்றது என்பதை புரியவைக்கும் தேர்தலாக வரும் தேர்தலை நாங்கள் மாற்றவேண்டும்.

DSC05626DSC05633DSC05635DSC05661

http://www.samakalam.com

Link to comment
Share on other sites

”வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்”

Published by RasmilaD on 2017-10-15 16:46:48

 

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது எனவும் வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பிரிப்பு என்பதை காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாக யாரோ அதனைச்செய்ய சிலர் உரிமைகோருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையால் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா, முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹகமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் காலத்தில் வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும். சில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும். இதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். இம்முனை கோறளைப்பற்று மத்தி உள்ளுராட்சி மன்றத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.

கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றினையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியினை வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.

காத்தான்குடியை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை வருடத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை எமது கட்சி செய்துள்ளது. 45 கோடிக்கு மேல் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்திற்கு 100 மில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர். சிலர் அதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வடகிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு, பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை, சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை. எங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு நடுநிலையான சமூகம்.

ஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்யமுடியாது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணையமுடியாது. இது அரசியல் யாப்பில் உள்ள விடயம். இவ்வாறு இருக்க அதனை வேறு வகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பேணிவருகின்றோம். வடகிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும். அதில் இருந்து நாங்கள் மாறவில்லை. இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கி;னறது. அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.

சர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வடகிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில் விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர். தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று. அவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.

வடகிழக்கு பிரிப்பு நடந்ததும் காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாகவே உள்ளது. அதனையும் நாங்கள்தான் செய்தோம் என சிலர் கூறித்திரிகின்றனர். பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு பற்றாக்குறையாகவுள்ள சிலர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காகவே இவற்றினை கூறுகின்றனர்.

நான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்றவன். 20 ஆயிரத்திற்கும் குறையாத வாக்கினை சிங்கள மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். நான் வடக்கிழக்கினை பிரியென்றும் இணையென்றும் எங்கும் பேசியது கிடையாது. அதனை கதைத்திருந்தால் ஒரு பத்தாயிரம் வாக்கினை அதிகரித்திருக்கமுடியும். அது எனக்கு தேவையில்லை.

நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். எனக்கு பொறுப்புணர்ச்சியிருக்கின்றது. தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதினால் அர்த்தமில்லை. சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்கமுடியாது.

தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது ஒரு நியாயபூர்வமான இணக்கப்பாட்டை அடையலாம் என்ற நம்பிக்கையில் கொஞ்சமாவது எஞ்சியிருக்கின்றது என்பது எமக்கு பிரயோசனமாக இருக்கும். அவ்வளவுதான். அதனைவிட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டியுள்ளது.

கர்பலா, சிகரம், கீச்சாம்பள்ளம் ஆகிய பகுதிகளில் காணிகளைப்பெறுவதற்கு பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் பேசவேண்டும். இவற்றுக்கு தீர்வுகாண குறைந்தபட்ச நல்லெண்ணத்தினை பெற்றுக்கொண்டுதான் இவற்றினை சாதிக்கமுடியும். அதற்காக போலித்தனமான அரசியல் செய்யவேண்டிய அவசியமும் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரம்பரிய இயக்கமாகும். அதன் பாரம்பரியங்களை குழிதோண்டி புதைக்கமுடியாது. இது தனிமனித அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. இந்திய அமைதிப்படை செல்லக்கூடாது என அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் கூறியபோது அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிறகு அதனைப் புரிந்துகொண்டார்கள். பாதுகாப்பு வெற்றிடம் ஏற்படக்கூடாது என பயந்ததன் காரணமாகவே அதனை அவர் சொன்னார். அதனை நாங்கள் அனுபவித்தோம்.

1990ஆம் ஆண்டு அழிவுகள் நடந்தபோது எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இலங்கை பாதுகாப்பு படைகளினாலும் பாதுகாக்கமுடியவில்லை. அதனால் பல அழிவுகளை சந்தித்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்துவதன் மூலமே நான்கில் ஒரு பங்காக காணப்படும் முஸ்லிம்களின் பாதுகாப்பும் சுபீட்சமும் இருக்கின்றது என்பதை புரியவைக்கும் தேர்தலாக வரும் தேர்தலை நாங்கள் மாற்றவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/25831

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.