Jump to content

சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!


Recommended Posts

சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!

 

சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ் பொலிஸார் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

அதன்போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

இதனால் சடுதியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி குறித்த நபர்மீது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்தில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/police-shot-on-eelam-refugee

கிளிநொச்சியை சேர்ந்த கரன் 38 வயது என்பவரே சுட்டு கொல்லபட்டதாக தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:

Link to comment
Share on other sites

சுவிஸ் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

 

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார்.

mullaitivu-swiss.jpg

புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன் (வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தரே சுட்டு கொல்லப்பட்டிருந்தார். இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்படடுள்ளது. 

IMG_0656.JPG

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஸ்தலத்திலேயே குறித்த நபர் பலியாகியுள்ளார்.

IMG_0657.JPG

கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

viber-image.jpg

இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். 

இறுதிப்போரில் அனைத்து உடைமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 

தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என  தெரிவிக்கின்றனர்.

 

தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25476

Link to comment
Share on other sites

வீரகேசரி என்னவிதமான பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிக்கின்றது என தெரியவில்லை. கொல்லப்பட்டவரது குடும்பத்தினரின் கவலையையும் கண்ணீரையும் புகைப்படம் எடுத்து வியாபாரம் செய்கின்றது. கேவலமான ஊடக போக்கு இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

வீரகேசரி என்னவிதமான பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிக்கின்றது என தெரியவில்லை. கொல்லப்பட்டவரது குடும்பத்தினரின் கவலையையும் கண்ணீரையும் புகைப்படம் எடுத்து வியாபாரம் செய்கின்றது. கேவலமான ஊடக போக்கு இது

நிழலி தற்போது ஒவ்வொரு பத்திரிகை , இணையத்தளங்கள் வியாபாரம் மட்டுமே செய்கிறது அதாவது புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதும்  சுருக்கமா சொல்ல  போனால் அண்ரொயிட் போண் இருந்தால் ஊடகவியலாளர் விபத்து நடந்தால் கூட முதலுதவி வழங்கப்படாமல் போட்டோ எடுத்த பின்னரே தூக்கிச்செல்கிறார்கள் உடனே முகநூலிலும்  அப்டேற் பண்ணுகிறார்கள் இதுதான் உங்க உள்ள ஊடக தர்மம் 

எங்கையா சொறிலங்கா பொலிசு என்று கூவிற ஆட்களை காணல சுட்டதுல பயத்துல இருக்குறாங்கள் என்னவோ ?? யார் சுட்டாலும் தோட்டாக்கள் பாயும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:


இலங்கை / இந்திய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்....
ஐரோப்பிய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்.....
நிறைய வித்தியாசங்கள் உண்டு. :cool:

நீங்களோ எதுவும் அறியாத துர்ப்பாக்கிய நிலையில்........!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:

Bildergebnis für 7.5 cm maßband

தனிக்காட்டு  ராஜா....
இங்கு....  சாதாரணமாக  ஒருவர் தன்னுடன்,  நடு விரல் அளவை  விட,  நீளமான கத்தியை (7.5 சென்ரி மீற்றர்)...  தனது கால்சட்டையிலோ.  Ruck Sack போன்ற பைகளிலோ எடுத்துச்  செல்வது  தண்டனைக்குரிய குற்றம். அப்படி கொண்டு செல்வது  பொலிஸாருக்கு தெரிந்து... தகுந்த விளக்கம் கொடுக்கா விட்டால்.... தண்டனைப் பணம் அல்லது நீதிமன்றத்தில்  நிறுத்தி விடுவார்கள்.

துப்பாக்கியால் சுட்டுக்  கொன்ற ஒருவருக்கு கிடைக்கும் தண்டனையை விட...
கத்தியால் குத்திக் கொன்றவருக்கு... கிடைக்கும் தண்டனை மிக அதிகம்.
கத்தியால்... குத்திக் கொல்லப் பட்டவர்  மிகுந்த வேதனையை அனுபவித்தே... இறந்து இருப்பார் என்பதால் இந்த நடைமுறை உள்ளது.

செய்தியில்... உள்ளதன் படி பார்த்தால். // அதன் போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.// 
பொலிஸாரின்   பிடியில் உள்ள அகதிகள்  மீது,  அந்த தமிழ் இளைஞர் இரண்டு கத்திகளை கொண்டு தாக்க முயன்றுள்ளார் போலுள்ளது. தமது பிடியில் உள்ளவருக்கு ஏதாவது நடந்தால்... போலீசார் பல விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால்.... போலீசார் முந்தி விட்டார்கள் போலுள்ளது.

அந்நிய நாட்டு நடைமுறைகள் தெரியாமல், அந்தத் தமிழர்  பலியாகியது பெரும் சோகம்.
அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

மேல் உள்ளது லண்டனில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

மேல் உள்ளது லண்டனில் 

என்ன... பெருமாள், லண்டன் போலீசார்....  அடி  வாங்கிக் கொண்டு, இந்த ஓட்டம்  ஓடுகின்றார்கள்.  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன... பெருமாள், லண்டன் போலீசார்....  அடி  வாங்கிக் கொண்டு, இந்த ஓட்டம்  ஓடுகின்றார்கள்.  :unsure:

லண்டனில் 18 வயதுக்கு குறைவான பாடசாலை  பிள்ளைகள் போலிசை தாக்கும் விடியோவை தேடிக்கொண்டு உள்ளன் .

மற்றைய நாட்டு பொலிசை விட லண்டன் போலிசுக்கு  அதிகாரம்கள் குறைவு ஆனாலும் வீதிபாதுக்காப்புக்கு ஆபத்தாய் உள்ள கும்பலை நகரபன்ன முறைப்பாடு பண்ணஅவர்கள் போனில்கேட்ப்பார்கள் ஆபத்தான பொருள் வைத்து இருந்தார்களா ? ஆம் சிறு கத்தி வைத்துள்ளார்கள் என்றால் காணும் ஒன்றுக்கு பத்து வாகனம்களில் வந்து அந்த எரியாவையை ஒரு புரட்டு புரட்டுவார்கள் அப்போது கட்டாயம் கத்தியும் மாட்டுப்படும் .அவர்கள் கேட்க்கும்போது கத்தி இல்லை காணவில்லை என்றால் படத்துள் இருக்கும் போலிஸ வரும் கடைசியில் அந்த கும்பலை கலைக்க படாத பாடு படும் .

இந்த சம்பவத்தில் போலிசை கூட்டிக்கொண்டு போனவர்கள் எப்படியானவர்கள் என்று தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:


இலங்கை / இந்திய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்....
ஐரோப்பிய பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கும்.....
நிறைய வித்தியாசங்கள் உண்டு. :cool:

நீங்களோ எதுவும் அறியாத துர்ப்பாக்கிய நிலையில்........!tw_blush:

துப்பாக்கி பிரயோகம் செய்ய வித்தியாசம்  இருக்கலாம் இலங்கை இந்திய நாடு போல் ஐரோப்பிய நாடுகள் இல்லையே பிறகெப்படி ஒருவரை சுடலாம்.  நான் அறிந்தது இந்த நிலைக்காகவே நான் எழுத வந்தேன் அகதி அந்தஸ்து கோரிய ஒரு அகதி இரு பிள்ளைகளின் தகப்பன்  என்ற வகையிலும் இதுவே  இலங்கையென்றால் எப்படி இங்கே இந்த திரியில் பொங்கியிருப்பார்கள் என  இனி அந்த குடும்பம் நிலை உதவியென காசை பெற்றுக்கொடுக்கலாம் ஆனால் உயிர் வராதே ஆழ்ந்த அனுதாபங்கள்  ஐரோப்பிய நாட்டில் மனித உரிமை மதிக்கப்படுகின்ற நாடு மனிதனை மதிக்கின்ற நாடு எனவும் நான் நினைத்து இருந்தேன் ஆனால் நடந்தது வேறு  நானும் அறியாத துர்ப்பாக்கிய நிலமை போல் அவர்கள் குடும்பமும் பேட்டி கொடுத்து அந்த நிலையை அறிய முடியாமல் அழுதுகொண்டிருக்கிறது  அவர் செய்தது குற்றம் என்றால் அந்த பொலிஸ் செய்ததும் அதை விட குற்றமே

ஆனாலும் இலங்கை  பொலிசார் செய்த இந்த செயல் யாழிணைய செய்தியில்   வரவில்லை என்றாலும் சொல்லியாகவே வேண்டும் 

,#யாழில் கர்ப்பிணிப் பெண்ணோடு சிசுவின் உயிரையும் காப்பாற்றிய பொலிஸ் ஹீரோ


கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தத்தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார்.

சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவை அண்மித்த நேரத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது கணவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மழலை கிடைக்கவுள்ள சந்தோசத்திலும் தனது மனைவியின் வேதனையை கண்டு பதைபதைத்து அந்த நிசப்த நேரத்தில் தனது ஊரிலுள்ள முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அழைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளார்.

ஓட்டோவும் இருவரையும் சுமந்தவாறு யாழ்.போதனா வைத்தியசாலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென அந்த முச்சக்கர வண்டி இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் நின்றுள்ளது. சாரதியும் தன்னால் இயலுமானவரை அதனை மீளியக்க முயன்று தோற்றுப்போக அவர்களது வைத்தியசாலை நோக்கிய பயணம் கேள்விக் குறியானதுடன் குறித்த பெண்ணின் பிரசவமும் மரணத்தின் தறுவாய்க்கு சென்றது.

அப்போதுதான் ஆபத்பாண்டவராக வட்டுக்கோட்டையின் பாதுகாப்பை கண்காணித்து தமது வாகனத்தில் தற்செயலாக குறித்த முச்சக்கர வண்டியருகே பொலிஸாரது வாகனம் சென்றடைந்தது. அப்போதுதான் அந்த பரிதவிப்பை கண்டுள்ளார் வட்டுக்கோட்டை பிரதேச பொலிஸ் அதிகாரி.

கண்டிப்பான தனது கடடையிலும் மனிதாபிமானத்தை கையிலெடுத்த அந்த அதிகாரி சடுதியாக தனது வாகன சாரதிக்கு குறித்த பெண்ணை ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பாக தனது இரண்டு பொலிஸாரையும் கூடவே அனுப்பிவைத்துள்ளார் அந்த பொறுப்பு மிக்க பொலிஸ் அதிகாரி.

படங்கள் இருக்கிறது தேவையானால் இணைக்கலாம் 

 

5 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für 7.5 cm maßband

தனிக்காட்டு  ராஜா....
இங்கு....  சாதாரணமாக  ஒருவர் தன்னுடன்,  நடு விரல் அளவை  விட,  நீளமான கத்தியை (7.5 சென்ரி மீற்றர்)...  தனது கால்சட்டையிலோ.  Ruck Sack போன்ற பைகளிலோ எடுத்துச்  செல்வது  தண்டனைக்குரிய குற்றம். அப்படி கொண்டு செல்வது  பொலிஸாருக்கு தெரிந்து... தகுந்த விளக்கம் கொடுக்கா விட்டால்.... தண்டனைப் பணம் அல்லது நீதிமன்றத்தில்  நிறுத்தி விடுவார்கள்.

துப்பாக்கியால் சுட்டுக்  கொன்ற ஒருவருக்கு கிடைக்கும் தண்டனையை விட...
கத்தியால் குத்திக் கொன்றவருக்கு... கிடைக்கும் தண்டனை மிக அதிகம்.
கத்தியால்... குத்திக் கொல்லப் பட்டவர்  மிகுந்த வேதனையை அனுபவித்தே... இறந்து இருப்பார் என்பதால் இந்த நடைமுறை உள்ளது.

செய்தியில்... உள்ளதன் படி பார்த்தால். // அதன் போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.// 
பொலிஸாரின்   பிடியில் உள்ள அகதிகள்  மீது,  அந்த தமிழ் இளைஞர் இரண்டு கத்திகளை கொண்டு தாக்க முயன்றுள்ளார் போலுள்ளது. தமது பிடியில் உள்ளவருக்கு ஏதாவது நடந்தால்... போலீசார் பல விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால்.... போலீசார் முந்தி விட்டார்கள் போலுள்ளது.

அந்நிய நாட்டு நடைமுறைகள் தெரியாமல், அந்தத் தமிழர்  பலியாகியது பெரும் சோகம்.
அவரின் குடும்பத்தினருக்கு... ஆழ்ந்த அனுதாபங்கள்.

ம் ஓரளவு சட்ட திட்டங்கள் அறிவேன் இருந்தாலும் ரபர் தோட்டாக்கள் , காலுக்கு கீழ் சுடும் சட்டங்கள் இருக்கின்ரனவா இல்லையா ஐரோப்பிய நாட்டில்  நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு  பொலிசாரால் கத்தி வைத்திருப்பவரை சமாளிக்க முடியாதென்பதும் இறந்தவரின் துரதிஸ்ரமே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிபதை தவிர ஒன்றுமில்லை.

லண்டனில் கூட சில மாதங்களுக்கு முன் ஒருவருக்கு தண்டனை கொடுத்தது என நினைக்கிறேன் ஏதோ காதல் தகராற்றில் நடந்த கொலைக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Asylwerber erschossen: Polizei verteidigt sich

Infolge einer bedrohlichen Situation hat ein Polizist in Brissago, Schweiz, einen Asylsuchenden erschossen. Die Polizei hat nun über den Vorfall informiert.

In der Tessiner Grenzgemeinde Brissago hat ein Polizist während eines Einsatzes in der Nacht einen Asylsuchenden erschossen.

Der 38-jährige Mann aus Sri Lanka war mit zwei Messern bewaffnet. Die Tessiner Behörden verteidigen das Vorgehen des Polizisten.

 

"Es gab für den Polizisten keine andere Handlungsmöglichkeit in dieser Situation", betonte Matteo Cocchi, Kommandant der Tessiner Kantonspolizei, am Samstagnachmittag vor den Medien in Noranco. Es sei ein Moment großer Gefahr gewesen. Rückendeckung erhielt der Polizist auch vom zuständigen Regierungsrat Norman Gobbi, der mit Cocchi vor die Medien trat.

Mit Messer herumgefuchtelt

Dem Einsatz war ein Streit vorausgegangen. Die Polizei wurde kurz vor 2 Uhr nachts wegen einer Auseinandersetzung unter mehreren Personen alarmiert. Mehrere Polizisten begleiteten zwei Asylsuchende aus Sri Lanka in ein Gebäude, wo sich ihnen eine "noch nicht geklärte" Situation bot.

Laut den Behörden stürmte daraufhin ein dritter Asylsuchender auf die beiden Asylbewerber ein, welche die Polizisten begleiteten. Der 38-jährige Mann, der ebenfalls aus Sri Lanka stammte, fuchtelte mit zwei Messern herum. Einer der Polizisten feuerte mit seiner Pistole auf den Angreifer.

Dies sei zum Schutz aller Anwesenden geschehen, schreibt die Tessiner Polizei. Die Kugel verletzte den Asylsuchenden so schwer, dass er noch vor Ort verstarb. Die anderen Beteiligten wurden nicht verletzt. Das Motiv für das aggressive Verhalten des 38-jährigen Sri Lankers ist laut Cocchi noch unbekannt.

In dem privaten Gebäude sind gemäß seinen Angaben rund ein Dutzend Asylsuchende aus Sri Lanka seit mehreren Jahren untergebracht. Es steht direkt neben dem Rathaus von Brissago.

Polizist befragt
Die Staatsanwaltschaft hat eine Untersuchung eingeleitet und klärt namentlich ab, ob der Polizist zur Verantwortung gezogen wird. Auch die kriminaltechnischen Ermittlungen sind am Samstag aufgenommen worden. Um Neutralität zu garantieren, sind Spezialisten aus dem Kanton Zürich damit beauftragt worden.

Der Polizist, der geschossen hatte, sowie weitere beteiligte Personen sind mündlich befragt worden. Aufgrund der Erkenntnisse hätten sich keine Maßnahmen gegen die Befragten aufgedrängt, schreibt die Polizei.

(20 Minuten)

 

இரவு இரண்டு மணி அளவில் மற்றைய இலங்கைத் தமிழர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மற்றையவர்கள் போலீசாரை அழைத்துள்ளனர் போலீசார் இவருடன் தகராறில்  சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை அழைத்துக் கொண்டு  அங்கு சென்றுள்ளனர்.
இறந்தவர் இரண்டு கத்திகளுடன் எவரையும் தாக்கும் நிலையில் கத்தியைச் சுழற்றிக் கொண்டு முன்னேறியுள்ளார்.
பொலிஸாரின் கூற்றின்படி அவர்களுக்கு வேறு இந்தத் தெரிவும் அப்போது இருக்கவில்லை.
பலருடைய உயிரைக் காப்பாற்ற அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி மீது விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது
போலீசாரும் அந்த இடத்தில் இருந்தவர்களும்  ( தமிழர்களும்) விசாரிக்கப்பட்டுள்ளனர். 

image.png

image.png

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

ம் ஓரளவு சட்ட திட்டங்கள் அறிவேன் இருந்தாலும் ரபர் தோட்டாக்கள் , காலுக்கு கீழ் சுடும் சட்டங்கள் இருக்கின்ரனவா இல்லையா ஐரோப்பிய நாட்டில்  நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு  பொலிசாரால் கத்தி வைத்திருப்பவரை சமாளிக்க முடியாதென்பதும் இறந்தவரின் துரதிஸ்ரமே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிபதை தவிர ஒன்றுமில்லை.

லண்டனில் கூட சில மாதங்களுக்கு முன் ஒருவருக்கு தண்டனை கொடுத்தது என நினைக்கிறேன் ஏதோ காதல் தகராற்றில் நடந்த கொலைக்கு 

ரொராண்டோ பேருந்து ஒன்றில் ஒரு சிரியா பெடியன் சின்ன கத்தியை காட்டினான் என்று ஒரு பொலீஸ்காரர் சுட்டு கொன்றுவிட்டார்.. அதாவது ஆறு தரம் சுட்டார். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

ரொராண்டோ பேருந்து ஒன்றில் ஒரு சிரியா பெடியன் சின்ன கத்தியை காட்டினான் என்று ஒரு பொலீஸ்காரர் சுட்டு கொன்றுவிட்டார்.. அதாவது ஆறு தரம் சுட்டார். :rolleyes:

தகவலுக்கு நன்றி சிரியா என்றதும் சில நேரம் சுட்டிருப்பார்கள் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களை சுடுவது போல் இருக்குமென நினைக்கிறன் கல் எறிந்தற்க்காக சுட்ட சம்பவங்களும் உண்டு இசை  எல்லைப்பகுதியில் :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 08/10/2017 at 12:11 PM, தனிக்காட்டு ராஜா said:

என்னையா நடக்குது சுவிசில அங்கேயும் சுட ஆரம்பித்து விட்டார்களா என்ன ?? எத்தனையோ பயிர்ச்சி பெற்ற பொலிசாரால் ஏன் ஒரு கத்தி வைத்திருப்பவரை பிடிக்க முடியாமல் போது  அப்படி சுடுவதென்றாலும் காலுக்கு கீழே சுடமாட்டார்களா இலங்கையில் சுட்டால் மட்டும் பொங்கும் கருத்தாளர்கள் அமைதியான நாடு அதில் சுட்டதற்கு அதுவும் ஒரு தமிழருக்கு சுட்டதற்க்கு கருத்துக்கள் சொல்ல வில்லை அவர் மீது பிழை  இருந்தாலும் சுட அனுமதி எப்படி எடுக்க முடியும் ??:cool:

அது என்ன என்டால் தனி.இங்கை என்ன நடந்தாலும் நாங்கள் அடக்கித்தன் வாசிப்போம்.அல்லாட்டால் உங்களை விட நாங்கள் எவளவோ மேல் என்று பீலா காட்ட ஏலாது எல்லோ.மற்றது நாங்கள் எப்படித்தான் எங்கள் ஊத்தைகளை ஓளிச்சாலும் பாழைப்போன தொழில் நுட்டபம் காட்டிக் கொடுக்குது.எது எப்படியோ உங்களுக்கு இதுகள் தெரிவது உங்களுக்கும் தாயகததிற்க்கும் மிக நல்லது.பி கு. இது இலன்டாவது மரணம் பொலிசாரால்.முதலாவது சில வருங்களிற்க்கு முன் நடந்தது..

Link to comment
Share on other sites

எவ்வளவு ஆத்திரப்பட்டாலும், மன அழுத்தம் சார்ந்த நெருக்கடிக்குள் இருந்தாலும் வெறுங்கையோடு நிற்கும் போது பாதுகாப்பு அதே கத்தியோ கல்லோ பொல்லோ துவக்கோ எதை தூக்கினாலும் அவரை எதிர்கொள்ளும் அணுகுமுறை மாறிவிடுகின்றது. உதாரணமாக இரவில் டோர்ச் லைற்றுடன் செல்லும்போது ஒருவர் தாக்கும் போது லைற்றின் முன்பகுதியால் அதை தடுத்தால் தற்பாதுகாப்பு அதே லைற்றை திருப்பி பின்பகுதியால் அடித்தால் குற்றம். அதற்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்ன என்டால் தனி.இங்கை என்ன நடந்தாலும் நாங்கள் அடக்கித்தன் வாசிப்போம்.அல்லாட்டால் உங்களை விட நாங்கள் எவளவோ மேல் என்று பீலா காட்ட ஏலாது எல்லோ.மற்றது நாங்கள் எப்படித்தான் எங்கள் ஊத்தைகளை ஓளிச்சாலும் பாழைப்போன தொழில் நுட்டபம் காட்டிக் கொடுக்குது.எது எப்படியோ உங்களுக்கு இதுகள் தெரிவது உங்களுக்கும் தாயகததிற்க்கும் மிக நல்லது.பி கு. இது இலன்டாவது மரணம் பொலிசாரால்.முதலாவது சில வருங்களிற்க்கு முன் நடந்தது..

தகவலுக்கு நன்றி சுவைப்பிரியன் தமிழனுக்கு தோட்டாக்கள் மட்டுமே பதில் சொல்கிறது??

Link to comment
Share on other sites

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தகவலுக்கு நன்றி சிரியா என்றதும் சில நேரம் சுட்டிருப்பார்கள் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களை சுடுவது போல் இருக்குமென நினைக்கிறன் கல் எறிந்தற்க்காக சுட்ட சம்பவங்களும் உண்டு இசை  எல்லைப்பகுதியில் :unsure:

 

அதில் விசயம் என்னவென்றால் அந்த பெடியன் நின்றது பேருந்துக்கு உள்ளே. எல்லோரும் இறங்கிவிட்டார்கள். ஒரு தரம் சுட்டால் வேறு விடயம். ஆனால் பல தடவை சுட்டார். காணொளி கீழே.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம். :unsure:

https://www.youtube.com/watch?v=Pi4In494rAg

 

இது ஒரு வகையான Adrenaline rush + இனவெறி என நினைக்கிறேன்.. :unsure: 

இதுக்குத்தான் சொல்வது.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (சுதந்திரமான தாய்நாட்டில்) எல்லாம் செளக்யமே..tw_cry:

Link to comment
Share on other sites

On 9.10.2017 at 9:00 PM, சுவைப்பிரியன் said:

அது என்ன என்டால் தனி.இங்கை என்ன நடந்தாலும் நாங்கள் அடக்கித்தன் வாசிப்போம்.அல்லாட்டால் உங்களை விட நாங்கள் எவளவோ மேல் என்று பீலா காட்ட ஏலாது எல்லோ.மற்றது நாங்கள் எப்படித்தான் எங்கள் ஊத்தைகளை ஓளிச்சாலும் பாழைப்போன தொழில் நுட்டபம் காட்டிக் கொடுக்குது.எது எப்படியோ உங்களுக்கு இதுகள் தெரிவது உங்களுக்கும் தாயகததிற்க்கும் மிக நல்லது.பி கு. இது இலன்டாவது மரணம் பொலிசாரால்.முதலாவது சில வருங்களிற்க்கு முன் நடந்தது..

சுவிஸ் பொலிஸ் இவ்வடயத்தில் தவறு இழைத்தாரகளோ இல்லையோ நிச்சயமாக அந்த தமிழர் மீது உள்ள  இனவெறுப்பினால் அதாவது துவேசத்தினால் சுட்டிருக்க மாட்டாரகள்.  இந்த சிறு சம்பவத்தையும் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக தமிழ் மக்களை கொன்று குவித்த சிறீலங்கா பொலிசார் மற்றும் முப்படையினரும் செய்த  கொடுமைகளையும்  ஒரே தட்டில் போட்டு சமப்படுத்தும்  முட்டாள்தனத்தை நினைத்து  உங்களுக்கே வெட்கமாக இல்லையா?  

இரண்டிற்கும் இடையில் உள்ள பாரிய வித்தியாசததை உணர விசேட அறிவு தேவையில்லை. சாதாரணமாக உடல் மன ஆரோககியம் கொண்ட எலலா மனிதராலும் இதை உணர முடியும்.( every healthy human being knows that)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

சுவிஸ் பொலிஸ் இவ்வடயத்தில் தவறு இழைத்தாரகளோ இல்லையோ நிச்சயமாக அந்த தமிழர் மீது உள்ள  இனவெறுப்பினால் அதாவது துவேசத்தினால் சுட்டிருக்க மாட்டாரகள்.  இந்த சிறு சம்பவத்தையும் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக தமிழ் மக்களை கொன்று குவித்த சிறீலங்கா பொலிசார் மற்றும் முப்படையினரும் செய்த  கொடுமைகளையும்  ஒரே தட்டில் போட்டு சமப்படுத்தும்  முட்டாள்தனத்தை நினைத்து  உங்களுக்கே வெட்கமாக இல்லையா?  

இரண்டிற்கும் இடையில் உள்ள பாரிய வித்தியாசததை உணர விசேட அறிவு தேவையில்லை. சாதாரணமாக உடல் மன ஆரோககியம் கொண்ட எலலா மனிதராலும் இதை உணர முடியும்.( every healthy human being knows that)

அதே போல கூலிக்கு எவனோ இலங்கையில் கஞ்சா கடத்தை இலங்கை பொலிசார்தான் துணை என்று சொல்லும் அறிஞர்கள் , விஞ்ஞானிகள் , அறிவாளிகளையும் இதற்குள்ள சேர்த்துக்கொள்ளுங்க ஊரில  காசுக்கு என்ன வேலையெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியாமல் எதற்கெடுத்தாலும் ...................................................................................... புத்தி ஜீவிகளுக்கும் சொல்லி விடுங்கோ அவங்க நினைக்கிற மாதிரி இலங்கையும்  இல்லை ஈழமும் இல்லை , ஈழத்தமிழர்களும் இல்லையென்று  எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை மாட்டிக்கிட்டவன் நல்லவன் மாட்டாதவரைக்கும் நல்லவன் இது பல அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

சுவிஸ் பொலிஸ் இவ்வடயத்தில் தவறு இழைத்தாரகளோ இல்லையோ நிச்சயமாக   முட்டாள்தனத்தைஅந்த தமிழர் மீது உள்ள  இனவெறுப்பினால் அதாவது துவேசத்தினால் சுட்டிருக்க மாட்டாரகள்.  இந்த சிறு சம்பவத்தையும் வேண்டுமென்றே பல தசாப்தங்களாக தமிழ் மக்களை கொன்று குவித்த சிறீலங்கா பொலிசார் மற்றும் முப்படையினரும் செய்த  கொடுமைகளையும்  ஒரே தட்டில் போட்டு சமப்படுத்தும் நினைத்து  உங்களுக்கே வெட்கமாக இல்லையா?  

இரண்டிற்கும் இடையில் உள்ள பாரிய வித்தியாசததை உணர விசேட அறிவு தேவையில்லை. சாதாரணமாக உடல் மன ஆரோககியம் கொண்ட எலலா மனிதராலும் இதை உணர முடியும்.( every healthy human being knows that)

நன்றி துல்பன் உங்கள் விளக்கத்திற்க்கு.:)

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதே போல கூலிக்கு எவனோ இலங்கையில் கஞ்சா கடத்தை இலங்கை பொலிசார்தான் துணை என்று சொல்லும் அறிஞர்கள் , விஞ்ஞானிகள் , அறிவாளிகளையும் இதற்குள்ள சேர்த்துக்கொள்ளுங்க ஊரில  காசுக்கு என்ன வேலையெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியாமல் எதற்கெடுத்தாலும் ...................................................................................... புத்தி ஜீவிகளுக்கும் சொல்லி விடுங்கோ அவங்க நினைக்கிற மாதிரி இலங்கையும்  இல்லை ஈழமும் இல்லை , ஈழத்தமிழர்களும் இல்லையென்று  எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை மாட்டிக்கிட்டவன் நல்லவன் மாட்டாதவரைக்கும் நல்லவன் இது பல அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்  

இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் இலங்கை பொலிசாரின் வண்டவாளம் தெரியும்.சமீபததில் வித்தியா கொலையின் முக்கிய குற்றவாளியையே தப்ப வைக்க பொலிஸ் உத்தியோகததர் முயன்றதும் தெரியும்.லஞ்சததில் திளைபபதும் குறறவாளிகளுககு உறுதுணை புரிவதும் ஒன்றும் இரகசியம் அல்ல. ஆனால் எதிர்காலத்தில் இலங்கை பொலிசாரும் நேர்மையான காவல்துறையாக மாற வேண்டும் என்ற தங்களின் விருப்பததை பாராட்டுகிறேன். எனது விருபபும் அதுவே. எமது அடுத்த தலைமுறையிலாவது இலங்கை பொலிசார் நேர்மையான பொலிசாராக மாறுவார்கள் என்று நம்புவோம். (அதாவது எமது பாட்டனார் நம்பியது போல)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.