Jump to content

நாங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம்


Recommended Posts

நா

நாங்கள் பள்ளிக்கு
செல்வது எப்படி?

இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம்

ங்கள் பள்ளிக்கு
செல்வது எப்படி?

இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம்

 
 

1920trolley-stuck-in-the-mi-mr.jpg

 

தினமும் ராதிகா மற்றும் யசோதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப சுமார் 6 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள்.

இமயமலையில் உள்ள தொலைதூர கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி பெறுவதென்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இருவரின் சவாலான அன்றாட வாழ்க்கையை 360 டிகிரி காணொளி மூலம் பாருங்கள் - அல்லது அவர்களுடைய முழுக் கதையை கீழே படிக்கலாம்.

360 டிகிரி காணொளியை காண மொபைலை மேலும், கீழுமாக, இடம் - வலமாக திருப்பவும். கணினியில் பார்த்தால், மவுஸ் உதவியுடன் இடது, வலது, மேலே, கீழே செல்லலாம்.

இது சஃபாரி பிரவுசரில் வேலை செய்யாது. யு டியூப் மொபைல் ஆப் மூலம் சிறந்த அனுபவத்தை உணரலாம்.

மழைக்காலத்தின் மத்தியில் சூரியன் பிரகாசிக்கும் ஒரு காலை வேளையில் 5 மணி அளவில். ராதிகா மற்றும் யசோதா சகோதரிகள் மாடியின் முகப்பு பகுதியில் முகத்தை கழுவுகிறார்கள்.

700-radhika-washes-her-face-mr_2awsfwj.j
700x500thumb_img_3108_1024_o70cfvh-mr_8l

காலை சிற்றுண்டிக்கு யார் அதிக சப்பாத்திகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் இருவரும் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து கொள்கிறார்கள்.

அரைமணி நேரத்தில் பொடிநடையாக பள்ளி செல்லும் ஓர் அபாயகரமான பயணத்தை சகோதரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுடைய விளையாட்டுத்தனம் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு மலையேற்ற பயணம் சகோதரிகளை மலைப்பாங்கான நிலப்பரப்பு, அடர்ந்த காடுகள் மற்றும் வேகமாக ஓடும் ஆறுகளை கடந்து அழைத்து செல்ல உள்ளது.

ஆனால், முதலில், இமயமலையில் உள்ள தங்களது சிறிய கிராமத்தின் மத்தியில் உள்ள இந்து கோயில் ஒன்றை சகோதரிகள் பார்வையிடுகிறார்கள்.

ஆலயத்தில் ஒலிக்கும் மணி அங்குள்ள தெய்வங்களின் வழிபாட்டை உறுதிப்படுத்துகின்றன.

சையபா என்ற தொலைத்தூர கிராமத்திலிருந்து தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் 6 இளம் வயதினரில், 14 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளும் அடங்குவர்.

ஒரு காலை பொழுதில் சையபாவில் உள்ள வீடுகளின் கூரைகள்

ஒரு காலை பொழுதில் சையபாவில் உள்ள வீடுகளின் கூரைகள்

சகோதரிகளின் தந்தை ஒரு புன்முறுவலுடன் மற்றும் கனத்த இதயத்துடன் தனது பிள்ளைகளுக்கு கை அசைக்கிறார்.

காலநிலையை பொறுத்து சகோதரிகளின் பயணம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் பிடிக்கும்.

ஆனால், மனேரி மற்றும் மல்லா நகரங்களை அடைவதற்கு இதுதான் ஒரே வழி. இந்த நகரில்தான் பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.

பாகீரதி நதி பள்ளத்தாக்கு

பாகீரதி நதி பள்ளத்தாக்கு

இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள இமயமலையின் உயரமான பகுதியிலுள்ள சிறிய கிராமம்தான் சையபா. வெறும் 500 பேர் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். சையபாவின் உள்ளே மற்றும் வெளியே செல்ல சாலைகள் கிடையாது.

பாடப்புத்தகங்களுடன், சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துச்செல்லும் பெண்கள் தளர்வான கற்கள் நிறைந்த ஒரு குறுகிய பாதையில் நடந்து செல்கிறார்கள்.

பயணத்தின் மிக கடினமான பகுதியை இரண்டு மணிநேரம் கழித்து பாகீரதி நதியை கடக்கும்போது சகோதரிகள் எதிர்கொள்வார்கள்.

நதியின் குறுக்கே அமைந்திருக்கும் கம்பிகள் மற்றும் கூண்டு

நதியின் குறுக்கே அமைந்திருக்கும் கம்பிகள் மற்றும் கூண்டு

ஆர்ப்பரிக்கும் நீரின் மேல் உயரமாக அமைந்திருக்கும் கேபிளில் உலோக டிராலி அமைந்திருக்கிறது. அதனைக் கொண்டு சகோதரிகள் தங்களை நதியின் மறுபக்கத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கு நிறைய உடல்வலிமை தேவைப்படும். மழைக்காலத்தில் கயிறுகள் கனமாகி இழுப்பதற்கு கடினமானதாக இருக்கும். காயங்கள் அசாதாரணமாக ஏற்படும்.

தலைமீது அமைந்துள்ள கேபிள்களினால் உள்ளூர் கிராமவாசிகளின் விரல்கள் சேதமடைந்துள்ளன. சில நேரங்களில் அவர்கள் விரல்களை இழந்திருக்கிறார்கள்.

700trolley-4-mr_jrnynel.jpg

ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக டிராலியை நாங்கள் இறுக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் யசோதா."

சகோதரிகளின் உறவினர் ஒருவர் கயிறுகளில் சிக்கி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் மீட்கப்பட்டார்.

'கயிறுகள் மீதிருக்கும் கிரீஸ் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். எங்களுடைய கைகள் அழுக்காகிவிடும். ஆனால், சீருடையில் கிரீஸ் படாமல் இருப்பதற்கும் நாங்கள் முயற்சிப்போம்,'' என்கிறார் யசோதா.

'எங்களுடைய பள்ளி சீருடையின் கால்சட்டை வெள்ளை நிறத்திலிருப்பதால் கறை அப்படியே தெரியும்.''

700-pulling-trolley-2-mr_mctivf1.jpg

பாகீரதி நதியின் பாதுகாப்பு பகுதியான வடக்கு கரைப்பகுதியை சகோதரிகள் அடைந்தவுடன் பள்ளிக்கு சாலை வழியாக செல்வதற்காக காருக்காக காத்திருக்கிறார்கள்.

அடர்ந்த காடுகள் தாங்கள் எதிர்கொள்ளும் சொந்த ஆபத்துக்களை முன்வைக்கின்றன. கரடிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற தெரிந்த விலங்குகளை சாலைகளில் பார்த்திருப்பதாக மாணவிகளின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.

இந்த மெய்நிகர் ஆவணப்படத்தில், யசோதா மற்றும் ராதிகா தாங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் சாகச மற்றும் அற்புதமான பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார்கள்.

உத்தரகாசியின் மலைப்பகுதியில் சையபா கிராமத்தை போன்று சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அதில் சில கிராமங்கள் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான கிராமங்களுக்கு பொடிநடையாகத்தான் செல்ல வேண்டும்.

டெல்லியிருந்து சாலை வழியாக சுமார் 400 கி.மீ தொலைவில் பாகீரதி நதியின் கடக்கும் பகுதியில் இது அமைந்துள்ளது. 


டெல்லியிருந்து சாலை வழியாக சுமார் 400 கி.மீ தொலைவில் பாகீரதி நதியின் கடக்கும் பகுதியில் இது அமைந்துள்ளது. 

16 வயதாகும் யசோதாவிற்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்றும், 14 வயதாகும் ராதிகாவுக்கு எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராக வேண்டும் என்றும் கனவுகள் இருக்கின்றன.

இருவருக்குமே தங்களது பெற்றோரை போல இளம் வயதில் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. தொடர்ந்து படிக்கவே விரும்புகின்றனர்.

யசோதா மிகவும் அமைதியானவர். தனது காலில் உள்ள ரத்தம் உறிஞ்சும் அட்டைகளை அகற்ற உடனடியாக குனிவதற்கு சில விநாடிகளுக்குமுன்தான் ராதிகா தனது பேச்சை நிறுத்துகிறார்.

ராதிகா மற்றும் யசோதா

ராதிகா மற்றும் யசோதா

மழைக்காலத்தில் ஏராளமான அட்டைகள் சேற்று பாதையில் கிடக்கின்றன.

ஒரு தீக்குச்சியால் அட்டைகளை எரிக்கும்போது ராதிகா சிரிக்கிறார். அட்டைகளைப்பற்றி ராதிகா பெரியதாக அக்கறை கொள்ளவில்லை.

'நான் எதற்கும் பயப்பட மாட்டேன்,'' என்கிறார். தனது அக்காவைப்போல், அவரும் தன்னுடைய கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை சூழலை பெரிதும் விரும்புகிறார் ராதிகா.

500-thumb_img_3102_1024_85v0waq-mr_fknla

மழை பெய்யும் போது, நாங்கள் நிறைய குட்டி குட்டி நீர் வீழ்ச்சிகளை பார்ப்போம். நீங்கள் நகரத்திலிருந்து வந்தால் இதுபோன்ற நீர்வீழ்ச்சிகளை பார்த்து மெய்மறந்து போவீர்கள். 

உறவுக்காரர்களின் மொபைல் போன்கள் சகோதரிகளுக்கு எப்போதாவது கையில் கிடைக்கும்போது, யசோதாவும், ராதிகாவும் பெரும்பாலும் பாலிவுட் பாடல்களின் வீடியோவை அந்த சிறிய திரையில் பார்த்தபடியே பயணிப்பார்கள்.

அவர்களிடம் தொலைக்காட்சி கிடையாது. ஆனால், சகோதரிகளின் மாமா வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது. சில நேரங்களில் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றுகூடி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.

ஓர் அமைதியான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து பிபிசி குழுவினர் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஃபோனுடன் படுக்கையில் யசோதா படுத்திருக்க, ஒரு பிங்க் நிற துப்பட்டாவை தனது தலையை சுற்றி அணிந்து கொண்டு நடனமாடுகிறார் ராதிகா.

700-radhika-puts-a-scarf-on_luw6qzb-mr_0
 
700-dancing_a2upxx3-mr_cauhaly.jpg

'நாங்கள் பல விஷயங்கள் குறித்து கனவு காண்போம்,'' என்கிறார் யசோதா.

'நாங்கள் சிலநேரங்களில் எங்களுடைய பேய் குறித்து கனவு காண்போம். சிலநேரங்களில் கனவுகளில் எங்களுடைய தம்பியை பார்ப்போம். ஏனென்றால் அவன் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகிறான். வார இறுதி நாட்களில் மட்டுமே அவனை நாங்கள் பார்ப்போம்.''

சையபாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் 8 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டுமென்றால் வீட்டைவிட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, அது குடும்பத்தினருக்கு கூடுதல் செலவாக மாறுகிறது.

பெரும்பாலான குடும்பங்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.

பெற்றோருடன் ராதிகா மற்றும் யசோதா 

பெற்றோருடன் ராதிகா மற்றும் யசோதா 

இந்த மெய்நிகர் ஆவணப்படத்தை யசோதா, ராதிகா மற்றும் குடும்பத்தினர் முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக மெய்நிகர் தலைக்கருவிகளை சையபா கிராமத்தில் பிபிசி குழுவினர் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

இது அவர்களுடைய படம், யசோதா மற்றும் ராதிகாவின் பெற்றோரின் படமும்கூட. பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு சென்றுவிடும் வாய்ப்பாகவும் இது அமையலாம்.

 

http://www.bbc.co.uk/news/resources/idt-sh/how_we_get_to_school_tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.