Jump to content

முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்


Recommended Posts

முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்

 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான்சுப்பர் லீக் (PSL) போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த 5 அணிகளும், தமது அணியில் விளையாடியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின்விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன.

Multan-Sultans.jpg

இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்களில், 4 பிரிவுகளிலிருந்து தமது அணிக்கான முக்கிய 9 வீரர்களை நேற்று (10) இடம்பெற்ற விசேட ஏலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளபோட்டித் தொடரில் 6ஆவது அணியாக களமிறங்கவுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணிஒப்பந்தம் செய்தது.  

இதன்படி, கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடியவரும், டயமென்ட்பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட்ஜாம்பவானுமான குமார் சங்கக்காரவை முல்தான் சுல்தான்ஸ் அணி ஒப்பந்தம்செய்துள்ளது. அத்துடன், அவ்வணியின் ஆலோசகராகவும் அவர் செயற்படவுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறும் T-20 போட்டித் தொடர்களில் விளையாடிவருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சிகிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்.

முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு சங்கக்காரவை ஒப்பந்தம் செய்தமை தொடர்பில்அவ்வணியின் பணிப்பாளரான வசீம் அக்ரம் கருத்து வெளியிடுகையில், உலககிரிக்கெட்டில் உருவான சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக குமார் சங்கக்காரவிளங்குகிறார். 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி வந்தஅவர், ஓட்டங்களைக் குவித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கின்ற காலத்தில்ஓய்வும் பெற்றார்.

ஆனால், அவர் விக்கெட் காப்பாளராக சளைக்காமல் தொடர்ந்து உலகின் பல்வேறுநாடுகளில் நடைபெற்றுவருகின்ற T-20 போட்டிகளில் விளையாடி வருகின்றமைமகிழ்ச்சியளிக்கிறது. எனவே, அவரைப் போன்ற வீரரொருவர் எமது அணியில்இடம்பெற்றிருப்பது இளம் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும்”என அவர் தெரிவித்தார்.

 

 

மேலும், பிளெட்டினம் பிரிவில் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகளின் சகலதுறைஆட்டக்காரரான கிரென் பொல்லார்ட், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சகலதுறைஆட்டக்காரரான சொஹைப் மலிக், கோல்ட் பிரிவில் இடம்பெற்று லாகூர் கிளெண்டர்ஸ்அணிக்காக விளையாடியிருந்த சொஹைல் தன்வீர், ஜுனைத் கான் மற்றும் சூதாட்டசர்ச்சையில் சிக்கி போட்டித் தடைக்குப் பிறகு மீண்டும் விளையாடி வருகின்றமொஹமட் இர்பான் ஆகியோரையும் அவ்வணி ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், சில்வர் பிரிவிலிருந்து பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகளில்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் சுழற்பந்து வீச்சாளரான இர்பான் கான், சகலதுறை வீரர் காசிப் பாத்தி மற்றும் மத்திய வரிசை வீரர் சொஹைப் மக்சூத் ஆகியவீரர்களும் முல்தான் அணிக்காக விளையாடவுள்ளனர்.

அத்துடன், கடந்த இரண்டு பருவகாலங்களிலும் கராச்சி அணிக்காக விளையாடியிருந்தமேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லை நேற்று நடைபெற்றஏலத்தில் சுல்தான் அணி ஒப்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 
 

பாகிஸ்தானின் 5ஆவது மிகப் பெரிய நகரமாக கருதப்படுகின்ற சுல்தான் நகரம், புனிதர்களின் புனித பூமியாகவும், பாரம்பரியமிக்க ஷஸபிக்கள் வாழ்கின்ற பணக்காரநகரமாகவும் விளங்குகின்றது. அத்துடன் இவ்வாண்டு ஆரம்பத்தில் நடத்தப்பட்டஏலத்தில் டுபாயை மையமாகக் கொண்ட ஸ்கூன் குழுமம் பி.எஸ்.எல் வரலாற்றில்அதிகளவான பணத்தை செலுத்தி (41.6 மில்லியன் டொலர்கள்) அவ்வணியை வாங்கியிருந்தது.

சுல்தான் அணியின் பணிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திரவேகப்பந்து வீச்சாளரான வசீம் அக்ரம் செயற்படவுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் வீரரான டொம் மூடி இவ்வணிக்கு பயிற்சியாளராகசெயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நடைபெறவுள்ள பருவகாலப் போட்டிகளில், நடப்புச் சம்பியனான பெஷாவர் சல்மி, இஸ்லாமாபாத் யுனைடட், கராச்சி கிங்ஸ், லாகூர் கிளெண்டர்ஸ், குவாட்டகிளெடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுடன் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டமுல்தான் சுல்தான்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை சிறப்பிக்கவுள்ளன.  

இதன்படி, புதிதாக ஏலத்தில் இணையவுள்ள வீரர்கள் உள்ளடங்கலாக எதிர்வரும்பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்கவுள்ளவீரர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதான ஏலம் எதிர்வரும் ஜனவரி மாதம்முற்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.