Jump to content

"திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா


Recommended Posts

"திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்"- நடிகை சமந்தா

 

'பாணா காத்தாடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக இயங்கி வருகிறார், நடிகை சமந்தா. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது, அதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அப்போது அறிமுக கதாநாயகனாக நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. 

சமந்தா

 

பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்துவந்தனர். இவர்களின்  காதல், இரு வீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துவைக்க சம்மதித்தனர். சமந்தா, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். நாகசைதன்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் திருமணம் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டுமுறை நடக்க இருக்கிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நள்ளிரவு 11.52 மணிக்கு சமந்தா-நாகசைதன்யா திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வருகை தந்திருந்தனர். திருமணப் புடவையை நாகசைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி நவீன முறையில் வடிவமைத்திருந்தார். 

சமந்தா-நாக சைதன்யா

 

மேலும், இன்று மாலை கோவாவில், 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். அதன்பின், இருவரும் தேன்நிலவுக்கு நியூயார்க் செல்ல இருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என சமந்தா அறிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/104296-after-wedding-also-will-act-in-movies--samantha.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு வெடித்து விட்டது !

Link to comment
Share on other sites

எங்க ஆளை காணவில்லை என்று யோசித்தேன்...:grin:

7 minutes ago, colomban said:

நெஞ்சு வெடித்து விட்டது !

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.