Jump to content

பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்!


Recommended Posts

பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்!

 

”பனங்காய் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே” என்ற ஈழத்து துள்ளலிசைப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். கேட்கும்போதே பனங்காய் பணியாரத்தின் வாசனையும் சுவையும் கற்பனையில் ஊறி நாவிலே தேன் சுரக்குமல்லவா?

இன்றைக்கு நாம் பனங்காய் பணியாரம் பற்றிப் பார்க்கப்போகிறோம்....

பனங்காய் பணியாரம் ஈழத் தமிழரின் தனித்துவமிக்க ஒரு சிற்றுண்டி வகையாகும். இதன் சுவையும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும்.

பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்!

ஈழத்தில் பனங்காய் பணியாரத்திற்கு பேர்போன இடமென்றால் யாழ்ப்பாணம் என்றுதான் சொல்லமுடியும். அதற்கு காரணமும் இருக்கிறது. இலங்கையின் சகல மாவட்டங்களிடையேயும் பனையால் அடையாளப்படுத்தப்படுவது யாழ்ப்பாணமே. யாழ்ப்பாணத்தின் தீவுகள் உட்பட சகல நிலப்பரப்பிலும் ஓங்கி உயர்ந்த பனைமரங்கள் உண்டு.

இலையுதிர் காலத்தில் பெண் பனைகளில் நுங்குப் பாளைகள் முகிழ் விடுகின்றன. பின்னர் வசந்த காலத்தில் நுங்குகள் முற்றி பனம்பழங்களாகின்றன. பனம்பழங்களைத்தான் பனங்காய் என்று மக்கள் அழைக்கின்றனர்.

நன்கு முற்றிய பனம் பழங்கள் தாமாகவே கீழே விழுகின்றன. இவற்றைச் சேகரித்து மேல் தோல் உரிக்கப்படுகின்றது. பனம் பழத்தில் மூன்று விதைகள் அல்லது கொட்டைகள் காணப்படும். சில பனம் பழங்களில் அதிகப்படியாக நான்கு கொட்டைகளும் குறைவாக ஒரேயொரு கொட்டையும் காணப்படலாம்.

Related image

தோல் உரிக்கப்பட்ட கொட்டைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் களி பிழிந்தெடுக்கப்படுகின்றது. நீரில் சற்று கலந்து பிழிகின்றபோது களி இலகுவாக எடுக்கப்படும்.

பிழியப்பட்ட களி சூடாக்கப்படவேண்டும். களி சூடாக்கப்படாத சந்தர்ப்பத்தில் பனங்காய் பணியாரம் கசப்புத்தன்மையாக இருக்கும். இதனை உள்ளூர் மக்கள் காறல் தன்மை என்பார்கள்.

Related image

அடுப்பில் சூடாக்கிய களியுடன் அவித்த கோதுமை மா கலக்கப்படுகின்றது. அதன்பின்னர்தேவையான அளவு சீனியும் கலக்கப்படுகின்றது. சீனி நன்றாக கரையும்வரை கலக்கப்பட்ட திண்மைக்களியானது, கொதித்த எண்ணெயில் போடப்பட்டு பணியாரம் சுடப்படுகின்றது. பணியாரம் அடுப்பில் சுடப்படும்போதே அற்புதமான வாசனையும் வெளிவரும்.

பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்!

எண்ணெய்யில் சுடப்பட்ட சுவையான பணியாரம் ஆறவிடப்பட்டு எல்லோருக்கும் பரிமாறப்படுகிறது. தமது குடும்பத்தினர்க்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கும் இந்த பனங்காய் பணியாரம் பரிமாறப்படுவதுண்டு. இதனால் தமிழ் மக்களிடையே ஒற்றுமையினைக் கட்டியெழுப்பிய விருந்தோம்பற் பண்பாட்டில் பனங்காய்ப் பணியாரத்துக்கும் சிறப்பான ஒரு பங்கு காணப்படுகிறது.

அந்த வகையில் மேற் குறிப்பிட்ட முறையில் சுவையான பனங்காய்ப் பணியாரங்களைச் சுட்டு உங்கள் உறவுகளுக்கும் பகிர்ந்து உண்ணுங்கள்.

“பனங்காய்ப் பணியாரமே பனங்காய்ப் பணியாரமே

பச்சைக் கொழுந்து வெத்தலையே-உன்

பார்வை கொஞ்சம் பத்தலையே

பனையோலைப் பாய் விரித்துப் படுத்துறங்கும் மணியக்கா

கமுக மரப் பாக்குத் தந்து கவுக்கிறது என்னக்கா”

https://news.ibctamil.com/ta/internal-affairs/tamils-food-jaffna

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.