Jump to content

கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்


Recommended Posts

கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்
 

மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.   

அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர்.   

இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது.   

அரசமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில், வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வறிக்கையில், கரையோர மாவட்டம் குறித்தோ, அன்றேல் முஸ்லிம் தனி அதிகார அலகு குறித்தோ, வழிநடாத்தல் குழுவின் யோசனையாக எதுவும் முன்மொழியப்படவில்லை.  

 இவற்றை, வழிநடாத்தல் குழுவின் யோசனையாக முன்னிலைப்படுத்துவதில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆக்கபூர்வமின்றி இருந்திருக்கின்றன என்று சொல்ல வேண்டியுள்ளது.   

மக்கள் காங்கிரஸ் கட்சி, தமது பிரத்தியேக யோசனையாக கரையோர மாவட்டம் என்ற விடயத்தை மாத்திரம், ‘ஒலுவில் மாவட்டம்’ என்ற பெயரில் முன்வைத்திருக்கிறது.   

வடக்கு, கிழக்கு இணைப்புக்குப் பகிரங்கமாகவும் பரவலாகவும் முஸ்லிம்கள் இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி இருக்கின்றமையால், நிலைமைகளைச் சமாளிப்பதற்கு, “வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், முஸ்லிம்களுக்குத் தனியான அலகு என்ற நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும்” என்ற தோரணையில், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் பேசத் தொடங்கியிருக்கின்றார்.   

ஆனால், அக்கட்சி ஒரு பிரத்தியேக யோசனையாகக் கூட வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பதையோ அவ்வாறு இணைக்கப்படின் தனி அலகு வழங்கப்பட வேண்டும் என்றோ வழிநடாத்தல் குழு அறிக்கையில் கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை.   

அதேபோன்று, கரையோர மாவட்டம் குறித்த அறிக்கையை மு.கா கையளித்ததாகக் குறிப்பிடுகின்றபோதும், அவ்வாறான யோசனையும் கூட, மேற்படி அறிக்கையில் பிரசுரமாகவில்லை.  

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றி பேசப்படுவதற்கு, சமாந்தரமாக முஸ்லிம் தனியலகு பற்றியும் கரையோர மாவட்டம் குறித்தும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.   

மயக்கமான பேச்சுகளால், ஒன்றுக்கொன்று சமமானவை என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கணிசமான முஸ்லிம்கள் இந்தச் சொல்லாடல்கள் குறித்து, தெளிவற்ற நிலையிலேயே இருப்பதை அவதானிக்க முடிகின்றது.  

எனவே, இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து, முஸ்லிம் மகாஜனங்கள் முதலில் தெளிவுபெற வேண்டும். சில அரசியல்வாதிகளும் கூட இதற்கு விதிவிலக்காக இருக்க மாட்டார்கள்.   

முதலாவது விடயம், கரையோர மாவட்டத்துக்கும், முஸ்லிம் அலகு அல்லது தனிமாகாணம் என்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருப்பொருட்கள் கொண்டவையாகும்.   

 இலங்கையில் ஏற்கெனவே இருக்கின்ற 25 நிர்வாக மாவட்டங்களைப் போன்ற, இன்னுமொரு புதிய மாவட்டமாகவே கரையோர மாவட்டம் இருக்கும். இங்கு நிர்வாக ரீதியான செல்வாக்கு இருக்கலாமேயொழிய அரசியல் ரீதியான எந்த அதிகாரமும் முஸ்லிம்களுக்கு இருக்காது.  

 அதேவேளை, முஸ்லிம் அலகு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய, இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்புபட்டதாகும். இது அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடையதாகும்.   

1960களில் பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, சிறுபான்மை மக்கள் பெருமளவில் காணப்பட்ட மூன்று தொகுதிகளில் உள்ள ஓர் ஊரை, மாவட்டத்தின் தலைநகராக நிர்ணயிக்காமல், 500 இற்கும் குறைவான சிங்கள வாக்குகளையே கொண்டிருந்த அம்பாறை நகரம், மாவட்டத்தின் தலைநகராக நிர்ணயிக்கப்பட்டது.   

அதை நியாயப்படுத்துவதற்காகவும் அங்கு சிங்கள மக்களின் தொகையை அதிகரிப்பதற்காகவும் அபிவிருத்தித் திட்டங்களின் பெயரால் காலி, மாத்தறை, கம்பஹா, குருணாகல், கேகாலை, மீரிகம போன்ற இடங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள், திட்டமிட்ட அடிப்படையில், அழைத்து வரப்பட்டு, அம்பாறை நகரைச் சுற்றிலும் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இன்றுவரையும் இது நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றது.   

சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதற்கு, இது முதன்மைச் சான்று எனலாம். முஸ்லிம் அரசியல்வாதிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி, சிங்கள ஆட்சியாளர்கள் காரியங்களை சாதிக்கத் தொடங்கிய முதலாவது தருணமாகவும் இதைக் கொள்ள முடியும். அன்றிலிருந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரான அம்பாறையிலேயே கச்சேரி இயங்கி வருகின்றது.   

அம்பாறையில் இயங்கும் கச்சேரி என்பது, அரச இயந்திரத்தின் செயற்பாட்டைத் தீர்மானிக்கும் அதிகார மையமாகும். இந்த மையம், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சூசகமான முறையில் செய்த பாரபட்சங்களின் பட்டியல் நீளமானது.   

மொழிப் பிரச்சினையில் தொடங்கி காணி அபகரிப்பு வரை பல்வேறு சிக்கல்களுக்கு சிறுபான்மையினர் முகம்கொடுக்க நேரிட்டதன் அடிப்படைக் காரணம் அம்பாறையில் மையங்கொண்டிருந்த இந்த நிர்வாகச் சுழிதான் என்றால் மிகையில்லை.   

எனவேதான், முஸ்லிம்கள் தரப்பில் இருந்து, தற்போதைய அம்பாறை மாவட்டத்துக்குள் தமிழர், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கரையோர மாவட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.   

கரையோர மாவட்டம் என்பது, வெறும் அரசியல் கோஷமல்ல. அது, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல குழுக்களாலும், பல தடவைகளில் கண்டறியப்பட்ட அத்தியாவசியத் தேவைப்பாடு ஆகும். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் போன்றவர்கள் இதைக் கையிலெடுக்க முன்னரே, அதாவது 1977 இல், ‘மொரகொட ஆணைக்குழு’ கல்முனையை மையமாகக் கொண்ட, ஒரு கரையோர மாவட்டம் உருவாக வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவ்வாறு உருவாகுவதற்கு அம்பாறையில் நிலைகொண்டிருந்த இனவாதம் விடவில்லை.   

அதன்பிறகு, அரசியல் முன்னெடுப்புகளின் ஊடாக, இதைச் சாத்தியமாக்குவதற்கு முதலில் அஷ்ரப்பும் பின்னர், முஸ்லிம் காங்கிரஸூம் முயற்சி செய்தன. 1994 சந்திரிகா அம்மையார் ஆட்சியில், இதைப்பெற அஷ்ரப் முயன்றார். நடாளுமன்றத்துக்கும் அதை முன்னகர்த்தியிருந்தார்.   

அவரது மரணத்துக்குப் பிறகு 2002இலும் 2007இலும் 2012இலும் 2015இலும் மு.காவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அரசியல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலும், கரையோர மாவட்டம் பற்றிய உடன்பாடுகள் எட்டப்பட்டன என்று முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குச் சொல்லியிருந்தது.   

2015இல் கரையோர மாவட்டம் கிடைத்திருந்தால், அநேகமாக அக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளித்திருக்கும். அதைத் தருவதற்கு பஷில் ராஜபக்ஷ இழுத்தடிக்கின்றார் என்று அறிந்த பிறகுதான், மைத்திரிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை, தபால்மூல வாக்குகள் அளிக்கப்பட்ட பின்னர், மு.கா அறிவித்தது.   

இவ்வாறு அரசியல் தீர்மானங்களில் எல்லாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு கருவியாக கரையோர (கல்முனை) மாவட்டம் இருந்து வருகின்ற போதிலும், அதை ஒற்றைக்காலில் நின்று பெற்றெடுக்க, முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளோ காத்திரமான முயற்சிகளை எடுக்கவில்லை.   

ஆதலால், அண்மைக் காலங்களில் இது அரசியல் செய்வதற்கான ஒரு கோஷமாகப் பார்க்கப்படுகின்றது. இதை மாற்றியமைத்து, எல்லா நிர்வாக அதிகாரங்களுடனும் கூடிய கரையோர மாவட்டத்தைப் பெறுவது அவசியமாகும். தமிழ், முஸ்லிம் மக்களின் நிர்வாக, சிவில் சிக்கல்களை இது இலகுவாக்கும்.   

கரையோர மாவட்டத்தை, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, அதிவிசேட வர்த்தமானி ஒன்றின் ஊடாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால், முஸ்லிம் தனி அதிகார அலகு என்பது, இதிலிருந்து எல்லா அடிப்படைகளிலும் வேறுபடுகின்றது. இது, தமிழர்கள் கேட்பதற்கு ஒப்பான, ஓர் அரசியல் அதிகாரமுள்ள நிலப்பரப்பும் ஆளுகையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.   

இதேவேளை, முஸ்லிம் தனிஅலகு கோரிக்கை, இன்று நேற்று உருவானதல்ல; இந்த அபிலாஷை 60 வருடங்கள் பழமையானது என்று சொல்லலாம். 1956ஆம் ஆண்டிலிருந்து பல கட்டங்களில், அந்தந்தக் காலங்களில், தமிழர்களுக்கு தலைமைதாங்கிய அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு குறித்துப் பேசி வந்திருக்கிறார்கள். அதைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.   

ஆனால், பிற்பட்ட காலத்தில், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுகளின், உடன்பாடுகளில், முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் சரியாக வெளிப்படுத்தப்படாமல், ஒரு சிறுகுழு போல முஸ்லிம்கள் காண்பிக்கப்பட்டனர். அத்துடன், ஆயுதங்களின் அரசியலும் வியாபித்திருந்தது.   

எனவே, தனிஅலகுக் கோரிக்கையை முஸ்லிம்கள் மீள வலியுறுத்தினர். தமிழர்களுக்கு தனிநாட்டுக்கு சமமான ஒன்று கிடைக்கின்ற போது, அதேபோன்ற ஓர் அதிகார அலகு, முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என அஷ்ரப் கோரினார்.   

அவரது மரணத்துக்குப் பிறகு, முஸ்லிம் அரசியல் என்பது, வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியதாலும், கிழக்கு முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வேறுவேறு நிகழ்ச்சி நிரல்களுக்குள் சங்கமமாகி இருந்தமையாலும் வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு விட்டதாலும் மேற்குறிப்பிட்ட கோரிக்கை, உரத்த தொனியில் முன்வைக்கப்படவில்லை.  

 இருப்பினும், இப்போது இலங்கையின் அரசமைப்பு மறுசீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு கடுமையான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றது, இதுவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்ற காரணத்தினாலும் முஸ்லிம்கள், தனி அதிகார அலகு குறித்தும் சிந்திக்கின்றனர்.   

கிழக்கு மாகாணத்தில் உள்ள 90 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்களின் நிலைப்பாடு, இப்போது வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்பதாகும். மாகாணங்களை இணைக்காமல் இருப்பதா அல்லது இணைத்துவிட்டு அதிகார அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு தருவதா விருப்பம் என முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்களுடைய முதன்மைத் தெரிவு, இணையாமல் இருப்பது என்பதாகவே இருக்கும்.   

இதற்குப் பிரதான காரணம், இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தரப்படும் எனச் சொல்லப்படுகின்ற அதிகார அலகின் இலட்சணங்கள் எப்படியிருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாதிருக்கின்றமையாகும்.   

முஸ்லிம்களுக்கும் அதிகார அலகை அரசியல்மயப்படுத்தி, அதை வலியுறுத்திய அஷ்ரப், வடக்கு, கிழக்கு இணைப்பை வெளிப்படையாகவே எதிர்த்தார். நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் வேண்டுமென்று கோரினார். அதன்பிறகு, அதன் சாத்தியத்தன்மை குறித்த பின்னணியில் அவர், தென்கிழக்கு அலகு பற்றியும் பேசியிருந்தார். இதற்கப்பால் தனி முஸ்லிம் மாகாணம் என்ற ஒரு கருத்திட்டமும் முஸ்லிம்களிடையே பேசப்படுவதுண்டு.   

இங்கே வடக்கு, கிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு அல்லது மாகாணம் என்பது, இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை உள்ளடக்கிய ஓர் அதிகார மையமாக இருக்கும்.   

அவ்வாறு உருவாகும் பட்சத்தில், தமிழர்களின் ஆளுகைப் பிரதேசமும் நிலத்தொடர்பின்றி, இந்தியாவின் பாண்டிச்சேரி மாதிரியிலேயே அமையப் பெறும். அது சாத்தியமில்லாத சூழலில், இணையாத கிழக்கில் தனி முஸ்லிம் மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலனைக்குரியதாகின்றன. அதாவது, கிழக்கில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய ஓர் அதிகார அலகாக இது இருக்கும்.   

இதற்குப் பிறகுதான், தென்கிழக்கு அலகு என்ற விடயம் வருகின்றது. தென்கிழக்கு அலகு என்பதைக் கரையோர மாவட்டத்துக்குள் வருகின்ற ஊர்களை உள்ளடக்கிய ஆளுகைப் பிராந்தியம் என்று அர்த்தப்படுத்துவதற்கு, அன்றேல், அந்தச் சூத்திரத்தின் அடிப்படையில், அதை ஒரு பெரிய தீர்வாகக் காட்டி, முஸ்லிம்களைச் சமாளிப்பதற்கு, முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் காண முடிகின்றது.  

அது தவறான புரிதலாகும். நிஜத்தில், தென்கிழக்கு அலகு எனச் சொல்லப்படுவது தென்கிழக்கை மையமாகக் கொண்டதும் கிழக்கில் உள்ள அநேக முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கியதுமான ஓர் அரசியல் அதிகார கேந்திரமாகவே கருதப்பட வேண்டும்.   

எனவே, கரையோர மாவட்டம் என்பது, ஒரு நிர்வாக மாவட்டத்துக்கான ஏற்பாடாகும். அதற்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் சம்பந்தமில்லை. அதேபோல், முஸ்லிம் மாகாணம், தென்கிழக்கு அலகு, முஸ்லிம் அலகு என எந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டாலும் அது ஒரு மாகாணத்துக்குச் சமமான ஆட்புலத்தையும் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு பிராந்தியமாக அமைதல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தாத தீர்வு, நிரந்தரத் தீர்வாகாது.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கரையோர-மாவட்டமும்-தனி-அலகும்-தெளிய-வேண்டிய-மயக்கங்கள்/91-205461

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.