Jump to content

சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி!

 

 

p42b.jpg‘‘சி.சி.டி.வி கேமரா வந்த பிறகு யாரும் தப்ப முடியாது போலிருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டோம்.

‘‘சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க மத்திய, மாநில உளவுத்துறை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போதாது என்று ஏழு இடங்களில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளதாம் மாநில உளவுத்துறை.’’

‘‘சசிகலாவை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள்?’’ 

‘‘மன்னார்குடி உறவுகள், நெருங்கிய சொந்தங்கள், தூரத்துச் சொந்தங்கள் எனப் பலரும் சந்தித்துவிட்டனர். டாக்டர் சிவக்குமார், அனுராதா, திவாகரனின் மகள் ராஜமாதங்கி போன்றவர்கள் தினமும் வந்து சந்தித்துவிட்டுப் போகின்றனர். கட்சிக்காரர்கள் யாரும் நேரடியாகச் சந்திக்கவில்லை. ஆனால், ‘தங்களுடைய ஆதரவு சசிகலாவுக்குத்தான்’ என்று தெரிவிப்பதைப்போல, பெங்களூரிலிருந்து சென்னைக்கு சசிகலா வந்த வழியில், ஆங்காங்கே பலர் ஆஜர் போட்டனர். தங்களது பெயர்களை பூங்குன்றன் லிஸ்ட்டில் பதியவைத்துவிட்டனர்.’’

‘‘அது என்ன பூங்குன்றன் லிஸ்ட்?’’ 

‘‘ஜெயலலிதா இறந்தபிறகு மாயமாகிவிட்ட பூங்குன்றன், இப்போது போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவதைக்கூட நிறுத்திவிட்டார். நீண்ட நாள்கள் கழித்து, சசிகலா வந்தபோதுதான் அவரைப் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா இருந்தபோது, கூட்டத்துக்கு வருபவர்களை லிஸ்ட் எடுப்பதுபோல, அன்றும் லிஸ்ட் எடுத்தார். அந்த லிஸ்ட்டில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்குக் கட்சியினர் மத்தியில் பலத்த போட்டி இருந்ததாம்.’’

‘‘வீட்டில் சசிகலாவுக்கு எப்படிப் பொழுதுபோகிறது?’’

p42d.jpg

‘‘சிறைக்குள் இருந்தபோது, இங்கு நடந்த செய்திகளை மற்றவர்கள் சொல்லித்தான் அவர் கேட்டிருந்தார். அந்தக் குறையைப் போக்க நினைத்த உறவுகள், ஒரு வீடியோவைத் தயார்செய்து வைத்திருந்தனர். அதைத்தான் சசிகலா இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறார். சசிகலா சிறைக்குச் சென்றபிறகு அவருக்கு எதிராகவும், அவரின் குடும்பத்துக்கு எதிராகவும் அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பொதுக்கூட்டங்களில் பேசியவை, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  தொலைக்காட்சிகளுக்குக் கொடுத்த பேட்டி, தீபா கொடுத்த பேட்டிகள் போன்றவற்றின் தொகுப்புதான் அது. இதைப் பார்த்து சசிகலா கொதித்துப் போயிருக்கிறார். அந்தக் கொதிப்பைத் தாண்டி, சசிகலாவைச் சிரிக்கவைத்த காட்சிகளும் அதில் இருந்தன. குறிப்பாக, அதில் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடியின் தொகுதிப் பெயரைச் சொல்ல முடியாமல் திணறியதைப் பார்த்துச் சிரித்த சசிகலா, ‘இவர்களின் லட்சணம் தெரிந்துதான் அக்கா இவர்களை வாயைத் திறக்கவே விடவில்லை’ என்று வெறுப்பாகச் சொன்னாராம்.’’

‘‘எடப்பாடி பற்றி சசிகலா ஏதாவது சொன்னாரா?’’

‘‘கடும் விரக்தியான குரலில், ‘நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். ஆனால், நிலைமை மாறினால் அவரே நம்மிடம் வந்து, ‘டெல்லி பிரஷர். அதனால், அப்படிச் செய்ய வேண்டியதாயிற்று’ என்று புலம்பி சரண்டர் ஆவார். அந்தக் காலம் வெகுதொலைவில் இல்லை’ என்றாராம். சசிகலா சென்னை வந்ததும், அங்கிருந்த சசிகலாவின் உறவினர் ஒருவரின் போனுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரின் அழைப்பு வந்தது. அமைச்சர் லைனில் இருக்கும் விஷயத்தை, சசிகலாவிடம் அந்த உறவினர் சொன்னதும், உடனே போனை வாங்கி ஆறு நிமிடங்கள் பேசியுள்ளார்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! கொங்கு மண்டல அமைச்சர் பாணியிலேயே, மேலும் ஏழு அமைச்சர்கள் சசிகலா உறவுகளின் செல்போன் மூலம் சசிகலாவிடம் பேசியுள்ளனர். அவர்களில் ஆறு பேர், சசிகலாவால் அமைச்சர் பதவியைப் பெற்றவர்கள். இவர்கள் இப்போதும் மறைமுகமாக சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். அமைச்சர்கள் அனைவருமே தினகரன் செய்த தவறுகளை சசிகலாவிடம் சுட்டிக்காட்டினார்களாம். மேலும், எடப்பாடி தரப்புக்கு டெல்லியிலிருந்து கிடைக்கும் ஆதரவையும் பற்றிச் சொன்னார்களாம். சசிகலாவிடம் பேசிய இந்த அமைச்சர்கள் அனைவருக்கும் உடனேயே எடப்பாடி தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நீங்கள் பேசியதெல்லாம் தெரியும். இப்படித் தடம் மாறினால், ஆட்சி பறிபோகும். நீங்களும் பதவியில்லாமல் வீதியில் நிற்பீர்கள்’ எனக் கண்டிப்பான தொனியில் சொல்லப்பட்டதாம். அவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். இதைத் தெரிந்துகொண்ட முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவும் முடிவெடுத்தாராம். ‘அமைச்சர்கள் எல்லோரும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்’ என்று காட்டவே இந்தக் கூட்டமாம்.’’

p42c.jpg‘‘அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளாரே?’’

‘‘எல்லா அமைச்சர்களும் ஒன்றுசேர்ந்து சசிகலாவையும் தினகரனையும் கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தபோதே, ‘இந்த முடிவும் அந்தக் குடும்பத்தின் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்டி ருக்காது’ என்று சொன்னவர்தான் செல்லூர் ராஜு. அவர் எப்போதும் சசிகலாவின் விசுவாசிதான். இப்படிப் பேசிய அன்று இரவே, செல்லூர் ராஜுவுக்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வந்துள்ளது. அதனால்தான் மறுநாள் ‘சசிகலா குறித்து நான் மனசாட்சிப்படி பேசியது பெரிதுபடுத்தப்பட்டது. அம்மாவின் ஆட்சிக்கும் முதல்வர் பழனிசாமியின் தலைமைக்கும் என்னால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று சொல்லிச் சமாளித்தார். இந்த நிலையில், ‘செல்லூர் ராஜு மனசாட்சிப்படி பேசியிருக்கிறார். அவர் மதுரைக்காரர்’ என்று தினகரன் பேட்டியளித்தது எடப்பாடியைச் சூடாக்கியுள்ளது.’’

‘‘கிருஷ்ணப்ரியா வீட்டில் ஏன் சசிகலா தங்கினார்?’’

‘‘பரோலில் வரும்போது போயஸ் கார்டன் வீட்டில் தங்கவே சசிகலா ஆசைப்பட்டார். அதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்று வக்கீல்கள் சொன்னார்கள். தினகரனும் அவரின் மனைவி அனுராதாவும் அவர்களுடைய அடையார் வீட்டில் வந்து தங்கச் சொன்னார்கள். ஆனால், சசிகலா, தினகரன் மீது இருந்த வருத்தத்தில் அதை மறுத்துவிட்டார். கிருஷ்ணப்ரியா வீடு சசிகலாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 2011-ல் சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா இந்த வீட்டில்தான் தஞ்சமடைந்தார். அப்போது இந்த வீட்டின் மாடியில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போதும் அந்த அறையில்தான் தங்கினார்.’’

‘‘மொத்தமாக, சசிகலாவின் மனநிலை எப்படி இருக்கிறது?’’

‘‘அவருக்குப் பிரதானமாக இரண்டு சோகங்கள் இருக்கின்றன. ஒன்று, கணவர் நடராசன் உடல்நிலை குறித்த சோகம். ஜெயலலிதாவின் சமாதிக்குப் போகமுடியவில்லையே என்பது இன்னொரு சோகம். சென்னைக்கு வந்த அன்று இரவு நெடுநேரம் தூங்காமல் தவித்தாராம். ‘என்னுடன் யாராவது ஒரே ஒருவர் மட்டும் வாருங்கள். அடையாளம் தெரியாத கார் ஒன்றில் கிளம்பிப் போய் அக்கா சமாதியைப் பார்த்துவிட்டு வரலாம். ஒரே ஒரு பூ வைத்து வணங்கி, அந்தச் சமாதி முன்பாக 2 நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வந்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்தக் காற்று என் மீது பட்டாலே போதும்’ என்றாராம். பரோல் நிபந்தனைகளைச் சொல்லி, அவரை எல்லோரும் கட்டுப்படுத்தினார்களாம். முதல்நாள் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றபோது, 15 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன், கையில் ஒரு கைக்குட்டையுடன் சசிகலா காரை நெருங்க முயன்றான். கூட்ட நெரிசலில் அவனால் அருகில் வரமுடியவில்லை. அங்கிருந்து தி.நகர் வீட்டுக்குத் திரும்பியபோது, வாசலில் நின்ற கூட்டத்தில் அந்தப் பையனும் இருப்பதைக் கவனித்த சசிகலா, காரை நிறுத்தி அருகில் அழைத்தார். கைக்குட்டையைப் பிரித்த அந்தப் பையன், ‘அம்மா சமாதியில் வைத்து வழிபட்டு இந்தப் பூக்களை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன்’ என்று அன்புடன் தந்திருக்கிறான். ‘என்னால போக முடியாவிட்டாலும், எனக்காக அக்கா அனுப்பி வெச்சிருக்காங்க’ என நெகிழ்ந்தபடி, நீண்டநேரம் அந்தப் பூக்களைக் கையிலேயே வைத்திருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்த தேவாதி, சசிகலாவைச் சந்தித்தார். ஜெயலலிதாவுக்காகச் செய்ய வேண்டிய சில சடங்குகள் பாக்கி இருந்ததாம். அதை, கிருஷ்ணப்ரியா வீட்டில் வைத்து சசிகலா இப்போது செய்து முடித்தாராம்.’’

p42a.jpg‘‘சசிகலாவின் வருகைக்குப் பிறகு எல்லாரும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறார்கள்போல?

‘‘ஆம்! சசிகலா பரோலில் வந்ததும் பல அமைச்சர்கள் சொந்த ஊர்களுக்குப் பறந்து விட்டனர். டெங்கு விழிப்பு உணர்வு பிரசாரம்,   எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எனக் காரணம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேச்சிலும் தொனி மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி, தினகரனையும் மு.க.ஸ்டாலினையும் கடுப்படிப்பது அவரின் வழக்கம். சசிகலா பரோலில் வெளிவந்த 7-ம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அப்படிக் கதை எதையும் சொல்லாமல் விழாவை முடித்துவிட்டார் எடப்பாடி. முதல்வர் கதை சொல்வதைத்தான் நிறுத்தியுள்ளார். ஆனால், பல அமைச்சர்கள் செல்போன் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். தங்களுக்கு அழைப்பு வருமோ என்ற அச்சம். எதற்கெடுத்தாலும் கருத்துச்சொல்லும் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள்கூட மௌனமாகிவிட்டனர். பன்னீர்செல்வமும் அரசியல் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.’’

‘‘மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பலர் சந்தித்ததாகச் சொல்கிறார்களே?’’

‘‘நடராசனைப் பார்க்க குளோபல் மருத்துவமனைக்குத் தினமும்  செல்கிறார் சசிகலா. குளோபல் மருத்துவமனையில், இரு அறைகள் சசிகலாவின் உறவினர்களுக்காகத் தயார்செய்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குப் போனதும், அந்த அறையில்தான் சசிகலாவும் இருந்தார். மருத்துவமனை உடையணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்து சென்ற சசிகலாவை அநேகமாக நடராசனுக்கு அடையாளமே தெரிந்திருக்காது. நடராசன் கையை மட்டும் அசைத்துள்ளார். நடராசன் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். அவர் சுயநினைவில் இருந்தாலும், தொண்டையில் ட்ரகியாஸ்டமி பொருத்தப்பட்டுள்ளது. இதேநிலைதான் அக்டோபர் 13 வரை நீடிக்கும். ஆனால், சசிகலாவின் பரோல் 12-ம் தேதியோடு முடிகிறது. அதனால், சசிகலாவும் நடராசனும் பேசிக்கொள்ளும் சூழல் இப்போதைக்கு இல்லை.’’

‘‘சசிகலாவிடம் டாக்டர்கள் என்ன சொன்னார்களாம்?’’

‘‘டாக்டர் முகமது ரீலா தலைமையிலான டீம், நடராசன் உடல்நிலைப்பற்றி எடுத்துச் சொன்னது. நடராசன் உடலில் அகற்றப்பட்ட கல்லீரலைப் பதப்படுத்தி வைத்திருந்தனர். அதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். ‘இந்தக் கல்லீரல், ரோஜாப்பூ நிறத்தில் இருக்க வேண்டும்; ஆனால், பாருங்கள். சாருடைய கல்லீரல் நிறம் மாறியிருக்கிறது’ என்று விளக்கினர். அதை ஆச்சர்யத்தோடு பார்த்த சசிகலா, ‘அவர் எப்போது முழுமையாக குணமடைவார்’ என்று  கேட்டுள்ளார். ‘புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், சரியாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கல்லீரல் செயல்படும் விதம் தெரிய ஒரு வாரம் ஆகும். இன்னும் சில மாதங்களுக்கு மிகுந்த கவனத்துடன் தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அதன்பின் எங்கள் அட்வைஸை அவர் சரியாகக் கடைபிடித்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒன்றும் ஆகாது’ என டாக்டர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். அதோடு, இங்கு சிகிச்சை பெறுவதற்கு அரசுத் தரப்பில் தரப்பட்ட நெருக்கடிகள் குறித்தும் சசிகலாவிடம் உறவினர்கள் சொன்னார்கள். அதில் அவர் ரொம்பவே கோபமடைந்தாராம்.’’

‘‘சசிகலாவின் தம்பி திவாகரன் அவரைச் சந்திக்க வந்ததாகத் தெரியவில்லையே?’’

‘‘ஆமாம்! நடராசன் குளோபல் மருத்துவமனையில் அட்மிட்டானபோது, திவாகரன் அடிக்கடி வந்துபோனார். ஆனால், சசிகலாவைச் சந்திக்க திவாகரன் வரவில்லை. காரணம், அவருக்குக் கடுமையான டெங்கு காய்ச்சலாம். சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறார். சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு திரும்புவதற்குள் திவாகரன் வந்து அவரைச் சந்திப்பார்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசலு


மேடையில் படம் வேண்டாம்!

p42.jpg

காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்கட்சித் தேர்தலையும் பொதுக்குழுவையும் நடத்தி முடித்த மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர், அப்செட்டில் இருக்கிறார். பொதுக்குழுவில் தன்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ‘பொதுக்குழு மேடையில் திருநாவுக்கரசர் படத்தை வைக்கக்கூடாது’ என்ற தேர்தல் பார்வையாளர் சஞ்சய் தத் உத்தரவால் அதிர்ச்சி யடைந்தார். அடுத்த அதிர்ச்சியாக, டெல்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தைப் படிக்கச் சொன்னார்களாம். ‘தலைவர், செயற்குழு உறுப்பினர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமனம் செய்யும்’ என்ற ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். பொதுக்குழுவுக்கு முதல்நாள் இரவு வந்த இந்தத் தகவலால் நொந்துவிட்டார் திருநாவுக்கரசர். இனி தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் டெல்லிக்குப் படையெடுப்பார்கள் என்று அஞ்சுகிறார். 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.