Jump to content

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil


Recommended Posts

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

 
 

"நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்லா டான்ஸ் ஆடுவேன். பாட்டுப்பாடுவேன். இருக்குற இடத்தை கலகலப்பா வெச்சுப்பேன். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணி. அப்பா ஆட்டோ  டிரைவர். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ‘வாழ்க்கையை இப்படித்தான்  வாழணும்’னு ஒரு வரைமுறைக்குள்ள தன்னை வெச்சுப்பார். செய்யும் தொழில்ல கவனமா இருப்பார். அம்மாதான் என் பலம். என் தம்பி மேல நான் உயிரையே வெச்சுருக்கேன். காசு பணம்தான் இல்லையேதவிர அன்பு,  பாசத்துக்குப் பஞ்சமே இல்லாத வீடு. டாக்டராகணும் என்பது என் சின்ன வயசு ஆசை. குடும்பச் சூழ்நிலை காரணமா டாக்டருக்குப் படிக்க முடியல. ராமச்சந்திரா மெடிக்கல் யூனிவர்சிட்டியில நர்ஸிங் படிச்சேன். பள்ளி, கல்லூரி நண்பர்கள் அதிகம். அவங்க எல்லாருக்கும் இருக்குற ஒரே என்டெர்டெயின்மென்ட் நான்தான். இதைத்தவிர என்னைப்பற்றி பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்லை.” - “ஜூலி யார் என்ற கேள்விக்குத்தான் இப்படி பதில் சொல்கிறார், ‘பிக் பாஸ்’ ஜூலி. 

‘பிக் பாஸ்’ வீட்டிலிருக்கும்போதே ஜூலி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். வீட்டிலிருந்து அவரை வெளியேற்றியபிறகும்கூட அவரை விமர்சனங்களும் ஓவியா ஆர்மியும் துரத்தின. இந்த நிலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம். “'பிக் பாஸ்ல எனக்கு நடந்தது மிகக் கொடுமை. அதைவிட மக்கள் கஷ்டப்படுத்துறது கொடுமையிலும் கொடுமை' என்றபடி பேச ஆரம்பிக்கிறார் ஜூலி. 

 

 

ஜூலி

"ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துக்கணும் என்ற உணர்வு எப்படி வந்துச்சு?”

"தமிழ் உணர்வு, நாட்டுப் பற்று. சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்ன்ற ஆர்வம் எனக்கு எப்பவும் உண்டு.  'ஜூலி புகழுக்காகத்தான் ஜல்லிக்கட்டுல கலந்துக்கிட்டா'னு சிலர் தப்பா நெனச்சுட்டு இருக்காங்க. உண்மையிலேயே அந்தப் போராட்டத்துக்கு அப்பறம் இவ்வளவு புகழ் கிடைக்கும்னு நான் கனவுலகூட நெனச்சுப் பார்க்கல. மீடியா நெனச்சா நம்மள ஏத்திவிடும், இறக்கி விடும் என்பதை இப்பதான் புரிஞ்சுகிட்டேன். என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத திருப்பு முனை ஜல்லிக்கட்டுல எனக்குக் கிடைச்ச புகழ்தான்."

Julie

"திமுக குடும்பப் பின்னணிதான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நீங்க பேசியதுக்குக் காரணம்னு சொல்றாங்களே?”

"இல்லவே இல்ல. நானும் என் குடும்பமும் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவங்க கிடையாது. அரசியல்ல நிக்குற அளவுக்கு எனக்கு பலமும் கிடையாது. பதவி ஆசையும் கிடையாது. எனக்கு மக்களோட மக்களா இருக்கறதுதான் சந்தோசம். இப்படிச் சொல்றவங்க காலம் முழுக்க ஏதாவது சொல்லிகிட்டேதான் இருப்பாங்க"

"அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளில் தடியடி நடந்தப்பக்கூட உங்களை அங்கு பார்க்கமுடியவில்லையே?”

"நான் ஆரம்பத்தில் அந்தப் போராட்டத்தில் கலந்துகிட்ட பிறகு எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. 'நீ இருக்குற இடமே தெரியாம பண்ணிடுவேன். உன்னைப் பாலியல் பலாத்காரம் பண்ணி நடு ரோட்ல வீசிடுவோம்’னு ஏகப்பட்ட பெரிய தலைகள்கூட போன் பண்ணி மிரட்டினாங்க. இப்போ 'பிக் பாஸ்' பார்த்துட்டு எங்க வீட்ல, 'நடுத்தர மக்கள் என்ன பண்ணினாலும் இந்த மக்கள் தப்பா பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. என் பொண்ணு போராட்டக் களத்துல உயிரையே விட்டாலும் பரவாயில்ல. நாட்டுக்காக எதாவது செய்யணும்'னு எனக்கு ஊக்கம் கொடுக்குறமாதிரி பேசுனாங்க. அதனால இனி வர்ற போராட்டங்கள்ல கண்டிப்பா கலந்துக்குவேன். குறிப்பா விவசாயிகள் போராட்டத்துல கலந்துக்கணும்னு ஆசை."

Bigg boss Julie

"பிக் பாஸ்ல கலந்துக்கிற வாய்ப்பு எப்படி அமைஞ்சது?”

‘'பிக் பாஸோட முதல் நிபந்தனையே யார்கிட்டயும் இதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணக் கூடாது என்பதுதான்.  நாம செலக்ட் ஆனதுக்குப் பிறகு அதைப்பற்றி எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது. அப்படிச் சொன்னால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனால இந்தத் தகவலை  வீட்ல மட்டும்தான் சொன்னேன். இந்த ஒரு நல்ல வாய்ப்பை நாம ஏன் பயன்படுத்திக்கக் கூடாதுனு தோணுச்சு. இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் நானும் ரொம்பநாளா காத்துக்கிட்டு இருந்தேன்.”

"பிக்  பாஸ் வீட்டுக்குள் போனபோது மனநிலை எப்படி இருந்துச்சு?"

"எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு நெனச்சேன். இவ்வளவு சண்டைகள் வரும்னு நான் எதிர்பார்க்கலை. வீட்டுக்குப் போகணும்னு நிறைய தடவை அடம்பிடிச்சிருக்கேன். அப்பல்லாம் பிக் பாஸ் என்னைக் கூப்பிட்டு பேசவே இல்ல. மத்த போட்டியாளர்கள் வெளியே போகணும்னு சொன்ன உடனேயே அவங்கள கன்ஃபெஷன்  ரூமுக்குக் கூப்பிட்டுப் பேசுனார். முதல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகப் பேசுறப்போ, என்னை மாதிரி சாதாரண ஆட்கள் நிறையபேர் இருப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா, நான் மட்டும்தான் அங்க சாதாரண பொண்ணுனு உள்ள போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. அங்க நடந்த பல விஷயங்களால ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன். முதல் தடவை நாமினேட் ஆனப்பவே எலிமினேட் ஆகியிருந்தா நல்லா இருந்துருக்கும்."

Juliana

"முதல்நாள் ஸ்ரீயிடம் நீங்கள் அப்படிப் பேசியது தப்புனு நெனைக்கிறீங்களா?"

"பிக் பாஸ் வீட்டுக்குள்ள எல்லாப் போட்டியாளர்களும் உள்ள வந்தவுடனேயே கட்டிப்புடுச்சு வெல்கம் பண்ணாங்க. என்னைக் கட்டிப்புடிக்க ஆளே இல்ல. அதுக்கு என்ன அர்த்தம்? என்னை யாருமே வரவேற்கலைனுதானே ஆர்த்தம். அதுதான் எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. கட்டிப்புடிக்க ஆளே இல்லைனு சொன்னதும் எல்லோரும் என்னைத் தப்பா நெனச்சுட்டாங்க. நான் சொன்ன தொனி கூட புரியாத மக்கள் இன்னமும் இருக்காங்களானு நினைக்கும் போதுதான் கஷ்டமா இருக்கு."

"பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்தபிறகு ஓவியாட்ட பேசினீங்களா?”

"ஆமா. பேசிட்டுதான் இருக்கேன். எல்லோரும், ‘ஓவியா நம்பர் மாத்திட்டாங்க. நீங்க அவங்ககிட்ட பேசுறீங்கன்னு பொய் சொல்றீங்க’னு சொன்னாங்க. மொதல்ல அவங்களோட பழைய நம்பர்தான் என்கிட்ட இருந்துச்சு. அடுத்த ஒரு வாரத்திலேயே அவங்களோட புது நம்பரை வாங்கிட்டேன். நானும் ஓவியாவும் பேசிட்டுதான் இருக்கோம்னு மக்களுக்கு நிரூபிக்கத் தயார்."

"ஓவியாகிட்ட நடந்துகிட்ட விதம் தவறுனு உணர்ந்தீங்களா?"

"உண்மையாவே அன்னைக்கு எனக்கு பயங்கரமான வயிற்று வலி. அது தாங்க முடியாம அழுதுட்டு இருந்தப்போ ஒரு பிரபலம், அவரோட பேர் சொல்ல விரும்பலை. என்னைப் பார்த்து, 'நீ இன்னும் எத்தனை நாளைக்கு  நடிப்பேன்னு பார்க்குறேன். இன்னும் மூணு மாசம் இங்க எப்படி இருக்கப்போறனு பார்ப்போம்'னு சவால் விட்டாங்க. இப்படியெல்லாம் என்னைத் திட்டின அவங்க வெளிய வந்து, 'நாங்க உன்னை திட்டலை ஜூலி, ஓவியாவைத்தான் திட்டுனோம்'னு சத்தியம் பண்றாங்க. அப்போ ஓவியா, 'அவங்க என்னைதான் திட்டினாங்க. உன்னை திட்டலை'னு என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிருக்கலாம். அதுதான் எனக்கு இருக்குற ஒரே கோவம். பிறகு ஓவியா என்னை அசிங்கமா திட்டினாங்க. அதனாலதான்  அவங்ககிட்ட பேசமாட்டேனு சொன்னேன். ஒருதடவை கதவைத் தட்டி ஓவியாட்ட பேசணும்னு கூப்பிட்டேன். அப்போ வீட்ல உள்ளவங்க எல்லோரும், 'அவங்க  உன் மேல கோவமா இருக்காங்க. இப்போ பேசாத'னு சொல்லிட்டாங்க. அந்த ஒருவாரம் அப்படியே போச்சு."

"உங்களை ரெட் கார்பெட்ல வெச்ச் விஷயம் பத்தி"

"எதுக்கெடுத்தாலும் நடிக்கிறேன்னு அத்தனை பிரபலங்களும் சொல்றாங்க. ஒரு மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் நடிக்க முடியும்? ஓவியாவுக்கு என்னை ரெட் கார்பெட்ல உட்காரவெச்சு இழுத்துட்டுப் போறதுக்கு இஷ்டம்  இல்லைனு சொல்லியிருந்தா அப்பயே விட்டிருப்பேன். எனக்கு எதுவுமே பெருசா தெரிஞ்சுருக்காது. அந்த சமயத்துல, ‘ஊரே உன்னைப்பார்த்து காரித் துப்பப்போகுது'னு ஓவியா அடிக்கடி சொல்லிட்டு இருந்தாங்க. அப்படிச் சொல்றவங்ககிட்ட எப்படி நான் பேச முடியும்?. அந்த வீட்டுக்குள்ள நான் எங்க இருந்தாலும் திட்டுறதுக்கு நாலு பேர் இருக்காங்க. ஓவியாவுக்கு உறுதுணையா இருந்திருந்தா, எனக்கு மக்கள் சப்போர்ட் கிடைச்சுருக்கும். ஆனா, ஓவியா, ஆரவ்வோட நெருக்கமா இருப்பாங்க. நான் அப்போ யார்கூட இருக்க முடியும்? உண்மையிலேயே வீட்டுக்குள்ள என்னை சப்போர்ட் பண்றதுக்கு ஆளே இல்ல. ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகி வெளிய வந்துட்டாங்க. அப்போ சினேகன், காயத்திரி எல்லோரும் ஆறுதல் சொல்லி அவங்கள வெளிய அனுப்புனாங்க. ஒருவேளை நான் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தா எனக்கு யாரு ஆறுதல் சொல்லிருப்பா? உள்ள இருந்தப்போ எவ்வளவு வேதனை இருந்துச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும். கோவையா ஒருசில விஷயங்களைத் தொகுத்து டிவியில காமிச்சுட்டாங்க. திரைக்குப் பின்னாடி இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. இப்போ எனக்கு உள்ள இருந்ததை வேதனையைவிட வெளியே மக்கள் கொடுக்குற ரியாக்ஷன்தான் இன்னும் வேதனைக்குள்ளாக்குது."

"நீங்க ஜல்லிக்கட்டுல போராடினதை வெச்சு உங்களை ஆர்த்தியும் காயத்ரியும் கிண்டல் பண்ணினாங்களே?"

"அவங்க அப்படிப் பேசும்போது மனசு தாங்க முடியாம அழுதுட்டேன். பிக் பாஸுக்கு என்னை செலக்ட் பண்ணும்போது இதைப்பத்தியெலாம் பேச மாட்டாங்கனு சொல்லித்தான் செலக்ட் பண்ணினாங்க. ஆனா, உள்ள வந்துப் பார்த்தா இதைப்பத்தி மட்டும்தான் அவங்க பேசிட்டு இருந்தாங்க. அதுவும் குறிப்பா என்னை மட்டுமே குறிவச்சுத் தாக்கினாங்க. எல்லோரும் நம்ம குடும்பம்னு நெனச்சேன். ஆனா எல்லோரும் எனக்கெதிரா செயல்பட்டது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு."

 

Julie

"காயத்ரி உங்களைத் தூண்டிவிட்டாங்கனு வெளியில உள்ளவங்க சொன்னாங்க. அதை நீங்க உணர்ந்தீங்களா?"

"அவங்களோட தாக்கம் சில இடங்கள்ல அதிகமா இருந்துச்சு. ஆனா, வெளிப்படையா  எதிர்த்து என்னால பேச முடியல. மீறிப் பேசுனா எனக்கு எதிரா  எல்லோரும் செயல்பட ஆரம்பிச்சுருவாங்க. அப்படி  நடந்தாலும், மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டு காப்பாத்துவாங்கதான். ஆனா, அதுவரைக்கும் மனஅழுத்தத்துக்கு ஆளாகுறது நான் மட்டும்தானே? நான் அங்க போனது ஜெயிக்கணும்ன்ற நோக்கத்துலதான். அந்த எண்ணம் உள்ள எல்லோருமே கடைசிவரை போராடி நிக்கணும்னு நெனப்பாங்க. அதனால சில விஷயங்களை மாமியார் வீடு மாதிரி சகிச்சுக்கிட்டு போகவேண்டிய நிலைமை இருந்துச்சு."

"பெரும்பான்மை எங்க இருக்குதோ அங்கபோய் சேரலாம்னு நெனைச்சுத்தான் நீங்க ஓவியாவுக்கு எதிரான அணியில் சேர்ந்தீங்களா?"

"ஆமா. அப்படி இருந்தாத்தான் வீட்டுக்குள்ள பிழைத்திருக்க முடியும். அவங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருந்தா நாமினேஷன்லயே வரமாட்டோம். அப்போ எலிமினேஷனுக்கான வாய்ப்புகளும் கம்மி. அதனால்தான் பெரும்பான்மை இருந்த இடத்துல நானும் இருந்தேன்."

"பரணி வெளியேறும் போது நீங்க ஏன் தடுக்கலை?"

"நிறையபேர் பரணியைப் பற்றி தப்பாவே சொல்லிட்டு இருந்தாங்க. சுத்தி இருக்குறவங்க ஒருத்தவங்களைப் பற்றி எப்பவும் தவறா சொல்லிட்டு இருக்கும்போது, நீங்களே ஒருகட்டத்துல அவங்கள தப்பா நெனைக்க ஆரம்பிச்சுடுவீங்க. எல்லோரும், ‘உங்க அண்ணா உன்னைத் தவறான நோக்கத்துல பார்க்குறார். நீ அவர்கிட்ட பேசாதே’னு சொல்லும்போது என்ன செய்ய முடியும்? அதேமாதிரி ஒருசில விஷயங்கள் அவரைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரியே நடந்துச்சு. அவங்க பேச்சையெல்லாம் மீறி நான் பரணி அண்ணன்கிட்ட போய் பேசும்போது அவர் காதுகொடுத்து கேக்கல. அதான் வெளிய வந்ததும் மனசு தாங்க முடியாம அவர் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டேன்."

"வீட்டைவிட்டு வெளியே வந்ததுக்கு அப்பறம் எல்லோரும் எப்படி பார்க்குறாங்க?"

" நண்பர்கள் வட்டத்துல எல்லோரும் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. ஏன்னா எல்லோரும் சின்ன வயசுல இருந்தே என்கிட்டே பழகுறவங்க. அவங்களுக்கு உள்ள என்ன நடந்துருக்கும்னு யூகிக்க முடிஞ்சது. அதனால என்னைத் தவறா நெனக்கல. வீட்ல அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்துச்சு. ஆனா, என்னைப்பற்றி அவங்களுக்குத் தெரியும். 

சோஷியல் மீடியாவுல மீம்ஸ் போட்டு கலாய்ச்ச மக்களை நெனச்சாதான் கஷ்டமா இருக்கு. இருந்தாலும் என்னை வெச்சு மீம்ஸ் போட்டு பணம் சம்பாதிச்ச அத்தனை பேருக்கும் நன்றி. எனக்காக நேரம் செலவழித்து கமென்ட் போட்டதுக்கும் நன்றி. என்னை மட்டும் திட்டுனா பரவாயில்ல என் மொத்தக் குடும்பத்தையும் ஏன் திட்டுறீங்க? உங்களுக்கு வந்தா ரத்தம். அதே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? (கோபப்படுகிறார்) இதையெல்லாத்தையும் மீறி எனக்காக சப்போர்ட் பண்ணின சில மக்களுக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கேன். அவங்களுக்காகக் கூடிய சீக்கிரம் ஏதாச்சும் நல்லது பண்ணுவேன். ஓவியாவைவிட ஜூலி பேர்தான் மக்கள்ட்ட நிறைய அடிபட்டிருக்கு. இந்தக் காலத்துல புகழ் கிடைக்குறதே கஷ்டம். என்னைப்பத்தி தவறா பேசுனாலும் அதுவும் ஒருவித புகழ்தானே."

Bigg Boss

 

"ஆரவ்கிட்ட உங்க காதலை வெளிப்படுத்துனீங்களே... என்ன ஆச்சு?"

"ஆரவ்வோட கண்கள் என் அப்பா கண்கள் மாதிரியே இருக்கும்னு சொன்னேன். நான் சொன்ன விதம் வேணும்னா தவறா தெரிஞ்சுருக்கலாம். ஆனால் நான் வேறு எந்தக் கண்ணோட்டத்துலயும் சொல்லலை.”

"உங்க அடுத்து கட்ட திட்டம் என்ன? 

"இந்த நேரத்துல எனக்குக் கிடைத்த புகழை சரியா பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். இப்போ பயந்து போய் ஆள் அடையாளமே தெரியாம இருந்துட்டா என்னைக் கோழைனு நெனச்சுருவாங்க. ஆங்கரிங், சினிமா, விளம்பரங்களுக்கான வாய்ப்புகள் நிறைய வந்துக்கிட்டு இருக்கு. கண்டிப்பா மீடியாவுக்கு வருவேன். ஆனா அது எப்போன்னுதான் தெரியலை."

"ஆரவ் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினது உங்களுக்கு மகிழ்ச்சியா?"

 

"கணேஷ் ஜெயிச்சிருந்த  நல்லா இருந்துருக்கும். அவர் எலிமினேட் ஆனதும், ‘சினேகனா, ஆரவ்வானு போட்டி மாறுச்சு. சினேகனுக்கு  ஆரவ் எவ்வளவோ மேல். சினேகன் நல்லா கேம் விளையாடினார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த பல பிரச்னைகளுக்கு அவர்தான் காரணம். ஸோ, ஆரவ் வென்றதற்காக நான் சந்தோஷப்படுறேன். ஆனால் யார் என்ன தவறா சொன்னாலும் அப்பவும் இப்பவும் சினேகன் என் அண்ணன்.”

http://cinema.vikatan.com/tamil-cinema/interview/104199-if-you-get-hurt-its-different-if-i-get-hurt-nobody-bothers-slams-julie.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.