Jump to content

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்


Recommended Posts

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்

 

 

தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில்
 

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா வை கடந்த நான்காம் திகதி கணக்கின் உரிமையாளர் மீளப் பெற்றுள்ளதுடன் மீண்டும் 8 மில்லியன் ரூபாவை கடந்த ஆறாம் திகதி மீளப் பெறுவதற்கு முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருடன் பணத்தை மீளப் பெறுவதற்காக குறித்த வங்கிக்கு வந்த மற்றுமொருவரை கைது செய்வதற்காக வங்கியின் சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

http://newsfirst.lk/tamil/2017/10/தாய்வான்-வங்கியில்-கொள்/

Link to comment
Share on other sites

லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் கைது

 


லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் கைது
 

தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கியின் தனியார் கணக்கொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி 60 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பணம், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் தாய்வானின் குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது.

ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து இலங்கை வங்கியின் தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கு முயன்ற கணக்கு உரிமையாளர் ஜே.சி.நம்முனி என்பவர் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

http://newsfirst.lk/tamil/2017/10/லிட்றோ-கேஸ்-நிறுவனத்தின்/

Link to comment
Share on other sites

“ஷலில முனசிங்க இலங்கை குடியுரிமையற்றவர்”
 

தாய்வான் நாட்டு வங்கியொன்றில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க இலங்கை பிரஜை அல்ல என இரகசிய பொலிஸார் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவுக்கு இன்று(11) அறிவித்துள்ளனர்.

இவர் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் எனவும், அவருக்கு இலங்கையில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்டுள்ள விசா கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஷலில-முனசிங்க-இலங்கை-குடியுரிமையற்றவர்/175-205406

Link to comment
Share on other sites

தாய்வான் அதிகாரிகள் இலங்கை வருகை
 

image_8730327a18.jpgதாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று (11) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரும் வங்கி அதிகாரி ஒருவரும் விசாரணைகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

அவர்கள், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரவினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகைப் பணத்தில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கை உட்பட, கம்போடியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமது வங்கிக் கணக்குகளில் ஊடுருவி, கொள்ளையிடப்பட்ட பெருந்தொகைப் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுமார் 5 இலட்சம் அமெரிக்க டொலர் வரையில், இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஃபா ஈஸ்டர்ன் இன்டர்நெஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

கணினிகளுக்குத் தீங்கிழைக்கும் வைரஸ்கள், தமது நிறுவனத்தின் கணினிகளுக்குள் பரவியுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச குற்றவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கு தாய்வானின் நிதி முகாமைத்துவ ஆணைக்குழுவும் குற்றப் புலனாய்வுப் பணியகமும் தீர்மானித்துள்ளன.

அத்துடன், தாய்வானின் தகவல் பாதுகாப்புப் பொறிமுறையை உறுதிப்படுத்தி, விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, அந்நாட்டுப் பிரதமர் லேய் சிங் டே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இது பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள தாய்வான் நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தாய்வான்-அதிகாரிகள்-இலங்கை-வருகை/150-205415

 

Link to comment
Share on other sites

முனசிங்க பதவிநீக்கம்
 

image_33037ef944.jpg‘லிட்ரோ காஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்க பதவிநீக்கப்பட்டார் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், அவர் கடந்த திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே, அவரை பதவிநீக்கம் செய்துள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/முனசிங்க-பதவிநீக்கம்/175-205413

Link to comment
Share on other sites

தாய்வான் வங்­கிக் ­க­ணக்­கினை ஹெக் செய்து நிதி கொள்ளை: லிட்ரோ காஸ் தலைவருக்கு 25 வரை விளக்கமறியல்

08-92cd5b3d52f883bc345a9395816ec6d80cb3b8fb.jpg

 

முக்கிய புள்ளிகளுக்கு பணம் பகிர்ந்தளிப்பு;குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம்
(எம்.எப்.எம்.பஸீர்)

நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் தலை மைக் கணினி கட்­ட­மைப்­புக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக

ஊடு­ருவி, தாய்­வானின் ஈஸ்டன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் பணத்தை கொள்­ளை­யிட்­டமை தொடர் பில் கைது செய்­யப்­பட்­டுள்ள லிட்ரோ காஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் சலில முன­சிங்க , இரா­ணுவ அதி­கா­ரியின் மக­னான சமிந்த நம்­முனி

ஆகிய இரு­வ­ரையும் எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்ட கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அனை­வ­ரையும் உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜ­ராக்­கு­மாறும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

இந்த நிதி மோசடி கொள்ளை சம்­ப­வத்தில் கிடைத்த பங்கில் ஒரு பகுதி முக்­கிய புள்­ளிகள் பல­ருக்கு பகி­ரப்­பட்­டுள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பொலிஸார் சந்கேம் வெளி­யிட்­டுள்­ளனர். இது குறித்தும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் போலி நாணயத் தாள்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுகத் அம­ர­சிங்க மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் மார­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­ப­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த சந்­தேகம் எழு­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

 இந்த பணக் கொள்­ளையில் தனக்கு கிடைக்கப் பெற்ற பங்கில் 20 இலட்சம் ரூபா மட்­டுமே தன்­னிடம் இருப்­ப­தாக சலில முன­சிங்க குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் வாக்கு மூலம் அளித்­துள்ள நிலை­யி­லேயே இந்த சந்­தேகம் மேலெ­ழு­வ­தாக அந்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

 இந்த வங்கி கட்­ட­மைப்பு ஊட­றுப்பு மற்றும் பணக் கொள்­ளையில் சலில முன­சிங்­க­வுடன் தொடர்­பு­பட்ட கொள்­ளையின் பகுதி 300 இலட்சம் ரூபா என குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்ப்ட்­டி­ருந்­தது.

குறித்த பணத் தொகையை சலி­லவும், முத­லா­வது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரியின் மக­னான சமிந்த நம்­மு­னியும் இணைந்து எடுத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்­சி­களும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிடியில் உள்ள நிலையில் தன்­னிடம் 20 இலட்சம் ரூபா மட்­டுமே உள்­ள­தாக சலில வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டுள்­ளதால் மிகுதி 280 இலட்சம் தொடர்பில் பாரிய சந்­தே­கங்கள் எழு­வ­தாக குறித்த பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

 இந் நிலையில் இந்த நிதி கொள்ளை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரியின் மக­னான சமிந்த நம்­முனி மற்றும் லிட்ரோ காஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் சலில முன­சிங்க ஆகியோர் நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது அவ்­வி­ரு­வ­ரையும் எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்டார். அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் தொடர்­பு­பட்­டுள்ள ஒவ்­வொ­ருவர் தொடர்­பிலும் விஷேட அவ­தானம் செலுத்­து­மாறும் அவர்­க­ளையும் உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு நீதிவான் ஆலோ­சனை வழங்­கினார்.

இது­வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் தலை­மை­யக கணினி கட்­ட­மைப்­புக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக ஊடு­ருவி, தாய்­வானின் ஈஷ்டன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணக்கில் இருந்து மோச­டி­யான முறையில் கொள்­ளை­யி­டப்­பட்ட மொத்த பணப் பெறு­மதி 69.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

 எனினும் அதில் ஒரு­ப­கு­தியே இலங்கை வங்­கியின் நியூயோர்க் கிளை ஊடாக இலங்­கைக்கு பறி­மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும், மற்­றைய பணத் தொகை எந்த நாட்­டுக்கு எவ்­வாறு பரி­மாற்­றப்­பட்­டது என்­பது குறித்து துல்­லி­ய­மாக அறிய கணினி ஆதா­ரங்­களை மையப்­ப­டுத்தி விசா­ரித்து வரு­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரிகள் கோட்டை நீதி­வா­னுக்கு நேற்று அறி­வித்­தனர்.

கடந்த 6 ஆம் திகதி, ஜனக சமிந்த நம்­முனி எனும் முத­லா­வது சந்­தேக நபர் 80663687 எனும் தனது வங்­கிக்­க­ணக்­கிற்கு அமெ­ரிக்க டொலர்­களில் பணம் கிடைக்­க­வேண்டி இருப்­ப­தா­கவும் அதனை பரி­சீ­லிக்­கவும் இலங்கை வங்­கியின் தனியார் வங்­கிகள் தொடர்­பி­லான முகா­மை­யாளர் ஜகத் அனு­ர­சிறி குருப்­பு­விடம் கோரி­யுள்ளார். . இத­னை­ய­டுத்து நம்­மு­னியின் வங்­கிக்­க­ணக்கை பரி­சீ­லனை செய்­த­போது, 1103960 அமெ­ரிக்க டொலர்கள் அந்த கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ள­மையை முகா­மை­யாளர் கண்­டு­கொண்­டுள்ளார்.

 இந் நிலையில் அந்த பணத்தில் 3 கோடி ரூபாவை உடனே எடுக்­கவும் மேலும் 5 கோடி ரூபாவை என்.டி.பி. வங்­கியில் உள்ள கணக்­கொன்­றுக்கு மாற்­றவும் இதன்­போது நம்­முனி வங்­கியைக் கோரிய போதும் உட­ன­டி­யாக அதனை செய்ய முடி­யாது எனக் கூறி அதற்­கான விண்­ணப்­பத்தை நிரப்பித் தரு­மாறு முகா­மை­யாளர் அவரை அன்­றைய தினம் திருப்பி அனுப்­பி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து மறு நாள் அதா­வது ஒக்­டோபர் 5 ஆம் திகதி, இலங்கை வங்­கியின் அமெ­ரிக்க டொலர்கள் கணக்கை மேற்­பார்வை செய்யும் நியூயோர்க் நகரில் உள்ள வங்­கியின் கொழும்பு கிளையில் சேவை­யாற்றும் அசேல என்­பவர், இலங்கை வங்­கியின் தனியார் வங்­கிகள் தொடர்­பி­லான முகா­மை­யாளர் ஜகத் அனு­ர­சி­ரியை தொடர்­பு­கொண்­டுள்ளார்.

 இதன்­போது நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ரு­வி­யுள்ள ஒருவர் 1103960 அமெ­ரிக்க டொலர்­களை 80663687 எனும் வங்­கிக்­க­ணக்­குக்கு பறி­மாற்­றி­யுள்­ள­தா­கவும் அந்த தொகை­யா­னது போலி­யான பரி­மாற்று எனவும் அது தொடர்பில் சிட்டி வங்கி மின்­னஞ்சல் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அசேல, முகா­மை­யாளர் ஜகத் அனு­ர­சி­ரியின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­துள்ளார்.

 இது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்டு, கடந்த நான்காம் திகதி வங்­கிக்கு வந்து பணம் பெற்­றுக்­கொள்ள முற்­பட்ட, நம்­முனி என்­பவர் மீள வங்­கிக்கு வந்த போது பொலி­ஸாரின் உத­வி­யுடன் கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் வங்கி அதி­கா­ரி­க­ளினால் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

 தாய்வான் அர­சாங்கம் சர்­வ­தேச பொலிஸார் ஊடாக மின்­னஞ்­சல்­மூலம், இலங்கை பொலி­ஸாரின் சர்­வ­தேச கிளைக்கு தகவல் பரி­மாற்­றி­யுள்­ளது. தாய்­வனின் கொமர்ஷல் சர்­வ­தேச வங்­கியின் சர்­வ­தேச கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி நபர் ஒருவர் ' ஸ்விப்ட் தகவல்' ஊடாக 6010400 டொலர்­களை மோச­டி­யான முறையில் பல வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு பறி­மாற்­றி­யுள்­ள­தாக அந்த மின்ஞ்சல் ஊடாக கூறப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இவை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் மேல­திக விசா­ர­ணை­களை நடாத்தி சந்­தேக நபர்­களைக் கைது செய்­தனர். அதன்­பின்னர் தொடர்ந்த விசா­ர­ணை­களில், கைதான முதல் சந்­தேக நப­ரான நம்­மு­னியின் அமெ­ரிக்க டொலர் கணக்­கிற்கு இந்­தி­யாவைச் சேர்ந்த டுட்­டா­லியா எனும் நபர் அமெ­ரிக்க டொலர்­களை வைப்பில் இடு­வ­தா­கவும், அதில் 50 வீததை குறித்த இந்­தி­ய­ருக்கும் 20 வீதத்தை தனக்கும் தரு­மாறும் மிகுதி 30 வீதத்தை வைத்­துக்­கொள்­ளு­மாறும் சலில முன­சிங்க முதல் சந்­தேக நப­ரான நம்­மு­னிக்கு தெரி­வித்­துள்­ள­மையை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கண்­ட­றிந்­தனர்.

 தலை நகரில் உள்ள பிர­பல ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் இரு இந்­தி­யர்­க­ளுக்கு ஒன்­றரை கோடி ரூபாவை சலில முனசிங்க வழங்கியமை தொடர்பிலும், அவை இந்த கொள்ளை தொடர்பிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் தகவல்களை சேகரித்துள்ளதாக நீதிவானிடம் குறிப்பிட்ட விசாரணையாளர்கள், அந்த இந்தியர்கள் இருவரும் தற்போது பணத்துடன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டனர்.

இந்த நிலையிலேயே தற்போது கணினி சாட்சியங்களை மையபப்டுத்தி விஷேட விசாரணைகளில் வ பலர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

 விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் அனைத்து சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான், குற்றத்தின் பாரதூரம் கருதி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்து அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-12#page-1

Link to comment
Share on other sites

தாய்­வான் வங்­கி­யில் பண மோசடியில் முக்­கிய புள்­ளி­க­ளுக்­கும் தொடர்பா?

‘திடுக்’ தக­வல்­களை வெளி­யி­டு­கி­றது குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு

 
 
 

தாய்­வான் வங்­கி­யில் இணை­ய­வழி மோச­டி­யூ­டா­கத் திரு­டப்­பட்ட பணத்­தில் ஒரு பங்கு மாத்­தி­ரமே லிட்றோ எரி­வாயு நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலை­வ­ரி­டம் உள்­ளது.

எஞ்­சிய பங்­குப் பணம் அர­சின் முக்­கிய புள்­ளி­கள் உள்­ளிட்ட பல­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­கம் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இந்­தி­யர்­கள் இரு­வர் பங்­குப் பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு நாட்­டை­விட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­தா­க­வும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அமெ­ரிக்­கா­வின் நியூ­யோர்க் நக­ரி­லுள்ள சிட்டி வங்­கி­யின் தலை­மை­யக கணி­னிக் கட்­ட­மைப்­புக்­குள் முத­லில் ஊடு­ரு­வல் நடந்­துள்­ளது. அத­னூ­டாக தாய்­வா­னின் ஈஷ்டன் வங்­கி­யின் கணக்­கி­லி­ருந்து 69.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் திரு­டப்­பட்­டுள்­ளது.

இதில் ஒரு சிறு­ப­குதி, நியூ­யோர்க்­கில் உள்ள இலங்கை வங்­கிக் கிளை­யின் ஊடாக இலங்­கைக்கு பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய பணம் எந்த நாடு­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்­பில் பன்­னாட்­டுப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

கடந்த 6ஆம் திகதி ஜனக சமிந்த என்­ப­வர் இலங்கை வங்­கிக்­குச் சென்று தனது வங்­கிக் கணக்­குக்கு அமெ­ரிக்க டொலர்­க­ளில் பணம் கிடைக்­க­வேண்­டி­யி­ருப்­ப­தாக வங்­கி­யின் முகா­மை­யா­ளர் ஜகத் அனு­ர­சி­றி­யி­டம் கோரி­யுள்­ளார்.

அவ­ரது வங்­கிக் கணக்­கைப் பரி­சீ­லித்­த­போது 11 லட்­சத்து 39 ஆயி­ரத்து 60 அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருந்­தது.

அந்­தப் பணத்­தில் 3 கோடி ரூபாவை உடனே எடுக்­க­வும் மேலும் 5 கோடி ரூபாவை என்.டி.பி. வங்­கி­யில் உள்ள கணக்­குக்கு மாற்­ற­வும் அவர் வங்கி முகா­மை­யா­ள­ரைக் கோரி­யுள்­ளார். அதற்­கு­ரிய விண்­ணப்­பத்தை மேற்­கொள்­ளு­மாறு முகா­மை­யா­ளர் அவ­ருக்கு கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில், நியூ­யோர்க்கில் உள்ள இலங்கை வங்­கிக் கிளை­யி­லி­ருந்து இங்கு மின்­னஞ்­சல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அதில், இணைய ஊடு­ரு­வல் மூலம் பணம் திரு­டப்­பட்­டுள்ள விட­யம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இலங்கை வங்­கி­யின் கிளைக்கு பணம் பரி­மாற்­றப்­பட்­ட­மை­யும் அறி­விக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து உஷா ர­டைந்த இலங்கை வங்­கிக் கிளை­யின் முகா­மை­யா­ளர் பொலி­ஸா­ருக்கு தக­வ­லைத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார். முதல் நாள் வங்­கி­யில் வந்து பணத்­தைப் பெற்­றுச் சென்ற ஜனக சமிந்த வங்­கிக்கு மீண்­டும் வந்­த­போது பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

அவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில், லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர், இந்­தி­யா­வைச் சேர்ந்த டுட்­டா­லியா என்­ப­வர் அமெ­ரிக்க டொலர்­களை வங்­கி­யில் வைப்­பி­லி­டு­வார். அவ­ருக்கு 50 சத­வீ­தத்­தை­யம், 30 சத­வீ­தத்தை தன்னை (ஜனக சமிந்த) எடுத்­துக் கொள்­ளு­மா­றும், 20 சத­வீ­தத்தை தனக்கு (லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர்) தரு­மா­றும் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.
கொழும்­பி­லுள்ள பிர­பல ஐந்து நட்­சத்­திர விடு­தி­யில் வைத்து, இரு இந்­தி­யர்­க­ளுக்கு லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர் பணம் வழங்­கி­யுள்­ளார். இந்­தி­யர்­கள் இரு­வ­ரும் அந்­தப் பணத்­து­டன் நாட்­டை­விட்டுத் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

இதே­வேளை லிட்றோ நிறு­வன முன்­னாள் தலை­வ­ருக்கு 300 லட்­சம் ரூபா பணம் கிடைத்­துள்ள நிலை­யில், 20 லட்­சமே தன்­னி­டம் இருப்­ப­தாக அவர் வாக்­கு­மூ­லம் வழங்­கி­யுள்­ளார்.

எஞ்­சிய பணம் அர­சின் பெரும் புள்­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில் சந்­தே­கம் எழுந்­துள்­ள­தாக, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/36291.html

Link to comment
Share on other sites

தாய்வான் வங்கி மோசடி: $1.3 மில். மீட்கப்பட்டது
 

தாய்வான் வங்கியொன்றிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக, இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையிடப்பட்ட 1.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பணத்தை மீட்டுள்ளதாக, இலங்கை அதிகாரிகள் நேற்று (12) தெரிவித்தனர். 

தாய்வான் வங்கியின் கட்டமைப்புக்குள் இணைய வழியாகப் புகுந்த கொள்ளைக் குழுவொன்று, 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் திருடியது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கொள்ளையிடப்பட்ட பணம், ஐக்கிய அமெரிக்கா, கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், கொழும்பிலுள்ள இரண்டு வங்கிகளில், பணத்தை மீளப்பெற முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அதிலொருவர், இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் எனவும், மற்றையவர் இரண்டு நாடுகளினதும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் எனவும் தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும், இந்தியர் இருவரே பணத்தை அனுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், விசாரணைகளின் வீச்சமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

“கடந்த வாரத்தில், பணப்பரிமாற்றம் இடம்பெற்றபோது, இரண்டு இந்தியர்களும், கொழும்பில் இருந்தனர். ஆனால் அதன் பின்னர், அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்” என, பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட பணத்தைப் பரிமாற்றுவதற்கான ஏற்பாட்டை, இந்தியர்கள் செய்தனர் எனவும், இதில் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு, பணத்தின் ஒரு பங்கு கிடைக்குமெனவும் இருந்தது என, பொலிஸார் தெரிவித்தனர். இந்த இந்தியர்களின் அடையாளம் தொடர்பான விவரம், இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது என, பொலிஸார் குறிப்பிட்டனர். 

கொள்ளையிடப்பட்ட 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெரும்பகுதியை, ஏற்கெனவே மீட்டுவிட்டனர் என, தாய்வான் அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தாய்வான்-வங்கி-மோசடி-1-3-மில்-மீட்கப்பட்டது/150-205492

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.