Jump to content

யாரையும் பழிவாங்கோம்;கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடுவோம்-பெசில்


Recommended Posts

யாரையும் பழிவாங்கோம்;கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடுவோம்-பெசில்

 

யாரையும் பழிவாங்கோம்;கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடுவோம்-பெசில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் செயற்படுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மேற்கொள்ளவுள்ள புதிய உத்திகள் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச இதன்போது தெளிவுபடுத்தினார்.

 “ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் எமது கட்சி செயற்படுகிறது. அதுபோக பொதுஜன ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, தேசவிமுக்தி கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கிழக்கிலுள்ள பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் எம்முடன் இணைந்துள்ளன. வடக்கிலுள்ள சில கட்சிகளுடன் நாங்கள் இணைந்து கடந்தவாரம்தான் சில செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக இருக்கின்ற கட்சிகளுடன் கலந்துரையாடி எம்முடன் இணைந்துகொள்வதற்காக அழைப்பை விடுப்போம். வடக்கிலும் நாங்கள் போட்டியிடவுள்ளோம்” என்றார்.

இதேவேளை ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களை தற்போது துன்புறுத்திவரும் எவரையும் பழிக்குப்பழி வாங்கமாட்டோம் என்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச கூறினார்.

“நாங்கள் ஆட்சிக்குவர முயற்சிப்பது யாரையும் பழிவாங்குவதற்கல்ல. விசேடமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மேற்கொள்கின்ற இடையூறுகளினால் அதிக கோபம் எங்களுக்கு ஏற்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் செய்யப்போவதில்லை. எனினும் அதனூடாக பிழை செய்கிறவர்களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என அர்த்தப்படாது. குற்றம் செய்கிறவர்களுக்கு பதில் வழங்கத்தான் வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் வேட்டையையே மேற்கொள்கின்றது. டி.பி ஏக்கநாயக்க அரசிலிருந்து விலகுவதாக கூறியதால் அவருக்கெதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றோம். எமது அரசாங்கம் வந்தாலும் அவர் இருக்கின்ற அரசியல் கட்சியின் படி தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது. அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளத்தான் வேண்டும். நாங்கள் ஆட்சிக்குவர முன்னர் லிட்ரோ கேஸ் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற பல விடயங்கள் வெளிவரலாம்” என்று தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/we-will-contest-north-also-besil-says

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.