Jump to content

சாந்தமு லேகா


Recommended Posts

சாந்தமு லேகா - சிறுகதை

 

 

“ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நடந்தது. ஹவுஸ் ஓனர் சாந்தலேகாவுக்கு 70 வயதிருக்கும். எட்டு வீடுகள் கொண்ட அந்த அபார்ட்மென்டின் முதல் தளத்தில் தனியாக வசித்தார். மஞ்சளில் குளித்த மேனி. நெற்றியில் விபூதி, சந்தன, செந்தூர, குங்குமக் கலவை. ஆனால், எல்லாமே அப்பிக்கொள்ளாமல் அளவாக, அழகாக சிறு தீற்றல்களாகத் துலங்கின. பழைய காலத்து சுங்குடிப் புடவையில் இந்த வயதிலும் ஜொலிப்பாக இருந்தார். ‘இவளால நம்பவே முடியலியாம்மா!’ சௌந்தர் சாந்தலேகாவிடம் சொன்னான். கூச்சத்துடன் சௌந்தரின் கையைப் பிடித்து ஷைலஜா கிள்ளியதைப் பார்த்த சாந்தலேகா, ‘எதை நம்ப முடியலியாம்?’ என்றார். ‘இல்ல. நீங்க வெஜிட்டேரியன். ஆனா நான் - வெஜிடேரியன்ஸ்க்கு வீடு குடுக்கறீங்க. தாராளமா நாய் வளத்துக்கலாம்னு சொல்றீங்க. என்னை மாதிரி சினிமால இருக்கிறவங்களுக்கும் யோசிக்காம சாவியைத் தூக்கிக் குடுத்துட்டீங்க. இதெல்லாம்தான் இவளால நம்ப முடியல. என்னாலயும்தான்’.

`‘தம்பி! அடுத்த மனுஷாளுக்குத் தொந்தரவில்லாம யாரும் எதுவும் செய்யலாம். இதைத் தவிர நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.’’

112p1.jpg

சாந்தலேகாவுக்கு வாழ்க்கை குறித்த தெளிவான பார்வை இருந்தது. சக மனிதர்கள் அனைவரிடமும் அன்பு காட்டினார். தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் அனைவரையும் உறவினர்கள் போலவே பாசாங்கில்லாமல் நடத்தினார். தன் ஒரே மகள் ஹைதராபாத்துக்கு வந்துவிடச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் சாந்தலேகா மறுத்துவிட்டார். செக்யூரிட்டி மூர்த்திக்கும், அவரது குடும்பத்துக்கும் கார் பார்க்கிங் ஏரியாவை ஒட்டி ஒரு சிறு அவுட் ஹவுஸ் கட்டிக்கொடுத்திருக்கிறார். சாந்தலேகாவுக்கு மூர்த்தி ஒரு மகன்தான். கொஞ்சம்கூட ஆடம்பரமேயில்லாமல் எளிமையாக வாழும் சாந்தலேகாவின் ஃபிளாட்டில் ஒரு புகைப்படம் கூட இருக்காது. பூஜையறையில்கூட அத்தனை அலங்காரங்கள் இல்லை. ராமரின் பட்டாபிஷேகத்தைக் குறிக்கும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் விக்கிரகங்களுடன் ஒரு தம்பூரா இருக்கும். அவ்வளவுதான்.  இவையெல்லாம் சௌந்தரும் ஷைலஜாவும் அங்கு குடிவந்ததும் தெரிந்துகொண்ட விஷயங்கள்.

சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸில் குடியேறிய பிறகு சௌந்தருக்கும் ஷைலஜாவுக்கும் எல்லா விதத்திலும் நிறைவாக இருந்தது. ‘`எனக்கென்னவோ இந்த வீட்டுக்கு வந்த நேரம் உங்க படம் ஸ்டார்ட் ஆயிரும்னு தோணுது’’ என்றாள், ஷைலஜா. சௌந்தர் இயக்கிய முதல் படம் சுமாராகத்தான் போனது. இரண்டாம் படத்துக்கான முனைப்புகளில் இருக்கிறான். காதல் திருமணம் செய்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. இல்லையென்றால் பெற்றுக்கொள்ளவில்லை. வாழ்வில் வெற்றியை ருசித்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியம் சௌந்தருக்கு. ஷைலஜாவுக்கும் அதில் சம்மதமே. இருவருமே நாய் வளர்ப்பதில் பிரியம் உள்ளவர்கள். பைரவை யாரும் நாய் என்று சொல்வதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் பைரவ், அவர்களின் மகன். ஒன்றரை வயதில் வாட்டசாட்டமாக வளர்ந்து நிற்கும் லாபரடார் வகை நாய். ஷைலஜாவையும்விட பைரவ் சாந்தலேகாவுக்கு நெருக்கமாகிப்போனான். ‘`நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியே போறதா இருந்தா, பைரவை இங்கே விட்டுட்டுப் போங்கம்மா. நான் தனியாத்தானே இருக்கேன். பாத்துக்கறேன்’’ என்றார் சாந்தலேகா.
குடியிருக்கும் குடும்பங்களில் யார் வீட்டில் என்ன சண்டை சச்சரவென்றாலும் யாருக்கும் வலிக்காத வண்ணம் பேசி சமாதானம் செய்து வைப்பார், சாந்தலேகா. தினமும் சௌந்தரிடம் புதிது புதிதாக சாந்தலேகாவைப் பற்றிய ஆச்சர்யங்களைச் சொல்வாள், ஷைலஜா. ‘சொன்னா நம்ப மாட்டீங்க. எட்டு வீட்டுலயும் யார் எங்கே போனாலும் அவங்க குழந்தைங்கள ஹவுஸ் ஓனர் ஆன்ட்டிகிட்டதான் விட்டுட்டுப் போறாங்க. அது பரவாயில்ல. அந்தக் கன்னியாகுமரி ஃபேமிலி ஏதோ டெத்துன்னு ஊருக்குக் கெளம்பிட்டாங்க. அவங்க வீட்டு ‘ஸ்நூஃபி’யை ஆன்ட்டிதான் பாத்துக்கறாங்க. நேத்து பருப்புப்பொடி குடுக்கறதுக்காக அவங்க ஃபிளாட்டுக்குப் போனா, ‘ஸ்நூஃபி’ அவங்ககூட சோஃபால உக்காந்து ‘பிக்பாஸ்’ பாத்துக்கிட்டிருக்கு.’

112p2.jpg

சினிமாவில் இருப்பதால் சௌந்தருக்கு சாந்தலேகா ஒரு முன்னாள் நடிகை என்பது தெரியும். மிகக் குறைவான படங்கள் நடித்திருப்பவர் என்பதும், அவர் கணவர் ஒரு காலத்தில் தெலுங்குப் படவுலகில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் என்பதையும் ஒரு தகவலாக ஷைலஜாவிடம் சொல்லி வைத்தான்.

‘`டிரெட்மில் வாங்குற ஐடியாவை விட்டுருங்க. நான் ஹவுஸ் ஓனரம்மா கூட டெய்லி மொட்டை மாடில வாக்கிங் போறேன். கூட பைரவும் வந்து நடக்கறான். `ஒரு கல்யாண வீட்டு விருந்தையே ஷாமியானா போட்டு இந்த மொட்டை மாடில நடத்திடலாம். இதுல நடக்கறதை விட்டுட்டு உனக்கெதுக்கு டிரெட்மில்? நாலு நாளைக்கப்புறம் எப்படியும் அதுல துணிதான் காயப் போடப் போறே’ன்னு சத்தம் போட்டுட்டாங்க’’ என்றாள் ஷைலஜா.

வாக்கிங்கின்போது சாந்தலேகா மெல்லிய குரலில் பாடுவார். சில சமயங்களில் ஷைலஜா நடக்கும்போது, வாட்டர் டாங்குக்குக் கீழ் நிழலாக உள்ள கல்பெஞ்சின் மேல் அமர்ந்து கண்களை மூடிப் பாடுவார். அவரது காலடியில் படுத்துக் கிடப்பான் பைரவ். ‘நீங்க பாடினதுல பைரவே சொக்கிட்டான் ஆன்ட்டி’ ஷைலஜா சிரித்தபடி வேர்வையைத் துடைத்துக் கொண்டு அவரருகே உட்கார்ந்தாள்.

‘ஆன்ட்டி! நான் உங்களை ஒண்ணு கேக்கலாமா?’A7.jpg

‘கேளும்மா! நேரே கேக்க வேண்டியதுதானே? எதுக்கு பெர்மிஷன்?’

‘இல்ல. உங்க வீட்ல உங்க குணத்தைப் பாத்துட்டு சாந்தலேகான்னு பேர் வச்சாங்களா? இல்ல இந்தப் பேர் வச்சதுனால நீங்க இவ்வளவு சாந்தமா இருக்கீங்களா?’

கொஞ்சமும் புன்னகை மாறாத முகத்துடன் சாந்தலேகா சொல்ல ஆரம்பித்தார்.

 ‘`எங்க அப்பா அம்மா எனக்கு வச்ச பேரு  பாலம்மா. அது எங்க பாட்டி பேரு. அப்ப நான் தியாகராஜ ஸ்வாமியோட தெலுங்குக் கீர்த்தனை ‘சாந்தமு லேகா’ ரொம்ப நல்லா பாடுவேன். அப்பா பாட்டு வாத்தியார். அவர்கிட்ட பாட்டு சொல்லிக்க வந்தவர்தான் என் வீட்டுக்காரர். அப்ப யாருக்கும் தெரியாம என்னை சாந்தலேகான்னு கூப்பிடுவார்’ சாந்தலேகா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சடசடவென மழை கொட்டத் தொடங்கியதால் அன்றைக்குப் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அதில் ஷைலஜாவுக்கு அத்தனை வருத்தம். ‘அன்னைக்கு ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி நல்ல மூடுல இருந்தாங்க. இன்னும் என்னென்னவோ சொல்லியிருப்பாங்க. மழை வந்து கெடுத்திருச்சு’’ சலிப்புடன் சொன்னாள் ஷைலஜா.

112p3.jpg

‘`நீங்க ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி ஒரு நடிகைன்னுதானே சொன்னீங்க? ஆனா அவங்க பாடுவேன்னு சொல்றாங்க!’’ சௌந்தரிடம் கேட்டாள் ஷைலஜா. ‘`அவங்க நடிகைதான். கொஞ்ச படங்கள் பண்ணிட்டு அப்புறமா அந்த மியூஸிக் டைரக்டரைக் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்க யாரா இருந்தா என்ன? நமக்கு அவங்க ஹவுஸ் ஓனர். நம்மகிட்ட பிரியமா இருக்காங்க. அவ்வளவுதான் நமக்கு வேணும். ஒரு வாரம் நான் வெளியூர் போறேன் தெரியும்ல! அவங்க இருக்கிற தைரியத்துலதான் கிளம்பறேன். அதுக்காக நீ அவங்களை சும்மா சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்காதே!’’ என்றான் சௌந்தர்.

சௌந்தர் கிளம்பிப் போன இரண்டாவது நாள் ஷைலஜா கடும் ஜுரம் வந்து நடக்க முடியாமல் படுத்துவிட்டாள். சாந்தலேகாதான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார். காரில் அவரும் கூடவே வந்து டாக்டரிடம் காண்பித்தார். வேளாவேளைக்கு மருந்து, மாத்திரை சாப்பிட உதவினார். ‘உன் வீட்டுக்காரர் ஏதோ வேலையா வெளியூர்ல இருக்கார். அவர் போன் பண்ணும்போது உனக்கு உடம்பு சரியில்லேன்னு சொல்லாதே. பாவம் அவர் மனசு கஷ்டப்படும்’ என்றார். மூன்று நாள்களில் ஷைலஜாவால் ஓரளவு எழுந்து நடமாட முடிந்தது. நான்காவது நாளன்று திடீரென்று மதியம் 12 மணிவாக்கில் பவர் கட் ஆனது. சாந்தலேகா  ஃபிளாட்டின் கதவைத் தட்டினாள். நீண்ட நேரத்துக்குப் பின் வந்து கதவைத் திறந்த சாந்தலேகாவின் முகத்தில் அத்தனை எரிச்சல் தெரிந்தது. உரத்த குரலில் ‘`என்ன?’’ என்றார். ஷைலஜாவால் அந்தக் கேள்வியை கண் கொண்டு வாங்க இயலவில்லை. `‘என்ன? சொல்லித்தொலை’’ என்றார் சாந்தலேகா. இப்போது முகத்தில் அத்தனை வெறுப்பு. அதிர்ச்சியில் வாய் திறந்து பேச இயலாத ஷைலஜாவின் முகத்தில் அறைந்தாற்போல கதவை ஓங்கிச் சாத்திக் கொண்டார் சாந்தலேகா. படிக்கட்டில் கண்களைத் துடைத்தபடி கீழ்த் தளத்துக்கு வந்து செக்யூரிட்டி மூர்த்தியிடம், ‘`பவர் இல்லீங்க. என்னாச்சு?’’ என்றாள் ஷைலஜா. ‘`கரன்ட் பாக்ஸ்ல எல்லாத்தையும் புதுசா மாத்தணும். பீஸைப் புடுங்கிப் போடுன்னு அம்மா சொல்லிட்டாங்கம்மா’’ என்றார் மூர்த்தி.

`‘ஏங்க? எங்ககிட்ட இன்வெர்ட்டர்கூட இல்லீங்க! சீக்கிரமா போட்டு விடுங்க!’’

‘`இன்ஜினீயர் சம்சாரம் இப்பதான் கத்திட்டுப் போகுது. என்னால ஒண்ணும் செய்ய முடியாதும்மா. என்னாச்சுன்னே தெரியல. மத்தியானத்திலிருந்தே அம்மாக்கிட்ட முகம் குடுத்துப் பேச முடியல’’ என்றார் மூர்த்தி.

112p4.jpg

அதற்கு மேல் ஷைலஜாவுக்கு ஒன்றும் சொல்லவோ, கேட்கவோ தோன்றவில்லை. அன்றைய நாள் முழுதும் மின்சாரம் இல்லாமல் இரவு வந்தது. சௌந்தர் போன் பண்ணியபோது இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று குழம்பியவாறே ஏதேதோ பேசினாள். கடைசியில் சௌந்தரே கேட்டான். ‘`ஆன்ட்டி எப்படி இருக்காங்க? நீ அவங்க வீட்லதான் இருக்கியா?’’

அதற்கு மேல் ஷைலஜாவால் பொறுக்க முடியவில்லை. மதியம் நடந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்தாள். அழுகை கலந்த குரலுடன், ‘`என் மூஞ்சிக்கு நேரா அவ்வளவு கோபத்தைக் காட்டினாங்க, சௌந்தர். டப்புன்னு கதவைச் சாத்திட்டாங்க. இனிமேல் அந்தப் பொம்பள மூஞ்சில நான் முழிக்கப்போறதில்ல. தேதி ஒண்ணானா வாடகை குடுக்கப்போறோம். ஒரு ஹவுஸ் ஓனர், டெனன்ட்டைத் தாண்டி நமக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு? முடிஞ்சா நீ வந்த உடனே வேற வீடு பாத்துரலாம். நமக்கென்ன வேற வீடா இல்ல? கொஞ்சமாவது ஒரு இது வேண்டாம்! நாம என்ன அவங்ககிட்ட கடனா வாங்கியிருக்கோம்! என்னமோ அவங்க வீட்டுச் சொத்தை எடுத்துட்ட மாதிரி இப்படி அவமானப்படுத்தினா என்ன அர்த்தம்? நான் உனக்காகத்தான் பாக்கறேன். இல்லேன்னா இப்பவே போயி அந்தக் கிழவியைக் கிழிச்சுத் தொங்க விட்டிருவேன்.’’

இடையில் எங்கும் குறுக்கே பேசிவிடாமல் ஷைலஜா பொங்கிவழியும் வரைக்கும் பொறுமையாக அவள் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு சௌந்தர் சொன்னான்.

‘`இன்னிக்குத் தெலுங்கு சானல்ல அந்தம்மா நடிச்ச படம் வந்தது. அதுல ரொம்ப கிளாமரா நடிச்சிருந்தாங்க. அந்தக் காலத்துல தெலுங்குல ரொம்ப ஹிட் படம். இவங்களோட கிளாமருக்காகவே ஓடியிருக்கு. நீ ஒண்ணும் கேட்டுக்காதே. காலைல சரியாயிருவாங்க. படுத்துத் தூங்கு.’’

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.