Jump to content

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்


Recommended Posts

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்

 

நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவைர் அர்ஜென் ராபென், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்பொவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பிஃபா உலக கிண்ண போட்டிகளுக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற தவறிய நிலையிலேயே அவர் தனது ஓய்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்

உலக கிண்ண தகுதிகான் போட்டிகளில் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2 க்கு 0 என்ற குால் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அர்ஜென் இரண்டு கோல்களை அணிக்காக போட்டுக் கொடுத்தார்.

எனினும், எனினும் ஏ பிரிவுக்கான புள்ளிப்பட்டியிலில் 3 ஆம் இடத்தையே நெதர்லாந்து அணி பிடித்திருந்தமையினால், உலக கிண்ண போட்டிகளுக்கான வாய்ப்பை தவறவிட்டது.

இதனையடுத்து, அவர் தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நெதர்லாந்து அணிக்காக 14 ஆண்டு காலம் விளையாடியமை சிறப்பானதெனவும், 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியது என்றும் நினைவிலிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென்

https://news.ibctamil.com/ta/football/Arjen-retires-from-duty-after-World-Cup-failure

Link to comment
Share on other sites

சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுக்கும் ஆயன் ரொபென்

 

நெதர்லாந்து கால்பந்து அணியின் தலைவரும் பயர்ன் முனிச் கால்பந்து கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஆயன் ரொபென் (Arjen Robben) சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியின் தோல்வியின் பின்னரே அவர் தனது ஓய்வை கால்பந்து உலகிற்கு அறிவித்துள்ளார்.

 

1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி பிறந்த அயர்ன் ரொபென் தனது சிறுபராயம் முதலே கால்பந்து துறையில் சிறந்த வீரராக திகழ்ந்தார் என்பதற்கு இவர் விளையாடிய முன்னணி கழகங்கள் சான்றாக அமைகின்றன.

இரண்டு கால்களாலும் முன்களத்தில் விளையாடும் திறமை படைத்த ரொபென், கால்பந்து பயணத்தை தனது சொந்த நாடான நெதர்லாந்திலுள்ள குரோனின்ஜன் கால்பந்து கழகத்துடன் (FC Groningen) இணைந்து ஆரம்பித்தார். குரோனின்ஜன் கழகத்துடன் இணைந்த முதல் வருடமே அக்கழகத்தின் சிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தை வென்றார்.

அதனைத் தொரடர்ந்து PSV கழகத்துடன் இணைந்து செயற்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு செல்சி கால்பந்து கழகத்துடனும், அதனைத் தொடர்ந்து ரியல் மெட்ரிட் கழகத்துடனும் ஓப்பந்தம் செய்தார். அவ்வணிக்கு கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ககா (Kaka) ஆகியோரின் வருகையுடன் ரொபென் தனது பயணத்தை பயர்ன் முனிச் கழகத்துடன் இணைந்து தொடர்ந்து வருகிறார்.

கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற போர்த்துக்கல் அணியுடனான நட்புறவுப் போட்டியோன்றின் போதே ரொபென் நெதர்லாந்து அணிக்காக முதன்முதலாக விளையாடினார். தனது 19ஆம் வயதிலே நெதர்லாந்து கால்பந்து அணியுடன் இணைந்த ரொபென், இதுவரை 96 போட்டிகளில் விளையாடி தனது அணிக்காக 37 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன் 2010ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான கோலை இவரே பெற்றார். எனினும் இறுதிப் போட்டியில் பலம்மிக்க ஸ்பெய்ன் அணியிடம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்று இரண்டாவது இடத்தை நெதர்லாந்து அணி பெற்றது.

 

 

2010ஆம் ஆண்டிற்கான ”ஜேர்மனியின் கால்பந்து வீரர்” என்ற பட்டத்தையும் 2005ஆம் ஆண்டிற்கான் புராவோ (Bravo) பட்டத்தையும் வென்றுள்ள ஆயென் ரொபென் பலமுறை பேலுன் டோர் (Ballon d’or) பட்டம் மற்றும் புஸ்காஸ் (Puskas) பட்டம் என்பவற்றிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (11) சுவீடன் அணியுடன் மோதிய போட்டியில் ரொபென், அணிக்காக இரு கோல்களை பெற்ற போதும் தனது அணியால் 2018ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட முடியாது என்று உறுதியானவுடனே தனது ஓய்வை குறித்த போட்டியின் முடிவில் அறிவித்தார்.

கால்பந்து ஜாம்பவானாக கருதப்படும் ஆயன் ரொபெனின் ஓய்வானது நெதர்லாந்து அணி ரசிகர்களுக்கு மட்டுமன்றி கால்பந்து ரசிகர்களுக்கும் பாரிய இழப்பாகவே அமைகின்றது.

அண்மையில் இங்கிலாந்தின் பிரபல வீரர் ரூனியும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தமை நினைவு கூறத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.