Jump to content

அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால்


Recommended Posts

அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார்.

டில்லர்சன்-டிரம்ப்படத்தின் காப்புரிமைAFP Image captionடில்லர்சன்-டிரம்ப்

டில்லர்சன் அப்படிச் சொன்னதாக வெளியானது பொய்ச்செய்தி என்று மறுத்த டிரம்ப், அப்படிச் சொல்லியது உண்மை எனில் இருவருக்கும் அறிவுச் சோதனை வைத்து முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும் என்றார் டிரம்ப்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

செவ்வாய்க்கிழமைதான் டிரம்ப்பும் டில்லர்சனும் இணைந்து உணவருந்தினர்.

"நான் யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. குறைத்து மதிப்பிடுவதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை," என்று செய்தியாளர்களிடம் கூறினார் டிரம்ப்.

அது நகைச்சுவை...

அறிவுச் சோதனை செய்யலாம் என்று டில்லர்சனுக்கு டிரம்ப் விடுத்த சவால் குறித்துக் கேட்டபோது, வெள்ளை மாளிகையின் பத்திரிகை தொடர்புப் பிரிவின் செயலாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், "அது ஒரு நகைச்சுவை. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு வேண்டும்," என்று தெரிவித்தார்.

வடகொரியா, இரான் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைச் சிக்கல்களை அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் நிலையில், டிரம்புக்கும், ராஜீயத் துறை செயலர் டில்லர்சனுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. (அமெரிக்காவின் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் அல்லது ராஜீயத்துறை செயலாளர் என்பது வெளியுறவு அமைச்சருக்கு இணையான பதவி)

கடந்தவாரம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த டில்லர்சன், தாம் பதவி விலகத் திட்டமிடுவதாக வலம் வரும் செய்திகளை மறுத்தார். ஆனால், கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிறகு, டிரம்பை மூர்க்கர் என்று டில்லர்சன் கூறியதாக வெளியான செய்தியை அவர் மறுக்கவில்லை.

நேரத்தை வீணடிக்கிறார்

ஏற்கெனவே ஒருமுறை வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை செய்ய முயன்று நேரத்தை வீணடிப்பதாக ட்வீட் செய்திருந்தார் டிரம்ப்.

வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளை எவ்வளவுதூரம் மிகக் குறைவாக டிரம்ப் புரிந்துகொள்கிறார் என்பதைப் பார்த்து டில்லர்சன் அதிர்ச்சி அடைந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

சந்திப்புகளின்போது டில்லர்சனின் உடல்மொழியால் டிரம்ப் எரிச்சல் அடைந்திருப்பதாகவும் அதே நாளிதழ் செய்தி வெளியிட்டது.

http://www.bbc.com/tamil/global-41581481

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.