Jump to content

ஏமாற்றப்படுகின்றனறா பாதிக்கப்பட்டோர்?


Recommended Posts

ஏமாற்றப்படுகின்றனறா பாதிக்கப்பட்டோர்?

 

ஐக்­கிய நாடுகள் விசேட நிபு­ணரின் இலங்கை விஜ­யமும் அர்த்­த­முள்­ள­தாக அமை­ய­வேண்டும். தொடர்ச்­சி­யாக இடம்­பெறும் மற்­று­ மொரு விஜ­ய­மாக இது அமைந்­து­வி ­டக்­கூ­டாது என்­பதில் கவ­னத்­திற்­கொள்­ள ­வேண்டும். பாதிக் ­கப்­பட்ட மக்கள் நீதிக் ­காக எட்டு வரு­டங் ­க­ளுக்கு மேலாக ஏங்­கிக்­கொண்­டி­ ருக்­கின்­றனர்  என்­ப ­தனை மறந்­ து­வி­டக்­கூ­டாது.  

 

உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கி­ய­நா­டு­களின் உண்மை,நீதி, நஷ்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் முதற்­கட்ட சந்­திப்­புக்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்து வரு­கின்றார்.

இந்த விஜ­யத்­தின்­போது ஐ.நா. விசேட பிர­தி­நிதி, அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அரச உயர்­மட்ட அதி­கா­ரிகள், மாகா­ண­மட்ட அதி­கா­ரிகள், சிவில் சமூக பிர­தி­நி­திகள், மதத் தலை­வர்கள், கல்­வி­யா­ளர்கள், இலங்­கை­யி­லுள்ள சர்­வ­தேச சமூக பிர­தி­நி­திகள் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது.

அத்­துடன் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லு பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்­து­வ­ரு­கின்றார். திரு­கோ­ண­மலை, கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளுக்கு ஏற்­க­னவே விஜயம் செய்து பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்­துள்ள ஐ.நா. பிர­தி­நிதி மன்னார், அநு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, கண்டி, மாத்­தறை ஆகிய பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது.

ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நிதி இலங்­கையில் என்ன செய்­யப்­போ­கின்றார் என்­ப­தனை ஆராய்­வ­தற்கு முன்னர் அவரைப் பற்றி அறிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. பப்லு டீ கிரீப் ஐக்­கி­ய ­நா­டு­களின் ஒரு சுயா­தீன நிபு­ண­ராவார். அல்­லது விசேட அறிக்­கை­யாளர் என்றும் கூறலாம். விசேட நிபு­ணர்கள் ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் மனித உரிமை நிலை­மை­களை மதிப்­பிட்டு அறிக்­கை­யி­டு­வார்கள். பல்­வேறு துறை­க­ளுக்கும் விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த வகையில் பப்லு டீ கிரீப் உண்மை, நீதி, நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழாமை போன்­றவை தொடர்­பான நிபு­ண­ராவார். இந்த நான்கு விட­யங்­களும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் முக்­கிய அம்­சங்­க­ளாகும்.

பரிந்­து­ரை­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் நாடு­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு ஐக்­கிய நாடு­களின் விசேட ஆணை­யா­ளர்­க­ளுக்கு ஆணை வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர் தனது பணியில் பாதிக்­கப்­பட்­டோரை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அணு­கு­ மு­றை­யையே முன்­னெ­டுப்­பது வழக்­க­மாகும்.

அந்­த­ வ­கையில் கடந்த வியா­ழக்­கி­ழமை முள்­ளி­வாய்க்கால் பகு­திக்கு விஜயம் செய்து போரின் வடுக்­களை பார்­வை­யிட்ட ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நிதி அதன் பின்னர் கேப்­பா­பு­லவு கிரா­மத்தில் சுமார் ஏழு மாதங்­க­ளாக காணி மீட்பு போராட்டம் நடத்­தி­வரும் மக்­களை பார்­வை­யிட்டார்.

அதன்­போது மக்கள் தமது மனக்­கு­மு­றல்­களை ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நி­தி­யிடம் கொட்­டித்­தீர்த்­துள்­ளனர். கொட்டும் மழைக்கும் வெயி­லுக்கும் மத்­தியில் எமது சொந்த நிலங்­களை கேட்டு போரா­டு­கின்றோம். எமது நிலங்­களை விடு­விப்­ப­தாக அர­சாங்கம் பல­முறை பல வாக்­கு­று­தி­களை தந்து எம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வரு­கின்­றது. நாம் எவ்­வாறு எத்­தனை நாட்கள் இந்த வீதியில் இருந்து போரா­டு­வது? யுத்தம் முடிந்து 9 வரு­டங்­க­ளாக நாம் அகதி முகாம் வாழ்க்கை வாழ்­கின்றோம் என்று தமது காணி மீட்பு குறித்த தவிப்பை ஐக்­கிய நாடுகள் பிர­தி­நி­தி­யிடம் மக்கள் வெ ளியிட்­டுள்­ளனர்.

அதே­போன்று கிளி­நொச்­சியில் பல மாதங்­க­ளாக போராட்டம் நடத்­தி­வரும் காணாமல் போனோரின் உற­வு­க­ளையும் ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நிதி சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இதன்­போது காணாமல் போனோரின் உற­வு­களும் தமது துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தி­யிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இவ்­வாறு ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நி­தியின் சந்­திப்­புக்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

இந்­நி­லையில் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணரின் இலங்கை விஜயம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ப­தா­கவும் அவர் இலங்கை குறித்த அறிக்­கையை முன்­வைப்­ப­தற்கு முன்­னரும் இலங்கை அர­சாங்கம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. அதில் மிகவும் கவ­ன­மா­கவும் எச்­ச­ரிக்­கை­யா­கவும் அர­சாங்கம் விட­யங்­களை உட்­ப­டுத்­தி­யுள்­ளது.

அர­சாங்கம் வெளியிட்­டுள்ள அறிக்­கையின் சாரம்சம் இதுதான் . அதா­வது ஏனைய நாடு­களைப் போன்று இலங்­கைக்கும் குறித்த ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்ற கட­மையோ பிணைப்போ கிடை­யாது.

நிறு­வன ரீதி­யான கட்­டி­யெ­ழுப்­பு­தல்கள், கொள்கை உரு­வாக்­கங்கள், கொள்கை மறு­சீ­ர­மைப்­புக்கள், பயிற்­சிகள், போன்­ற­வற்­றுக்கு தேவை­யானால் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களை நாம் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தலாம். இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்­பின்­பே­ரி­லேயே ஐக்­கி­ய­நா­டு­களின் உண்மை,நீதி, நஷ்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் இலங்கை வந்­தி­ருக்­கின்றார்.

இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை அவர் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் அடுத்த வருடம் செப்­டெம்பர் மாதம் சமர்ப்­பிப்பார். அவர் அறிக்­கையை மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பித்த பின்னர் அவற்றை கருத்தில் கொள்ள வேண்­டுமா என்­பது குறித்து இலங்கை அர­சாங்­கமே தீர்­மானம் எடுக்கும். அவரின் பரிந்­து­ரைகள் இலங்கை மக்­க­ளுக்கு பய­ன­ளிக்கும் வகையில் உள்­ள­னவா என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும். இவ்­வாறு மிகவும் எச்­ச­ரிக்­கை­யுடன் விட­யங்­களை முன்­வைத்­துள்­ளது அர­சாங்கம்.

அர­சாங்கம் இவ்­வாறு விழிப்­பு­டனும் எச்­ச­ரிக்­கை­யு­டனும் விப­ரங்­களை முன்­கூட்­டியே வெ ளியி­டு­வ­தற்கு முக்­கிய காரணம் இருக்­கலாம். அதா­வது இதற்கு முன்னர் இலங்­கைக்கு வருகை தந்த பல ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களும் இலங்கை விஜ­யத்தின் முடிவில் முன்­வைக்கும் அறிக்கை மற்றும் இலங்கை விஜயம் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் முன்­வைக்கும் அறிக்­கைகள் என்­ப­ன­வற்றில் கார­சா­ர­மான பரிந்­து­ரைகள் இடம்­பெ­று­வது வழ­மை­யாகும்.

தொடர்ந்து சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கிய நாடுகள் சபையும் உள்­நாட்டில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரும் குறித்த ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களின் பரிந்­து­ரை­களை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தும். அதன் பின்­னரே அர­சாங்கம் இவ்­வாறு கட்­டா­ய­மாக ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களின் பரிந்­து­ரை­களை ஏற்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என்­ப­தனை தெரி­விக்கும்.

எனவே இந்த விட­யத்தைக் கருத்­திற்­கொண்டே அர­சாங்கம் இம்­முறை முன்­கூட்­டியே அறிக்­கையை வெ ளியிட்­டுள்­ளது என்­ப­தனை ஊகிக்க முடி­கின்­றது. ஆனால் இவை அனைத்­துக்கும் மேலாக அர­சாங்­கத்­துக்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டிய பொறுப்பு உள்­ளது என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொடர்ச்­சி­யாக இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடந்­து­விட்­டன.

ஆனால் இன்னும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை. கடந்த அர­சாங்க காலத்­தின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யுடன் முரண்­பா­டான நிலைமை காணப்­பட்­டது. கடந்த ஆட்­சி­யின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான மூன்று பிரே­ர­ணை­களும் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அத்­துடன் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய வாறு ஒரு­சில ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களே இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யு­ட­னான உறவு சுமுக நிலை­மைக்கு வந்­தது. அதன் பின்னர் அதி­க­மான ஐ.நா. விசேட நிபு­ணர்­களும் இலங்­கைக்கு வருகை தர ஆரம்­பித்­தனர். ஆனால் வழமை போன்றே புதிய அர­சாங்­கமும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்கள் இலங்கை விஜ­யத்தின் பின்னர் முன்­வைக் கும் பரிந்­து­ரைகள் மற்றும் யோச­னை­களை பெரி­தாக கவ­னத்­திற்­கொள்­ள­வில்லை.

சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் நிபு­ணரும் இலங்­கைக்கு விஜயம் செய்து சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்­த­துடன் பல்­வேறு பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­தி­ருந்தார்.

அதே­போன்று சுயா­தீன நீதித்­துறை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தியும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளின்போது பொது மக்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பது குறித்து ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நி­தியும் இலங்­கைக்கு அண்­மையில் விஜயம் செய்து மனித உரிமை நிலை­மை­களை ஆராய்ந்­தி­ருந்தார்.

இதற்கு முன்னர் இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களின் நிலைமை குறித்து ஆராயும் ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தியும் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். அதே­போன்று பல­வந்­த­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­கின்­ற­வர்கள் குறித்த ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்­களும் இலங்­கைக்கு விஜயம் செய்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் குறித்து ஆராய்ந்­தி­ருந்­தனர்.

அந்­த­வ­கை­யி­லேயே தற்­போது ஐக்­கி­ய­ நா­டு­களின் உண்மை,நீதி, நஷ்­ட­ஈடு, மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் இலங்கை அர­சாங்­கத்தின் பேரில் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். குறிப்­பாக யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­வைக்­கு­மாறு கடு­மை­யாக வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்ற போதிலும் அந்த நட­வ­டிக்­கை­யா­னது இழுத்­த­டிக்­கப்­பட்­டுக்­கொண்டே வரு­கின்­றது.அதனை உட­ன­டி­யாக முன்­னெப்­பதில் அதி­கார மட்­டத்­துக்கு பாரிய தயக்கம் இருப்­ப­தாக தெரி­கின்­றது. தென்­னி­லங்கை இன­வாத சக்­திகள் இந்த விட­யத்தை பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தை குழப்­பி­வி­டலாம் என்ற தய­ககம் அர­சாங்­கத்­திடம் இருக்­கின்­ற­தாக தெரி­கின்­றது.

ஆனால் இவ்­வா­றான கார­ணங்­க­ளுக்­காக பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்து நீதி மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க முடி­யாது. அவர்­க­ளுக்­கான நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும். பொறுப்­புக்­கூறல் பொறி­முறை இது­வரை உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அர­சாங்கம் நீதி­யான விசா­ரணை ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­படும் என்று கூறி வந்­தாலும் இது­வரை நீதிப் பொறி­முறை உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

அந்­த­வ­கையில் உண்மை,நீதி, நஷ்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப்­பு­டைய இலங்கை விஜயம் முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. அதா­வது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை இது­வரை உரு­வாக்­கப்­ப­டாத நிலையில் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் அதற்­கான வலி­யு­றுத்­தல்­களை முன்­வைப்பார் என்று நம்­பப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் வடிவம் இது­வரை தயா­ரிக்­கப்­ப­டாத நிலையில் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் அது தொடர்பான ஒரு அறிமுகத்தை பரிந்துரை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும். காணாமல் போனவர் களின் உறவினர்கள் தமது உறவுகளுக்காக தொடர்ந்து ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கப்படவேண்டும். சட்டமாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் குறித்த அலுவலகம் விரைந்து நடைமுறைக்கு வரவேண்டும்.

இவை தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தவேண்டும். ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் கூறும்வரை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக விரைந்து பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் விசேட நிபுணரின் இலங்கை விஜயமும் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். தொடர்ச்சியாக இடம்பெறும் மற்றுமொரு விஜயமாக இது அமைந்துவிடக்கூடாது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக எட்டு வருடங்களுக்கு மேலாக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதனை மறந்துவிடக்கூடாது. 

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.