Jump to content

ஒரு நிமிடக் கதை தேங்க்ஸ் வாத்தியாரே!


Recommended Posts

white_spacer.jpg
 

p38.jpg தேங்க்ஸ் வாத்தியாரே!

‘‘கதிர் பத்திரிகை நடத்தின ‘சூப்பர் ஹோம் செக்யூரிட்டி டிப்ஸ்’ போட்டியில ஐயாவோட டிப்ஸ் செலக்ட் ஆகி, 250 ரூபா பரிசும் கிடைச்சிருக்கு. இதோ பாரு!’’ என்று பெருமையோடு மனைவியிடம் அந்தப் புத்தகத்தை நீட்டினார் கருப்பையா.

‘‘வீட்டுக்குத் திருட வரும் கொள்ளையர்கள் முதலில் குறி வைப்பது பீரோவைத்தான். எனவே, தங்க நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருள்களை அரிசி டின்னுக்குள் பொட்டலங்களாகக் கட்டிப் போட்டுவிட்டால், பறிகொடுக்காமல் தப்பிக்கலாம். இது, என் சொந்த அனுபவக் குறிப்பாகும்!’’ என முழு விலாசத்துடன் அந்த டிப்ஸ் பிரசுரமாகியிருந்தது.

சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக சினிமாவுக்குப் போய்விட்டு, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அடுத்து என்ன டிப்ஸ் எழுதிப் பரிசு வாங்கலாம் என்ற சிந்தனையோடு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த கருப்பையா - கமலம் தம்பதியை மேஜை மீது படபடத்த வெள்ளைத்தாள் ஒன்று வரவேற்றது.

அதில்... ‘தலைவா! பத்திரிகையில உன் பாதுகாப்பு டிப்ஸ் படிச்சோம். அதிக சிரமம் இல்லாம உன் வீட்டைக் கொள்ளை அடிக்க முடிஞ்சுது. அரிசி டின்னில் கிடந்த பணப் பொட்டலங்களையும், நகைகளையும் சுலபமா எடுத்துக்கிட்டோம். ரொம்பத் தேங்க்ஸ் வாத்தியாரே! இப்படிக்கு, பேட்டை பக்கிரி’

http://www.vikatan.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி..... கடைசில "பேட்டை பக்கிரி" என்று தனது அட்ரஸ் சையும் குடுத்து தொலைச்சிட்டானே. இதுக்குத்தான் திருடனாயினும் எட்டு எழுத்து படிச்சிருக்க வேணும்......! tw_blush:

"பக்கிரி நாலு எழுத்து படிச்சவன் அதுதான் கடிதம் எழுதி வைத்திருக்கிறான்" .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.