Jump to content

மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர்


Recommended Posts

மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர்
2-1-1.jpg

மாரிஸ் ஸ்டெல்லாவை வீழ்த்தி தேசிய சம்பியனாகிய யாழ் புனித ஹென்ரியரசர்

By
 Mohamed Arshad
 -
October 6, 2017
236
 
 
 

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்தாட்டப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஒரு போட்டியில் சம்பியனாகிய வரலாற்றுப் பதிவை அவ்வணியினர் இன்று பதிந்துள்ளனர்.

அனுபவம் மிக்க பல வீரர்களைக் கொண்ட பலம் கொண்ட புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள் இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணியினரை 4-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளனர்.  

இறுதிப் போட்டி

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணிகளுக்கு இடையிலான தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஷாலிகா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மழையுடனான காலநிலையில் ஆரம்பமாகிய இந்த போட்டியின் 3 நிமிடங்ள் கடந்த நிலையில் புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சி இறுதித் தருவாயில் பயனளிக்காமல் போனது.   

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது ஹென்ரியரசர் வீரர் சிவகுமரன் ரூபன்ராஜ் வலது புற கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை மாரிஸ் ஸ்டெல்லா கோல் காப்பாளர் தடுக்க முற்பட்ட வேளையில், பந்து மிகவும் வேகமாக கம்பங்களுக்குள் சென்றது. இதனால், ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்களுக்குள் அவர்கள் முன்னிலை பெற்றனர்.

முதல் கோல் பெற்று 5 நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை தத்சர பெர்னாண்டோ பெற்றார். அவர் உதைந்த பந்து எதிரணியின் கோல் கம்பத்தின் வலது புறத்தால் கம்பங்களுக்குள் செல்ல ஆட்டம் சமநிலையடைந்தது. இதன்போது புனித ஹென்ரியரசர் அணியின் கோல் காப்பாளர் பந்தை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

தொடர்ந்தும் மாரிஸ் ஸ்டெல்லா வீரர் நிசல் தாரிந்த முன்களத்தில் இருந்து பெற்று வேகமாக கோலை நோக்கி அடித்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

மீண்டும் போட்டியை முன்னிலைப்படுத்தும் வகையில் ஹென்ரியரசர் வீரர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில், தன்னிடம் வந்த பந்தை அன்டனிராஜ் கோல் காப்பாளர் இல்லாத திசையினால் கம்பங்களுக்குள் செலுத்தினார்.   

முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 2  புனித ஹென்ரியரசர் கல்லூரி

மீண்டும் இரண்டாவது பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லாவின் கோல் பகுதியை ஆக்கிரமித்த யாழ் வீரர்கள், பல முயற்சிகளை மேற்கொண்டதன் நிறைவில் முன்னைய கோலைப் பெற்ற அன்டனிராஜ் தனது அணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

தொடர்ச்சியாக அடுத்தடுத்து சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்த புனித ஹென்ரியரசர் வீரர்களால் உள்ளனுப்பப்பட்ட பந்தை அன்டனிராஜ் பாய்ந்து ஹெடர் செய்தார். எனினும் பந்து கோலை விட தொலை தூரத்தினால் வெளியேறியது.

 

அதன் பின்னர் மாரிஸ் ஸ்டெல்லா தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் புனித ஹென்ரியரசர் கல்லூரியின் பின்கள வீரர்கள் இலகுவாக முறியடித்தனர்.  

மீண்டும் ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் யாழ் தரப்பினருக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து, தடுப்பு வீரர்களிடையே பட்டு தன்னிடம் வர, அன்டனிராஜ் அதனை கோலாக்கி தனது ஹெட்ரிக் கோலினைப் பதிவு செய்தார்.

எனவே, மேலதிக 3 கோல்களினால் இறுதிப் போட்டியை தம்வசப்படுத்திய யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி தொடரின் சம்பியன்களாகத் தெரிவாகினர். தமது கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சம்பியன் பட்டம் வென்ற பெருமை இவ்வணியினரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 4 புனித ஹென்ரியரசர் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – தத்சர பெர்னாண்டோ 15’

புனித ஹென்ரியரசர் கல்லூரி – சிவகுமரன் ரூபன்ராஜ் 10’, ஞானேஸ்வரன் அன்டனிராஜ் 21’, 28’ & 44’

3-1-1.jpg இரண்டாம் இடத்தைப் பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த காலி புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் கந்தானை டி மெசனொட் கல்லூரி அணிகள் தொடரின் மூன்றாம் இடத்தைப் பெறும் அணியைத் தெரிவு செய்வதற்கான மோதலில் களம் கண்டன.

 

இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் சரி சமமான பலத்துடன் ஆடியமையினால் எந்த தரப்பினராலும் கோல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

எனினும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த டி மெசனொட் வீரர்கள் பஜோ, சில்வா மற்றும் பொன்சேகா ஆகியோர் மூலம் கோல்களைப் பெற்றுள்கொள்ள, அவ்வணி தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: டி மெசனொட் கல்லூரி 3 – 0 புனித அலோசியஸ் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

டி மெசனொட் கல்லூரி – S. பஜோ 27’, R. சில்வா 30’, D. பொன்சேகா 43’

1-1-1.jpg மூன்றாம் இடத்தைப் பெற்ற டி மெசனொட் கல்லூரி

அரையிறுதிச் சுற்று

ஒரு அரையிறுதியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர் காலி புனித அலோசியஸ் கல்லூரி அணியினரை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தினர்.

முதல் பாதியில் இசுரு மதுஷானின் கோலுடன் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில், நிசல் தாரிந்த அவ்வணிக்கான இரண்டாவது கோலையும், C.பெர்னாண்டோ இறுதி கோலையும் பெற்றுக்கொடுத்தனர்.    

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 3 – 0 புனித அலோசியஸ் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – இசுரு மதுஷான் 05’, நிசல் தாரிந்த 36’, C.பெர்னாண்டோ 39’


மற்றைய அரையிறுதியில் கந்தானை டி மெசனொட் கல்லூரி அணியினருடன் மோதிய புனித ஹென்ரியரசர் கல்லூரி அணிக்காக அனுபவ வீரர் அன்டனிராஜ் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் அவ்வணியினர் முதல் பாதியில் முன்னிலை பெற்றனர்.  

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பாதியில் யாழ் தரப்பினருக்கு கோலுக்கான மிக அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்த போதும் அவர்கள் அந்த அனைத்து வாய்ப்புக்களையும் வீணடித்தனர்.

முழு நேரம்: புனித ஹென்ரியரசர் கல்லூரி 1 – 0 டி மெசனொட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித ஹென்ரியரசர் கல்லூரி – G. அன்டனிராஜ் 06’  

குறிப்பு – இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளினதும் இரு பாதிகளும் தலா 25 நிமிடங்களுக்கு விளையாடப்பட்டது.

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.