Jump to content

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு


Recommended Posts

வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு

 
வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு
 

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வட­மா­கா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இணைந்து கூட்­டாக இந்த அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.

அன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­தின் முன்­னால் கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்­டம் தொடர்­பில் 19 அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் ஒப்­ப­மிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்­துள்­ளன.

அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்பு சட்­ட ­ரீ­தி­யான விட­யம் என்­ப­தைக் கடந்­து ­விட்­டது. நியா­யத்­தின் அடிப்­ப­டை­யில் அணு­கப்­பட வேண்­டிய ஓர் விட­ய­மாக ஆகி­விட்­டது.

ஓர் அர­சி­யல் தீர்­மா­னத்­தின் ஊடா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய அடிப்­ப­டை­யான பிரச்­சி­னை­க­ளுள் ஒன்று என்ற பரி­மா­ணத்­தை­யும் அடைந்­து­விட்­டது.

12 ஆயி­ரம் முன்­னாள் விடு­த­லைப் புலி­களை, குறு­கி­ய­கா­லத் தடுப்புக்குப் பிறகு, மீள­வும் சமூ­கத்­து­டன் இணைய வழி­வகை செய்த ஓர் அரச பொறி­மு­றை­யா­னது, வெறும் 132 பேர்­களை மட்­டும் தொடர்ந்­தும் சிறை­க­ளில் அடைத்­தி­ருப்­ப­தா­னது எவ்­வித சட்ட அர்த்­த­மும் இல்­லாத செயற்­பாடு.

எமது வாக்­கு­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­கள், அர­சின் பங்­கா­ளி­க­ளா­க­ மாறி, அனைத்து விட­யங்­க­ளி­லும் அர­சுக்கு உறு­து­ணை­யாக இருக்­கின்­றார்­கள்.

நாடா­ளு­மன்­றச் செயற்­பா­டு­கள் அனைத்­தி­லும் அரசை நியா­யப்­ப­டுத்தி ஆத­ரிக்­கின்­றார்­கள்.

ஆத­ர­வுக்­கான பிர­தி­யீ­டா­கத்­தன்­னும் – உறு­தி­யான தளம்­ப­லற்ற வார்த்­தை­க­ளால் பேசி – சிறை­க­ளில் வாடும் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்க அவர்­க­ளால் முடி­யும்.

உற­வு­கள் சிறை­க­ளில் வாடி­னா­லும் பர­வா­யில்லை, தாம் அர­சைச் சங்­க­டப்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ப­தற்­கா­க­வும், அர­சு­ட­னான தமது உற­வு­கள் பாதிப்­பு­றக் கூடாது என்­ப­தற்­கா­க­வும், மென்­மை­யா­கப் பேசி எமது பிர­தி­நி­தி­கள் காலத்­தைக் கடத்தி வரு­கின்­றார்­கள்.

தமது வழக்­கு­களை மீண்­டும் தமிழ்ப் பகுதி நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்­ற ­வேண்­டும் என்ற உட­ன­டிக் கோரிக்­கை­யை­யும், அவ்­வாறு மாற்­றப்­பட்­ட­தன் பின்பு, தமது வழக்­கு­க­ளைத் துரி­த­மாக விசா­ரித்து முடிவு காண­ வேண்­டும்.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் கால­வ­ரை­ய­றை­யற்ற உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் கோரிக்­கை­களை இழுத்­த­டிப்­பின்றி உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும்.

முழுத் தமிழ் அர­சி­யற் கைதி­க­ளை­யும் ஓர் அர­சி­யற் தீர்­மா­னத்­தி­னூ­டாக விடு­விக்­கு­மாறு அரசை வலி­யு­றுத்­தி­யும், அச­மந்­தப் போக்­கைக் கைவிட்­டும் – மழுப்­பல் பதில்­களை வழங்­கா­ம­லும் – அனைத்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்­கான நேரடி அழுத்­தத்­தினை அர­சுக்கு வழங்­கு­மாறு எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­களை வற்­பு­றுத்­தி­யும் வடக்கில் முழுமையான அடைப்பை நடத்தவுள்ளோம்.

எதிர்­வ­ரும் சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ர­வி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, தாம­த­மற்­ற­தீர்வு காண­வேண்­டிய இந்த விவ­கா­ரத்­தின் தீவி­ரத் தன்­மையை உணர்த்­து­வ­தற்­கு­மாக, நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டத்தை மேற்­கொள்ள தமிழ் மக்­களை உரி­மை­யு­டன் அழைக்­கின்­றோம்.

அவ­சர மருத்­துவ சேவை­கள் தவிர்ந்த ஏனைய அனைத்­துச் செயற்­பா­டு­க­ளை­யும் முழு­ம­ன­தோடு நிறுத்தி – நியா­யத்­தோ­டும் சாவோ­டும் போரா­டு­கின்ற தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு எமது ஆத்­ம­ப­லத்­தைக் கொடுப்­போம்.

தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு நிரந்­தர விடு­தலை கிடைக்­கும்­வரை நாம் ஓய­மாட்­டோம் என்ற செய்­தியை – இந்த நாட்­டின் அர­சுக்­கும், எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், இதன் பொறுப்­பு­டைய ஒவ்­வொரு தரப்­புக்­கும் உறு­தி­யா­கத் தெரி­விக்க நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கம் முன்­பாக அணி திரள்­வோம் -­என்­றுள்­ளது.

தமிழ் மக்­கள் பேரவை, யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக ஆசி­ரி­யர் சங்­கம், இலங்கை ஆசி­ரி­யர் சங்­கம், அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு, வட­மா­காண புதிய அதி­பர் சங்­கம், யாழ்ப்­பாண பல்­க­லைக்­கழ ஊழி­யர் சங்­கம், சமூக விஞ்­ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்­பா­ளர் சங்­கம், சமூக நீதிக்­கான வெகு­சன அமைப்பு, தமிழ் மக்­கள் வாழ்­வு­ரி­மைக்­கான செயற்­பாட்டு மையம், வலி. வடக்கு மீள்­கு­டி­யேற்ற மற்­றும் புனர்­வாழ்­வுக் குழு, யாழ்ப்­பாண பொரு­ளி­ய­லா­ளர் சங்­கம், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, புதிய சன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்சி, சன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­னணி, தமிழ் சிவில் சமூக அமை­யம், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய 19 அமைப்­புக்­க­ளுமே முழு அடைப்­புப் போராட்­ட­துக்­கான அழைப்பை விடுத்­துள்­ளன.

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

 

அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்தால் மற்றும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

வடபகுதியிலுள்ள பல பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை 09:30 க்கு நடத்தப்படவுள்ளது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

தமிழ் மக்கள் பேரவை , யாழ்ப்பாணபல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ,இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம்,யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்ர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன இணைந்து இந்த அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

இந்நிலையில் யாழ் நகர் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

வடக்கு முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.பாடசாலைகள் அனைத்தும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/-Purnana-Hartal-Full-Bandh-in-jaffna

Link to comment
Share on other sites

தமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் பூரண கடையடைப்பு :

jaff-2-3.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் , போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை

http://globaltamilnews.net/archives/45025

jaff-3-3.jpgjaff-4-2.jpgjaff-5-1.jpgjaff-10.jpg

Link to comment
Share on other sites

முடங்கியது வடக்கு

 
முடங்கியது வடக்கு
 
 

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது.

அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 19 அமைப்புகள் இணைந்து அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கின.

நாளை (சனிக்கிழமை) அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் தாமதமற்றுத் தீர்வு காண வேண்டிய இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்காக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் நிலையில் இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

jaffna1-750x400.jpgjaffna2-750x400.jpg

 

திருநெல்வேலி

Thiru-750x400.jpgThiru2-750x400.jpgThiru3-750x400.jpg

 

அச்சுவேலி

achuveli-1-750x400.jpgachuveli2-750x400.jpg

 

நெல்லியடி

nellijadi1-750x400.jpgnellijadi2-750x400.jpgnellijadi3-750x400.jpg

 

மந்திகை

manthikai1-750x400.jpgmanthikai2-750x400.jpg

 

பருத்தித்துறை

point-pedro1-750x400.jpgpoint-pedro2-750x400.jpgpoint-pedro3-750x400.jpgpoint-pedro4-750x400.jpg

 

வல்வெட்டித்துறை

valvettithurai1-750x400.jpgvalvettithurai2-750x400.jpgvalvettithurai3-750x400.jpg

 

முல்லைத்தீவு

mullai1-750x400.jpgmullai2-750x400.jpgmullai3-750x400.jpgmullai4-750x400.jpg

 

தண்ணீரூற்று

Thanneruru1-750x400.jpgThanneruru2-750x400.jpgThanneruru3-750x400.jpgThanneruru4-750x400.jpgThanneruru5-750x400.jpg

http://newuthayan.com/story/36405.html

Link to comment
Share on other sites

வடக்கில் பூரண ஹர்த்தால்
 

அநுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் கோரி வடக்கு மாகாணத்தில் இன்று (13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

போக்குவரத்து சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் - எம்.றொசாந்த்

image_44e0cbd44b.jpgimage_0c7660966e.jpgimage_dfab99ccbd.jpg

கிளிநொச்சி - சுப்பிரமணியம் பாஸ்கரன்,சண்முகம் தவசீலன்

image_b1713466c7.jpgimage_9f29891781.jpg

மன்னார் -  எஸ்.றொசேரியன் லெம்பேட்

image_91efa42db6.jpgimage_000c3fafcc.jpgimage_0d71d8f4fe.jpgimage_73cb232ec1.jpg

வவுனியா - க.அகரன்

image_63402a14c9.jpgimage_b7457b97c2.jpgimage_f2450c8c27.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/வடக்கில்-பூரண-ஹர்த்தால்/46-205495

Link to comment
Share on other sites

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் : இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

 

thumb_large_jaffna.jpg

வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

 

Link to comment
Share on other sites

Quote

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 19 அமைப்புகள் இணைந்து அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கின.

தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்  தவிர்ந்த  ஏனைய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கின.

Link to comment
Share on other sites

**

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் : இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

 

 

வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

22450754_981720181979351_796932444_o.jpg

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

22450789_981720261979343_230884189_o.jpg

இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர்.

22473540_981720241979345_2014239521_o.jp

இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22522071_981730835311619_1676907319_o.jp

 

 

http://www.virakesari.lk/article/25706

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு
 
 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் கிளிநொச்சியில் நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கவனவீர்ப்பில் பங்குகொண்டனர்.

அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய அரச தலைவருக்கான மனு கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணமும் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வடக்கின் இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

22405808_862008583965388_33632623385761922449732_862008683965378_190113310841073

http://newuthayan.com/story/36521.html

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

 
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்புவெறிச்சோடியுள்ள வவுனியா நகர்ப் பகுதி
 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வவுனியாவில் தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டதை நடத்துகின்றனர்.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, அந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்துவதற்காக வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

http://newuthayan.com/story/36506.html

Link to comment
Share on other sites

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்

north.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது.

வடமாகாண ஆளூநர் அலுவலகம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் , அரசியல்வாதிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

north2.jpgnorth3.jpgnorth4.jpgnorth5.jpgnorth7.jpgnorth8.jpgnorthththth.jpg

http://globaltamilnews.net/archives/45105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலும் அரசியல் கைதிகளுக்காக  ஹர்த்தால் என்பது உண்மையா?

Link to comment
Share on other sites

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
 

image_8c40d4cd76.jpgஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்கைதிகளுக்கு ஆதரவாக, வவுனியாவிலுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று (13) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து,  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவில் மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் தொடர்ச்சியாக 233 ஆவது நாளாக தங்கள் உறவுகளை விடுதலை செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_e23a05fad2.jpgimage_6117fa8f95.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்-கைதிகளுக்கு-ஆதரவாக-உண்ணாவிரதம்/175-205515

28 minutes ago, Kadancha said:

கிழக்கிலும் அரசியல் கைதிகளுக்காக  ஹர்த்தால் என்பது உண்மையா?

ம்ம் அப்படி இதுவரை செய்தி இல்லை. இருந்தான் இணைப்பேன்.

Link to comment
Share on other sites

 

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

முல்லைத்தீவும் முடங்கியது

 

 

அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா நீதிமன்றில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றவேண்டாம் என தெரிவித்தும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் இன்று முழுமையான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

22405986_1802368969792816_16945331260719

இந்த நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கபட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் ஹர்த்தாலால் பூரணமாக முடங்கியது.

22365642_1802368983126148_64084392973778

முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.

IMG_0897.JPG

முல்லைத்தீவுநகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், மாங்குளம், மல்லாவி துணுக்காய், விசுவமடு, பாண்டியன்குளம் போன்ற பிரதேசங்களில் வணிக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது .

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அரச பேரூந்துக்களும்  போக்குவரத்து பணிகள் அனைத்தையும் நிறுத்தி ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

http://www.virakesari.lk/article/25719

Link to comment
Share on other sites

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்தவித அமைப்புகளோ அல்லது சமூக ஆவலர்களோ ஹர்த்தாலை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கிழக்கு மாகாணத்தில், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போல் நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அரச திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் போக்குவரத்து அனைத்தும் வழமைபோல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

Link to comment
Share on other sites

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண கடையடைப்பினால் கிளிநொச்சி முழுமையாக முடங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

கிழக்கிலும் அரசியல் கைதிகளுக்காக  ஹர்த்தால் என்பது உண்மையா?

கிழக்கில் இல்லை ஆனால் வெள்ளிக்கிழமையென்ர படியால் முஸ்லீம்கள் கடைகளை பூட்டினார்கள் தமிழர்கள் திறந்தார்கள்  எப்போது வட க்கு, கிழக்கு என பிரிக்கப்பட்டதோ அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தொடர்புகளை இழக்குறோம் என நினைக்கிறன் இதன் வெற்றிக்கு தமிழ் எம்பிக்கு நன்றி கூற வேண்டும்  மகிந்த காலத்தில்  பிரிக்க்கும் வேடிக்கை பார்த்ததை  இணைக்காத வரைக்கும் வெவ்வேறுதான் போல் இருக்கு இதற்கு  என்ன செய்யலாம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்  தவிர்ந்த  ஏனைய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கின.

Bild könnte enthalten: 2 Personen, Text  1.jpg.07e29169a214c01b466f788c116ada98.jpg

தமிழரசு கட்சியின் ஆதரவு இல்லாமல்.... இந்தக்  கடையப்புக்கு, அனைத்து தரப்பு  மக்களும்,
ஒத்துழைப்பு வழங்கியுள்ளதை பார்த்தால்.....
அடுத்த தேர்தலில்.... தமிழரசு கட்சிக்கு,   கட்டுக்காசும் கிடைக்காது போலுள்ளது.
சம்பந்தன், சுமந்திரன், மாவை... எல்லாரும்.... வீட்டில் இருந்து, தனித் தவில் வாசிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால்.. கடையடைப்பு எல்லாம் சிங்களவனுக்கு புரியும் பாசைன்னா.. எங்களுக்கு எப்பவோ விடிவு வந்திருக்கும்.

இப்படியான நிகழ்வுகள் தமிழ் மக்கள் ஒற்றுமையா இருக்கினம் என்பதைக் காட்ட உதவுமே தவிர.. சிங்களவனுக்கு ஒரு சொட்டு.. அழுத்தமும் கொடுக்காது.

குறைஞ்சது.. இந்த ஹர்த்தால் சமயத்தை பாவிச்சு.. யாழ் நகரை.. மாநகர சபை சுத்தமாவது செய்திருக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 
    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.