Jump to content

காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்


Recommended Posts

காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றினுள் பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குறித்த பெண் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்!

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக வடமராட்சி பகுதியில் ஒரு குடும்பப் பெண் 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். அதற்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.

பின்னர் அவரால் தொடர்ந்தும் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்களின் ஊழியர்களும் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்து குறித்த பெண்ணைத் திட்டியுள்ளதோடு வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர்.

இதானல் பயந்துபோன குறித்த பெண் அருகிலுள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார்.

குறித்த நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு மணி நேரமாகியும்  வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாவட்டம் உள்ளிட்ட வட மாகாணத்தில் நுண் கடன் திட்டங்கள் என்ற பெயரில் சில நிதி நிறுவனங்கள் அப்பாவி மக்களை சிக்கலிலும் கஸ்டத்திலும் ஆழ்த்திவருவது அறிந்ததே. இந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித், வடபகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-woman-who-was-hiding-in-the-well

Link to comment
Share on other sites

போர் முடிந்ததும் நான் முந்தி நீ முந்தி என தெற்கில் உள்ள வங்கிகள் முண்டியடித்து கொண்டு வடபகுதியில் நுழைந்து (மக்களின் வெளிநாட்டு பணத்தை இலக்கு வைத்து)மக்களுக்கு கடன் கொடுப்பதாக சொல்லி ஆசைகளை காட்டி இறுதியில் மக்கள் பணம் செலுத்த முடியாமல் கஸ்டப்படுகிறார்கள். 

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் உள்ள உறவுகள் இன்று இல்லாவிட்டாலும் நாளை பணம் அனுப்புவார்கள் என்று அதிகளவு கடன் படுகின்றார்கள். சாதாரணமாக 15 லட்சம் கடன் படுகின்றார்கள். பெருள் வாங்க, வீடு கட்டுவதற்கு, சீதணம் கொடுப்பதற்கு, சாமத்திய வீடு செய்வதற்கு, என்று பல விசயங்களுக்கு கடன்படுகின்றார்கள். ஆனால் பெரும்பாலான வெளிட்டில் உள்ள உறவுகளால் இந்த கடனை அடைக்க முடியாது என்பதே உண்மை. வெளிநாட்டு உழைப்பை பொறுத்தவரை வரி பென்சன் காப்பீடு என எல்லாம் எடுத்து கையில் கிடைப்பது 1000 ல் இருந்து 2000. பெரும்பாலானவர்களுக்கு. நாட்டுக்கு போய் வரும் பெரும்பாலனாவர்கள் கிறிடிற் லைனில் கடன்பட்டு போவதை காண முடிகின்றது. வரும் உழைப்பில் வாடகை மோர்க்கேஜ் சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் தள்ளினால் கையும் கணக்கும் சரியா வருகின்றது. இதற்குள் ஒரு ஊடுபார்த்து ஒரு 200 , 300 அல்லது மிஞ்சினால் 500 அனுப்பலாம். அதுவும் ஒவ்வொரு மாதமும் அனுப்ப முடியாது. இந்தக் காசு அவர்கள் பட்ட கடனுக்கு வட்டிக்கு தான் உதவும். பத்து பதினைந்து வருடங்களுக்கு முதல் ஆயிரம் இரண்டாயிரம் கடன்பட்டவர்கள் இப்போது ஒரு லட்சம் இரண்டு லட்சம் கடன்படுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் வெளிநாட்டு உறவுகளின் உழைப்பால் இதை ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது. ஆனாலும் புரிய வைக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடனை கொடுத்தவர்கள் இனிமேல் கிணற்றை எட்டிபார்த்து பின்னர்தான் கடனாளி வீட்டில் இருக்கிறாரா என்று தேடிப்பார்ப்பார்கள்.

தகுந்த மீள்செலுத்தும் திட்டமும் அதற்கான வசதியும் உத்தரவாதமும் இல்லாமல் கடன்பெறுவது தற்கொலைக்குச் சமம் என்பது எனது அபிப்பிராயம். கடன் கொடுப்பவர்களும் இதுபற்றி ஆராய்ந்தபின்னரே கடனை வழங்கவேண்டும். நுண்கடன் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு பெரிய தொகைகளை கடனாக வழங்குவதையும் அதனால் கடனாளி வாழ்வா சாவா என்ற நிலைமைக்கு தள்ளப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. பெரிய பணத்தொகையை ஆளுமை செய்யும் அறிவு தராதரம் என்பன எல்லோரிடமும் இருக்குமா என்பதும் சந்தேகமே. அதிஸ்டலாபத்தில் பெரிய தொகை பணம் வெல்லும்போதுகூட பணத்தை எப்படி உரியமுறையில் பயன்படுத்துவது முதலிடுவது என்பதுபற்றி லாட்டரி கம்பனிகள் பணத்தை வென்ற அதிஸ்டசாலிக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி கற்றுக்கொடுப்பதை புலம்பெயர் நாடுகளில் காண்கிறோம்.

நுண்கடன் வழங்குவதன் உண்மையான நோக்கமே முதலீடுதான். நுண்கடன் வழங்குவோர் முதலீட்டின் தன்மை அது நடைமுறைக்குச் சாத்தியமான முதலீடுதானா கிடைக்கும் இலாபத்தில் கடனை மீள்செலுத்த முடியுமா என்பதற்கு  தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டு ஆய்வுசெய்தபின்னர்தான் கடன் வழங்கவேண்டும். கடனை வழங்கலாமா இல்லையா என்று முடிவுசெய்வதற்கும் இந்த ஆய்வு உதவும். பொறுப்பில்லாத முறையில் கடன்வழங்கும் கம்பனிகளை தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த மாகாணஆட்சியாளர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீடு வாங்கும்போது அவர்களால் அந்த கடனை கட்டமுடியுமா இல்லையா என்பதை அவர்களின் வருமானத்தை வைத்து அளவிடுவது போல் இந்த வடபகுதியில் புகுந்த வங்கிகள் என்ன அளவுகோலை வைத்து இவ்வளவு கடன்களை கொடுத்தார்கள் ?  இருக்கும் காணி நிலத்தை வைத்தே அவர்கள் கொடுத்துள்ளார்கள் போல் தெரிகிறது கடன் வராவிடில் நில அபகரிப்பு சட்ட ரீதியாக நடக்கும் போல் தென்படுது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.