Jump to content

..எனவே தான் பிரபாகரன் அவர்களை மாபெரும் வீரன் என்கின்றோம்


Recommended Posts

மேலே உள்ள காணொளியில் இந்திய இராணுவ அதிகாரிகள் தலைவரை பார்த்து  "உங்களுக்கு இரண்டு அழகான பிள்ளைகள் இருக்கு...அவர்களும் வாழ வேண்டும் தானே " என்ற ரீதியில் மிரட்டுகின்றனர். ஆனால் தலைவர் அதற்கு தனக்கே உரித்தான விதத்தில் உடனடியாக சிரிச்ச்சுக் கொண்டு பதில் கொடுக்கின்றார்.

எந்தவிதமான அசச்சுறுத்தல் வந்தாலும் தன் உறுதியை அவர் கைவிடவில்லை. இந்த போக்கு சரியா பிழையா என்பதுக்கு அப்பால் எதிரிகளுக்காக அவர் ஒரு போதும் தன் சுய மரியாதையை இழக்க நினைக்கவில்லை.

பேரம் பேசுதல் என்பதும் விட்டுக் கொடுப்பு என்பதும் சுயமரியாதையை இழந்த பின் அல்ல என்பதை தலைவர் உணர்ந்து இருந்தார்.  அவ்வாறே உலக நாடுகளில் உள்ள சுயமரியாதை கொண்ட தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். அதனால் தான் அவர்களால் மக்களுக்கானதை பெற்றுக் கொள்ள முடிந்தது
ஆனால் கீழே உள்ள படத்தில் இருப்பவர் எம்மை கொன்ற இரத்தம் தோய்ந்த கைகளை கொண்டவருடன் மது அருந்தி கொண்டு அளவளாவுகின்றார், எவர்களுடன் பேசி எமக்கான அரசியல் தீர்வை பெற வேண்டுமோ அவர்களுடன் மது அருந்திக் கொண்டு இருக்கின்றார். எந்த இந்திய அரசு எம் தீர்வுக்கு எதிராக இருக்கின்றதோ அவ் அரசின் அதிகாரிகளுக்கு மத்தியில் கையில் கோப்பை கொண்டு இன்புறுகின்றார்.

 

 

1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, எங்கேயோ போயிட்டார்!

நாங்கள் தான் பழைய நினைவுகளில....இன்னும் நீந்திக்கொண்டிருக்கிறோம் போல உள்ளது!

அவர் மது அருந்துவது தவறு என்று நான் கூற வரவில்லை!

ஆனால் என்னால் அவர் மது அருந்துவதை....ஜீரணிக்க முடியவில்லை!

Link to comment
Share on other sites

Just now, புங்கையூரன் said:

அவர் மது அருந்துவது தவறு என்று நான் கூற வரவில்லை!

ஆனால் என்னால் அவர் மது அருந்துவதை....ஜீரணிக்க முடியவில்லை!

அவர் தாராளமாக மது அருந்தட்டும். மது அருந்துவதும் அருந்தாமல் விடுவதும் அவர் சொந்த விடயம். ஆனால் தமிழ் மக்களின் தீர்வுக்காக பேச வேண்டிய எதிர் தரப்புடன் தண்ணி அடிச்சு கொண்டு உரையாடுவது மகா கேவலம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவர் தாராளமாக மது அருந்தட்டும். மது அருந்துவதும் அருந்தாமல் விடுவதும் அவர் சொந்த விடயம். ஆனால் தமிழ் மக்களின் தீர்வுக்காக பேச வேண்டிய எதிர் தரப்புடன் தண்ணி அடிச்சு கொண்டு உரையாடுவது மகா கேவலம்.

அதுகும்... இவ்வளளவு இழப்புக்களின் பின்னரும்....
இலங்கையின் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு,
சர்வதேசம் மூலம்  கிடைத்த  சந்தர்ப்பகளையும் பயன்படுத்த மனம் இல்லாமல்,
தாங்களும் பாராளுமன்றம் செல்கின்றோம் என்று, ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும் இவர்களை நினைக்க,
பெரும்  வேதனை தான் மிஞ்சுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு வருத்தமாக இருந்தாலும், ஐயா அவர்கள் இணக்க அரசியலுக்கு 'இலக்கணம்' வகுக்கிறாரென எண்ணுகிறேன்..!  rougir5.gif

Link to comment
Share on other sites

திலீபன் இறந்தவுடன் அச்செய்தி அமிர்தலிங்கத்திற்கு தெரியவந்தபோது அவர் காட்ஸ் விழையாடிக்கொண்டிருந்தார் ஆனால் செய்தி கேட்ட பின்பும் விழையாட்டை நிறுத்தவில்லை என்று அந்த நேரம் பலர் கதைக்கக் கேட்டிருக்கின்றறேன். அதையே சம்மந்தன் ஞாபகப்படுத்துகின்றார்.  

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தளம் இல்லை அதனால் இவர்கள் ஆட்டத்தில் இல்லை.  இவர்கள் தமிழர்களின் அரசியல் வழிநடத:துனர்கள் என்றதொரு மாயை உண்டு. அது மாயை தவிர உண்மையில்லை.

போர்க்குற்றங்களை துருப்புச் சீட்டாக கையில் எடுத்து நீதிக்கான போராட்டமாக ஒரு புதிய அரசியல் தளத்திற்கான கடசி வாய்ப்பு புலம்பெயர் தமிழர் கையில் இருந்தது ஆனல் அது நாடு கடந்த அரசு என்றதொரு வேறு  வடிவத்தில்  கடசி துருப்புச் சீட்டும் ஜோக்கர் அகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே....  கூறை ச் சீலை  கட்டி....  "சிவப்பு வைன்"   குடிக்கும் போது,
இந்தச்  சம்பந்தன்,   பட்டுச்  சால்வை போடாமல்...  "கூப்பன்"  கடையில் வாங்கிய துணியில்,
சட்டை  தைத்து  விழாவிவிற்கு, வந்திருப்பதை பார்க்க....
இங்கு.. பெண்கள்,  (schlafanzug -  sleepwear)  இரவு படுக்கப்  போகும் உடை போலுள்ளது. ஆளுக்கு... என்ன நடந்தது?

ஒரு  இனத்தின் தலைவராக.... ஒரு பார்ட்டிக்கு போகும் போது  கூட,  நாகரீமான உடையை, தெரிவு செய்ய வேண்டாமா..?
முதல்வர்  விக்கினேஸ்வரன் மாதிரி.... வேட்டி, சால்வையுடன்  போக... அப்புக்கு, வெட்கமாய்... இருக்கோ....
பிறகு..... என்ன,  "விஸ்கி"  குடிக்காவா ...  அரசியலுக்கு வந்தனியள்.

Link to comment
Share on other sites

அதிகார பகிர்வு பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் - பிரித்தானியாவிடம் சம்பந்தன்

Image may contain: 2 people, people standing and suit

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

அதிகார பகிர்வு பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் - பிரித்தானியாவிடம் சம்பந்தன்

Image may contain: 2 people, people standing and suit

சிங்கள உடையில்... சம்பந்தன்.
இவருக்கு... யாராவது.... ஒரு சால்வை, போத்தி  விடுங்களேன்.

Link to comment
Share on other sites

இந்த திரி தலைவரின் குணச்சிறப்பை பற்றி கதைக்கவா? சம்பந்தரை மட்டம் தட்டவா?தலைவர் இடத்தில் சம்பந்தரை வைத்து பார்ப்பது உங்களின் பிழையே தவிர சம்பந்தரின் பிழை இல்லை

 

ஒரு தூதரகத்தின் அழைப்பை ஏற்று போனால் அங்கு எப்படி நடக்கணுமோ அப்பிடி தான் அவர் நடந்து கொண்டிருக்கிறார் 

சம்பந்தரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கு  அவற்றை விமர்சிக்கலாம் பியர் குடிப்பதும் உடை உடுத்துவதும் தான் உண்மையில் உங்கள் கண்களை உறுத்துகிறதா?

 

Link to comment
Share on other sites

30 minutes ago, அபராஜிதன் said:

இந்த திரி தலைவரின் குணச்சிறப்பை பற்றி கதைக்கவா? சம்பந்தரை மட்டம் தட்டவா?தலைவர் இடத்தில் சம்பந்தரை வைத்து பார்ப்பது உங்களின் பிழையே தவிர சம்பந்தரின் பிழை இல்லை

 

ஒரு தூதரகத்தின் அழைப்பை ஏற்று போனால் அங்கு எப்படி நடக்கணுமோ அப்பிடி தான் அவர் நடந்து கொண்டிருக்கிறார் 

சம்பந்தரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கு  அவற்றை விமர்சிக்கலாம் பியர் குடிப்பதும் உடை உடுத்துவதும் தான் உண்மையில் உங்கள் கண்களை உறுத்துகிறதா?

 

அபராஜிதன்

நீங்கள் கேட்பதில் ஓரளவு நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. மேலே இணைக்கப்பட்ட வேறு சில படங்களுடன் எனக்கும் உடன்பாடு இல்லை.

ஆனால் உரிமைகள் எவற்றையும் தர மாட்டன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சிங்கள அரசுகளின் தலைவர்களுடன் பேசி தீர்வை பெற முயற்சிக்கும் வேளையில் இவ்வாறு அளவளாவி தண்ணி அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது நட்பு ரீதியிலான உரையாடல் என்பதற்கும்  அப்பாலானது.பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பு மற்ற தரப்பின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் போக்கையே இது காட்டுகின்றது.

இவ்வாறு பம்பல் அடிச்சு கதைச்சு போட்டு  நாளைக்கு எமக்கான உரிமைகளை தா என்று உறுதியான தொனியில் கதைக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் இனத்துக்கான தலைவர்.

சம்பந்தன் இனத்துரோகத் தலைவர்.

அவ்வளவும் தான். 

Link to comment
Share on other sites

22 hours ago, நிழலி said:

அபராஜிதன்

நீங்கள் கேட்பதில் ஓரளவு நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. மேலே இணைக்கப்பட்ட வேறு சில படங்களுடன் எனக்கும் உடன்பாடு இல்லை.

ஆனால் உரிமைகள் எவற்றையும் தர மாட்டன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் சிங்கள அரசுகளின் தலைவர்களுடன் பேசி தீர்வை பெற முயற்சிக்கும் வேளையில் இவ்வாறு அளவளாவி தண்ணி அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது நட்பு ரீதியிலான உரையாடல் என்பதற்கும்  அப்பாலானது.பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பு மற்ற தரப்பின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் போக்கையே இது காட்டுகின்றது.

இவ்வாறு பம்பல் அடிச்சு கதைச்சு போட்டு  நாளைக்கு எமக்கான உரிமைகளை தா என்று உறுதியான தொனியில் கதைக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா ?

சம்பந்தர் அரசியல் வாதி தானே தவிர எமக்காக ஆயுதம் தாங்கி போராடிய போராளி இல்லை என்பதை நாம் இலகுவாக மறந்து விடுகிறோம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து பக்காவா ஃபாலோ பண்றவர் தலைவருடன் அவரை ஒப்பிடுவதை விட கலைஞருடன் ஒப்பிட்டால் அதிக ஒற்றுமைகளை காணமுடியும் இருவருக்கிடையிலும்

தூதரக விருந்தில் சேர்ந்து தண்ணி அடிப்பதை விமர்சிக்கும் நாம் தமது மகளின் 21து பிறந்த நாளுக்கு ஜனாதிபதியை அழைத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையோ? மகள்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை  அழைத்த தமிழ் பெண் துணை அமைச்சரையோ பெரிதாக கண்டு கொள்ளாமல் விடுகிறோம் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14.10.2017 at 5:42 PM, அபராஜிதன் said:

சம்பந்தர் அரசியல் வாதி தானே தவிர எமக்காக ஆயுதம் தாங்கி போராடிய போராளி இல்லை என்பதை நாம் இலகுவாக மறந்து விடுகிறோம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதை கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து பக்காவா ஃபாலோ பண்றவர் தலைவருடன் அவரை ஒப்பிடுவதை விட கலைஞருடன் ஒப்பிட்டால் அதிக ஒற்றுமைகளை காணமுடியும் இருவருக்கிடையிலும்

தூதரக விருந்தில் சேர்ந்து தண்ணி அடிப்பதை விமர்சிக்கும் நாம் தமது மகளின் 21து பிறந்த நாளுக்கு ஜனாதிபதியை அழைத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையோ? மகள்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை  அழைத்த தமிழ் பெண் துணை அமைச்சரையோ பெரிதாக கண்டு கொள்ளாமல் விடுகிறோம் 

ஆம்! இவர் போராளியில்லைத்தான். இன்னொரு கருணாநிதியே. ஆனால் இவர் தமிழரது தற்போதைய தலைவராக(தலைவிதி) இருப்பதால், அவர்தனக்கென ஒரு வழிகாட்டலை திட்டமிட்டே செயற்படவேண்டும். உடைப்பண்பு,  உணவுப்பண்பு, உரையாடல்வெளி, கலந்துகொள்ள வேண்டி நிகழ்வுகள், அழைத்தாலும் தவிர்க்க வேண்டிய நிகழ்வுகள் என்ற ஒரு திட்டமிடல்தேவை. ஏனென்றால்; இவரொன்றும் சாதாரண இராசவரோதயம் சம்பந்தரல்ல. இவர் எதிர்க்கட்சித் தலைவர். தமிழரது  இனப்பிரச்சினையைக் கையாழும் தலைவர் என்று இரண்டு மூன்று முகங்களோடு திரிபவர்.  சில அழைப்புகளை நாகரிகமாகப் தவிர்ப்பதுகூட சில செய்திகளைச் சொல்லக்கூடியது.  உரிமையை மறுப்பவரோடு தண்ணியடித்தவிட்டு நாளை  விருந்துக்கு அழைத்த தூதுவரிடமேபோய் அவர்கள் அதை இதை செய்கிறார்களில்லையென்று சுட்டமுடிமா?  இவரது ஒவ்வொரு நகர்வும் தமிழரைத் தரைமட்டமாக்கவும்  தலைநிமிரவும்(?) கரணியமாகலாம். எனவே அவர தனக்கெனச் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுடையவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.