Jump to content

திசைகளின் திருமணம்


Recommended Posts

திசைகளின் திருமணம்
 

எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். 

இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம். இப்போது அந்த அனுமானங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன.  

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கை ஒன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் முக்கிய செயற்பாடாக புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றை அடைப்படையாகக் கொண்டுதான், இறுதி வரைபு உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  

நிலைப்பாடுகள் 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் நிலப்பிரதேசங்களாகும். வடக்கில் தமிழர்களும் கிழக்கில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இந்த நிலையில், இணைந்த வடக்கும் கிழக்கும்தான் தமது தாயகப் பிரதேசம் எனத் தமிழர்கள் கூறி வருகின்றனர். அதிலிருந்துதான், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது பெரும்பான்மைத் தமிழர்களின் கோரிக்கையாகும்.  

 இதன் அடிப்படையில்தான் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. ‘வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக அமைதல் வேண்டும்’ என்று, இடைக்கால அறிக்கையில் த.தே.கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதில் தமிழர் தரப்பு எந்தளவு உறுதியாக உள்ளதோ, அதுபோலவே, வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதில் கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் உறுதியாக உள்ளனர். இதுதான் உண்மை நிலைவரமாகும்.   

இந்த உண்மையை மறைக்க முடியாது. காயத்தைக் காட்டினால்தான், அதற்குரிய சிகிச்சைகள் குறித்து யோசிக்க முடியும் என்பதால், சில கசப்பான உண்மைகளை பதிவு செய்தல் அவசியமாகிறது.  

பின்னணிக் கதை  

தனித்தனியாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக, தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அப்போது தனியாக இருந்த கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டபோது, முஸ்லிம் மக்களின் சனத்தொகை 17 சதவீதமாக வீழ்ந்து போனது.   

மேலும், முஸ்லிம்கள் பற்றி அந்த ஒப்பந்தத்தில் எதுவும் பேசப்படவில்லை. அதனால், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை ‘முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசசனம்’ என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்போது கடுமையாக விமர்சித்திருந்தது.  

வடக்கும் கிழக்கும் தனித்திருந்த காலங்களை விடவும், இரண்டு மாகாணங்களும் இணைந்திருந்த போதுதான் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில், பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. தமிழர்களின் ஆயுதமேந்திய இயக்கங்களால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபையில் தமக்கு அநீதியிழைக்கப்படுகிறது என்கிற கோசம், முஸ்லிம்களிடமிருந்து அப்போது எழுந்தது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமை முற்றியது.   

இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள், தமது அதிகாரத்தின் கீழிருந்த முஸ்லிம்களை, இறுக்கி அணைக்கத் தவறி விட்டார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.  

 இதன் விளைவு, சிங்களப் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ், வாழ முடியாது என்கிற முடிவுக்குத் தமிழர்கள் வந்திருந்ததைப் போல், தமிழர்களின் அதிகாரத்தின் கீழ் தங்களால் வாழ முடியாது என்கிற முடிவுக்கு, கிழக்கு முஸ்லிம்கள் வந்தனர். முஸ்லிம்கள் தம்மை ஒரு தேசியமாகவும், இனத்துவ சமூகமாகவும் கட்டமைத்துக் கொள்வதற்கான உயர்ந்தபட்ச அழுத்தம், இந்தக் காலகட்டத்தில்தான் ஏற்பட்டது.  

தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கும்  கிழக்கும் 2008ஆம் ஆண்டு, நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் பிரிக்கப்பட்டதை, கிழக்கு முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். தாம் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றதாக அவர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, கிழக்கு மாகாண சபையும் வடக்கு மாகாண சபையும் உருவாகின. வடக்கும் கிழக்கும் தனித்தனி ஆட்சியின் கீழ் வந்தன.  

கசப்புகள்  

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்பது தமிழர்களின் கோரிக்கையாகும். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் இணங்க மாட்டார்கள் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளும் பகைமையுமே அதற்கான காரணங்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.   

ஆயினும், முஸ்லிம்களிடமுள்ள மனக்கசப்புகளையும் பகைமை உணர்வுகளையும் களைவதற்கான செயற்பாடுகள் எவற்றையும் தமிழர் அரசியல் தலைமைகள் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. இதை, இந்தப் பத்தியில் முன்னரும் சுட்டிக்காட்டியிருந்தோம். 

தமிழர்களிடம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பகைமையை இல்லாமல் செய்வதென்றால், சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களிடம் சென்று, இரண்டு இனங்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் செயற்பாடுகளில் ஆகக்குறைந்தது தமிழர் அரசியல் தலைமைகள் ஈடுபட வேண்டும்.  

ஆனால், அது நிகழவேயில்லை. பதிலாக, முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களிடத்தில் கூட்டாளித்தனத்தை ஏற்படுத்துவதன் மூலம், முஸ்லிம்களையும் தமிழர்களையும் நல்லுறவாக்கி விடலாம் என்று, தமிழர் அரசியல் தலைவர்கள் நினைக்கின்றார்கள். இது மிகப் பெரும் தப்புக்கணக்கு என்பதை, தமிழர் அரசியல் தலைமைகள் உணரும் நாள் நெருங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.  

தடைகள்  

வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக அல்லது மாநிலமாக அமைந்திருத்தல் வேண்டுமென்கிற கோரிக்கையை, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.   

இந்த நிலையில், இது உள்ளிட்ட தமது மூன்று கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கினால்தான், புதிய அரசமைப்பின் இறுதி வரைபுக்குத் தமது ஆதரவு கிடைக்கும் என்று, த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கின்றார். 

ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அரசாங்கம் நினைத்த மாத்திரத்தில் இணைத்து விட முடியாது என்பதை சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரனும் நன்கு அறிவார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதென்றால், அதற்குச் சில முக்கிய தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும்.   

தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பின் அடிப்படையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.  

 ஆனால், புதிய அரசமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதாயின், புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்வதோடு, சர்வஜன வாக்கெடுப்பொன்றிலும் வெற்றி பெறுதல் அவசியமாகும். இவை, அத்தனை எளிதில் தாண்டக் கூடிய தடைகளல்ல.   

எதிர்ப்புகளும், சார்புகளும்  

முஸ்லிம் அரசியல்வாதிகளில் அநேகமானோர், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிரான மனநிலையைத்தான் கொண்டுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவையும் இணைவுக்கு எதிரானவையாகவே உள்ளன. 

உதாரணமாக, வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ‘தனித்த கிழக்கு’ எனும் நிலைப்பாட்டில் மிகத் தீவிரமாக உள்ளது. அதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.  

 இவ்வாறானாதொரு நிலையில், “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது” என்று, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை கவனத்துக்குரியது. மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைகின்றபோது, முஸ்லிம்களுக்கான தனியலகு அமையப்பெற வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.   

ஆனாலும், “வடக்கும் கிழக்கும் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றார். 

அரச தொலைக்காட்சியொன்றில் இதைப் பகிரங்கமாகத் தெரிவித்த பிரதியமைச்சர் ஹரீஸ், கல்முனையில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார். 

வடக்கு, கிழக்கு தொடர்பான பிரதியமைச்சர் ஹரீசின் இந்த முடிவானது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நிலைப்பாட்டுடன் முரண்படவும், முட்டி மோதவும் தொடங்கியுள்ளது.   

இதையடுத்து, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு இது தொடர்பில் ஒரு விடயத்தைத் தெரிவித்துள்ளார். “வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் கூறியிருப்பது, மு.காங்கிரஸின் நிலைப்பாடல்ல” என்று, ஹக்கீம் கூறியிருக்கின்றார். 

அரச ஊடகம் ஒன்று இதைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இருந்தபோதும், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன்தான் பிரதியமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஹரீசும் ஹக்கீமும் உள்ளக முரண்பாடும்  

இவ்வாறானதொரு நிலையில், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவானதொரு நிலைப்பாட்டை மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எடுப்பாராயின், முஸ்லிம் காங்கிரஸுக்குள் அதற்கு எதிரான குரல்கள் எழும் என்பதற்கு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ஹரீசினுடைய எதிர்ப்பு இப்போதே கட்டியம் கூறுவதாக உள்ளது. இதனை மு.கா தலைவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.   
ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் பிரிவுகளால் முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 

இந்த நிலையில், வடக்கு,கிழக்கு விவகாகரம் தொடர்பிலும் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுமாயின், அது மு.காவை இன்னும் பலவீனமாக்கி விடும் என்கிற நிலைவரமும் ஒருபுறம் உள்ளது.  

மக்களின் பாதை  

வடக்கு கிழக்கு இணைவுக்கு ஆதரவாக சிங்கள ஆட்சியாளர்களும், முஸ்லிம் காங்கிரஸும் கைகளை உயர்த்தினாலும், வடக்கு, கிழக்கு இணைப்பை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு ஒன்றுக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பில், சிங்கள மக்களும் முஸ்லிம்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக உள்ளன.   

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளை, அவர்கள் சார்ந்த சமூகங்கள் துரோகிகளாகவே பார்க்கும். 

இந்த யதார்த்தத்தைத் தமிழர் தரப்புப் புரிந்து கொள்ளும் போதுதான், தனது நகர்வுகளைச் சரியான வழியில் எடுத்து வைக்க முடியும்.  

இன்னொருபுறம் வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமையுணர்வு இன்னும் அதிகரிக்கும் நிலைவரம் உருவாகலாம். 

ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் என்கிற தமது தாயகக் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கும்போது, முஸ்லிம்களை தமிழர்கள் துரோகிகளாகவே தொடர்ந்தும் பார்க்கத் தொடங்குவார்கள். இந்த நிலைவரத்தை கையாள்வதென்பது பெரும் சிரமமாகவே இருக்கும்.   

போலி உறவு  

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப்பெரும் பிளவுகள் இருக்கையில், அவற்றைச் செயற்கைத்தனமாக நாம் மறைத்து வந்திருக்கின்றோம். ‘தமிழர்களும் முஸ்லிம்களும் இன்னும் பிட்டும் தேங்காய்ப்பூ போலவும் நட்புடன் கலந்து உள்ளனர்’ என்று, போலியாக - யாரோ சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக, நம்மிடையே இருக்கின்ற சிலர், போலியாக பேசியும் எழுதியும் வந்திருக்கின்றார்கள்.  

 இரண்டு சமூகங்களுக்குமிடையில் இருக்கும் காயங்களைக் காட்டி, அவற்றுக்கு மருந்திடாமல் மறைத்துக் கொண்டு வந்திருக்கின்றோம். அதன் பலன், இப்போது அந்தக் காயம் பருத்து, சீழ் பிடித்து, நாறிப் போயுள்ளது. இந்தப் புண்களை அத்தனை சீக்கிரத்தில் ஆற்றிவிட முடியாது.  

இப்படியானதொரு சூழ்நிலையில், வடக்குக்கும் கிழக்குக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி யோசிப்பது எங்ஙனம் சாத்தியமாகும்? வடக்கு என்பது தமிழர்களை அடையாளப்படுத்துவதாகவும் கிழக்கு முஸ்லிம்களைக் குறிப்பதாகவும் உள்ளது.   

இரண்டு சமூகங்களுக்குள்ளும் இத்தனை காயங்களையும் வலிகளையும் வைத்துக் கொண்டு, இரண்டு திசைகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைப்பதே யதார்த்தத்துக்கு பொருத்தமில்லாததாகும். 

வடக்கும் கிழக்கும் முதலில் பகைமை மறக்க வேண்டும்; இரண்டு திசைகளுக்குமிடையில் புன்னகைகள் பூக்க வேண்டும்; இரண்டு திசைகளும் பேசிப் பழக வேண்டும்; காதல் பூக்க வேண்டும்; அதன் பிறகுதான் திருமணம் பற்றிச் சிந்திக்க முடியும்.  
இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, நடத்தும் கட்டாயக் கல்யாணம், நிலைத்திருக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திசைகளின்-திருமணம்/91-205247

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.