Jump to content

டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக் தொடர்களுக்கு ஐ.சி.சி. ஒப்புதல்


Recommended Posts

டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக் தொடர்களுக்கு ஐ.சி.சி. ஒப்புதல்

 

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

icc.jpg

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்ற போதே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யினால் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்களை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடவுள்ளன. 

டெஸ்ட் லீக் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்தும், ஒருநாள் லீக் தொடர் 2020 ஆம் ஆண்டிலிருந்தும் ஆரம்பமாகவுள்ளது.டெஸ்ட் லீக்கில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். குறிப்பாக, சொந்த மண்ணில் 3 தொடர்களும், அந்நிய மண்ணில் 3 தொடர்களிலும் விளையாட வேண்டும். டெஸ்ட் லீக்கில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2021 இல் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.


இதேவேளை, ஒருநாள் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 8 தொடர்களில் விளையாட வேண்டும். இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றிருக்க வேண்டும். இதன் புள்ளிகளின் அடிப்படையில் 2023 - 2024 ம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கான அணிகள் தெரிவு செய்யப்படும்.

இந்நிலையில், பரீட்சார்த்த முறையில் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன் பகலிரவு டெஸ்ட் தொடர் நடத்தவும் ஆலோசனையும் இடம்பெற்று வருகின்றது. 


வெற்றியாளர் கிண்ணம் மற்றும் இருபதுக்கு - 20 ஓவர் உலகக்கிண்ணம் போன்ற தொடர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25742

Link to comment
Share on other sites

டெஸ்ட் சாம்பியன்ஷிப், 4 நாள் டெஸ்ட்... பரிணாமம் காணும் கிரிக்கெட்!

 
 

 

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி. கிரிக்கெட் விதிகளில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், விளையாட்டை மேலும் சீரமைக்கும் நோக்கில், சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், லீக் முறையில் ஒருநாள் போட்டிகள், நான்கு நாள் டெஸ்ட் போட்டி போன்றவற்றை அறிமுகப்படுத்த முடிவுசெய்துள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

 

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஐ.சி.சி ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்துவது, அயர்லாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக சேர்மேன் சஷாங்க் மனோகர் தலைமையில், உயர்மட்ட அதிகாரிகள் கூடி விவாதித்தனர். அதன்பிறகு ஐ.சி.சி அறிமுகப்படுத்தவுள்ள புதிய நடைமுறைகளைப் பற்றி சஷாங்க் மனோகர்  தெரிவித்தார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தை கிரிக்கெட் உலகில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. நாக்-அவுட் முறையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி வந்தது. பின்னர், டெஸ்ட் தரவரிசையில் முதலிரு இடங்களிலிருக்கும் அணிகள் டெஸ்ட் பட்டத்துக்கு மோதும் என்ற பேச்சு அடிபட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்கு முழுக்குப் போட்ட ஐ.சி.சி, அதற்குப் பதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் எடுக்கப்படாமலே இருந்தது. ஒருகட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் முழுக்குப் போட்டார்கள். டி20-யின் தாக்கத்தால், டெஸ்ட் போட்டி கலையிழக்க, பகல் - இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. வெகுகாலம் ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிவந்த அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு டெஸ்ட் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட முயற்சியாக, பழைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிளானையே தூசி தட்டியுள்ளனர்.

கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 நாடுகள் பங்கேற்கும். டெஸ்ட் அந்தஸ்து உள்ள 12 நாடுகளில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் அணிகளைத் தவிர்த்து, தரவரிசையில் முதல் 9 இடங்களில் இருக்கும் அணிகள் பங்கேற்கும். 2019 உலகக்கோப்பை முடிந்ததும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும். இதுவொரு தொடர் போல் அமையாது. 2021-ல் நடக்கும் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக மற்ற அணிகள் குறைந்தபட்சம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருக்க வேண்டும். அதில் 3 தொடர்கள் உள்நாட்டிலும், 3 தொடர்கள் அயல்நாடுகளிலும் ஆடியிருக்க வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் குறைந்தபட்சம் 2 போட்டிகளாவது இருக்க வேண்டும். இந்தப் போட்டிகளின் முடிவைப் பொறுத்து தரவரிசை அமைக்கப்படும். அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2021 ஏப்ரலில் டெஸ்ட் சாம்பியன் பட்டத்துக்கு மோதும்.

4 நாள் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆடாத சிறு அணிகளும், டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றம் காண்பதற்கு 4 நாள் டெஸ்ட் போட்டிகள் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பெரிய அணிகளுடன் இந்த அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோத வழிவகை செய்யும். தரவரிசையில் முதல் 9 அணிகளுடன் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும் அது உதவும். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டிகள் கட்டாயம் 5 நாள் போட்டிகளாகத்தான் நடக்கும்.

கிரிக்கெட்

ஒருநாள் லீக்

டெஸ்ட் போட்டிகளைப் போன்று ஒருநாள் போட்டிகளையும் லீக் அடிப்படையில் நடத்த ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இந்த லீக் அடிப்படையில் அடுத்த உலகக்கோப்பையின் பிரதான சுற்றுக்குத் தகுதிபெறும் அணிகள் முடிவு செய்யப்படும். இந்த லீக் 2020-21 சீசனில் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடக்கும். 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு 3 ஆண்டுகள் நடக்கும் லீகாக இது மாற்றப்படும். முதல் ஒருநாள் லீகில் 13 அணிகள் கலந்துகொள்ளும். ஐ.சி.சி உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் அணி 13-வது அணியாக கலந்துகொள்ளும். இந்த சமயத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 8 ஒருநாள் தொடர்களாவது ஆட வேண்டும். ஒவ்வொரு தொடரும் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட தொடராக அமையவேண்டும். 

கிரிக்கெட்

இந்த மாற்றங்கள் பதில் சொல்லுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும். ஒருநாள் லீகுக்குமான அட்டவனை விரைவில் அமைக்கப்படும் என்று ஐ.சி.சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த மாற்றங்கள் முழுமையாக சாத்தியப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில், உள்ளூரில் ஒவ்வொரு அணியும் 3 டெஸ்ட் தொடரில் விளையாடியாக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாட சம்மதம் தெரிவிக்குமா? இந்த 10 ஆண்டுகளில் அங்கு விளையாடிய ஒரே அணியான ஜிம்பாப்வே அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆடத் தகுதியில்லை. உலக லெவன் அணி விளையாடியிருந்தாலும், பிற தேசிய அணிகளின் நிலைப்பாடு இன்னும் கேள்விக்குறிதான். ஷார்ஜா, அபுதாபி போன்ற 'நியூட்ரல் வென்யூ'வில் விளையாடினாலும் கூட அங்கு இந்தியா நிச்சயம் பங்கேற்காது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவை ஐ.சி.சி-யின் தலையீடு மாற்றுமா?

 

இந்தக் கேள்விகளுக்கு ஐ.சி.சி-யின் அட்டவணை வரும்போதுதான் விடை கிடைக்கும். ஐ.பி.எல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக், பங்களாதேஷ் லீக், பாகிஸ்தான் லீக், இப்போது தென்னாப்பிரிக்க லீக் என ஒவ்வொரு டி-20 தொடரும் ஒவ்வொரு மாதத்தில் நடக்கிறது. அதனால் பல வீரர்கள் அந்தச் சமயத்தில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்கின்றனர். அப்படியிருக்கையில் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வத்தை மீட்டெடுப்பது கடினமே. 'டொமஸ்டிக் லீக்ஸ் விண்டோ'வை அறிமுகப்படுத்தி, அனைத்து டி-20 தொடர்களும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்று நிர்பந்திக்கும்போது, ஒரு வீரரால் பல அணிகளுக்கு விளையாட முடியாது. கவனிப்புக் குறையும். சர்வதேச கிரிக்கெட்டின் மீது இன்னும் வெளிச்சம் படரும். இதைச் செய்யுமா ஐ.சி.சி?

http://www.vikatan.com/news/sports/104957-icc-introducing-test-championship-and-odi-league-formats-to-improve-cricket-structure.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.