Jump to content

ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க... சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!


Recommended Posts

ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க...  சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

ஐந்து நாள் பரோல் முடிவடைந்த நிலையில், சென்னை தி.நகரிலிருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா.

சசிகலா
 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடராசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4-ம் தேதி உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நடராசனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா விண்ணப்பித்திருந்தார். தீவிர பரிசீலனைக்குப் பின்னர், சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை  ஐந்து நாள் மட்டுமே பரோல் வழங்கியது. கடந்த 6-ம் தேதி,  பெங்களூரிலிருந்து சென்னை வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கினார். மருத்துவமனைக்குச் சென்று நடராசனைப் பார்த்துவந்தார்.

பரோல் முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்னை தி.நகரில் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார். சசிகலாவைப் பார்க்க அவரது ஆதரவாளர்கள் தி.நகர் இல்லத்தில் குவிந்தனர்.  தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்துப் பேசினர். பின்னர், கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104778-sasikala-leaves-for-bengalurus-central-prison.html

Link to comment
Share on other sites

‘சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா சொன்ன கடைசி வார்த்தை!’ - அதிருப்தியில் ஆதரவாளர்கள் #VikatanExclusive

 

sasikala1012_13507.jpg

Chennai: 

சிறைக்குச் செல்லும் முன் தினகரனிடம் சசிகலா, உணர்ச்சிபொங்க சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். குடும்ப விவகாரங்களிலும் அரசியல் தலையீடுகளிலும் 'அமைதியாக இரு' என்று சொல்லியதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திக்க பரோலில் சென்னை வந்தார். ஐந்து நாள்கள் பரோல் முடிந்து, இன்று  சென்னையிலிருந்து பெங்களூரு செல்கிறார். சென்னையில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்த சசிகலா, நடராசன் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, அவரிடம் நலம் விசாரித்தார். கடும் நிபந்தனைகளின் பேரில் பரோல் வழங்கப்பட்டதால், சசிகலா ஐந்து நாள்கள் பரோலை அமைதியாகவே நிறைவுசெய்துள்ளார். 

sasikala1012a_13373.jpg


உறவினர்களைத் தவிர வேறு யாரையும் சசிகலா சந்திக்கவில்லை. வீட்டுக்குள் தனியறையில் முடங்கிய சசிகலா, குடும்ப விவகாரங்களில் நீண்டகாலமாக நிலவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிவகைசெய்துள்ளார். குறிப்பாக திவாகரன், தினகரன் இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, இரு தரப்பினரிடமும் பேசினார். ஆனால், சசிகலா எதிர்பார்த்த முடிவுகள் எடுக்கப்படவில்லை. இது, சசிகலாவுக்குக் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் நடந்த உரையாடல் விவரம், ஜெயானந்த் மூலம் அவருடைய தந்தை திவாகரனுக்கு லைவ் ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திவாகரன், சில ஆலோசனைகளை ஜெயானந்துக்குக் கொடுத்துள்ளார். இதற்கிடையில், இளவரசியின் மகன் விவேக்கிற்கும் ஜெயானந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பஞ்சாயத்து சசிகலாவுக்குத் தெரியவந்ததும், இரு தரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சசிகலா. குடும்ப விவகாரங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிட்ட சசிகலா, அரசியல்குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கவில்லை என்று உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றன. சசிகலாவின் வருகையால், அ.தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், எதுவுமே நடக்காததால், ஒட்டுமொத்த ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

தினகரன்

 
இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "பரோலில் சசிகலா வெளியில் வருவதால், அ.தி.மு.க-வில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது, எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்திலுள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய சசிகலா, அ.தி.மு.க நிலவரங்கள் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. இதனால், அவரை நம்பியிருந்த நாங்கள் நிற்கதியாக நிற்கிறோம். ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பினரால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். 
தகுதிநீக்கம் செய்யப்பட்ட, தினகரன் ஆதரவாளரான பூந்தமல்லி எம்.எல்.ஏ வீட்டைச் சூறையாடியவர்கள், ஏழுமலையைப் பகிரங்கமாகத் தாக்கியுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. சசிகலா வந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று தினகரன் தரப்பிலிருந்து எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால், பரோலில் வந்த சசிகலா, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்கு நாள் சசிகலா, தினகரனை ஆதரித்தவர்கள், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகளுக்குத் தாவிவருகின்றனர். இதனால், சசிகலா அணி பலவீனமடைந்துவருகிறது" என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

 சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஏற்கெனவே சசிகலா, தினகரனைக் கடுமையாக விமர்சித்தவர்கள், சசிகலாவால் சிக்கல் வருமோ என்ற பீதியிலிருந்தனர். ஆனால், சசிகலாவிடமிருந்து எந்தவித பதிலடியும் இல்லாததால், உற்சாகமடைந்துள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், சில நாள்கள் இடைவெளிக்குப்பிறகு தினகரன்மீது நேற்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது, தினகரனை வம்புக்கு இழுக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்யும் தந்திரமாகவே கருதப்படுகிறது. முன்பெல்லாம் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் விமர்சித்தால் அன்றைய தினமே பதிலடி கொடுப்பார் தினகரன். தற்போது, அவரது செயல்பாட்டில் சில மாற்றங்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். விமர்சனங்களுக்கு, பெயரளவுக்கு மட்டுமே தினகரன் பதிலளிக்கிறார். அவரது நடவடிக்கைளை உற்றுநோக்கிய ஆதரவாளர்களில் பலர் அணிமாறும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

 

சசிகலா, சென்னையில் தங்கியிருந்ததால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி, ஊட்டி என்றே முகாமிட்டிருந்தார். ஆனால், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார். சசிகலா, பெங்களூரு புறப்படுவதற்கு முன்பே, பன்னீர்செல்வம் டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார். சசிகலாவின் நிழல்கூட தன்மீது படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்கின்றனர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அன்றாட அலுவல்களை வழக்கம்போல மேற்கொண்டனர். அவ்வப்போது, சசிகலாவின் மூவ்மென்ட்களை உளவுத்துறைமூலம் எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிந்துகொண்டனர். உளவுத்துறை சார்பில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அரசுக்கு எதிராக எந்தவித முயற்சிகளையும் சசிகலா மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி அணியினர் உத்வேகத்துடன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பிரச்னை, அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதால், அதில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

http://www.vikatan.com/news/tamilnadu/104789-last-word-sasikala-told-dinakaran-before-going-to-jail.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.