Jump to content

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு?


Recommended Posts

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? - இறுதி விசாரணைத் தொடங்கியது

 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை சற்றுமுன் தொடங்கியது. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குழு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த வழக்கறிஞர்கள் குழுவோடு எம்.பி மைத்ரேயன் மற்றும் கே.பி முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள்.

IMG-20171006-WA0017_15023.jpg

 

இச்சூழலில் விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் அவசர அழைப்பு காரணமாக டெல்லி விரைந்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அதே நேரம் பரோலில் வெளியாகியிருக்கிறார் சசிகலா.

IMG-20171006-WA0016_15360.jpg

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் மிக முக்கிய நிகழ்வாக இரட்டை இலைச் சின்னம் மீட்பு அமையும் என்று கருதிய பன்னீர்−எடப்பாடி தரப்பு, சின்னத்தை மீட்டு கட்சியை முழுவதுமாகக் கைப்பற்றும் எண்ணத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அதை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் அவசர டெல்லி பயணம் ஒரு தீர்வை நோக்கியே இருக்கும் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/104226-election-commission-hearing-on-two-leaves-symbol-begins.html

Link to comment
Share on other sites

இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: விசாரணை ஒரு வாரம் ஒத்திவைப்பு!

 

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணையைத் தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. 

EC_18114.jpg

 

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தினகரனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதுடன், சின்னம் தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நவம்பர் 10-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி இரட்டை இலைச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பிற்பகலில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் தினகரன் தரப்பில் விஜய் ஹன்சாரியும் ஆஜராகி வாதிட்டனர். 

கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் உரிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி ஒருவார காலம் அவகாசம் தினகரன் தரப்பில் கோரப்பட்டது. மேலும், எதிரணியினர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்கள் யாவும் கட்டாயத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் வாதிடப்பட்டது. விசாரணையைக் காலம்தாழ்த்தும் நோக்கிலேயே தினகரன் தரப்பில் அவகாசம் கேட்பதாகவும், அவகாசம் அளிக்கக் கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சின்னத்துக்கு உரிமைகோரும் சசிகலா குற்றவாளியாகவும் தினகரன் வழக்குகளை எதிர்க்கொண்டு வருபவராகவும் இருப்பதாக வாதிடப்பட்டது.

 

2 மணி நேரம் நடந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 13-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

http://www.vikatan.com/news/tamilnadu/104246-election-commission-adjourns-hearing-in-aiadmk-two-leave-symbol-dispute-case-for-13-october.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.