Jump to content

யாழ்ப்பாணம் வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில்


Recommended Posts

யாழ். வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில்

 
யாழ். வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில்
 
 

அரச தலைவர்  மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

விவசாய உற்பத்திகள், மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வொன்றிலேயே அவர் கலந்து கொண்டுள்ளார்.

IMG-aedb3c44823a3e70abdeb5b026524e24-V-7IMG-9e47561749a32c956c19a45250b4a2df-V-7

IMG-06382f7fa865d844ca19a4530cea71c3-V-7IMG-34181082682c3805b427fc26a3760d7d-V-7IMG-bc3111608d57bc5bbc04d300ca69c535-V-7IMG-aa0608ef00acf6fd01b077cb639dcf44-V-7

http://newuthayan.com/story/36835.html

Link to comment
Share on other sites

உணவு உற்பத்திப் புரட்சியின் வட மாகாண திட்டம் ஆரம்பம்
 

“விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்” தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) ஆரம்பமானது.

புத்தூர், நிலாவரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள், உணவுப் பயிர் கன்றுகளை ஜனாதிபதி விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

உணவுப் பயிர்களை நாட்டுகின்ற முறையை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், “சிதமு கான்தா” விவசாய அமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 4,000 பெண்களுக்கு உணவுப் பயிர் விதைகளை வழங்கி வைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

விவசாயத்துறை அமைச்சால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயக் கிணறுகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் நிதிக்கான காசோலையையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

விவசாயத்துறைக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், வாழைக்குலைகளை வெட்டும் நவீன இயந்திரமொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய சமூகத்தினருடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர் சிவகுமார், யாழ். மாவட்ட அதிபர் என். வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உணவு-உற்பத்திப்-புரட்சியின்-வட-மாகாண-திட்டம்-ஆரம்பம்/71-205549

Link to comment
Share on other sites

வடபகுதி விவசாயிகள் திறமையானவர்கள்: புகழாரம் சூடிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி

 

யாழ் விவசாயிகள் என்று சொன்னால் அவர்கள் எதற்கும் முகம் கொடுத்தும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திபால ஸ்ரீசேன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

வடபகுதி விவசாயிகள் திறமையானவர்கள்: புகழாரம் சூடிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி

இன்று விவசாயம் தொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைத்தோம். விளைச்சல் பெருகிட புரட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

கடந்த பல மாதங்களாக அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.ஒன்றரை வருடம் கடும் வரட்சி நிலவியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கமத்துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. 50 வீதம் விளைச்சல் இல்லாமல் போனது.

இதனால் தான் நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பெரிய அழிவு உலகில் ஏற்பட்டு வருகிறது.இது எமது நாட்டிற்கு மட்டும் அல்ல உலகின் உள்ள பல நாடுகள் முகம்கொடுத்திருக்கின்றன.

எனவே இயற்கைக்கு சவால் விடுத்துக்கொண்டு விவாசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.எங்களுக்கு தேவையான உணவை நாங்களே உற்பத்தி செய்யவேண்டும்.

கடந்த பல வருட தசாப்தங்களை பார்க்கும் போது வடபகுதி விவசாயிகள் மிகவும் திறமையான விவசாயிகள் என்பதை முழு நாடும் அறியும்.

யாழ்ப்பாண  விவசாயிகள் பற்றி மிகவும் கீர்த்தியான நல்ல சரித்திரம் வரலாறு தான் இருக்கின்றது.

பல்வேறு கஸ்ட நஸ்டங்களுக்கு முகம்கொடுத்து பலவிதமான எதிர்பார்ப்புக்கள் இல்லாமல்  எதற்கும் முகம்கொடுத்து அவர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றும் விவசாயிகள் தான் யாழ்ப்பாண விவசாயிகள்.

எனவே கமத்தொழிலை மேம்படுத்த இன்னும் உதவி செய்யவுள்ளோம். அனைத்து விவசாயிகளுக்கும்  வழங்குவோம்.

காலை விவசாயிகளை சந்தித்த போது பல விதமான வேண்டுகோள்களை முன்வைத்தார்கள். வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்ய வேண்டாம். தேவையான உருளைக்கிழங்கினை தாம் தருவதாக சொல்கின்றார்கள்.

அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடிவு எடுப்போம்.

கடன் பழு தொடர்பாக சொன்னார்கள். விவசாய பெரும் குடி மக்கள் நிவாரணம் பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சுடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.

வடமாகாண விவசாய பெரும் மக்கள் வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ள அரச மற்றும் தனியார் வங்கியுடன் பேசவுள்ளேன்.

1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண விவசாயம் பற்றி படித்துள்ளேன். பலர் சிறப்பான விவசாயம் செய்கின்றார்கள் என சிங்கள புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.

விவசாயத்தினை பெற்றுக்கொடுத்து விவசாயத்தினை மேம்படுத்த உள்ளோம் என்று மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/North-farmers-skille-SriLankan-president

Link to comment
Share on other sites

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

 

'விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் ! 

இன்று காலை  புத்தூர்-நிலாவரைப் பிரதேசத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள் மற்றும் உணவுப் பயிர் கன்றுகளை ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

 தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

உணவுப் பயிர்களை நாட்டுகின்ற முறையை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், 'சிதமு கான்தா' விவசாய அமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 4000 பெண்களுக்கு உணவுப் பயிர் விதைகளை வழங்கி வைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயக் கினறுகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதிக்கான காசோலையையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் ! 

விவசாயத்துறைக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் வாழைக்குலைகளை வெட்டும் நவீன இயந்திரமொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய சமூகத்தினருடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.

 தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

மேலும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர் சிவகுமார், யாழ் மாவட்ட அதிபர் என். வேதநாயகம் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://news.ibctamil.com/ta/internal-affairs/National-food-production-revolution-Program

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பங்கு பற்றவில்லையோ?

Link to comment
Share on other sites

Just now, putthan said:

முதலமைச்சர் பங்கு பற்றவில்லையோ?

இல்லை. அவரும் இந்த நிகழ்வுகளை தவிர்த்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நவீனன் said:

இல்லை. அவரும் இந்த நிகழ்வுகளை தவிர்த்து விட்டார்.

தகவலுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.