Jump to content

லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்!


Recommended Posts

லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்!

 
 

காஞ்சிபுரம், பிச்சை

காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார்.  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யன்ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்ன்கோவ். இவர் கோயில்களை காண்பதற்காக செப்டம்பர் 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக ரயில் மூலம் நேற்று இரவு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏடிஎம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏடிஎம் கார்டை உடைத்து போட்டுவிட்டார். கையில் செலவுக்குப் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு நேரம் என்பதால் எங்கே எப்படி போகவேண்டும் என அவருக்குப் புரியவில்லை. கையில் பணம் இல்லாததால் எங்கும் தங்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் காஞ்சிபுரம் நகரில் சுற்றித் திரிந்தார். இதில் களைப்படைந்த அவர் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் படுத்து உறங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் அங்கே கோயிலில் சிலர் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறார். செலவுக்கு பணம் இல்லாததால் அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுத்துள்ளார்.துளசி காஞ்சிபுரம்

இதை கேள்விப்பட்ட சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி அங்கு வந்தார். அவரை மீட்டுவந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டதால் பிச்சை எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். பின்பு அந்த உதவி ஆய்வாளர் செலவுக்கு 500 கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள ரயிலில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி இருக்கிறார்.

அந்த காவலருக்கு நன்றி தெரிவித்த பெரன்கோவ், தூதரகம் மூலம் உதவியை நாடப்போவதாக கூறியிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104592-russian-youth-begs-in-kancheepuram-temple-due-to-atm-card-issue.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் ஆய்வாளர் துளசி போன்றவர்களால்தான் காவல்துறை பெருமையடைகிறது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

காவல் ஆய்வாளர் துளசி போன்றவர்களால்தான் காவல்துறை பெருமையடைகிறது.....!

சும்மா அவசரப்படாதீங்கோ....

பாட்டீ, போன இடத்தில கண்கடை தெரியாமல் செலவழிச்சுப்போட்டு...

கஞ்சா பாட்டீயோ?

இன்ரநெற் காலத்தில... பாஸ்வேற், வங்கி அலுவல் எல்லாம், கையில... மோபைலில...

போலீசு... மாமூல் காசா இருக்கும். சொந்தக்காசை குடுப்பார்களா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சும்மா அவசரப்படாதீங்கோ....

பாட்டீ, போன இடத்தில கண்கடை தெரியாமல் செலவழிச்சுப்போட்டு...

கஞ்சா பாட்டீயோ?

இன்ரநெற் காலத்தில... பாஸ்வேற், வங்கி அலுவல் எல்லாம், கையில... மோபைலில...

போலீசு... மாமூல் காசா இருக்கும். சொந்தக்காசை குடுப்பார்களா என்ன?

காஞ்சிபுரம், பிச்சை

 

ஹாப்பி..... இன்று முதல்.... ஹாப்பி....  :D:
இந்தியா... இன்று முதல்... வல்லரசாயிடுச்சு.  ஹாப்பி....     :grin:

முனி.... அந்த, ரஷ்யா காரன், ஒரிஜினல்  பிச்சைகாரன் மாதிரியே...   இருக்கிறான்,
இந்தியாவில்... முன்பு கோவில் வாசல்களில், ஆகக்  குறைந்தது  50 பிச்சைகாரரை  காணலாம்.
இப்போ... இவன் ஒருத்தன், தனிய இருந்து  பிச்சை எடுப்பதால்.....
இந்தியா... பொருளாதாரத்தில் முன்னேறி விட்டதாக  உணர்கின்றேன். tw_yum:  :wink:

இப்போ.... இந்தியாவில்,  ஒரு அணா. இரண்டு அணா  என்று சில்லறைக்  காசை.... பிச்சை   கொடுக்காமல், 
அந்த அங்கிள்....  தாள் காசை,   பிச்சையாக  போடுகின்றதை பார்க்க...  உடம்பெலாம்,   "(F) புள்ளாய்  அரிக்குது." :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இப்படியானவர்களுக்கு உதவுவதும் போலிசின் வேலை என்பது தெரியாமல் குத்தி முறியிதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

காஞ்சிபுரம், பிச்சை

 

ஹாப்பி..... இன்று முதல்.... ஹாப்பி....  :D:
இந்தியா... இன்று முதல்... வல்லரசாயிடுச்சு.  ஹாப்பி....     :grin:

முனி.... அந்த, ரஷ்யா காரன், ஒரிஜினல்  பிச்சைகாரன் மாதிரியே...   இருக்கிறான்,tw_blush:
இந்தியாவில்... முன்பு கோவில் வாசல்களில், ஆகக்  குறைந்தது  50 பிச்சைகாரரை  காணலாம்.
இப்போ... இவன் ஒருத்தன், தனிய இருந்து  பிச்சை எடுப்பதால்.....
இந்தியா... பொருளாதாரத்தில் முன்னேறி விட்டதாக  உணர்கின்றேன். tw_yum:  :wink:

இப்போ.... இந்தியாவில்,  ஒரு அணா. இரண்டு அணா  என்று சில்லறைக்  காசை.... பிச்சை   கொடுக்காமல், 
அந்த அங்கிள்....  தாள் காசை,   பிச்சையாக  போடுகின்றதை பார்க்க...  உடம்பெலாம்,   "(F) புள்ளாய்  அரிக்குது." :grin:

போடுற தாள் காசைக் கூட கவனித்து இருக்கின்றிர்கள் சூப்பர்......!

எல்லாப் போலீசையும் சகட்டு மேனிக்கு குற்றம் சொல்லக் கூடாது.....! கொடுப்பதற்கு முதலில் மனம் ஒத்துழைக்க வேண்டும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர் மாயம்…! காவல்துறை தேடுதல் வேட்டை

 
 

காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் கடந்த 10-ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, பணம் கொடுத்து சென்னையில் உள்ள தூதரகத்துக்கு அனுப்பினார்கள். இப்போது அவரை காவல்துறையினர் தேடிவருவதால் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது காஞ்சிபுரம்.

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

 

ரஷ்யாவைச் சேர்ந்தவர் இவாஞ்செலின் பெர்ன்கோவ். இவர் கோயில்களைக் காண்பதற்காக கடந்த 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக 9-ம் தேதி இரவு 8.15க்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏ.டி.எம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏ.டி.எம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டார். கையில் பணம் இல்லாததால் காஞ்சிபுரத்தில் இரவு முழுக்க வலம் வந்தார். கடைசியில் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலிலில் படுத்து உறங்கிவிட்டார். கோயில் வாசலில் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை கண்ட அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

அவருக்கு இரக்கப்பட்டு கோவிலுக்கு வந்தவர்கள் பணத்தைப் போட்டார்கள். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் நிலைய காவலர்கள் அவரை விசாரணை செய்து, சென்னையில் உள்ள தூதரத்துக்கு அனுப்பினார்கள். அப்போது, அந்த இளைஞர் ரயிலில் ஏற்றிவிட வந்த காவலரிடம், இந்தப் பணம் செலவு ஆன பிறகு வந்தால், மீண்டும் பணம் கொடுப்பீர்களா? என்றார். ரஷ்ய இளைஞர் கேலி செய்வதாக எண்ணி அந்த காவலர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

இந்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்குச் சென்றது. ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நீண்டகால நட்பு இருக்கிறது. சென்னையில் உள்ள அதிகாரிகள் அவருக்குத் தேவையான உதவிகளை அளிப்பார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பிச்சை எடுத்த அந்த ரஷ்ய இளைஞர்,  ரஷ்ய தூதரகத்துக்குச் செல்லவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இதனால் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரஷ்யத் தூதரகம் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவரைப் பிடிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் இணைந்து அவரை தேடிவருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104865-russian-youth-who-begged-in-kancheepuram-is-missing.html

Link to comment
Share on other sites

''தொடர்ந்து பிச்சை எடுப்பேன்!'' - ரஷ்ய இளைஞர் தடாலடி

ஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ், ஏ.டி.எம் கார்டு லாக்காகிவிட்டதால், காஞ்சிபுரம் கோயிலில் கடந்த 10-ம் தேதி பிச்சையெடுத்தார். காவல்துறையினர் அவரை மீட்டு, பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பினார்கள். ஆனால், அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்துக்கு வரவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிச்சையெடுத்த ரஷ்ய இளைஞர்

 

போலீஸார் அந்த ரஷ்ய இளைஞரைத் தேடிவரும் நிலையில் சென்னை தி.நகரில் உள்ள போக் சாலையில் மற்றொரு டூரிஸ்ட்டுடன் அவரைப் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்துள்ளார். அந்தப் பத்திரிகையாளரிடம் ரஷ்ய இளைஞர் கூறியதாவது, ''எனக்கு ரஷ்ய தூதரக உதவித் தேவையில்லை. ட்ராவல் செய்வது பிடித்துள்ளது. அதற்காகத் தொடர்ந்து மக்களிடம் பிச்சையெடுப்பேன். இப்போது மீடியாக்களில் செய்தி வந்திருப்பதால் என்னைப் பார்த்தால் நிறைய பேர் பேசுகிறார்கள். அவர்களிடம் 100 ரூபாய் நான் கேட்கிறேன். இப்போது கொஞ்சம் பணம் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பிச்சையெடுப்பேன். பெங்களுரு செல்வது என் அடுத்தத் திட்டம்'' எனத் தெரிவித்துள்ளார். 

 

எவ்ஜினி பெர்டிகோவுக்கு இந்தியா வருவதற்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் கிடையாது. மனம்போன போக்கில் ட்ராவல் செய்வது மட்டும்தான் அவரின் இலக்கு. பெர்டிகோவின் கைகளில் முன்னதாக அவர் சென்று வந்த, நாடுகளின் கொடிகளைப் பச்சைக்குத்தியுள்ளார். சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியக் கொடியை பச்சைக்குத்தியிருக்கிறார். நவம்பர் 22-ம் தேதி வரை அவருக்கு இந்திய விசா உள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/104894-i-will-continue-begging---russian-tourist.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுப்பதையே ஒருவர் "ஹாபீ "யாக வைத்திருந்தால் என்ன செய்ய முடியும். யார் கண்டது இவர்தான் ரஷியாவில் மூன்றாவது கோடீஸ்வரர் என்று கூட செய்திகள் வரலாம். எதையும் ஏற்க மனசை திடப்படுத்தி வைத்திருக்க வேண்டும்......!  tw_blush:

பாவி...இனி அந்த போலீஸ்காரர் ஐந்து சதமும் பிச்சை போடாதபடி செய்து போட்டான்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் சொன்னான்.. நான் பிச்சை எடுக்கிறேன்.. பேட்டிக்கே பணம் வாங்கிய பலே ரஷ்ய இளைஞர்!

சிவனின் உத்தரவால் பிச்சை எடுக்கிறேன்-ரஸ்ய இளைஞர்-வீடியோ சென்னை: சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் பிச்சை எடுப்பதாகவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சென்னையிலும் பிச்சை எடுத்த போது பிடிபட்ட ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் தெரிவித்துள்ளார். ஏடிஎம்கார்டு முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் போனதாக காஞ்சிபுரத்திற்கு சற்றுலா வந்த ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தார். இந்த தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி உதவி ஆய்வாளர் துளசி அவரிடம் விசாரணை நடத்தி ரூ. 500 பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ரஷ்ய இளைஞர் பிச்சை எடுத்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இவாஞ்சலின் ரஷ்யா செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார். இந்நிலையில் நேற்று தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அமர்ந்து இவாஞ்சலின் பிச்சை எடுத்துள்ளார். நண்பரை பார்ப்பதற்காக காத்திருந்த போது அவர் பிச்சை எடுத்துள்ளார்.

பிடிபட்ட இளைஞர் இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் இவாஞ்சலினை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் சுற்றுலா வந்ததற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்றும் போலீசார் சரிபார்த்துள்ளனர். அவருக்கு அடுத்த மாதம் 11ம் தேதி வரை விசா உள்ளது.

இந்தியா பிடித்திருக்கிறது இதனிடையே பிச்சை எடுப்பது குறித்து சுவாரஸ்யமான தகவலை இவாஞ்சலின் கூறியுள்ளார். நான் இந்தியா வரும் போது இந்திய மதிப்பில் ரூ. 4000 மட்டுமே என்னிடம் இருந்தது. இந்தியா எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்கு பிச்சை எடுத்தால் அனைவரும் பணம் கொடுக்கின்றனர்.

தடுக்க முடியாது சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் நான் பிச்சை எடுத்தேன். நான் பிச்சை எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதில் புது டெக்னிக்கையும் வைத்துள்ளார்.

பேட்டிக்கும் பணம் தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புபவர்கள் ரூ. 10 தர வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம். மக்களும் அவருக்கு பணம் கொடுத்து செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளனர். இதே போன்று தொலைக்காட்சி ஊடகங்கள் பேட்டி எடுக்க சென்ற போது காசு கொடுத்தால் தான் பேட்டி என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு பேட்டி கொடுத்துள்ளாராம் இவாஞ்சலின்.

என்ன செய்யப் போகிறார்? இவாஞ்சலின் உதவி கேட்டால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும் என்று ரஷ்ய நாட்டு தூதரகம் கூறி விட்டது. இந்நிலையில் விசா முடியும் இவாஞ்சலின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமல் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-can-stop-me-from-begging-caught-russian-youth-evangelin/articlecontent-pf267637-298511.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.