Jump to content

இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

                                                                          இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி தேர்வு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடப் போகும் ஒருநாள் போட்டிக்கு 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

பிசிசிஐ

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேறகொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதையொட்டி, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஜிங்கியே ரஹானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவ்னேஷ்வர் குமார் மற்றும் ஷர்தல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய தொடரின் போது அணியில் இருந்த கே.எல்.ராகுல், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஷிகர் தவான், தாக்கூர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/105030-indian-squad-for-new-zealand-odi-series-selected.html

Link to comment
Share on other sites

3 ஒருநாள் போட்டி,மூன்று T20 ஓவர்: நியூசிலாந்து அணி இந்தியா வந்தது

 

3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 ஓவர் ஆட்டத்தில் விளையாட நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.

3 ஒருநாள் போட்டி,மூன்று T20 ஓவர்: நியூசிலாந்து அணி இந்தியா வந்தது
 

மும்பை:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

இதற்காக நியூசிலாந்து வீரர்கள் நேற்று இந்தியா வந்தனர். முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் இந்தியா வந்துள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இதில் உள்ள 6 வீரர்கள் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் நியூசிலாந்து அணியோடு இணைந்து கொள்வார்கள்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 22-ந்தேதி மும்பையில் நடக்கிறது. 29-ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது.

முதல் 20 ஓவர் ஆட்டம் நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. 7-ந்தேதியுடன் நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் முடிகிறது.

ஒருநாள் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் இந்த பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒருநாள் தொடரை (ஜிம்பாப்வே, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா) வென்று இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் வென்று 7 ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/14145934/1123039/3-one-day-match-20-over-play-New-Zealand-team-came.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதிலையும் அஷ்வின் இல்லையா:unsure:

Link to comment
Share on other sites

அஸ்வின் ஜடேஜா இருவரையும் மீண்டும் சேர்க்கவில்லை.

இதில் கொஹ்லின் பங்கு நிறையவே இருக்கு.

கேதார் ஜாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ்  இவர்கள் மூவரும் சிறப்பாக சுழல் பந்து வீசுவதால் அஸ்வின்யை ஒதுக்குகிறார்கள்.

அஸ்வின், ஜடேஜா, ரெயினா இவர்கள் டோனியின் செல்லபிள்ளைகள்..tw_blush:

10 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப இதிலையும் அஷ்வின் இல்லையா:unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாலு மச் தொடர்ந்து தோற்க்க பிராத்திப்பதை வேறு வழி இல்லை.tw_angry:பாவம் கால்த்திக் பான்டியா.:unsure:

Link to comment
Share on other sites

நியூஸிலாந்து தொடரிலும் அஸ்வின், ஜடேஜா புறக்கணிப்பு: தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு

 

 
15CHPMUASHWIN

ரவீந்திர ஜடேஜா, அஸ்வின்.   -  THE HINDU

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடாத தொடக்க வீரரான ஷிகர் தவண் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 32 வயதான தினேஷ் கார்த்திக், சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் இடம் பிடித்திருந்த போதும் விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கைத் தொடரில் அறிமுக வீரராக இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், உமேஷ் யாதவுக்கு பதிலாக தேர்வாகி உள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், அக்சர் படேல் இடம் பெற்றுள்ளனர்.

அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தற்போது ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடி வருகிறன்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற யோ-யோ தேர்வில் அஸ்வின் தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால் நியூஸிலாந்து தொடரில் அவர் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.

http://tamil.thehindu.com/sports/article19865352.ece

Link to comment
Share on other sites

ஓம் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தார்கள் என்றால் மீண்டும் அஸ்வின் ஜடேஜா என்று போவார்கள்.

அதே நேரம் தினேஷ் கார்திக்கை இம்முறை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். அவருக்கு விளையாடும் 11 பேரில் இடம் கொடுக்கவேண்டும் என்றால் தோனியை அணியில் இருந்து நீக்குவார்கள்.

23 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப நாலு மச் தொடர்ந்து தோற்க்க பிராத்திப்பதை வேறு வழி இல்லை.tw_angry:பாவம் கால்த்திக் பான்டியா.:unsure:

 

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 போட்டிகள்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

 

 
nz1

 

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் மும்பை, புணே, கான்பூர் ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர்.

டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், டாம் ப்ரூஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், இஷ் சோதி, டிம் செளதி.

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/14/phillips-and-astle-picked-in-updated-new-zealand-squad-2790278.html

Link to comment
Share on other sites

குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்: வில்லியம்சன்

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலை சமாளிப்பது மிகவும் கடினமான சவாலாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் கூறியுள்ளார்.

 
குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்: வில்லியம்சன்
 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பையில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் திறமையான வீரர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர்.

இருவரும் அண்மைகாலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை சமாளிப்பது மிகவும் கடினமான சவால் என்பதை அறிவோம். ஆனால் அதற்கு தயாராக இருக்கிறோம். இங்குள்ள சூழலுக்கும், வித்தியாசமான ஆடுகளங்களுக்கும் ஏற்ப அணுகுமுறையை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியமாகும்’ என்றார்.

நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் கூறும் போது, ‘எங்கள் அணியில் நிறைய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார்கள். சிலர் அவருடன் ஒரே அணியில் இணைந்து விளையாடி உள்ளனர். இந்த அனுபவம் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/16094422/1123280/Kuldeep-Yuzvendra-Chahal-bowling-will-be-a-challenge.vpf

Link to comment
Share on other sites

இந்தியா, நியூஸிலாந்து முதல் போட்டி: வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை

 

 
virat

 

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் மதியம் 2.30 மணிக்குத் துவங்கி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ல் தேல்வியும் சந்தித்துள்ளது. நியூஸிலாந்து 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 438 ரன்களைக் குவித்தது.

மேலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்தில் பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் நாளன்று மழை பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

உத்தேச அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே (அ) தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசூவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.

நியூஸிலாந்து:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிக்கோல்ஸ் (அ) கிளென் ஃபிலிப்ஸ், காலின் டி கிராண்ட்ஹோமி, மிட்செல் சான்டனர், இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட், டிம் சௌத்தி.

 

இந்தியா, நியூஸிலாந்து சில சுவாரஸ்யத் தகவல்கள்:

இன்னும் 98 ரன்கள் அடித்தால் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 1,000 ரன்களைக் கடந்தவர் என்ற மைல்கல்லை ரோஹித் ஷர்மா எட்டுவார்.

இத்தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க முடியும்.

நியூஸிலாந்து வீரர் காலின் முன்ரோ இதுவரை ஆடிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒன்றில் கூட துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியது இல்லை. ஆனால் இந்தியாவுடனான இத்தொடரில் இதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இப்போட்டியின் மூலம் தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கவுள்ளார். அவர் இதுவரை விளையாடிய 199 போட்டிகளில் 8,767 ரன்கள் குவித்துள்ளார். இது எந்த வீரரும் செய்யாத சாதனையாகும்.

இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-ஆவது இந்தியர் என்ற சாதனைப் படைப்பார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் 23 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஆசிய மைதானங்களில் மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் மார்டின் கப்டில் சராசரி 26.03 ஆகும். அதிகபட்சமாக 86* ரன்கள் எடுத்துள்ளார்.

நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்தியாவுடன் ஆடிய 7 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

IndvsNZ: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பல்!

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளனர். 

ட்ரென்ட் போல்ட் 

 
 

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்றார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் முறையே 20 மற்றும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருவரையும், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பெவிலியன் அனுப்பினார். தற்போது கேப்டன் விராட் கோலியும், கேதார் ஜாதவ்வும் களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 54/2 என்ற நிலையில் ஆடி வருகிறது. 

http://www.vikatan.com

 
114/3 (24/50 ov)
 
Link to comment
Share on other sites

ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை: விராட் கோலி

 

ரஹானேவை மிடில் வரிசையில் இறக்கி குழப்பம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

 
ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை: விராட் கோலி
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ரஹானே நிச்சயமாக 3-வது தொடக்க ஆட்டக்காரருக்கான வாய்ப்பை பெறுவார். லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரருக்கான போட்டியில் இருக்கிறார். இருப்பினும் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்படுவதால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை அவர் பெறுவார்.
 
ஒரு இடத்துக்கு 4 வீரர்கள் இருப்பது அணிக்கு சிறப்பான விஷயமாகும். ஆனால் ஆடும் லெவனில் 2 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
 
ரஹானேவை மிடில் வரிசையில் இறக்கி குழப்பம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம் அல்லது நல்ல பார்ம் இல்லாதபட்சத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
 
இந்த போட்டி தொடரில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் ஆடிய அனுபவம் கொண்டவர். அணியில் வீரர்கள் கலவை நன்றாக அமைய வேண்டியது அவசியமானதாகும். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை வைத்து வீரர்களுக்கு அணியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சிறப்பான பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக குறுகிய ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார். 
 
201710220918274917_1_Kane._L_styvpf.jpg
 
நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணி மிகவும் சிறப்பான சாதனைகளை படைத்து இருக்கிறது. குறிப்பாக சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது கடினமான காரியம் என்பது எங்களுக்கு தெரியும்.
 
உலகின் வலுவான அணியில் இந்தியா ஒன்றாகும். இங்கு விளையாடுவது என்பது சவாலான விஷயமாகும். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. இங்கு நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
 
கடந்த போட்டி தொடரில் நாங்கள் 2-2 என்ற கணக்கில் இருந்து கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தோம். இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி எங்களை தகவமைத்து கொள்ள வேண்டும். இந்த போட்டி தொடரில் முந்தைய தொடரை விட சிறப்பாக செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.
 
238/6 (45.3/50 ov)
 
Link to comment
Share on other sites

277/3 (47.4/50 ov, target 281)
 
New Zealand require another 4 runs with 7 wickets and 14 balls remaining
 
 
On 14.10.2017 at 9:32 PM, சுவைப்பிரியன் said:

அப்ப நாலு மச் தொடர்ந்து தோற்க்க பிராத்திப்பதை வேறு வழி இல்லை.tw_angry:பாவம் கால்த்திக் பான்டியா.:unsure:

 

உங்கள் ஆசை நிறைவேறுகிறது..tw_blush:

Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து! #IndvsNZ

 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

Tom Latham

 
 

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். அவர் 125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது கோலியின் 200-வது போட்டியும் ஆகும். மேலும், அவர் அடிக்கும் 31-வது சதமும் இதுவாகும். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரக்ள மார்டின் கப்டில் மற்றும் காலின் மன்ரோ நிதானமான ஆட்டத்தைக் கையாண்டு, சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர். கப்டில் மற்றும் மன்றோ முறையே 32 மற்றும் 28 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால், அதன்பின் இறங்கிய ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரை சதங்களை கடந்த பின்னரும் தொடர்ச்சியாக ரன் குவித்தனர். லேதம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். ராஸ் டெய்லர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 49-வது ஓவரிலேயே நியூசிலாயநு எட்டிப்பிடித்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

http://www.vikatan.com/news/sports/105599-nz-won-the-first-odi-against-india.html

Link to comment
Share on other sites

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: லாதம், டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றி

 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாம் லாதம், ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
மும்பை ஒருநாள் கிரிக்கெட்: லாதம், டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றி
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் கப்தில், முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது கொலின் முன்றோ 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 6 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

நியூசிலாந்து 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு 196 பந்தில் 201 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் ராஸ் டெய்லருடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒன்றிரண்டு ரன்னாக எடுத்து குல்தீப் யாதவ், சாஹல் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.

201710222149250708_1_10latham-s._L_styvpf.jpg

இந்த ஜோடியை பிரித்து விட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் இந்தியா விளையாடியது. ஆனால் இருவரும் இந்தியாவிற்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை. இதனால் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

201710222149250708_2_10rosstaylor-s._L_styvpf.jpg

45 ஓவர் முடிவில் நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அடுத்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து டாம் லாதம் சதம் அடித்தார்.

அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 49-வது ஓவரின் 5-வது பந்தில் டெய்லர் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் களம் இறங்கினார். இவர் 49-வது கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

201710222149250708_3_10Kohli001-s._L_styvpf.jpg

நியூசிலாந்து அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் 25-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/22214921/1124381/Mumbai-ODI-new-Zealand-Beats-india-by-6-wicket-Kohli.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி:)

கோலி தோனியிடம் சரனடைந்தது மேலும் மகிழ்ச்சி.:unsure::)

Link to comment
Share on other sites

இந்திய மண்ணில் சிறந்த விரட்டல் கூட்டணி; லேதம், டெய்லர் சாதனை; நியூஸி. அபார வெற்றி

 

 
latham

நூறு அடித்த நாயகன் டாம் லேதமை பாராட்டும் கேப்டன் விராட் கோலி. அருகில் ஷிகர் தவண்.   -  படம். | ஏ.எஃப்.பி.

மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியில் விராட் கோலி தன் 31-வது சதத்தை எடுக்க 280 ரன்களை 8 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது இந்திய அணி. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் டாம் லேதம் (103 நாட் அவுட்), ராஸ் டெய்லர் (95) ஆகியோர் அபாரமாக ஆடி இந்திய மண்ணில் விரட்டலில் 200 ரன்கள் கூட்டணி அமைத்து சாதனை படைத்ததோடு வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 49 ஓவர்களில் 284/4 என்று நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று, எப்போதும் புகழ்ந்து தள்ளப்படும் இந்தியப் பந்து வீச்சு மீது ஒரு கேள்விக்குறி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் 31 சதங்களுடன் இடம்பெற்றுள்ளார். ஆல் டைம் பட்டியலில் கோலிக்கு இரண்டாவது இடம். கோலியின் இந்த நாளை லேதம், டெய்லர் கூட்டணியினர் தங்கள் நாளாக மாற்றினர்.

இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இலக்கை விரட்டும் போது எதிரணியினர் அமைத்த அதிகபட்ச ரன் கூட்டணிக்கான ஒரு அரிய சாதனையை டாம் லேதம், ராஸ் டெய்லர் கூட்டணி மேற்கொண்டது. 80/3 என்ற நிலையிலிருந்து 280/3 என்பது வரை வெற்றிக்கூட்டணி அமைத்தனர் லேதம், ராஸ் டெய்லர்.

விராட் கோலியின் 121 ரன்களுக்கு அடுத்த இந்திய பேட்ஸ்மெனின் அதிகபட்ச ஸ்கோர் இந்த இன்னிங்சில் தினேஷ் கார்த்திக் எடுத்த 37 ரன்களே. கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிக்கான அடையாளம் ஆகும் இது.

நியூஸிலாந்து அணி இந்திய அணி போல் அல்லாமல் தொடக்கத்தில் கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆடியது. கொலின் மன்ரோ ரிஸ்க் எடுத்து ஆடி ரன்களைச் சேர்த்தார். முதல் ஓவரிலேயே 2-வது பந்தில் மார்டின் கப்தில் அருமையான நேர் டிரைவ் பவுண்டரியையும் லாங் ஆனில் இன்னொரு பவுண்டரியையும் அடுத்தடுத்து அடித்தார். பிறகு புவனேஷ் பந்து ஒன்றிற்கு முன் கூட்டியே ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்த மன்ரோ ஸ்கொயர் லெக்கில் அற்புதமான பிளிக் மூலம் சிக்ஸ் விளாசினார். ஆனால் அடுத்த பந்தே பவுல்டு ஆகியிருப்பார் தப்பினார்.

மீண்டும் பும்ராவின் பந்தை பிளிக் ஆடிய மன்ரோவுக்கு ஸ்கொயர்லெக்கில் அதிர்ஷ்டம் காத்திருந்தது, கேதார் ஜாதவ் கேட்சை விட்டார். அது பவுண்டரியுமானது. 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் மன்ரோ, பும்ராவின் வேகம் குறைந்த ஆஃப் கட்டர் பந்தை பிளிக் செய்கிறேன் பேர்வழி என்று கவர் பாயிண்டில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9.3 ஓவர்களில் நியூஸிலாந்து 48/1.

கேன் வில்லியம்சன் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் திட்டமிட்டு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வைடாக வீச அவர் டிரைவ் ஆடினார், உடலிலிருந்து தள்ளி ஆடியதால் பந்து ஆஃப் திசையில் மேலெழும்பிய பந்தை ஜாதவ் பிடித்தார். கடந்த 21 ஒருநாள் போட்டிகளில் கேன் வில்லியம்சன் முதல் முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்கிறார்.

பிறகு 48 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த மார்டின் கப்தில் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட பந்து சரியாகச் சிக்காமல் எழும்பியது அதனை தினேஷ் கார்த்திக் ஓடி வந்து அருமையாகப் பிடித்தார், நியூஸிலாந்து 80/3 என்று ஆனது.

அதன் பிறகு லேதம், டெய்லர் இணைந்தனர், லேதம் ஸ்பின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டார், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்று இந்த ஷாட்களிலேயே சுமார் 30-35 ரன்களை அடித்திருப்பார் லேதம். டெய்லரும் நிதானப் போக்கைக் கடைபிடித்தார், ஸ்பின்னர்கள் அவ்வப்போது பீட்டன் ஆனார்கள் ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு சாஹல், குல்தீப் அச்சுறுத்தல் இல்லை. அப்படியும் 2 பிற வாய்ப்புகள் ஏற்பட்டன 31-வது ஓவரில் டெய்லரை தோனி ரன் அவுட் செய்திருக்கலாம் ஆனால் அந்த வாய்ப்பு நழுவியது. தோனி த்ரோ செய்தார் ரன்னர் முனையில் பவுலர் சாஹல் பந்தைச் சேகரிக்கும் இடத்தில் இல்லை. பிறகு கோலியின் நேரடி த்ரோ ஒன்று ஸ்டம்பை மிஸ் செய்ய அப்போதும் டெய்லர் தப்பினார்.

விராட் கோலி வேகப்பந்து வீச்சுக்கு மாறினார் ஒன்றும் பயனில்லை, பிறகு மீண்டும் ஸ்பின் பந்து வீச்சாளர்களிடம் வந்தார், ஆனால் அப்போது நியூஸிலாந்து வெற்றிக்குத் தேவை 60க்கும் கொஞ்சம் கூடுதல் ரன்களே. கடைசியில் ராஸ் டெய்லர் 95 ரன்களில் ஸ்கோர் 280ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார். ஆனால் லேதம் 102 பந்துகலில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். குல்தீப் யாதவ், சாஹல் 20 ஓவர்களில் 115 ரன்களை கொடுக்க மற்றொரு விதந்தோதப்படும் பந்துவீச்சுக் கூட்டணியான பும்ரா-புவனேஷ் 19 ஓவர்களில் 112 ரன்களைக் கொடுத்தனர். கேதார் ஜாதவ் பிரேக் த்ரூ பவுலர் ஆனால் அவரைக் கொண்டு வராமல் விராட் கோலி ஆடியது புரியவில்லை. ஆட்ட நாயகனாக டாம் லேதம் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article19904281.ece?homepage=true

Link to comment
Share on other sites

கேதார் ஜாதவுக்கு ஏன் பவுலிங் கொடுக்கவில்லை? - விராட் கோலி விளக்கம்

 

 
kohli

விராட் கோலி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

விராட் கோலி தனது 200வது ஒருநாள் போட்டியில் நேற்று 31-வது சதம் எடுத்து அணியை நல்ல ஸ்கோருக்கு முன்னேற்றினாலும், மற்றவர்களிடமிருந்து ஒரு அரைசதம் கூட வராத நிலையில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கான காரணம் குறித்து ஆட்டம் முடிந்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

தொடக்கத்திலேயே நியூஸிலாந்து அணி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கியதே காரணம். 275 நல்ல ஸ்கோர் என்றே கருதினோம், ஆனால் டாம் லேதம், ராஸ் டெய்லர் பிரமாதம். அங்கொன்றும் இங்கொன்றும் ஓரிரு ரன் அவுட் வாய்ப்புகளைத் தவிர வேறு வாய்ப்புகளை இவர்கள் வழங்கவில்லை.

மேலும் 200 ரன் கூட்டணி அமைத்தால் அந்த அணியே வெற்றிக்குத் தகுதி பெற்ற அணியாகும். கடைசி 13-14 ஓவர்களில் 20-30 ரன்கள் குறைவாக எடுத்தோம். இன்னும் ஓரிருவர் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், நல்ல பேட்டிங்கை எதிர்நோக்குகிறோம். இன்னும் ஓரிருவர் ரன்கள் எடுத்திருந்தால் 30-40 ரன்கள் கூடுதலாக வந்திருக்கும்.

நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் நம் ஸ்பின்னர்களை சரியாகக் கையாண்டனர். டாம் லேதம், ராஸ் டெய்லரைப் பாராட்டுகிறேன். அதே போல் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சிறப்பாக வீசினார்.

முதல் நிலை ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு பிட்சில் பந்துகள் திரும்பும் நிலையே காணப்பட்டது. நியூஸிலாந்தின் பின் கள வீரர்கள் இறங்கியிருந்தால் கேதார் ஜாதவ்வை பயன்படுத்தியிருப்பேன். ஹர்திக் நன்றாக வீசியதால் கேதாரை கொண்டு வர வேண்டிய தேவையை உணரவில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article19904415.ece?homepage=true

Link to comment
Share on other sites

இந்திய சுழல் கூட்டணியை தகர்த்தது எப்படி?- நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் விளக்கம்

 

 
24CHPMUTAYLOR

ராஸ் டெய்லர்   -  THE HINDU

சமீப காலமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானித்து வரும் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் சுழற் கூட்டணியை முறியடிக்க ஸ்வீப் ஷாட்களைப் பயன்படுத்தியதாக நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 1-0 என்று முன்னிலை பெற்றது. 281 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய நிலையில் 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து அணி ராஸ் டெய்லர், டாம் லேதம் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது.

லேதம் 103 ரன்களும், டெய்லர் 95 ரன்களும் விளாசினர். இந்த கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய மண்ணில் விரட்டலின் போது 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. டெய்லர், லேதம் கூட்டணியின் சாதனை விரட்டலால் விராட் கோலியின் 31-வது சாதனை சதம் வீணானது. இந்த கூட்டணிக்கு எந்த ஒரு வகையிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அச்சுறுத்தல் அளிக்கவில்லை. இவர்கள் இருவரும் கூட்டாக 20 ஓவர்களை வீசி 125 ரன்களை விட்டுக்கொடுத்தனர். குல்தீப் யாதவ் மட்டுமே ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணியை வீழ்த்தியது குறித்து ராஸ் டெய்லர் கூறியதாவது:

ஸ்வீப் ஷாட்கள் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். இதனால் அவர்கள் வீசும் அளவை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். லேதம் இதனை தனித் திறமையுடன் நடத்திக் காட்டினார். ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இதன்படி அவரும் தொடர்ந்து ஸ்வீப் செய்து கொண்டிருந்தார்.

மூன்றரை மணி நேரம் கடும் உஷ்ணத்தில் பீல்டிங் செய்ததால் பேட்டிங்கில் நல்ல தொடக்கம் அமைவது அவசியம் என்பதை உணர்ந்தோம். நல்ல தொடக்கம் அமையும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறந்த முறையில் கையாள முடியும் என்று நினைத்தோம். முன்பெல்லாம் நியூஸிலாந்து அணி இங்கு வந்து திணறியதையே பார்த்திருக்கிறேன். மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ கூட்டணி அருமையாகத் தொடங்க நானும் லேதமும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தோம். அதன் பிறகே வெற்றிக்கு அருகில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்.

கடந்த காலங்களில் நடு ஓவர்களில் அதிக அளவிலான பந்துகளை ரன் சேர்க்காமல் வீணாக்கினோம். இதனால் கிரீஸில் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஒரு சில ஷாட்களை மேற்கொண்டு ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். பயிற்சி ஆட்டத்தில் லேதமும் நானும் சிறப்பாக ரன்கள் எடுத்தோம். அங்கிருந்து அந்த ஆட்டத்தை முதல் போட்டிக்கும் எடுத்து வந்தது திருப்தி அளிக்கிறது.

டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசினார், இந்திய அணி அடுத்த போட்டியில் இன்னும் கடினமாக எங்களை அணுகும். ஒரு வெற்றி எங்களுக்கு தொடரை கொடுத்து விடும். ஆனால் புனே ஆடுகளம் கடினமானது என்று நாங்கள் அறிவோம். இந்த வெற்றியிலேயே தங்கி விடாமல் அடுத்த போட்டியையும் நன்றாகத் தொடங்க வேண்டும். இவ்வாறு ராஸ் டெய்லர் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article19910717.ece

Link to comment
Share on other sites

மிஸ்ட்ரி பிட்ச், மிடில் ஆர்டர் இம்சை, பிளாக் கேப்ஸின் வியூகம்... கோலி படை சமாளிக்குமா? #INDvNZ

 
 
Chennai: 

மும்பையிலிருந்து புனேவுக்குப் பயணித்துள்ளது கிரிக்கெட் புயல். சமீபத்தில் ஒவ்வொரு ஒருநாள் தொடரையும் வெற்றியோடு தொடங்கிய இந்திய அணிக்கு, அதிர்ச்சி அளித்துள்ளது நியூசிலாந்து. இந்தத் தோல்வியை மகாராஷ்ட்ராவிலேயே துரத்திவிட்டு, வெற்றிப்பயணத்தைத் தொடங்கக் காத்திருக்கிறது கோலி அண்ட் கோ. ஆடுகளம் சாதகமாக அமையுமா? மிடில் ஆர்டர் பிரச்னைகளைச் சரிசெய்யுமா? மீண்டும் விக்கெட் வேட்டை நடத்துவார்களா நம் ஸ்பின்னர்கள்? #INDvNZ

INDvNZ

 

புனே மைதானம் எப்படி? 

போட்டி நடக்கும் புனேவின், மகாராஸ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானம் கணிக்க முடியாத ஒன்று. ஆஸ்திரேலிய அணியுடன் பிப்ரவரி மாதம் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, படுதோல்வியடைந்தது. முதல் நாளில் இருந்தே ஆடுகளும் சுழலுக்கு உதவ, போட்டி மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்தது. சுழல் ஜாம்பவான் வார்னே "இந்த மைதானம் முதல் நாளில் இருந்தே, எட்டாவது நாள் ஆடுகளம் போல் இருந்தது" என்று குற்றம்சாட்டினார். அவர் மட்டுமல்ல, மொத்த மீடியாவும் அந்த ஆடுகளத்தைக் குறை கூறின. ஸ்பின்னர்கள் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆனால், ஒரு மாதம் முன்பு ஜனவரியில் நடந்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது. 38 ஓவர்கள் வீசிய இரண்டு அணிகளின் ஸ்பின்னர்களாலும் சேர்ந்து 1 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஒருநாள் போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் ஆடுகளத்தை தயார் செய்வதில் வித்தியாசம் உண்டு. ஆனாலும் இந்த அளவுக்கு மாறுபட்ட அளவில் நடந்துகொள்ளும் பிட்சை நன்கு ஆய்வு செய்வது அவசியம். "ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியைப் போல் இல்லாமல், ஆடுகளம் இம்முறை நன்றாக இருக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம்" என்கிறார் புனே ஆடுகளப் பராமரிப்பாளர் பாண்டுரங் சால்கோன்கர். புனே மைதானத்தில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான கடைசிப் போட்டியில், 350 ரன் டார்கெட்டை 11 பந்துகள் மீதமிருக்கையில் அற்புதமாக சேஸ் செய்தது இந்திய அணி.

புனே

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதை ரசிகர்களால் நம்ப முடியவில்லை. ஆஸி அணியை மிரட்டிய நம் பவுலர்களும், மும்பையில் சோடை போயினர். கோலியைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. மிடில் ஆர்டர் சோகம் இன்னும் தொடர்கிறது. ஜாதவை 4, 5 என பொசிஷன் மாற்றி மாற்றி இறக்குகிறார் கோலி. ஆனால், பலன் இல்லை. அதனால், அவரை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், 'பார்ட் டைம்' பவுலிங் ஆப்ஷன் இல்லை என்பதால், கோலி அவ்வளவு சீக்கிரம் ஜாதவை நீக்கமாட்டார்.  இங்கிலாந்துடன் இந்த மைதானத்தில்தான் அவர் சதம் அடித்து, இந்திய அணியில் தன் இடத்தை உறுதி செய்தார். இந்தப் போட்டியிலும் அப்படியொரு பெர்ஃபாமென்ஸை அவர் கொடுப்பது அவசியம். 

மனீஷ் பாண்டேவுக்குப் பதிலாகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஓரளவு நன்றாக ஆடினார். பிரஷரை ஃபீல் செய்யாமல் இந்தத் தொடரில் முத்திரை பதித்தால், இந்திய அணியின் வோர்ல்ட் கப் பிளானில் இடம்பெறலாம். இங்கிலாந்துடனான அந்த அற்புத சேஸிங்கில், ஜாதவுக்கு முன்பாக சதமடித்து ஆட்டத்தை நம் பக்கம் கொண்டுவந்தவர், 'சேஸ் மாஸ்டர்' கோலி. கடந்த போட்டியிலும் சதமடித்து ரன் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் மிடில் ஆர்டர் செட் ஆகாத நிலையில், ஜாதவை அடிக்கடி பொசிஷன் மாற்றுவதையும் கோலி தவிர்க்க வேண்டும். கார்த்திக்கை நான்காவது வீரராகவும், ஜாதவை ஐந்தாவதாகவும் இறக்குவதே அவர்கள் இருவரின் கேம்களுக்கும் செட்டாகும். 

ரஹானே

மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளைப் பந்தாடிய சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிக்கத் தவறியது. லாதம், டெய்லர் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் இவர்கள் தடுமாற, வேகப்பந்துவீச்சாளர்களாலும் சோபிக்க முடியவில்லை. அஷ்வின், ஜடேஜா எனும் மாபெரும் கூட்டணியை ரீப்ளேஸ் செய்திருப்பதால், ஒரு போட்டியில் சோபிக்காவிட்டாலும், நெகடிவ் ரிவ்யூக்களைச் சந்திக்க நேரிடும். அதனால், புனேவில் அவர்கள் விக்கெட் வேட்டை நடத்த வேண்டியது அவசியம். பாண்டியா சிக்கனமாகப் பந்துவீசியது அணிக்கு நம்பிக்கை. அதேசமயம். அவர் பேட்டிங்கில் கொஞ்சம் பொறுமை அவசியம்.

பிளாக் கேப்ஸ் படு ஸ்ட்ராங்!

இந்தியா வந்து விளையாடிய அணிகளில், நல்ல பிளானோடு வந்து விளையாடிய அணி நியூசிலாந்துதான். இந்திய பேட்ஸ்மேன்களில் இருந்து, ஸ்பின்னர்கள் வரை, எப்படி எதிர்கொள்வது என்று பிளான் போட்டு அடித்தனர். போல்ட்டின் அசுர வேகமும், அக்யூரசியும் இந்திய பேட்ஸ்மேன்களை அலறவைத்தது. சௌதியும் நல்ல ஃபார்மில் இருப்பது நம்பிக்கை. வில்லியம்ஸன் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே நன்றாகவே விளையாடினர். மிகவும் சிக்கல் தரக்கூடிய ஸ்பின்னர்களைக் கையாண்ட விதத்திலேயே, இந்தத் தொடருக்கு அவர்கள் எவ்வளவு தயாராக வந்துள்ளனர் என்பது தெரிந்தது. ஆனால், நியூசிலாந்து அணியின் கேப்டனும் அடிக்கடி சொதப்ப மாட்டார். கோலிக்குச் சளைத்தவர் இல்லையே அவர். அதனால் இந்தப் போட்டியில் தன் தரத்தை நிரூபிக்க கம்பேக் கொடுப்பார். இந்திய வீரர்கள், அவரை மிகவும் கவனமாக எதிர்கொள்வது அவசியம். மொத்தத்தில் நியூசிலாந்து அணி அதிக நம்பிக்கையோடு களம் காண்கிறது.

நியூசிலாந்து

 

இரண்டு அணிகளும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. காலின் கிராந்தோமை வேண்டுமானால் நியூசி அணி மாற்றலாம். ஆட்டம் பகல் 1.30 மணிக்குத் தொடங்கும். நியூசிலாந்து அணியின் நம்பிக்கையைக் குலைத்து, இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்க, இந்திய அணி முதல் பந்தில் இருந்தே அவர்களை டாமினேட் செய்ய வேண்டும். தங்களின் வழக்கமான திட்டங்களை மாற்றி, ஏதேனும் ஆச்சர்யம் தந்தால் 'பிளாக் கேப்ஸ்' அணியை எளிதாய் வீழ்த்தலாம்.

http://www.vikatan.com/news/sports/105821-will-india-overcome-the-loss-of-first-odi-against-the-black-caps.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
    • 26 MAY, 2024 | 01:57 PM   வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,   நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது. அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். இதே வேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது. அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன். அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.  2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது. அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம். இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார். நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று. உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும். அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன். மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன். அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன். இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.  முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184487
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.