Jump to content

பிரித்தானியர்களின் கடவுளாக ஒரு தமிழன்; எத்தனை பேருக்கு இவரைத் தெரியும்?


Recommended Posts

பிரித்தானியர்களின் கடவுளாக ஒரு தமிழன்; எத்தனை பேருக்கு இவரைத் தெரியும்?

 

பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் தமிழ் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்து எழுதியுள்ளது.

பல உயிர்களை காத்த கடவுள் எனவும் குறித்த நாளிதழ் அவரைக் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளதால் இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது.

பிரித்தானியர்களின் கடவுளாக ஒரு  தமிழன்; எத்தனை பேருக்கு இவரைத் தெரியும்?

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானிய நாட்டில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலர் குணசேகரன் குமாரின் அர்ப்பணிப்பு மிக்க வைத்தியத்தால் மீண்டுள்ளனர்.

Veronica Johnson had a pelvis operation under Dr Gunasekaran Kumar and is able to walk again

வேல்ஸ் பகுதியில் நிறைமாதக் கர்பிணியாக இருந்த தாய் ஒருவர், தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது பெரும் விபத்தில் சிக்கியுள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அங்கே பணியில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்துள்ளார்.

குறித்த பச்சிளம் சிசுவுக்கும் அந்த நேரத்தில் மார்பில் ஒரு பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்த குணசேகரன் குறித்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தார். அத்துடன் தொடர்ந்து 7 மணி நேர அறுவை சிகிச்சையின் பின்னர் சிசுவையும் தாயாரையும் காப்பாறியுள்ளார்.

Chanel Murrish was born with a one in three million mix of heart conditions

சம்பவத்துடன் தொடர்புடைய ’வெறோனிக்கா ஜோன்ஸன்’ என்னும் குறித்த குணசேகரன் பற்றி முகுந்த பெருமையோடு கூறியுள்ளார். “என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன், அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர். நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்ப்பணித்தாலும், அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டும் ஆபத்தான வீதி வளைவொன்றில் மிக மோசமான விபத்தில் சிக்கிய உந்துருளி ஓட்டுநர் ஒருவரும் குணசேகரனால் கஸ்டப்பட்டுக் காப்பாற்றப்பட்டார்.

குறித்த நபர் விபத்தில் விலா எலும்புகள் நொருங்கி கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையிலேயே குணசேகரனின் மருத்துவ திறமையினால் உயிர் பிழைத்தார்.

ஆனால் மருத்துவர் குணசேகரன் மிகவும் எளிமையான ஒரு மருத்துவர் என்பதுடன், அவர் பல முது கலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/A-Tamil-as-the-god-of-the-British

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியரின் கடவுளாக ஒரு தமிழன்....!

எப்படியப்பா...இப்படித் தலையங்கம் எழுத ஐடியாக்கள் எடுக்கிறாங்களோ தெரியாது!

குணசேகரன் ஒரு நல்ல மருத்துவர்....என்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி!

இப்படியான தலையங்கங்களை அவர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்றே நினைகின்றேன்!

மருத்துவருக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

பிரித்தானியரின் கடவுளாக ஒரு தமிழன்....!

எப்படியப்பா...இப்படித் தலையங்கம் எழுத ஐடியாக்கள் எடுக்கிறாங்களோ தெரியாது!

குணசேகரன் ஒரு நல்ல மருத்துவர்....என்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி!

இப்படியான தலையங்கங்களை அவர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்றே நினைகின்றேன்!

மருத்துவருக்கு வாழ்த்துக்கள்!

இப்ப விளங்குது எங்களுக்கு எப்படி ஆயிரத்தெட்டு கடவுள் வந்தவையள் என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புங்கையூரன் said:

பிரித்தானியரின் கடவுளாக ஒரு தமிழன்....!

எப்படியப்பா...இப்படித் தலையங்கம் எழுத ஐடியாக்கள் எடுக்கிறாங்களோ தெரியாது!

குணசேகரன் ஒரு நல்ல மருத்துவர்....என்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி!

இப்படியான தலையங்கங்களை அவர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்றே நினைகின்றேன்!

மருத்துவருக்கு வாழ்த்துக்கள்!

இதுதான் அந்த மூல செய்தி https://www.thesun.co.uk/news/4656290/baby-heart-conditions-heart-operation-at-just-one-minute-old/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இதுதான் அந்த மூல செய்தி https://www.thesun.co.uk/news/4656290/baby-heart-conditions-heart-operation-at-just-one-minute-old/

மிக்க நன்றி....பெருமாள்!

இப்படி ஏதாவது 'முழி பெயர்த்திருப்பார்கள்' என்று நான் நினைத்திருந்தேன்!

உங்கள் ஆதாரம் ...அதை உறுதிப்படுத்தியுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்ஸ்சே இல்லை. மெகா சொதப்பல். முழி பெயர்த்தவரை முதல்லை அட்மிட்பண்ணுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்க எல்லாம் பிரித்தானியர்களின் கடவுளுக்கே கடவுளப்பா. 

முடியல்ல.

பல மில்லியன் பேருக்கு சிகிச்சை அளிக்கும் பிரித்தானிய தேசிய மருத்துவ சேவையில்.. இவரின் சேவையும் பாராட்டும் படி உள்ளது. அவர் தன்ர கடமையைச் செய்கிறார்.

அவ்வளவும் தான்.

எங்கடை ஆக்களுக்கு மருத்துவத்தில் அப்படி ஒரு கவர்ச்சி. 

ஆனால்.. அங்க பார்த்தாலோ ஒழுங்கா.. வருடாந்த மருத்துவப் பரிசோதனைகளையே செய்வதில்லை. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுலகம் பெருமைப்பட வேண்டிய செய்தி இது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களூம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மருத்துவருக்கு வாழ்த்துக்கள்.....!

ஆயிரம் மருத்துவர்கள் இருந்தாலும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் சிலரே,அவர்களில் இவரும் ஒருவர்.அதிலும் அவர் ஒரு தமிழராய் இருப்பதால் சிறிது கூடுதலாக சந்தோசப் படலாம்.....!இவரது திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் விபத்துகளை ஏற்படுத்தியவர்கள் விபரம் தெரியவில்லை.அவர்கள் மண்ணடி வேர்களாக ....அவர்களையும் பாராட்டுவோம்......! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.