Jump to content

கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்


Recommended Posts

கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயின் பிரதமர் மடியானோ ரஜோய்படத்தின் காப்புரிமைEPA Image captionகேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது.

கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்ளார்.

மேலும் , கேட்டலோனியா பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையை இடை நிறுத்தப்படும் சாத்தியக்கூறையும் தான் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

'எல் பெய்ஸ்' செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியொன்றில், இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்படும் எந்த ஒரு மத்யஸ்த முயற்சியையும் ரஜாய் நிராகரித்தார்.

முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள், ஸ்பெயினில் ஒற்றுமை கோரி பேரணி நடத்தினர்.

கடந்த ஞாயிறு அன்று கேட்டலன் சுந்திரத்திற்காக நடந்த பிரச்சனைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் இது நடந்தது.

செழிப்பான வட-கிழக்கு பகுதியான கேட்டலோனியாவில், உள்ள 23 இலட்சம் மக்களில், வாக்குப்பதிவில் பங்கேற்ற 90 சதவிகிதம் பேர், சுதந்திரம் வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில் 43 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகின.

இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், சில வாக்குப்பெட்டிகள் ஸ்பெயின் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவிற்கு ஸ்பெயின் நீதிமன்ற அளித்திருந்த தடையினால், வாக்களிக்க வருபவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்ற போது, கிட்டத்தட்ட 900 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 33 காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

"சுதந்திரத்துக்கான எந்த ஒரு பிரகடனமும் எங்கும் இட்டுச்செல்லாது என்பதை அரசு உறுதி செய்யும்" , என்று 'எல் பெய்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராஜாய் கூறினார்.

தன்னாட்சி பெற்ற ஒரு பிரதேசத்தின் நிர்வாகத்தில் தலையிட தேசிய நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் ஸ்பெயினின் அரசியல் சட்ட 155வது பிரிவைப் பிரயோகிக்க அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்டதற்கு, " சட்டத்துக்குட்பட்ட எந்த வழிமுறையையும் பயன்படுத்துவதை தான் நிராகரிக்கவேயில்லை" என்றார் ரஜாய்.

கேட்டலோனியாவில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடக்கும் முன்பாக, அங்கு நிலை நிறுத்தப்பட்ட கூடுதல் போலிசாரை, இந்த நெருக்கடி சூழல் தீரும்வரை அங்கேயே இருத்தி வைக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

அதிகரித்துவரும் இந்த அரசியல் நெருக்கடி காரணமாக தேசியத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த தான் உத்தரவிடப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்பெயின் நீதிமன்றம், திங்களன்று நடைபெறுவதாக இருந்த, கேட்டலன் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோனின் உரை, செவ்வாயன்று, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த முறை கேட்டலன் நாடாளுமன்றம் கூடும் போது, ஒருதலைபட்சமாக, அது சுதந்திரத்தை அறிவிக்கும் என்ற ஊகம் உள்ளது.

இந்நிலையில், கேட்டலோனியாவின் முன்னாள் தலைவரான அர்தர் மாஸ் , ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறுகையில், `கேட்டலோனியா, தனியாக பிரிந்து செல்லுவதற்கான உரிமையை பெற்றுவிட்டது என்றாலும் கூட, அது இன்னும் உண்மையான சுதந்திரத்திற்கு தயாராகவில்லை` என்றார்.

மெட்ரிட் சாலைகளில் குவிந்துள்ள மக்கள்படத்தின் காப்புரிமைAFP

வாருங்கள் பேசுவோம்

சனிக்கிழமையன்று ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒற்றுமையான ஸ்பெயினுக்காக குரல் எழுப்பினர்.

கேட்டலன் நகரான பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் நடந்த ஆர்பாட்டங்களில், அரசியல் தலைவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வெள்ளைநிற ஆடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ''அரசியல்வாதிகளைவிட மிகவும் மேன்மையானது ஸ்பெயின் நாடு`' , `'வாருங்கள் பேசுவோம்'` உள்ளிட்ட பல்வேறு வாசகங்களடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அரசியல் நிலையற்ற தன்மையால், கேட்டலனில் உள்ள வணிக நிறுவனங்கள், அங்கிருந்து கிளப்புவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அளிக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-41541817

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.