Jump to content

இவர்­க­ளும் மனி­தர்­களா?


Recommended Posts

இவர்­க­ளும் மனி­தர்­களா?

 

எம்­மில் சிலர் மற்­ற­வர்­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்ற செயல்­க­ளில் ஈடு­ப­டு­வதை நினைக்­கும்போது வேத­னை­யும்,ஆத்­தி­ர­மும் ஏற்­ப­டு­கின்­றன. காங்­கே­சன்­துறை வீதி­யி­லி­ருந்து சுன்­னா­கம் திரு­ஞான சம்­பந்­தர் மருத்துவமனைக்கு அரு­கில் சட்­டத்­த­ரணி செல்­லத்­துரை வீதி ஆரம்­பித்­துச் செல்­கின்­றது.

இந்த வீதி­யில்­தான் பிர­ப­ல­மான தொலை­பேசி நிலை­யத்­தின் களஞ்­சி­ய­ சா­லை­யு­டன் ௬டிய அலு­வ­ல­கம் அமைந்­துள்­ளது. இதன் தெற்­குப்­பக்­க­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மதி­லின் ஓரத்­தில் பற்­றை­கள் வளர்ந்து காணப்­ப­டு­கின்­றன.ஆனால் அதை எவ­ருமே கண்­டு­கொள்­வ­தில்லை.

பெரிய வாக­னங்­கள் அந்த வீதி­யூ­டா­கச் செல்­லும் போது ஒதுங்­கு­வ­தற்கு இடம் கிடைக்­காது தின­மும் சிலர் அந்­த­ரப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஓர் அரை­மணி நேரத்­தில் அந்­தப்­பற்­றை­களை அழித்­து­விட முடி­யும். ஆனால் எவ­ருமே அந்­தக்­கைங்­க­ரி­யத்தை மேற்­கொள்ள இது­வரை முன்­வ­ர­வில்லை.

இந்த நிலை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் நான் அந்த வீதி­யூ­டா­கச் சென்­ற­போது மிக­ச் சீரான முறையில் பொதி­செய்­யப்­பட்ட உரப்­பை­யொன்று அந்த மதி­லு­டன் சாத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­ணுற்­றேன். அப்­போது அது தொடர்­பாக நான் அதிக கவ­னம் செலுத்­த­வில்லை.

மறு­நா­ளும் நான் அந்த வீதி­யூ­டா­கச் சென்றபோது உரப்­பை­யைச் சுற்­றி­வர குருதி போன்­ற­தொரு திர­வம் பர­விக் காணப்­பட்­டது.

இலை­யான்­க­ளும் மொய்த்­துக் கொண்டிருந்­தன.உரப் பையிலிருந்து கெட்ட வாடை வீசு­வதை நான் உணர்ந்து கொண்­டேன்.அடுத்த நாள் சென்ற போது சகிக்க முடி­யாத துர்­நாற்­றம் அங்கு வீசி­யது. மூக்­கைப் பொத்­திக் கொண்டு உட­ன­டி­யாக அந்த இடத்தை விட்டு அகன்­றேன். ஒரு லீற்­றர் மண்­ணெண்­ணெயை வாங்கி அந்த உரப்­பை­யின் மீது ஊற்றி எரித்து விடு­வ­தெ­னத் தீர்­மா­னித்­தேன்.

மாலை நேரம்­தான் அதற்கு உகந்­த­தென்­பது எனது முடி­வா­கும். அடுத்­த­நாள் மாலை நேரம் அந்த வீதி­யூ­டா­கச் சென்ற போது எவரோ ஒரு புண்­ணி­ய­வான் காய்ந்த தென்­னோ­லை­க­ளின் உத­வி­யு­டன் துர்­நாற்­றம் வீசிக்­கொண்­டி­ருந்த உரப்­பையை எரித்­துச் சாம்­ப­லாக்கி இருப்­ப­தைக் கண்­டேன். நான் செய்­வ­தற்கு உத்­தே­சி­ருந்த வேலையை அந்த முகம் தெரி­யா­த­வர் செய்து முடித்­து­விட்டிருந்தார்.

எவரோ நாயொன்றை அடித்­துக் கொன்று விட்டு அதனது உடலை உரப்­பை­யில் அழ­காகப் பொதி­செய்து கயிற்­றி­னால் வரிந்து கட்டி வைத்­துவிட்டிருந்த சங்­கதி பின்­னர்­தான் தெரி­ய­வந்­தது. இந்த உல­கில் இவ்­வா­றான கேவ­ல­மான மனி­தர்­க­ளும் இருக்­கத்­தான் செய்­கின்­ற­னர். இதற்கு யாரைத்­தான் நொந்து கொள்­வது?
–பா.தர்­ம­ரூ­பன்
சுன்­னா­கம் வடக்கு

http://newuthayan.com/story/36966.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்காறர் வீட்டில் இரவு தூங்கும்போது அவரின் வீட்டு வளவில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. செய்வது  யார் என்று தெரிந்தும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் திணருவோரும் உண்டு. சட்டத்தை காப்பாற்ற வேண்டியோர் குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள். சில இடங்களில் உரிமையாளர் பார்த்திருக்கவே இப்படியான சம்பவங்கள் நடைபெறுகிறது. கேட்டால் குழுவாக வந்து அடிதடி செய்கிறார்கள். சட்டம் இதை கண்டுகொள்வதில்லை. ஏன் முறைப்பாடு செய்தோம் என்று வருந்த வேண்டிய நிலை. அப்பிடிப் பார்க்கும்போது இது பரவாயில்லை என்று நான் சொல்லமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாளைய விழிப்பு குழுக்கள் போன்ற தற்போதைய அரச சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயற்படுத்த முடியாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அந்த நாளைய விழிப்பு குழுக்கள் போன்ற தற்போதைய அரச சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயற்படுத்த முடியாதா ?

ஆனால் தற்போது உள்ளவர்களில் சிலர் சமூகம் சார்ந்து சிந்திப்பதில்லை அந்த நபர் நாயை கொண்டுவந்து போட்டவர் அதை புதைத்துஇருந்தால் பலர் மூக்கை பொத்திக்கொண்டு அந்த வழியாக செல்ல  வேண்டிய தேவை இருந்திருக்காது சமூகம் பலவகைமனிதர்களை கொண்டது அதில் நம்மை போல் இருப்பார்கள் என நினைப்பதும் நம்மை போல் செய்வார்கள் எனப்தும்  ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.