Jump to content

அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்


Recommended Posts

அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்

அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியிட்ட என்.பி.சி. தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசும் டிரம்ப்.படத்தின் காப்புரிமைALEX EDELMAN/AFP/GETTY IMAGES Image captionதொலைக்காட்சிக்கு எச்சரிக்கை.

அந்தச் செய்தியை "பொய்ச் செய்தி", "முழுக் கற்பனை" என்று வருணித்தார் டிரம்ப். "என்.பி.சி. மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து எல்லாம் பொய்ச் செய்தியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களது உரிமத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கு எது உகந்த நேரம்? நாட்டுக்கு கெடுதி," என்று புதன்கிழமை தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

இதே தொலைக்காட்சிதான், டிரம்ப் ஒரு மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீயத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கெனவே வெள்ளை மாளிகையின் கோபத்துக்கு இந்த ஊடகம் இலக்காகி இருந்தது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ புதன்கிழமை அமெரிக்கா வந்திருந்தார். அவரை வரவேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் பேசியபோதும் என்.பி.சி.யின் செய்தியை அவர் மறுத்தார்.

"பராமரிக்கவே விரும்புகிறேன்"

அவர் உண்மையில் அணு ஆயுதங்களின் அளவை அதிகரிக்க விரும்புகிறாரா என்று கேட்டதற்கு, "அணு ஆயுதங்களை, முழுமையாக, சிறப்பாக பராமரிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடந்துகொண்டும் இருக்கிறது.

ஆனால் இப்போது இருப்பது போல பத்து மடங்கு வேண்டும் என நான் விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருப்பது முழுக்க தேவையற்றது, என்னை நம்புங்கள்" என்று தெரிவித்தார் டிரம்ப்.

"நவீனமயமாக்க விரும்புகிறேன், அவற்றுக்கு புத்துயிரூட்ட விரும்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேட்டிசும் என்.பி.சி. செய்தியை மறுத்தார்.

பேச்சுரிமை சிக்கல்

அதே நேரம், தொலைக்காட்சிகளின் உரிமம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட கருத்து, பேச்சுரிமை தொடர்பான பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

கனடியப் பிரதமருடன் டிரம்ப்படத்தின் காப்புரிமைAFP Image captionகனடா நாட்டுப் பிரதமரை வரவேற்ற பிறகு என்.பி.சி. வெளியிட்ட அணு ஆயுத எண்ணிக்கை தொடர்பான செய்தியை மறுத்தார் டிரம்ப்.

"என்.பி.சி.யின் உரிமம் கேள்விக்குள்ளாகும் என்ற டிரம்பின் கருத்து, பிற அரசுகளுக்கும் எதேச்சதிகாரப் போக்குகளைக் கைக்கொள்வதற்கான துணிச்சலை வழங்கும்," என்று சிபிஜே என்னும் பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு டிவீட் செய்துள்ளது.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்க 'அரசாங்க அறம்' தொடர்பான அலுவலகத்துக்குத் தலைமை வகித்த வால்டர் ஷூப் என்பவர் "இது நம்நாடு ஜனநாயகமாகவே இல்லாமல் போகும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அணு ஆயுதம்?

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனில் நடந்த உயர்மட்டக்கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், 1960ம் ஆண்டு முதல் அமெரிக்கா வைத்துள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருவதைக் காட்டும் வரைபடத்தைப் பார்த்துவிட்டு அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று தெரிவித்ததாக என்.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிடம் 7,100 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7,300 அணு ஆயுதங்களும் இருப்பதாக அமெரிக்காவின் பக்கச்சார்பற்ற ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உரிமம் ரத்து செய்ய முடியுமா?

உண்மையில் தொலைக்காட்சி உரிமத்தை ரத்துசெய்யவேண்டும் என்று டிரம்ப் விரும்பினால், அவர் அதற்காகப் போராடவேண்டியிருக்கும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் என்ற அமைப்பே அமெரிக்காவில் ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகிறது.

அந்நிறுவனம் ஒரு தொலைக்காட்சிக்கென ஒட்டுமொத்தமாக உரிமம் தருவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு தொலைக்காட்சியின் தனித்தனி ஒளிபரப்பு நிலையங்களுக்கே உரிமம் வழங்குகிறது. என்.பி.சி. தொலைக்காட்சிக்கு 30 ஒளிபரப்பு நிலையங்கள் உள்ளன.

செய்தி முறையாக இல்லை என்று காரணம் காட்டி உரிமத்தை ரத்து செய்வது எளிமையில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

http://www.bbc.com/tamil/global-41591006

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.