Jump to content

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!


Recommended Posts

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

 

ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும்.

அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன என்பதைக் காட்டும் படத்தொகுப்பு ஒன்றினை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

Related image

இது யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பண்பாட்டு நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டையின் கோட்டைக்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும். விவசாயக் குடும்பம் ஒன்று தமது வளர்ப்புக் காளையொன்றின் முன்னால் நிற்கும் காட்சி. வட்டுக்கோட்டை விவசாயத்திற்கும் மாட்டுவண்டிச் சவாரிக்கும் பெயர்போன ஒரு பிரதேசமாகும்.

Image result for jaffna  1980

இது கொழும்பு மாவட்டத்தின் ‘பெட்டா’ பிரதான வீதி ஆகும். இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்ட புகைப்படம். பெட்டா கொழும்பு மாவட்டத்தின் முக்கியமான ஒரு வர்த்தக முக்கியத்துவம்வாய்ந்த இடமாகும்.

Related image

கிக்கடுவை அல்லது இக்கடுவை கடற்கரையாகும். ஸ்ரீலங்காவின் தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது. 1980ஆம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டி தலதா மாளிகையின் அன்றைய தோற்றம். இற்றைக்கு 1800ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும்.

Related image

ஸ்ரீலங்காவின் சப்ரகமுவ மாகாணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படம். ரம்புட்டான் பழத்திற்குப் பெயர்போன இரத்தினபுரி பகுதியில் 1905ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டது. வீதியோரமாக ரம்புட்டான் வியாபாரத்தில் ஈடுபடும் மூன்று பெண்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் ஒரு வீதியோரமாக நடந்து செல்லும் இரண்டு இளம் பெண்கள். வீதியின் மறுபக்கம் எண்ணெய் வண்டில் செல்கின்றது. அன்றைய காலத்தில் வண்டில்களில் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று மண்ணெண்ணெய் விற்கப்பட்டுள்ளது. இன்றைய எண்ணெய்த் தாங்கிகளைப்போல அன்று இந்த வண்டில்கள் பயன்பட்டுள்ளன.

Image result for old ceylon

கொழும்பில் ஒரு பிரதான சாலையில் ஓடும் அரசாங்க பேருந்து ஒன்று. 1970ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான பேருந்துகள்தான் அன்றைய கால இலங்கையில் முக்கியமான போக்குவரத்துச் சாதனங்களாகும்.

L246-full.jpg

மட்டக்களப்பின் பிரதான ஏரி. வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பது இவ்விடத்தின் விசேடமாக இருந்தது. மீன்பாடும் தேன் நாடு என மட்டக்களப்பு அழைக்கப்பட்டதற்கு இது முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது.

இவ்வாறாக இலங்கைத் தீவின் எளில் மிகுந்த காட்சிகள் அந்த நாட்களை மீட்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. ஞாபகங்கள் இன்னும் தொடரும்..........

https://news.ibctamil.com/ta/internal-affairs/old-ceylon-1

Link to comment
Share on other sites

இன்றைய புகைப்படத் தொகுப்பு; விடுதலைப் புலிகளின் ஆரம்பகால நிகழ்வுகள்!

 

இன்றைய எமது படத்தொகுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால புகைப்படங்கள் சிலவற்றை இங்கே இணைக்கின்றோம். புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இருந்து தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பின் வளர்ச்சிப் பாதை எவ்வாறான மேடு பள்ளங்களைக் கடந்து வந்தது என்பதை இந்த படங்கள் வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Image result for ltte old

அமைப்பின் ஆரம்பகால போராளிகள் தமது பாசறையொன்றில் ஓய்வினைக் கழித்தபோது எடுக்கப்பட்ட படம். கழுத்திலே நஞ்சுக் குப்பியினை ஒவ்வொரு போராளியும் சுமந்திருக்கின்ற அதே நேரம் ஒரு போராளியின் கழுத்திலே சிலுவையும் காணப்படுகின்றது. புலிகள் எந்தவொரு மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

Related image

ஆரம்பகால பெண் போராளிகள் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட படம். பெண் போராளிகள் தலை முடியினை கட்டையாக வெட்டுவதும் இரட்டை சடைப் பின்னலினை மேல் நோக்கிக் கட்டுவதும் இதன் பின்னர் வந்த வழக்கங்களே.

kittu%20ltte%202.jpg

விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் கிட்டு ஸ்ரீலங்கா இராணுவ பொறுப்பாளர்களுடன் நிற்கும் காட்சி. கிட்டுவின் காலத்தில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாக இருந்த கொத்தலாவல புலிகளுடன் சுமூகமான ஒரு உறவினைப் பேணிவந்தார். ஒருபக்கம் போர் நடந்துகொண்டிருந்தாலும் பரஸ்பர சடலங்களின் பரிமாற்றத்திற்காக யாழ் கோட்டையின் தளபதியும் கேணல் கிட்டுவும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர்.

37a-dhanu-leads-march.jpg

விடுதலைப் புலிகளின் முதலாவது மகளிர் அணி பயிற்சியினை நிறைவு செய்து தமது அணிவகுப்பு மரியாதையைச் செலுத்தியபோது பிடிக்கப்பட்ட புகைப்படம்.

Related image

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மூத்த போராளிகளுடன் இந்தியாவில் பயிற்சி பெற்றபோது. மூத்த தளபதிகளான பொட்டம்மான் மற்றும் புலேந்திரன் போன்றோரும் இங்கே காணப்படுகின்றனர்.

Related image

ஈழத்தமிழருக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வருபவரான தமிழகத்தின் அரசியல் தலைவர் திரு வை கோபாலசாமி (வைகோ) தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோருடன் காணப்படுகின்றார்.

Related image

விடுதலைப் புலிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆயுத உதவிகளும் தனது தனிப்பட்ட சார்பில் கோடிக்கணக்கான பண உதவியும் செய்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள். தலைவர் பிரபாகரனுடனான சினேகபூர்வமான சந்திப்பின்போது “என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், ஆனால் போராட்டத்தை எச் சந்தர்ப்பத்திலும் கைவிட்டுவிடாதீர்கள்” என்று எம்.ஜி.ஆர் வினயமாகக் கேட்டிருந்தார். படத்தில் விடுதலைப் புலிகளின் வான்படைச் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களும் காணப்படுகின்றார்.

Related image

வன்னியில் விடுதலைப் புலிகளின் ஒரு முகாமில் தலைவர் பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம், கேணல் சங்கர் மற்றும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஆகியோர்.

Related image

தலைவர் பிரபாகரன் இந்திய இராணுவ உயர் அதிகாரியச் சந்திக்கப்போனபோது குறித்த இராணுவ அதிகாரி எழுந்து நின்று தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதைக் காணலாம்.

Image result for ltte old photos

1987ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட படம் இது. ஆரம்பகால போராளி ஒருவர் இயந்திரத் துப்பாக்கி ஒன்றுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Related image

தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருமணப் புகைப்படம். அருகில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் அமர்ந்துள்ளார்.

Related image

1985இல் போராளி ஒருவர் பதுங்கி நிற்கும் காட்சி.

Related image

யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் தலைவர் பிரபாகரன் தனது மெய்ப் பாதுகாவலர்களுடன். பின்னால் சுவரில், தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த புரட்சியாளரான சே குவேராவின் புகைப்படம் தொங்குகின்றது.

Related image

மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி லெப்டினன் கேணல் விக்டர் யாழ் மாவட்டக் கட்டளைத்தளபதி கேணல் கிட்டு அவர்களுடன் காணப்படுகின்றார். கேணல் விக்டர் அவர்களின் நினைவாக ’விக்டர் கவச எதிர்ப்பு படையணி’ எனும் மரபுவழி போரியல் அணி ஒன்று தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்றைய எமது படத்தொகுப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால புகைப்படங்கள் சிலவற்றை இணைத்திருந்தோம். மீண்டுமொரு வித்தியாசமான படத்தொகுப்புடன் சந்திக்கலாம் வாசகர்களே!

தொடரும்.......

https://news.ibctamil.com/ta/internal-affairs/LTTE-s-early-events

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.