Jump to content

என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!


Recommended Posts

என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!

 

white_spacer.jpg

சிறுகதை
என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! white_spacer.jpg
title_horline.jpg
 
ஜ.ரா.சுந்தரேசன்
white_spacer.jpg

p38b.jpg றுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா?

இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே... சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு!

அந்த ரெண்டிலே இது எந்த ரகம்னு புரியலே!

படவா, அவனைச் செருப்பைக் கழட்டி அடிக்கணும் போல ஆத்திரம் ஆத்திரமா வருது! அவனும் அவன் கொள்ளிக் கண்ணும்!

ஒரே வார்த்தை... ‘அவர் வெளியிலே போயிருக்கார். எப்ப வருவார்னு தெரியாது. நீங்க அப்புறம் வேணா போன் பண்ணிக் கேட்டுட்டு வாங்க’னு பட்டுக் கத்தரிச்சாப்ல சொல்லியிருக்கலாம்.

ஏறக்குறைய அதுமாதிரிதான் நான் சொன்னேன்.

ஆனால், அவன் மனசிலே கள்ளத்தனம்! சில பேருடைய விஷமம் மூஞ்சியிலே தெரியறதில்லை. பரம சாது மாதிரி இருப்பார்கள். ஆனால், உடம்பெல்லாம் வக்கிரம்!

அவன் கேட்டான்... ‘‘மொபைல் இல்லை. உள்ளே வந்து போன் பண்ணிக்கட்டுமா?’’

‘அவர் மறதியா மொபைலை இங்கேயே வெச்சுட்டுப் போயிட்டார்’னு எதையாவது சொல்லிச் சமாளிச்சிருக்கலாம். எனக்குத்தான் மூளையே கிடையாதே! ‘ஆஹா, தாராளமா வந்து பண்ணிக்குங்க’ன்னு வழி விட்டுட்டேன்.

வீட்டில் தனியாக இருக்கிற ஒரு பொம்பளை ஜாக்கிரதையா இருக் கத் தெரிஞ்சு வெச்சிருக்கணும் இந்தக் காலத்திலே! அதுவும் சென்னை மாதிரி சிட்டியில் நிறையவே சோதனைகள் வரும். தனியா ஒருத்தி - கல்யாணம் ஆகாதவளோ, ஹவுஸ் வொய்ஃபோ - எப்போ... எங்கே தனியா இருப்பாள்னு சில நாய் களுக்கு நல்லாவே மோப்பம் பிடிக்கத் தெரியும்.

ஊதுவத்தி வியாபாரம், சில்ட்ரன்ஸ் என்சைக்ளோபீடியா, கூரியர் சர்வீஸ், ரெகுலர் போஸ்ட், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் டோர் டெலிவரி, கோயில் நன்கொடை, எம்இஎஸ், டெலிபோன் இலாகா, கம்ப்யூட்டர் - டி.வி. சர்வீஸ் காரர்கள், பிளம்பர்... ஹப்பா! எத்தனை எத்தனை! வீடுன்னா லேசா? அதுவும் ஒரு ஆபீஸ் மாதிரி காலையிலேர்ந்து பரபரப்பா இருக்கே! எந்தப் புத்துல எந்தப் பாம்போ? என்ன வேஷத்துல எவன் வருவானோ?

கதவு தட்டற சத்தம் கேட்டதும், லேசா திறந்து யார்னு கேட்டேன். ‘‘கோபால்ராம் ஃப்ரம் கொல்கட்டா! ரகு இருக்கானா? நான் அவனோட பெஸ்ட் ஃப்ரெண்ட்! நீல்கிரி நெஸ்ட்ல தங்கியிருக்கேன்!’’

‘‘அடடா! அவர் இல்லையே! டென்னிஸுக்குப் போயிருக்கார்!’’

அப்பத்தான் அவன் உள்ளே வந்து போன் பண்ண அனுமதி கேட்டான். மொபைல் இல்லையாம். நம்பற மாதிரி இருக்கா? எங்க வீட்டு வேலைக்கார முனியம்மா கூட செல் வெச்சிருக்கா. டிப்டாப்பா பேன்ட் சட்டை போட்டிருக்கிற இவன்கிட்டே இல்லியாம். எல்லாம் ஏமாத்து. எப்படி யாவது உள்ளே வரணும். அதுக்கு வழி! நானும் அசடு. கதவைத் திறந்து வழி விட்டுட்டேன்.

அவன் சுவாதீனமாக வந்து ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, அவரோட செல்லுக்கு டயல் செய்து பேசிவிட்டு வைத்தான்.

‘‘ரகு வெயிட் பண்ணச் சொல்றான். டென் மினிட்ஸ்ல வந்துடுவா னாம்!’’

சோபாவில் அழுத்தமா உட்கார்ந்துட்டான்.

வீட்டைச் சுத்து முத்தும் பார்த்துப் பிரமாதம்னு புகழ்ந்தான். போன தடவை இவர் கொல்கத்தா போனப்போ இவன் வீட்லதான் ரெண்டு நாள் தங்கினாராம்... சொன் னான். அப்போ இவன் வொய்ஃப் டெலிவரிக்காக டெல்லி போயிருந் தாளாம். ‘டெல்லிவரி’ன்னு ஜோக் அடிச்சு அவனே சிரிசிரின்னு சிரிச்சான்.

இத்தனைக்கப்புறம் ‘காபி சாப்பிடறீங்களா?’ என்று எப்படி விசாரிக்காமல் இருக்க முடியும்?

p38a.jpg காபி கொண்டு போய்க் கொடுத்தபோது, ‘‘காஃபி வித் அனு!’’ன்னு சொல்லிப் பெரிசாகச் சிரிச்சான். கஷ்டம், அதுவும் ஜோக் காம்! என் பேர் அனு என்பது இவனுக்குத் தெரிஞ்சிருக்கு. இவர் சொல்லியிருப்பார். ஆனால், ‘காஃபி வித் அனு’ன்னு சொல்ற அளவுக்குச் சட்டுனு ஒரு நெருக்கத்துக்கு அவன் வந்த வேகம் சரியில் லைன்னு மனசுக்குப் பட்டுது. அதுவாவது பரவாயில்லை, முகத்துக்கு நேரே சொல்றான். ஆனா, அவன் பார்வை பதிஞ்ச இடம்... ஐயோ! அதுதான் பெரிய உறுத்தலா இருக்கு எனக்கு.

நான் அசப்புல சிம்ரன் மாதிரி இருக்கிறதா இவர் அடிக்கடி சொல்வார். உடம்பு அந்த மாதிரி ஸ்லிம்மா இருக் கும் எனக்கு. காபி கொண்டு வரும்போது தூரத்திலேர்ந்தே கவனிச் சேன்... இந்த ராஸ்கல் என் இடுப் பையே வெச்ச கண் வாங்காம பார்த் துட்டிருந்தான். படுபாவி! அவன் பார்வை என் இடுப்புல ஒரு கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருந்துது எனக்கு.

வந்தவன், காபியை வாங்கி ஒரு உறிஞ்சு உறிஞ்சுட்டுச் சொல்றான்... ‘‘அற்புதமா இருக்கு. காபி மட்டுமில்ல, உங்க ஸ்ட்ரெக்சரும்தான்! ரொம்ப சார்மிங்கா இருக்கீங்க அனு! பர்ட்டி குலர்லி யுவர் ஸ்மைல் இஸ் வெரி நைஸ்!’’

கடுப்பை மறைச்சுக்கிட்டு, ஜோக் என்ற பேரில் அவன் உளறிக்கொட்டி னதுக்கு ஒப்புக்கு லேசா சிரிச்சு வெச்சேனே, அது மகா தப்பு!

டெலிபோன் அடிச்சுது. எடுத்தேன். என் வீட்டுக்காரர்தான் பேசினார்.

‘‘நான் வர்றதுக்கு ஒரு மணி நேரம் கூட ஆகலாம். அந்தக் கொல்கத்தா வாலாகிட்டே, அவனை நான் ஓட்டல்ல வந்து பார்க்கறேன்னு சொல்லிடு. பக்கத்துல இருந்தா கொடு, நானே சொல்லிடறேன்’’ என்றார்.

ரிசீவரை அவனிடம் கொடுத்தேன். பேசிவிட்டு, ‘‘சே!’’ என்றபடி ரிசீவரை வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.

அவன் ‘சே!’ சொன்ன விதம் அவன் ஒரு முழு அயோக்கியன்கிறதை எனக்குத் தெளிவாக்கிடுச்சு.

அவன் போய்த் தொலைஞ்சான். ஆனாலும், அவன் என் ஸ்ட்ரக்சர் நல்லா இருக்குன்னு சொன்னது, என் சிரிப்பை நைஸ்னு புகழ்ந்தது, எல்லாத்துக்கும் மேலா என் இடுப்புல அவன் கொள்ளிக்கண் பட்டது... ஒரு நாள் பூரா, மறுநாளும்... அதற்கடுத்த நாளும் இவர் அவனைப் போய் ஓட்டல்லே பார்த்து ஏதோ ஷேர் விக்கிறதைப் பத்திப் பேசிட்டு வந்தப்புறமும் அந்த உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்தது. காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊத்தற மாதிரி அவனோட குரல்...

இவர்கிட்டே அந்த ராஸ்கலைப் பத்தி சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போல இருந்தது. இல்லேன்னா, இந்த உறுத்தல் காலம் பூரா என்னைச் சித்ரவதை பண் ணிட்டே இருக்கும்னு தோணிச்சு.

நாலாவது நாள் தாங்கலை. அவர்கிட்டே சொல்லிடற துன்னு தீர்மானிச்சுட்டேன். ‘‘உங்ககிட்ட சொல்ல ணும்னு நினைச்சுட்டிருந்தேன். நாலு நாளா ஒரே உறுத்தல்...’’னு சொல்ல ஆரம்பிச்சேன்.

அதற்குள் அவர் செல் ஒலிக்க, எடுத்துப் பேசினார். ‘‘ஐயையோ! எப்போ? அடடா! த்சொ, த்சொ... நாலு நாளைக்கு முன்னே இங்க வந்திருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசிட்டிருந் தானே என்கூட’’ என்றெல் லாம் பேசிவிட்டு வைத் தார்.

‘‘யாருக்கு என்னாச்சு?’’ என்றேன்.

‘‘கோபால்ராம் போயிட்டானாம்டி! இங்கேகூட என்னைத் தேடி வந்திருந் தானே, அவன்! ஹார்ட் அட்டாக்காம். சின்ன வயசு... டிரிங்க், சிகரெட்னு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது... நல்ல பையன். பாவம், ஹூம்!’’ என்று பலவாறாகப் புலம்பியவர், ஆசுவாசமான பிறகு...

‘‘ஆமா... உறுத்தலா இருக்குன்னு சொன்னியே! மெட்ராஸ் ஐ வரப்போகுதோ என்னவோ, ட்யூப் மருந்து போட்டுக்கறதுதானே!’’ என்றார்.

‘‘வேணாம். உறுத்தல் போயிருச்சு!’’ என்றேன்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் பார்வையே சரியில்லை எண்டாலும் இவள் வாழுறாள், இவள் பார்வை பட்டு அவன் அட் டாக்கில போட்டான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

அவன் பார்வையே சரியில்லை எண்டாலும் இவள் வாழுறாள், இவள் பார்வை பட்டு அவன் அட் டாக்கில போட்டான்....!  tw_blush:

கேற்ற மூடியிருந்தால் ஏன் கண்டதுகள் எட்டிப்பார்க்குது  டோர லொக் பண்ணினாலே ஆட்ட்மெற்றிக்கா எல்லாம் குளோஸ்ஸாகும் என்று கூறிtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.