Jump to content

ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர்


Recommended Posts

ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர்

 
ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர்
 
 

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­சின் தலை­வர் ரவூப் ஹக்­கீ­மும், தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் அண்­மை­யில் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் தெரி­வித்த கருத்­துக்­கள் இன்­றைய சூழ்­நி­லை­யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன.

‘‘தமி­ழர்­க­ளின் விருப்­பத்­துக்­குக் குறுக்கே முஸ்­லிம்­கள் நிற்­கக் கூடாது. அர­சி­யல்­வா­தி­கள் இணைப் பைத் தடுப்­ப­தி­லும் பிரிப்­பைக் கேட்­ப­தி­லும் தான் தமது காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­ப­ரா­யின், அது அவர்­க­ளின் அர­சி­யல் வங்­கு­ரோத்­தின் உச்­சக்­கட்­டம் என்றே கூற வேண்­டும்’’ இவ்­வாறு ஹக்­கீம் தெரிவித்துள்ளமை அவ­ரது தெளிந்த அர­சி­யல் ஞானத்தை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

அவர் வடக்­குக் கிழக்கு மாகா­ ணங்­களை மன­தில் கொண்டே இந்­தக் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளார் என நம்­ப­லாம்.

இணைந்­தி­ருந்த மாகா­ணங்­கள் நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூலம் பிரிக்­கப்­பட்ட பரி­தா­பம்

நாட்­டின் அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்­தின் பிர­கா­ரம் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் ஒரு நீதி­மன்­றத்­தீர்ப்­பின் மூல­மா­கப் பிரிக்­கப்பட் டன.

இந்­திய இலங்கை ஒப்­பந்­த­மும் இதன் மூல­மா­கத் தூக்­கி­யெ­ றி­யப்­பட்­டது. ஆனால் இது தொடர்­பாக இந்­திய இலங்கை அர­சு­கள் கவ­லைப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

பிரிப்­புக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வில்லை.
வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தமது பூர்­வீக இடங்­க­ளாக இன்­ற­ள­வும் தமிழ்­மக்­கள் நினைத்­துக் கொண்­டி­ருந்­கின்­ற­னர்.

இணைந்த இவ்­வி­ரண்டு மாகா­ணங்­க­ளில் அவர்­களே பெரும்­பான் மை­யி­னர் என்ற அந்­தஸ்­தை­யும் பெற்­றுள்­ள­னர்.ஆனால் இரண்டு மாகா­ணங்­க­ளும் பிரிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் அந்த நிலை மாறி விட்­டது. இதைத் தொடர்ந்து பரா­ம­ரித்து வரு­வ­தைத்­தான் கிழக்­கில் உள்ள முஸ்­லிம் மக்­கள் விரும்­பு­கின்­ற­னர். போரா­ட­வும் செய்­கின்­ற­னர்.

ஆனால் கிழக்­கில் துரி­த­மாக இடம்­பெற்று வரு­கின்ற சிங்­க­ளக்­கு­டி யேற்­றங்­க­ளால் தமி­ழ­ர்களின் காணி­ கள் மட்­டும் பறி­போ­க­வில்லை. முஸ்­லிம் மக்­க­ளின் காணி­க­ளும் பறி­போய்க் கொண்­டி­ருக்­கின்றன.

இந்த நிலை தொட­ரு­மா­னால், அந்த மக்­க­ளின் இருப்பே கேள்­விக்­கு­றி­யாக மாறி­வி­டும். இதைச் சுய­ந­லம் மிக்க சில முஸ்­லிம் அர­சி­யல் தலை­மை­கள் உணர்ந்து கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

அர­சி­ய­லில் பத­வி­க­ளைப் பெறு­வது மட்­டுமே இவர்­க­ளின் நோக்­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் இணைந்­தி­ருக்­கும் போது­தான் பெரும்­பான்­மை­யின இன­வா­தி­க­ளின் சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க முடி­யும் என்­பதை இவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.

ரவூப் ஹக்­கீம் இதை நன்கு உணர்ந்து கொண்­ட­தால் தற்­போது சரி­யான கரு­த்தைத் தெரி­வித்­துள்­ளார். இதே­வேளை கூட்­ட­ மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் தெரி­வித்த கருத்­துக்­க­ளும் இங்கு முக்­கி­யத்­து­ வம் பெறு­கின்­றன.

சம்­பந்­த­னின் கருத்து வெளிப்­பாடு சிங்­கள தலை­மைத்­து­வங்­க­ளுக்கு ஒரு எச்­ச­ரிக்கை

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் பிரி­வி­னை­யைத் தடுக்­கின்ற உறு­தி ­மொழி வழங்­கப்­பட்­டுள்­ள­தால் வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் இணை­வ­தால் நாடு பிள­வு­பட்டு விடு­மென சிங்­கள மக்­கள் அச்­ச­ம­டை­யத்­தே­வை­யில்­லை­யெ­ன­வும், உரிய தீர்வு கிடைக்­கா­து­விட்­டால் தமி­ழர்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­வி­டு­வார்­கள் என­வும் சம்­பந்­தன் கூறிய கருத்­துக்­க­ளைப் பெரும்­பான்­மை­யின அர­சி­யல் தலை­வர்­கள் சிங்கள மக்­க­ளி­டம் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.

இன­வா­தி­கள் வழக்­கம் போன்று புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டால் நாடு இரண்­டா­கப் பிள­வு­பட்­டு­வி­டும் என­வும், வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் இணைந்து விட்­டால் நாடு பிளவு படு­வ­தற்­குச் சமம் என­வும் தவ­றான பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

மக்­க­ளும் இதை நம்­பு­ கின்றனர் என்றே தெரி­கின்­றது. முன் னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­ப­டு­ வ­தைத் தடுத்தே தீரு­வேன் எனச் சூளு­ரைத்­துள்­ளமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

தமி­ழர்– முஸ்­லிம்­கள் ஒற்­று­மை­ இன்­மை­யை வாய்ப்பாகப் பயன்படுத்தும் சிங்­களத் தலை­மை­கள்

சிறு­பான்­மை­யி­னர் எனக் குறிப்பி­டப்­ப­டும்­போது தமி­ழர்­க­ளும், முஸ்­லிம்­க­ளும் அதில் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­ற­னர். பாதிப்­புக்­களை அடிக்­கடி எதிர்­கொள்­ள­ப­வர்­க­ளும் இவர்­கள்­தான்.

இவர்­கள் இரண்டு பிரி­வு­க­ளா­கப் பிள­வு­பட்டு நிற்­ப­தால் இவர்­க­ளைத் துன்­பு­ றுத்­து­வது இன­வா­தி­க­ளுக்கு எளி­தா­கப் போய்­விட்­டது. தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் ஒன்­றாக இணைந்து செயற்­ப­டு­வார்­க­ளா­யின் அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற சவால்­க­ளைச் சமா­ளிப்­பது எளி­தா­கவே இருக்­கும்.

இன­வா­தி­க­ளும் இவர்­க­ளது ஒற்­று­மை­யைக் கண்டு மிரண்டு போய்­வி­டு­வார்­கள்.
முஸ்­லிம் தலை­மை­கள் தமிழ்த் த­லை­மை­யு­டன் ஒன்­றாக அமர்ந்து மனம் விட்­டுப் பேசு­வ­தால் தமக்­கி­டையே உள்ள முரண்­பா­டு­களுக் குத் தீர்­வைக் காண முடி­யும்.

ஆற அமர இருந்து பேசும்­போது முரண்­பா­டு­க­ளுக்­கான தீர்­வும் சுல­ப­மா­கக் கிடைத்­து­வி­டும்.

இன்­றைய நிலை­யில் முஸ்­லிம் தலை­மை­கள் கூறு­பட்­டுக் கிடக்­கின்­றன. சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ ர­சுக்­குள்­ளேயே முரண்­பா­டு­கள் வலுத்து வரு­கின்­றன. அதன் தலை­மைக்கு எதி­ரா­கப் போர்க்­கொடி தூக்­கு­ப­வர்­கள் அங்கு இல்­லா­ம­லில்லை.

இதை­விட அதாவுல்லா, றிசாட் பதி­யு­தீன், பஸீர் சேரு தாவூத் ஆகி­யோ­ரும் தம்மை முஸ்­லிம் தலை­மை­களாக உரு­வ­கப்­ப­டுத்­திச் செயற்­ப­டு­கின்­ற­னர். இத­னால் தமிழ் முஸ்­லிம் தலை­வர்­க­ளின் பேச்சு இல­கு­வாக இருக்­கப் போவ­தில்லை. இழு­ப­றி­கள் ஏற்­ப­டத்­தான் செய்­யும்.

தற்­போது ஹக்­கீம் காட்­டி­யள்ள நல்­லெண்­ணச் சமிக்­ஞை­யைத் தமிழ்த் தலை­மை­கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வர வேண்­டும். கடந்­த­கால கசப்­பான அனு­ப­வங்­களை இனிப்பான­வை­யாக மாற்றிக் கொள்ள வேண்­டும்.

ஏனென்­றால் இன்று ஓர் உறு­தி­யான, தீர்க்­க­மான கட்­டத்­தில் தமி­ழர்­கள் உள்­ள­னர். வாழ்வா? சாவா? என்ற நிலை­தான் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. வாழ்­வை­யும் சாவை­யும் நிச்­ச­ யிக்­கப் போவது எமது எதிர்­கால நட­வ­டிக்­கை­கள்­தான்.

இதில் கவ­ன­மா­க­வும் உறு­தி­யா­க­வும் இருப்­ப­து­தான் வெற்­றிக்கு வழி­வ­குக்­கும். தமிழ் முஸ்­லிம் தலை­மை­கள் இதை உணர்ந்த செயற்­பட்­டால் போது
மா­னது.

http://newuthayan.com/story/36157.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.