Jump to content

கமலின் அரசியல் எதிர்காலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் அரசியல் எதிர்காலம்

ஆர். அபிலாஷ்
 
சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

வெளியே நல்ல மழை. 

நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர். சுருக்கமாக அவர் ஒரு கமலஹாசன். 

டிவியை சற்று நேரம் கவனித்த எனக்கு எனக்கு அந்த கமல் ஆதரவு பேச்சாளரின் அப்பாவியான முகம் ரொம்ப பிடித்திருந்தது. அருகில் இருந்த என் நண்பருக்கோ அவரது இந்த “ஊழல்” பிரசங்கம் ரொம்ப எரிச்சலூட்டியது. “கமல் இதுவரை ஒரு சொல்லாவது மத்திய அரசை எதிர்த்து பேசி இருக்கிறாரா?” என அவர் பொரும ஆரம்பித்தார்.

 நண்பர் கொதித்தால் அது குக்கர் விசிலடிப்பது போல. முழுக்க நிற்பது வரை பொறுக்க வேண்டும். அவர் முடித்த பின் நான் கேட்டேன் “கமல் என்னென்ன பண்ண வில்லை என்பதை ஒரு பட்டியலிடுங்களேன்?” நண்பர் இட்டார். ஆனால் அது ரொம்ப நீளமாக இருந்ததால் “சுருக்கமா சொல்லுங்க” என்றேன். அதுவே ரொம்ப நீளமாக போனது. ரொம்ப பின்னால் சென்று “ஏங்க ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது கமல் ஏன் களமிறங்கி போராடவில்லை?”

“ஆமா”

நண்பர் தொடர்ந்தார்:

 ”‘எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது..’ கமல் இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தாரே தவிர அவர் அன்று காத்திரமாக என்ன செய்தார்?” என்று கேட்டார்.

 அக்கேள்வி எனக்கு சுவாரஸ்யமாகப் பட்டதால் டி.வியை அணைத்து விட்டு அவர் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தேன். “ஆமா ஏன் போராடவில்லை?”என கேட்டுக் கொண்டேன்.

கமலை அரசிலுக்கு லாஞ்ச் செய்ய ஜல்லிக்கட்டு, நீட் தேவு – அனிதாவின் தற்கொலை போன்று சில கொந்தளிப்பான அரசியல் சந்தர்ப்பங்கள் அமைந்தனவே? இருந்தும் ஏன் பா.ஜ.க செய்யவில்லை? இப்படி நான் கேட்டுக் கொண்ட போது நண்பர் கொதிப்பின் உச்சத்துக்கு போனார்.

ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது கமலஹாசன் கட்சி ஆரம்பித்திருந்தால், பா.ஜ.க மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் கொடி தூக்கி மக்களையும் ஒன்று திரட்டி இருந்தால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, பலமான மக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆதரவும் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?

நண்பர் சொன்னார், “பா.ஜ.க சார்பில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”

“சரி பண்ணிட்டேன். ஆனாலும் புரியலையே?”

“கமல் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருப்பார். அதை நிச்சயம் பா.ஜ.க விரும்பாது.”

“சரி பா.ஜ.கவுக்கு என்ன தான் வேண்டும்.”

“கமல் ஒரு வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கைக்கு அடக்கமான ஒரு கருவி போல் இருக்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டென கட்சியை ஆரம்பித்து வக்காளர்கள் இடையே ஒரு சிறிய கவனக் கலைப்பை செய்ய வேண்டும். குட்டையை குழப்ப வேண்டும். அதுவே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கும். கமல் அப்போது அரசியலில் ஒரு பொன்சாய் மரம் போல் சரியான சைஸுக்கு வளர்வார். ஆனால் அடுத்தவர்களையும் வளர விட மாட்டார்.”

“சேச்சே கமல் அந்தளவுக்கு முட்டாளா என்ன?”

“கமல் புத்திசாலி தான். ஆனால் அவர் வசம் பணம் இல்லையே? எக்குத்தப்பாய் அவர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை பெற்றாலும் யார் அவரை பைனான்ஸ் செய்வது? யார் அவருக்கு பின்னால் நின்று வளர்த்து விடுவது? மேலும் அரசியல் களத்தில் சறுக்கி அடிபட்டால் சம்பாதித்த பணமும் சினிமாவில் பெற்ற பெயரும் போய் விடுமே? அவ்வளவுக்கு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? கமல் ரிஸ்கே எடுக்காமல் விளையாட விரும்புகிறார். அதனால் தான் பா.ஜ.க பணிக்கும் போது அவர் கரெக்டாக லாஞ்ச் ஆவார்.”

“அதனால் அவருக்கு என்னங்க லாபம்?”

”தனக்கு ஒருவேளை மக்கள் ஆதரவு அமைந்தால் அதை அவர் ஓட்டுக்களாக மாற்ற முடியும். பா.ஜ.க கொடுக்கும் பணத்தை வாங்கி எதிர்கால சினிமா திட்டங்களுக்கு வைத்துக் கொள்ள முடியும். தோல்வி அடைந்தாலும் போனது தலைப்பாகையோடு போச்சு என்றாகி விடும். பெரிதாய் அடி விழாது.”

“வடிவேலுவுக்கு வந்த கதி இவருக்கு வராதா?”

“வராதுங்க. எப்படியும் அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க இருக்கும். அவர்களின் ஆதரவு கமலுக்கு இருப்பது வரை அவர் அதிகர உச்சாணிக் கொம்பில் இருப்பார். மேலும் ஸ்டாலின் ஒன்றும் ஜெயலலிதா அல்ல விரட்டி விரட்டி பழிவாங்க. அவர் கண்ணியமானவர். இன்னொரு விசயம் … அது ரொம்ப முக்கியம்.”

“என்ன?”

“ஒருவேளை தமிழகத்தில் அடுத்து அமையப் போகும் ஆட்சிக் கூட்டணியில் பா.ஜ.க பங்கு பெற்றால்?”

“திமுகவுடனா?”

“ஏதோ ஒரு திராவிட கட்சியுடன்”

“கேட்கவே பீதியாய் இருக்குதே”

“அப்போது கமல் ஒரு சூறாவளி போல அரசியலில் கலக்குவார்.”

“யாருக்கு எதிராக அப்போது பேசுவார்.”

“யாருக்கு எதிராகவும் பேச மாட்டார். சும்மா பேசிக் கொண்டிருப்பார்.”

“சரி கமல் கட்சியின் பெயர் என்னவாக?”

“Loading…”

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/10/blog-post_11.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.