Jump to content

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி


Recommended Posts

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி

 

பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த  ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.

அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.

பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன் .

மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என கூறினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Rahul-Gandhi-was-suffering-from-Prabhakaran-s-body

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறிவரும் புண்ணை ஏன் இப்படி சொறிந்து இன்புறுகிறார்களோ..?

இப்படியும் அவர்களுக்கு சுகமோ..? விந்தை மனிதர்கள்..!  smilie_frech_023.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் கூத்து தாங்காமல் இந்தியா திண்டாடி கடைசியில் பிரதமர் பதவி தங்கதாம்பாளத்தில் கிடைக்கபோவதை எண்ணி இப்படி பேசுகிறார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு நல்லவங்களடா நீங்க ..... இதை நாங்க எல்லோரும் நம்பவேனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதானால் இவர்களுடைய குரூர முகம் வெளிப்படையானது தெரிகிறது. ஈழத்தை தமிழர் அழிவதை  பார்த்து உள்ளூர ரசித்து சிரிக்கிறார்கள் என்பதின் அடக்க முடியாத வெளிப்பாடே இது.

இவர்கழும் , 2009 இல் ஐநா  பாதுகாப்பு சபை தமிழினப் படுகொலையைத் கருத்தில் எடுக்காமல் விட்டதிற்கு காரணம். 

அதன் பின்பு ஈழத்தமிழர் தேசத்திடற்கு பரிகார நீதியை தடுத்து வைத்திருப்பவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள்.  

ஈழத்து தமிழரிட்ற்கு அரசு அமைய விடமாட்டேன் என்று இவரே பகிரங்கமாக கூறியிருந்தார், அதை இணையத்தில் வாசித்த நினைவு உண்டு.  

ஆயினும், வரலாறு கிந்தியாவின் தலை விதியை சீனா வடிவில் தீர்மானிக்க தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க குடும்பம் செய்த பெரும் பாவம்: சஞ்சய், இந்திரா, ராஜிவ் அனைவருமே அவலச்சாவு.. இந்திரா கணவர் பெரோஸ் காந்தி கூட இளமையில் மரணம்.

இப்போது, பிரபாகரன் அல்ல. அவருக்காக சேர்த்தே கொல்லப்படட இலட்ச்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை அழித்தொழித்த கர்மவினை ஏழேழு ஜென்மத்துக்கும் வரும் என்ற நிதர்சனம் உணரப்பட்டுள்ளது...

அவ்வளவு தான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.

சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத சூழ்நிலையில் ஏன் பிரபாகரன் பற்றி கேள்வி கேட்டார்கள்? அல்லது  இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பார்கள்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமில்லாத சூழ்நிலையில் ஏன் பிரபாகரன் பற்றி கேள்வி கேட்டார்கள்? அல்லது  இன்னும் எத்தனை வருடத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டிருப்பார்கள்?
 

அவருக்காக சேர்த்தே கொல்லப்படட இலட்ச்சக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களை அழித்தொழித்த கர்மவினை ஏழேழு ஜென்மத்துக்கும் வரும் என்ற நிதர்சனம் உணரப்பட்டுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில், காந்தி குடும்பம் என்ற கட்டுக்கதையை விடுத்தது உங்களின் உண்மையான பெயரில் வெளியே வாருங்கள். பெயரில் கூட வேறு ஒருவரின் (உண்மையான காந்தியின்) என் அபகரிகரித்து ஹிந்திய  தேசத்தின் தலைமைத்துவத்தை அடைய முயறசிக்கிறீர்கள்.

காந்தியிடம் தனிமனித ஒழுக்க குறைபாடுகள் இருந்ததாயினும், காந்தி அதை மறைக்கவில்லை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டு,  பல தனிப்பட்ட தியாகங்களை செய்து, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியே   தலைமைத்துவத்தை அடைந்தார்.

காந்தி அரசியலில் ஈடுபட ஈர்ப்பில்லை என்று தெரிந்தவுடன், அவரின் பெயரை உங்களுடையை பாட்டி குடும்பம் காந்தியின் பெயரை புனைந்து திருடிக் கொண்டது.     

அடுத்து, என் உங்கள் பூட்டனார் நேரு பிறந்த இடத்தை இப்போதும் மறைக்கிறீர்கள்? உங்கள் பூட்டனாரே அதை மறைதத்தார் என்பது எல்லோருக்கும் ஏன் என்று விளங்க கூடியது.

http://indiaopines.com/jawaharlal-nehru-birth-place/

அது ஓர் சிவப்பு விளக்கு  பிரதேசம் என்பதால் தானே உங்கள் போட்டனர் பிறந்த இடத்தை பற்றிய ஓர் சிறு குறிப்பை கூட ஹிந்தியை அரச கோவைகளில் இருந்து உங்கள் பூட்டனாரின் காலத்தில் இருந்து நீக்கப்பட்டு வந்து கொண்டேயிருக்கிறது.

பொய்களினதும்  புரட்டுகளினதும் மீது தேசத்து தலைமைத்துவத்தை உங்கள் பூட்டனாரின் காலத்தில் இருந்து கட்டி எழுப்ப முயறசிக்கிறீர்கள்.

சிவப்பு விளக்கு  பிரதேசத்தில் பிறந்த ஒருவர் அல்லது அப்படிப்பட்டவரின் பரம்பரை  தலைமை வகிக்க நீங்கள் மக்கள் என்று கருதும் கூட்டம் ஏற்றகாது என்பது உங்களினதும் உங்கள் பூட்டனாரினதும் நம்பிக்கை.

தலைமைத்தும் எனப்து அதிலும் தேசத்தின் தலைமைத்தும் என்பது வருங்கால நம்பிக்கை மற்றும் தூர நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே மக்களால் ஏற்கப்படுகிறது என்பது உங்களுக்கு எனினும் விளங்கவில்லை.

உங்களால் பூட்டன்னர் பிரபதித்திற்கு 30 வருடங்களுக்கு முதலே தச்சு தொழிலாளியின்  மகன் அமெரிக்காவின் அதிபரானார்.

https://www.salon.com/2015/03/28/lincolns_civil_war_brilliance_the_real_story_of_the_political_savvy_that_helped_end_slavery/

இங்கு அயலில் உள்ள சிங்கள தேசத்தில் உடுப்பு தோய்க்கும் சாதியை சேர்ந்தவர் 89 இல் அதிபரானார். இங்கிலாந்து சென்று படிப்பதத்திற்கு வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை உதறி எறிந்து, தாழ்த்தப்பட்ட  சிங்கள மக்களின் முனீட்டத்திற்ககாக உழைத்து அந்த மக்களுக்கான மற்றும் சிங்கள தேசத்தின் நம்பிக்கையை கட்டி எழுப்பியே அவர் அதிபரானார்.    

அதே நிகரான தலைமைத்துவம், தமீழழ தேசியத் தலைவரிலும் இருந்தது. அவரின் அரசியல் ஆரம்ப காலங்களில், 60, 70, 80 களில், அவரின் சாதியை பாவித்து அரசியல் விசமிகள் அவரை தாக்கினார்கள்.     

அவரை தமிழீழ தேசம் தேசியத் தலைவராக, தமீழீழ தேசத்தின் நலன்களை எந்த ஓர் இடர் வரினும் வீட்டுக் கொடாதவர் என்பதை வெட்ட வெளிச்சமாக, தன்னிலும் அவர் உருவாக்கிய புலிகள் இயக்கத்திலும் மிகப் பெரிய சக்தியான உங்கள் கிந்தியாவுடன் முறுகுப்பட்ட போது, இனம் கண்டே ஈழத்த தமிழ்  தேசம் ஏற்றுக் கொண்டது. அவர் மக்களின் நபிக்கையை தனது அரசியல், ராணுவ செயற்பாடுகள் மூலம் கட்டி எழுப்பினார். தூர நோக்காக கிந்தியவுடனே ராணுவ யுத்தம் புரிய வேண்டி வரும் என்பதை தூர நோக்காக எடுத்து, புலிகள் இயக்கத்தையும் தமது இயலுமைக்கேற்ப தயார்படுத்தினார். எல்லாவற்றுக்கும்  மேலாக, ஈழத்தை தமிழ் தேசத்தின் போராடத்திட்டற்கான மன வலிமையையும், அதன் நீண்ட கால பயணத்திற்கு மக்களையும் தயார் படுத்தினார். அவர் புரையோடிக் போயிருந்த சாதி வேறுபாடுகளை களைவதற்கு நிறுவன மயப்பட்ட முயறசிகளை முன்னெடுத்தார். ஏனெனில் விடுதலை வேண்டிப் போராடும் தேசத்தில், அப்படிப்பட்ட ஒடுக்கு முறைகள் இருக்கக்கூடாது என்பதற்காகவே. இது Lincoln இன் அடிமையை இல்லாதொழிக்கும் போராடத்தின் அளவில் சிறிய வேறு ஓர் வடிவமே.

பிரபாவின் தலைமைத்துவமே, இனப் படுகொலையின் பின்பு கூட, ஈழத்தமிழ் தேசம் தனது இறைமையையோ, விடுதலையையோ எவருக்கேனும் விட்டுக்கொடுப்பதத்திற்கு இணங்கவில்லை.

இன்று கூட ஈழத்தமிழ் தேசதின் இறைமையை அந்த தேசத்தின் அனுமதியோடு பறிப்பதத்திற்கு பின்கதவாலேயே முயற்சிகள் உங்கள் உளவு துறை எடுக்கிறது.
                     
நேரு மவுண்ட் பேட்டன் மக்களுடனும் மற்றும் அந்த மக்களின் தோழிகளுடனும் ஜொள்ளு விட்டு பிரித்தானியரிடம் இருந்து அதிகாரத்தை அபகரித்தது விட்டு இந்திய நிலப்பரப்பை உங்கள் வீடு சொத்தாக கருதினீர்கள்.

உங்கள் பூட்டனாரின் ஜொள்ளு ஜின்னா விடம் பலிக்கவில்லை, அவர்க பாக்கிஸ்தானை பெற்றுக் கொண்டார்.   

சாதியை காந்தியும், உங்கள் பூட்டனார் நேருவும் வளர்த்தார்கள். சுய நிறைவு என்று சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தாழ்த்தினார்கள். அதே நேரத்தில் உயர் சாதி, மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினருக்கு சுய நிறைவு பெயராவில் மாத்திரமே, அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் வளந்தார்கள்.

தமிழகத்தின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பால், தேசமாக வேண்டிய இந்திய  நிலப்பரப்பு, ஹிந்திய தேசமாக சுருங்கி கொண்டது. தமிழகத்தின் சுதந்திர தனியரசு  போக்கை சீனாவை காட்டியும், பெயரளவில் மாநில சுயாட்சி என்ற எலும்புத் துண்டையும் வீசி ஒருவாறு தணித்தீர்கள்.

உங்கள் பரம்பரை புத்தி போகவில்லை, தலைவர் பிரபாவுடன் உங்களுடைய பாணியிலேயே திருட்டுத்தனமும், ஜொள்ளும்  விட்டீ ர்கள்.  ஆனால் உங்களின் பரிதாபம், தலைவர் பிரபா அவர்கள் நீங்களும் உங்கள் அடிவருடிகளாக உங்களுடைய உளவுத் துறைகளும் என்னென்ன ஜொள்ளுகளை மற்றும் திருட்டு தனங்களையும்   என்னென்ன சந்தர்பத்தில், என்னென்ன வடிவத்தில் விடுவீர்கள் என்பதை அறிந்து, உங்களுடடைய ஜொள்ளுகளை இலாவகமாக உங்களுக்கே திருப்பி விட்டார். அதை உங்களால் தாங்க முடியவில்லை.

உங்களுடைய பிராந்திய வல்லரசு கனவும் தகர்ந்தது.

எந்த வேளையிலும் தலைவர் பிரபா அவர்கள் அவரின் கொள்கைகைகளுக்கு குறுக்கீடாக வந்தவரை தான் எதிர்த்தார் அல்லது அழித்தார்.

ஒரு போதும் பேட்டை  ரௌடி தனமாக, தன்  கொள்கைகளை எதிர்த்தோரின் குடும்பத்தவரையோ அல்லது தேசத்தையோ சிதைக்கவோ அல்லது அழிக்கவோ எண்ணியதில்லை. அது உங்களுடைய தந்தையருக்கும் பொருந்தும்.

 ஆனால், உங்களின் பேட்டை  ரௌடி தனமாக தலைவர் பிரபாவையும், அவர் குடும்பத்தையும், அவர் பிரதிநிதித்துவபடுத்திய  மக்களையும் அழிப்பதற்கு சிங்களத்துடன் மட்டும் நீங்கள் கைகோர்க்கவில்லை, உங்களுக்கு எல்லா வல்லரசுகளின் நேரடி, வெளிப்படையான உதவிகளும் தேவைபட்டது. அப்படி உதவி வந்து கூட சிந்கதால் முடியாததா, நீங்களும் உங்கள் அடிவருடிகளான கேரளா நம்பூதிரி மாபியாக்களும் அப்பாவிகளை கொல்லும்  கிந்தியப் படைக்காளாக  நேரடியாக களத்தில் இறங்கினீர்கள். சீனாவை உங்கள் கேரளா நம்பூதிரி மாபியாக்களே இலங்கைத் தீவின் தென்கோடியில் கொண்டுவந்து இருத்தினார்கள், சிறிய புலிகள் அமைப்பை அழிப்பதற்கு.

இப்பொது, அம்பாந்தோட்டை துறைமுகமும், மாத்தளை விமான நிலையாம் யாருக்கு என்ற இழுபறியில் உங்களுடைய பேட்டை ரவுடி என்ற உண்மையான தோற்றத்தில் ஓர் பெரும் பகுதி கழடப்பட்டுவிட்டது. மிகுதி வெகு விரைவில் கழட்டப்படும்.

இவற்றை தமிழீழ தேசியத் தலைவர் எதிர்வு கூறினார். அனால் பேட்டை ரௌடியாக உங்கள் புத்தி மற்றும் மன நிலை இந்திய நில பரப்பு, என் கிந்தியாவின் நலன்களை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை.

உங்களுக்கும் உங்கள் குடுப்பதுதற்கும், உங்கள் அடி வருடிகளான கேரளா நம்பூதிரி மாபியாக்களுக்கும், மற்றும் உளவு துறையினருக்கும் பேட்டை ரௌடியாக இருப்பதற்கு கூட தகுதி இருக்கிறதா? இதில் பிராந்திய தலைமைத்துவம் வேறு.  

நீங்கள் முதலைக்கு கண்ணீர் வடிப்பது என்ற நீலிக் கண்ணீர் என்ற தோற்றப்பாடே தமிழக வாக்குகளிற்காக. அது மலையேறி, உச்சியில் இருந்து பாத்தாள்;அதில் விழுந்து சுக்கு நூறாகி விட்டது.

சிந்தியுங்கள், இந்தியா எனும் நிலப்பரப்பை இந்தியர்கள் என்று அழைக்கப்படுபவர்களே எற்றுக்கொண்டனரா?

சனத்தொகை கணிப்பிற்காக, அன்றைய பிரித்தானிய சாம்ராச்சியம் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோரை இந்தியர் என்று பெயரிடத்தின்  வழியாக  எவ்வாறு இந்தியர் ஓர் தேசமாக முடியும். அது கூட அ ந்நிய சக்தி ஒன்றின் மூலமாகவே சாத்தியமானது.

நீங்களும் உங்கள் ஆதி வருடிகளும் கிந்தியா என்ற தேசத்தை இந்தியா என்று பெயரிடப்பட்ட நிலப்பரப்பின் மக்களோடு ஒன்றாகவே பார்க்கிறீர்கள். அது ஓர் மாயை. இந்திய நிலப்பரப்பில் இறைமையுள்ள பல தேசங்கள் கிந்திய தேசத்தின் கோரப்பிடியில்  இருந்து விடுபட்டு சுதந்திரமாகவே, தனி அரசாகவே இருக்க விரும்புகின்றன என்பதே உண்மை.           

உங்களை சுய ஆய்வு செய்து, நீங்கழும் உங்கள் அடி  வருடிகளும் அரசு மற்றும் அரசியலில்  இருந்து ஒதுங்கினால் இந்திய நிலப்பரப்பிடற்கு முதல் செய்யும் மிகப் பெரிய உதவி ஆகும்.         

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.