Jump to content

நாடோடி மக்களின் உணவு வகைகள்!


Recommended Posts

நாடோடி மக்களின் உணவு வகைகள்!

அபூர்வம்இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் ‘சேர்வராய்ஸ்’ கதிரவன்

 

ந்தக் காலத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் பிரசித்திப் பெற்ற உணவுகளின் தொகுப்பு இது. தற்போதும் தமிழ்நாடு (ஊட்டி, ஏற்காடு), அருணாச்சலப்பிரதேசம், ஒரிசா, நாகலாந்து, ஏற்காடு போன்ற மாநிலங்களில், இந்த உணவுகள் நடைமுறையில் சமைத்து பரிமாறப்படுகின்றன.

தேன் அடை

தேவையானவை: பொட்டுக்கடலை - 100 கிராம், தேன் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு

p17.jpg

செய்முறை: பொட்டுக்கடலையை நன்றாக இடித்து, அதனுடன் உப்பு , தேன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து எடுத்தால், சுவையான தேன் அடை தயார்.

புஃலின்

தேவையானவை: அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், உப்பு  தேவையான அளவு,எண்ணெய் சிறிதளவு

p17b.jpg

செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டவும். அரிசிமாவை சலித்து, அதில் உப்பு சேர்த்துக் கலந்து வெல்லத் தண்ணீரில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.

களிமண் கோழி வறுவல்

தேவையானவை: கோழிக் கறி  அரை கிலோ, வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், இஞ்சி - 10 கிராம், பூண்டு - 20 கிராம், பட்டை -2, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, கறிவேப்பிலை  சிறிதளவு, கொத்தமல்லித்தழை  கால் கட்டு, உப்பு  தேவையான அளவு, வாழை இலை - 2, பச்சை களிமண் - 1 கிலோ

p18.jpg

செய்முறை: கோழிக்கறியை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, களிமண் மற்றும் வாழையிலை தவிர மற்ற பொருட்களை நன்றாக இடித்து அந்தக் கலவையை கோழியுடன் சேர்த்துக் கலக்கவும். நன்றாக கலந்தவுடன் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வாழையிலையில் வைத்து மடித்துக் கொள்ளவும். இதனை பச்சை களிமண்ணில் வைத்து முழுவதுமாக மூடி நெருப்பின் மேல் வைக்கவும். சூட்டில் களிமண் பானை போல இறுகி உள்ளே உள்ள கோழிக்கறி நன்கு வெந்துவிடும்.அரை மணி நேரம் கழித்து களிமண்ணை உடைத்தால் உள்ளே சுவையான கோழிக்கறி தயாராக இருக்கும்.

மூங்கில் பிரியாணி

தேவையானவை: பச்சை மூங்கில் - 1, அரிசி - 200 கிராம், பட்டை -  2, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, வெங்காயம் - 50 கிராம், தக்காளி -  50 கிராம், இஞ்சி - 10 கிராம், பூண்டு - 10 கிராம், உப்பு  தேவையான அளவு, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, புதினா இலை  சிறிதளவு, வாழை இலை - 2

p19.jpg

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி, ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். வாழை இலை மற்றும் மூங்கிலைத் தவிர மற்ற பொருட்களை நன்றாக இடித்து, ஊற வைத்த அரிசியில் கலந்து கொள்ளவும். மூங்கிலினுள் வாழை இலையைச் சுருட்டி வைத்து, அதில் அரிசிக் கலவையை வைத்து மேற்பகுதியை வாழை இலையால் அடைத்து நெருப்புக் கனல் மீது வைக்கவும். 30 நிமிடங்களுக்கு பின் மூங்கிலை தனியாக எடுத்து பிளந்தால் உள்ளே புட்டு போல தயார் நிலையில் இருக்கும் பிரியாணியை எடுத்துப் பரிமாறவும்.

அவித்த உருளைச் சோள இலை

தேவையானவை: உருளைக் கிழங்கு - 2, சோளக் கதிர் - 1, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, எலுமிச்சைச்சாறு  அரை டேபிள் ஸ்பூன், உப்பு  தேவையான அளவு, கொத்தமல்லித்தழை  சிறிதளவு

p20.jpg

செய்முறை: தோலுரித்த சோளக்கதிரை நெருப்பு கனலின் மேல் பாதியளவு வேகும் வரை வைத்து எடுத்து, முத்துக்களை தனியே உதிர்த்து எடுக்கவும். இதேபோல உருளைக் கிழங்கையும் தீயில் வைக்கவும். கருகியதும் வெளியே எடுத்து நன்றாக ஆறவைத்து, கருகிய பகுதியை மட்டும் நீக்கிவிட்டு உள்ளே வெந்த பகுதியை தனியாக எடுத்து அதனை மசித்து உதிர்த்த சோளம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாகப் பிசைந்து கொள்ளவும் .பின்னர் இதனை சோளக்கதிரின் தோலில் வைத்து நன்றாக சுற்றி மீண்டும் நெருப்புக்கனலில் சிறிது நேரம் காட்டி சில நிமிடங்களில் எடுத்து விடவும்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.