Jump to content

சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள்


Recommended Posts

சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள்

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுவதால் தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கக் கழுதைகள், நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ள.

சீனாவில், கழுதையின் இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது .

ஆனால் சீனாவில் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையில் பெரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதனை பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆஃப்ரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காரணம், கழுதைகள் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வியலில் போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்காக பயன்பட்டு வருகின்றன.

அதிலும், குறிப்பாக அந்நாட்டிலுள்ள ஏழ்மையான சமூகங்களில் கழுதைகள் மிகவும் முக்கியமான விலங்குகள்.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கழுதையின் விலை இரட்டிப்பாகியுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் கழுதைகளை திருடுவதால், குடும்பங்கள் புதிய கழுதையை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கழுதையை இழந்த அந்தோனி

கென்யாவில் தண்ணீர் விநியோகிக்கும் தொழில் செய்து வரும் அந்தோனி மெளப் வனியமாவுக்கு 29 வயதாகிறது.

சுமார் நான்கு ஆண்டுகளாக கார்லோஸ் என்ற கழுதையை தன்னோடு வைத்திருந்தார் அவர்.

தொழிலும் நல்லபடியாக சென்றுகொண்டிருந்தது.

'' தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியில் இடமும், வீடு ஒன்றையும் வாங்கினேன், பள்ளிக்கான கட்டணங்களை செலுத்தியது மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தையும் நன்கு பார்த்து கொண்டேன்'' என்கிறார் இரு பிள்ளைகளுக்கு அப்பாவான அந்தோணி.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

கென்யா தலைநகர் நைரோபிக்கு வெளியே இருக்கும் ஒங்காட்டா ரோங்கை என்ற கிராம வாழ்வியல் சூழலில் அந்தோணியும், அவரது கழுதையும் ஒரு அங்கமாக இருந்தனர்.

''ஒரு காலை நேரத்தில் நான் விழித்தெழுந்த போது என்னுடைய கழுதை காணாமல் போயிருந்தது. ஊர் முழுக்க சுற்றித் திரிந்த பிறகு, அதன் தோல் உரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடைந்ததை கண்டுபிடித்தேன்'' என்று தான் மிகவும் நேசித்த கழுதையின் மரணத்தை பற்றி விவரிக்கையில் அந்தோணியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது.

தற்போது, வேறொரு கழுதை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ள அந்தோணி, தண்ணீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீல நிற பிளாஸ்டிக் ஜெர்ரி கேன்களை சுமந்து செல்லும் வண்டியை இழுப்பதற்காக பயன்படுத்துகிறார்.

தொழில் நன்றாக இருக்கும் நாளில் கூட, அவர் தினசரி சம்பாதிக்கும் மூன்று அல்லது நான்கு டாலர்களில் பாதி தொகையை கழுதையின் உரிமையாளருக்கு வழங்கிவிட வேண்டும்.

புதிய கழுதை ஒன்றை வாங்க பணமில்லாமல் சிரமப்படுகிறார் அந்தோணி.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

துன்பம்

கென்யாவில் கழுதைகளின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு , அந்நாட்டில் மூன்று கழுதை இறைச்சி வெட்டும் கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்துள்ளது.

அந்நிறுவனங்கள் தலா, ஒரு நாளைக்கு சுமார் 150 விலங்குகளை வெட்டி, அதன் இறைச்சியை பேக் செய்து குளிரூட்டி மற்றும் அதன் தோலை ஏற்றுமதிக்காக பதப்படுத்தும் திறன் கொண்டவை.

நைவாஷாவில் உள்ள 'ஸ்டார் பிரில்லியண்ட்' என்ற கழுதை தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், சமீபத்தில் கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கழுதைகள் தட்டையான உலோக தராசுகள் மீது தரதர இழுத்து எடை பார்க்கப்படுகின்றன. நேரடி எடை கொண்டு அவை விற்கப்படுகின்றன.

கழுதையின் இறைச்சி மற்றும் தோல் பதப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதற்கு முன் ஒரு துப்பாக்கியை கொண்டு அதன் தலையில் சுடப்படுகிறது.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும்

''முன்பு கழுதைகளுக்கு சந்தை இருக்கவில்லை. அப்போது, மக்கள் தங்களிடமிருந்த மாடுகளை விற்று வந்தனர். ஆடுகளை விற்று குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கட்டினார்கள்,'' என்கிறார் ஸ்டார் பிரில்லியண்ட் என்ற அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜான் கரியூகி.

''ஆனால், தற்போது மாடுகளை காட்டிலும் கழுதைகளை பொதுமக்கள் அதிகளவில் விற்று வருகிறார்கள் என்பதை நான் நேரிடையாக பார்க்கிறேன்.'' என்கிறார் அவர்.

சீனாவால் மிகப்பெரிய நெருக்கடி எதிர்கொள்ளவிருக்கும் கழுதைகள்; காரணம் என்ன?

''சீனாவினால்தான் தற்போது கழுதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு அதனால் பலருக்கு லாபம் கிடைக்கின்றது. முன்பு, கழுதைகளால் லாபம் எதுவும் கிடையாது.'' என்கிறார் அவர்.

சீன வியாபாரிகள் இந்த நடைமுறையை கண்காணிக்கிறார்கள். அதாவது, கழுதைகள் முறையாக பேக் மற்றும் பதப்படுத்தப்படுகின்றனவா என்று.

கழுதை சித்ரவதைக்கு எதிராக குரல்கள்

கழுதையின் தோல்கள் கொதிக்க வைக்கும்போது, பழுப்புநிறத்திலான ஜெலட்டின் என்ற ஒருவகை வழுவழு பொருளை உற்பத்தி செய்கிறது. அது, சீனாவின் பிரபலமான ஆரோக்கிய உணவுகள் மற்றும் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்யும் எஜியோ என்ற பொருட்களை தயாரிக்க அத்தியாவசிய மூலப்பொருளாக இருக்கிறது.

ஆனால் கழுதைகள் நடத்தப்படும் விதம் விமர்சனங்களுக்குள்ளாகிறது.

இந்த கழுதைகள் கொல்லப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில், மிகவும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. இவ்விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்களையும் பிரிட்டனைச் சேர்ந்த கழுதை நல அறக்கட்டளை ஒன்றும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த 'ஆக்ஸ்பெக்கர்ஸ்' என்ற அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் புலனாய்வு செய்தியாளர்கள் சிலரும் கண்டறிந்துள்ளனர்.

கழுதைகளின் தோலை எளிதாக உரிப்பதற்கு ஏதுவாக, அவை பட்டினி போடப்படுகின்றன என்றும் , முனை மழுங்கிய ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்படுகின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச அழுத்தம் இப்போது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார் , இந்த கழுதை உடல் பொருட்கள் வர்த்தகத்தை, அது ஒழுங்குபடுத்தப்படும் வரை நிறுத்த பிரசாரத்தை முன்னெடுக்கும் 'டாங்க்கி சேன்க்ச்சுவரி' என்ற அமைப்பைச் சேர்ந்த மைக் பேக்கர்.

உகாண்டா, தான்சானியா, போட்ஸ்வானா, நைஜர், புர்க்கினோ ஃபாஸோ மாலி மற்றும் செனகல் போன்ற நாடுகள் , சீனா தங்கள் நாடுகளிலிருந்து கழுதை உடல் பொருட்களை வாங்குவதற்குத் தடை விதித்துள்ளன.

 

http://www.bbc.com/tamil/global-41544758

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.